M.SivaRajan Profile picture
May 12 20 tweets 4 min read Twitter logo Read on Twitter
#ஸ்ரீ_நிரஞ்சனேஸ்வர_ஸ்வாமி

பாவங்களைப் போக்கும் நிரஞ்சனேஸ்வரர் கோவில் :

வேளாண்குடி மக்கள் நிறைந்த இடத்தில் கோவில் கொண்டவர் நிரஞ்சனேஸ்வரர்.

இந்த ஊரைக் காண்பதற்காக காசிப முனிவர் இந்தப் பகுதிக்கு வந்தார். Image
அவரிடம் அந்தப் பகுதி மக்கள், அசுரர்களால் தங்களுக்கு நிகழும் துன்பங்களை எடுத்துக் கூறி காப்பாற்றும்படி வேண்டினர்.

தேவர்களும் கூட பொதுமக்களுக்காக காசிப முனிவரிடம் வேண்டுகோள் வைத்தனர்.

இதையடுத்து காசிப முனிவர் பொதுமக்களின் நலன் கருதி, மாபெரும் யாகம் செய்தார்.
அந்த சமயம் யாக குண்டத்தின் முன்பாக மாயன், மலையன் என்ற இரண்டு அரக்கர்கள் தோன்றினர்.

அவர்கள் ‘எங்களை அழிக்க யாகம் செய்கிறாயா?’ என்றபடி, காசிப முனிவர் நடத்திய யாகத்தை அழித்தனர்.

யாக குண்டங்களை உடைத்தெறிந்தனர்.
இதையடுத்து காசிப முனிவர், தேவர்கள், பக்தர்கள் அனைவரும் அந்த ஊரில் கோவில் கொண்டிருக்கும் நிரஞ்சனேஸ்வரரிடம் சென்று முறையிட்டனர்.

அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது.

‘நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள்.

அனைத்தும் நல்லபடியாக நடைபெறும்’ என்றது.

உடனே அனைவரும் அங்கிருந்து சென்றனர்.
பின்னர் முருகப்பெருமான், மயில் வாகனத்துடன் சென்று இரண்டு அரக்கர்களையும் துரத்தினார்.

அவர்கள் மக்கள் நடமாட்டமும், கொக்குகள் நிறைந்த குளக்கரையுமான இடத்தில் மறைந்திருந்தனர்.
அவர்கள் இருப்பிடத்தை அறிந்து கொண்ட முருகப்பெருமான்,

முதலில் மலையனை தன்னுடைய வேலாயுதத்தால் வதம் செய்தார்.

அந்த இடம் தற்போதும் ‘மலையான்குளம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
மாயன், இனி மக்களுக்கு துன்பம் இழைக்க மாட்டேன் என்று கூறிவிட்டு தப்பி ஓடினான்.

முருகப்பெருமான், நிரஞ்சனேஸ்வரரிடம் திரும்பி வந்தார்.

தங்களின் கட்டளையை நிறைவேற்றியதாக கூறிவிட்டு, வேலாயுதத்தை ஓரிடத்தில் ஊன்றினார்.
அந்த இடமே ‘வேலூர்’ என்றானதாக தல வரலாறு சொல்கிறது.

வடநாடு சென்று வெற்றி வாகை சூடி, திரும்பிக் கொண்டிருந்தார் , ராஜேந்திர சோழன்.

வழியில் இயற்கை வளமும், இறையருளும் நிரம்பிய வேலூர் கிராமத்தை அவன் கண்டான்.
அதன் அழகை ரசித்துக் கொண்டே வந்தவனுக்கு ஒரு அசரீரியின் ஒலி கேட்டது. ‘நீ பார்க்கும் இடத்தில் தெய்வாம்சம் பொருந்திய கொம்பு ஒன்று கிடைக்கும்.

அதனை எடுத்து தீவு போன்ற பகுதியில் உள்ள குளத்தின் கிழக்குப் பகுதியில் குடிகொண்டிருக்கும் ஈசனின் முன்பாக நட வேண்டும்’ என்றது அந்தக் குரல்.
அப்போது இருள் சூழும் நேரமாகிவிட்டதால், மன்னன் தன் படை, பரிவாரங்களுடன் ஓரிடத்தில் தங்கி கண்ணயர்ந்தான்.

கண் விழித்துப் பார்த்தபோது, அங்கே ஒரு கொம்பு துளிர்விட்டு,

இலையுடன் காணப்பட்டதைக் கண்டு வியந்தார்.
பின்னர் அசரீரி சொன்னதைப் போலவே அதை குறிப்பிட்ட இடத்தில் நட்டு,

அங்கு ஒரு பெரிய ஆலயத்தை எழுப்பினார்.

மன்னன் நட்ட கொம்பு, துளிர்த்து மரமாக வளரத் தொடங்கியது.

அது தான் இன்றும் இந்த ஆலயத்தின் தல விருட்சமாக இருப்பதாக சொல்கிறார்கள்.
கோவில் அமைப்பு :

ஆலயத்தைச் சுற்றி நான்கு புறமும் மதில் சுவர் அமைந்துள்ளது.

தெற்கு மற்றும் கிழக்கு திசையில் நுழைவு வாசல் அமைக்கப்பட்டிருக்கிறது.

நுழைந்தவுடன் கோவில் வலபுறத்தில் தனிக் கோவில் கொண்டுள்ள சுந்தர விநாயகரை தரிசனம் செய்யலாம்.
பின்னர் கிழக்கு நுழைவு வாசலின் உள்ளே நுழைந்தால், கருவறையின் இரு புறமும் துவார பாலகர்கள், ஈசனுக்கு காவலாக நிற்கின்றனர்.

முன்னதாக வலதுபுறத்தில் கணபதியையும், இடதுபுறத்தில் முருகப்பெருமானையும் தரிசனம் செய்யலாம்.
கருவறையில் நிரஞ்சனேஸ்வரரை வீற்றிருந்து,

தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குறைகளை களைந்தும்,

வேண்டுதல்களை நிறைவேற்றியும் அருள்பாலிக்கிறார்.

ஈசனின் முன்பாக இருக்கும் நந்தியின் காதில் நமது வேண்டுதல்களைச் சொன்னால் அது விரைவில் நிறைவேறும் என்கிறார்கள்.
தல விருட்ச வழிபாடு :

இந்த ஆலயத்தில் உள்ள புஷ்கரணியின் அருகில் தலவிருட்சமாக அரச மரம் உள்ளது.

வியாழக்கிழமையில் வரும் அமாவாசை அன்று புஷ்கரணியில் நீராடினால்,

அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தல விருட்சமான அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மனும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், கிளை மற்றும் இதரப் பகுதிகளில் சிவனுமாக மும்மூர்த்திகளும் இந்த மரத்தில் வாசம் செய்வதாக ஐதீகம்.

இந்த ஆலய தல விருட்சத்தை வணங்கினால், நீண்ட ஆயுள் கிடைப்பதுடன், செல்வம் பெருகும் என்கிறார்கள்.
காலை வேளையில் கர்ப்பிணி பெண்கள் அரச மரத்தை வலம் வந்தால்,

சுக பிரசவம் நிகழும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.

இந்த மரத்தை சனிக்கிழமையில் மட்டுமே தொட அனுமதி உள்ளது.

மற்ற நாட்களில் தொடக்கூடாது.
இந்த மரத்தின் குச்சி மற்றும் மரப்பொருட்களை யாகம் செய்யும்போது மட்டுமே எடுத்து தீயில் போட்டு எரிக்கிறார்கள்.

விரதமிருந்து 108 முறை மரத்தை சுற்றினால், மன ஆரோக்கியம் கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கிறார்கள்.
திருவள்ளூர் அடுத்த பொன்னேரி அருகே உள்ளது வேலூர் கிராமம்.

மீஞ்சூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலும், பொன்னேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது திருவெள்ளைவாயல்.

இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் வேலூர் நிரஞ்சனேஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

May 13
#அப்பர்_சுவாமிகள்_குருபூஜை

சித்திரை - சதயம் அப்பர் சுவாமிகள் குருபூஜை இன்று.

#அப்பர்_சுவாமிகள்_வரலாறு

இது ஒரு மிகப்பெரிய திரேட்.

ஆகவே அனைவரும் அப்பர் சுவாமிகளின் முழு வரலாறையும் பொறுமையாக படிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

இந்த பதிவை அவசியம் ரீடுவிட் செய்ய வேண்டுகிறேன். Image
*திருமுனைப்பாடி பல்லவ நாட்டின்கண் அமைந்துள்ளது.

இத்தலத்தில் ஓங்கி உயர்ந்த மாடங்களும், கூடகோபுரங்களும், பண்டக மாலைகளும், மணிமண்டபங்களும் சிவத் தலங்களும் நிறைந்துள்ளன.

புத்தம் புதுமலர்க் கொத்துக்களைத் தாங்கிக் கொண்டு பெருகி ஓடிவரும் பெண்னை ஆற்றின்
பெருவளத்திலே செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து காணப்பட்டன.

இங்கு வாழும் மக்கள் நல்லொழுக்கத்திலும், நன்னெரியிலும் தமக்குவமை இல்லாதவர்களாய் வாழ்ந்து வந்தனர்.

உலகமெங்கும் சைவநெறியை நிலைநிறுத்திய சமயக்குரவர் நால்வருள்
Read 285 tweets
May 12
#ஆனந்த_கால_பைரவர்

*ஆனந்த வாழ்வு அருளும் ஷேத்ரபாலபுரம் பைரவர் கோவில்*

ஷேத்ரபாலபுரத்தில் உள்ள பைரவர் சிரித்த முகத்தோடு தன்னுடைய வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார்.

இதனால் இவரை ‘ஆனந்த கால பைரவர்’ என்று அழைக்கிறார்கள். Image
ஷேத்ரபாலபுரம் இந்த ஊர் மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்துக்கும் இடையில் உள்ள குற்றாலம் தாலுக்காவில் இருக்கிறது.

இங்கு பைரவர் தனித்து அருள்பாலிக்கும் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்திற்கு தனி வரலாறு உள்ளது.
சாதாரணமாக அனைத்து ஆலயங்களிலும் உள்ள பைரவர் சிலைகளில் அவருடன் நாயும் இருப்பதைக் காணலாம்.

அது மட்டுமின்றி அந்த பைரவர்கள் எல்லாம் சாந்தமான முகத்தைக் கொண்டு காட்சி தருவது இல்லை.

ஆனால் ஷேத்ரபாலபுரத்தில் உள்ள பைரவர் சிரித்த முகத்தோடு தன்னுடைய வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார்.
Read 14 tweets
May 11
#பள்ளி_கொண்ட_சிவன்

திருப்பாற்கடலில் சயனம் கொண்டுள்ள சிவபெருமான் :

திருப்பாற்கடல் என்பது இறைவனின் ஜீவ சக்தியாய், அமிர்த மயமாய் உலக ஜீவன்கள் அனைத்திற்கும் ஆதாரமாய்த் தோன்றியதாகும்.

அந்த அமிர்த சாகரத்தில் பள்ளி கொண்டவரே எம்பெருமான் ஆவார். Image
ஆதியில், முதன்முதலில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் சிவபெருமானே என்று அகத்திய சித்த கிரந்தங்கள் உறுதிபட உரைக்கின்றன.

இந்த சிவ அமிர்த புராணத்தை உலகிற்கு பறைசாற்றிய திருத்தலங்களுள் திருப்பாற்றுறை ஒன்றாகும்.
திருச்சி திருவானைக்கோவிலில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் காவிரி கொள்ளிடக் கரையில் எழுந்தருளி உள்ளதே திருப்பாற்றுறை சிவத்தலமாகும்.

இறைவன் ஸ்ரீ ஆதி மூல நாதர்.

அம்பிகையின் திருநாமமோ
ஸ்ரீ மேகலாம்பிகை,
ஸ்ரீ நித்ய கல்யாணி என்பதாகும்.
Read 8 tweets
May 11
#திருவதன_தட்சிணாமூர்த்தி

புதுமண தம்பதிகள் வணங்க வேண்டிய ஸ்ரீ திருவதன தட்சிணாமூர்த்தி :

ஆமூர் திருத்தல தட்சிணா மூர்த்தியை சித்தர்கள் ஸ்ரீ திருவதன தட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள்.

காலவ மகரிஷி சுவாமியின் திருவடிகளில் அமர்ந்து தொடர்ந்து தவமியற்றி, Image
தினமும் தன்னுடைய தவ சக்திகளை லட்சுமி தேவியாக திருவிடந்தை பெருமாளுக்கு மண முடித்து வைத்தார் 

இவ்வாறு முதன் முதலில் திருவிடந்தை பெருமாள்  திருமகளை திருமணம் புரிந்த போது,

லட்சுமியின் தந்தையான காலவ மகரிஷியின் ஆசியைப் பெறவும்,

இறைவனுக்கு நன்றி தெரிவிக்கவும்,
பெருமாள் தம்பதி சமேதராக ஆமூர் திருத்தலத்திற்கு எழுந்தருளினார்.

அப்போது ஸ்ரீ தட்சிணா மூர்த்தி திருமணத்திற்குப் பின் தம்பதிகள் ஒருவரையொருவர் எப்படி பார்த்து அன்புடன் புன்னகை புரிய வேண்டும் என்று தானே புன்னகை புரிந்து ஆசி வழங்கினாராம்.
Read 7 tweets
May 8
#விநாயகர்_அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பல இசைப்பாடப்

பொன் அரை ஞாணும்
பூந்துகிலாடையும்

வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்,

பேழை வயிறும்,
பெரும்பாரக் கோடும்,

வேழ முகமும்,
விளங்குசிந் தூரமும்,

அஞ்சு கரமும், அங்குச பாசமும்,
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும், Image
நான்ற வாயும் நாலிரு புயமும்,

மூன்று கண்ணும், மும்மதச் சுவடும்,

இரண்டு செவியும், இலங்குபொன் முடியும்

திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரிய
மெய் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழம் கிகரும் மூக்ஷிக வாகன!

இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்க மறுத்தே,

திருந்திய முதல்ஐந் தெழுத்துத் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து,
Read 12 tweets
May 8
#திருமுறை_வழிபாடு

மிக மிக முக்கியமான பதிவு :

ஓம் நமசிவாய.

அனைவருக்கும் அடியேனின் வணக்கங்கள்.

திருமுறைகளை படிக்க வேண்டும்.

திருமுறைகளை ஓத வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.

திருமுறைகள் மொத்தம் பதினெட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. Image
இன்றைய கால கட்டத்தில் அவ்வளவு பாடல்களையும் ஓத முடியாத நிலையில் பல நபர்கள் உள்ளனர்.

ஆகையால் அனைவரும் திருமுறைகளில் அவசியம் ஓத வேண்டிய முக்கியமான திருப்பதிகங்களின் பெயர்களை இங்கு பதிவு செய்கிறேன்.
அத்துடன் சைவம் என்னும் இணைய தளத்தில் உள்ள அந்த பதிகத்தின் விவரம் சேர்த்து பதிவு செய்கிறேன்.

சைவம் என்னும் இணைய தளத்தில் பன்னிரு திருமுறைகளும் உள்ளது.

இங்கு அடியேன் பதிவு செய்வது தேவார பதிகங்கள் அகராதி வரிசையில் இருக்கும்.
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(