SSR 🐘 Profile picture
May 16 22 tweets 5 min read Twitter logo Read on Twitter
தஞ்சை பெரிய கோவில் (Thread)
Part-2

இறைவன் பெருவுடையார் எழுந்தருளியிருக்கும் கருவறை அமைப்பு தனிச் சிறப்பானது கருவறை ஒரு திருச்சுற்று உடையதாக விளங்குகிறது.

இவ்வகையான கோவில் அமைப்பை
"சாந்தாரக் கட்டடக் கலை" அமைப்பு எனக் கூறுவர்.

#தஞ்சைபெரியகோவில்
#நோக்கம்சிவமயம்
#SSRThreads

1/22 Image
இத்திருச்சுற்றில் தெற்கில்
அகோர சிவன்,மேற்கில் தத்புருஷர்,வடக்கில் வாமதேவர் என்று தெய்வ வடிவங்கள் அமைக்க பெற்று சிவபெருமான் சதாசிவ மூர்த்தியாகக் காட்சி தருகிறார்

கருவறை இரண்டு தளம் உடையதாக விளங்குகிறது
மேற்தளத்தில் சிவபெருமானே ஆடவல்லனாக நடமாடும் சிற்பங்கள் காணப்படுகின்றன.

2/22
நடனத்தில் வெளிப்படுத்தப்படும் 108 கரணங்களில், 81 மட்டுமே முழுமை அடைந்ததாக உள்ளது.

இறைவனுக்கு மேலே உள்ள விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக,

“கதலிகா கர்ணம்’ என்ற கட்டடக் கலை அமைப்பில் அமைந்துள்ளது.

108 பரத நாட்டியமுத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள்,

3/22
வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலேயே இக்கோவிலில் மட்டும் தான் சோழர் கால ஓவியங்களும்,
நாயக்கர் கால ஓவியங்களும், மராட்டியர் கால ஓவியங்களும் காணப்படுகின்றன.

இத்திருக்கோவிலில்,
"உலக முழுவதுடைய நாயகி"எனப் பெயர் கொண்ட அருள் வழங்கும்,

4/22
அம்மன் கோவில் 13ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும்,

திருச்சுற்றில் வடமேற்கில் காணப்படும் சுப்ரமணியர் கோவில் தஞ்சை நாயக்க மன்னர்களின் கலைப் படைப்பாகும்.

திருச்சுற்றில் தென்மேற்கில் காணப்படும் விநாயகர் சன்னிதி மராட்டியர் கால கலைப்படைப்பாகும்.

5/22
இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில், தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய தலைமைச்
சிற்பிகளாக,

வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன்,

குணவன் மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன்,

இலத்திச் சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன்.

இந்த மூவரும் பொறிக்கப்பட்டுள்ளனர்.

6/22 Image
மாமன்னன் ராஜராஜனால் உருவாக்கப்பட்ட  நந்தி, வராகி அம்மன் சன்னதி அருகில் வைக்கப்பட்டுள்ளது,

பிரகதீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் பெரிய நந்தி  ஒற்றைக்கல்லால் நாயக்கர்களால் கட்டப்பட்டது ஆகும்.

இந்தச் சிலை 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்டது.

7/22
நந்தியின் அடிப்பாகம் 5 மீட்டர்  உயரம் கொண்டுள்ளது
ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடை உடையதாக லேபாக்ஷி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது.

நாயக்கர் காலங்களில் கோயிலைச் சுற்றி எண்ணற்ற ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

8/22
இந்த ஓவிய பாணியை பின்பற்றியே இப்போது பிரபலமாக அறியப்படும் தஞ்சாவூர் ஓவியம் வளர்ச்சியடைந்துள்ளது.

கோவில் பணியில் ஈடுபட்ட சுமார் 600 ஊழியர்களின் பெயர்கள், அவர்களுடைய வேலை, அவர்களுடைய ஊதியம் என அனைத்தும் கல்வெட்டுகளில் பதியபட்டுள்ளது.

#இராஐராஜசோழன்
#நோக்கம்சிவமயம்

9/22
காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது.

அதே போல் ஒரு கோவிலை கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டினார்,

பெரியகோவிலின் அமைப்பு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அசலேஸ்வரர் சந்நதியின் மாதிரியை கொண்டு உருவானது.

10/22
தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராசராசனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும்.

திருவிடைமருதூர் கோவிலில் உள்ள மூலவரின் பெயர் மகாலிங்கம்.

பெயருக்கு ஏற்றார் போல் அந்த விக்கிரகம் இல்லை என்று எண்ணம் இராஜராஜனுக்கு தேன்றியது,

11/22
பின்னாளில் பெருவுடையார் என்ற பெயருக்கு ஏற்ப லிங்கமும் கோவிலும் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இக்கோயிலை கட்ட தூண்டியதாக இருக்கலாம்,

கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

#SSRThreads

12/22
அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்,

அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் பெரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள்.

13/22
கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும்.

அதே சமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது, பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது.

14/22
அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.

தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

15/22
இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும்.

இதனை Zero Settlement of Foundation என்பர்.

இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது.

16/22
தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும் தஞ்சாவூர்தான்.

இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது. அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன.

2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது,

17/22
அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை, அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத்துகள் எதுவும் இல்லை.

350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது.

இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல.

18/22
தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல்.

ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்கு பெரிய பெருமணல்,

இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல்..

19/22
ஆக, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டு வந்திருக்க வேண்டும்,

இடத்தை தேர்ந்தேடுத்து சுக்கான் பாறைகளை தொட்டியாக வெட்டி அதில் பெரு மணலை நிறைத்து அதன் மீது 1,30,000 Ton கிரானைட் கற்கள் கொண்டு 216 அடி உயர கோயிலைக் கட்டியிருக்கிறான்,

20/22 Image
இது போல அஸ்திவாரத்துடன் இவ்வளவு பெரிய கட்டுமானமத்தை உலகத்தில இருக்கும் ஒட்டுமொத்த பொறியியல் வல்லுநர்கள் ஒன்று சேர்ந்தாலும் இதுபோல் ஒரு கோவிலை கட்ட முடியாது,

எம்பெருமான் இராஜராஜ சோழனின் கட்டிடக்கலை ஒவ்வொரு தமிழனின் அடையாளம்,
நமது அடையாளத்தை பேற்றுவது காப்பதும் நமது கடமை,

21/22 Image
ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஒரு மாமன்னர்,

இன்றும் அவரை கொண்டாடுவோரின் மனங்களில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
என கூறி கொண்டு,

இராஜராஜசோழனை போற்றி வணங்கும் அடியார்களின் ஒருவனாக அடியேன்,
உங்களின் #SSR 🙏

சிவாயநம
திருச்சிற்றம்பலம் 🙏

22/22 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR 🐘

SSR 🐘 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

May 17
#SSRThreads

நேற்று நீண்ட நாட்களுக்கு பின் கோயிலில் அடியார் ஒருவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது,

தனக்கு எழரை சனி நடக்கிறது அதனால் மிகுந்த கஷ்டம் எற்படுகிறது, அனுபவிப்பதனால் தினமும் கோவிலுக்கு வருகிறேன் என்று புலம்பினார்,

நான் அமைதியாக அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தேன்,

1/28
15 நிமிடங்களுக்கு மேல் புலம்பி தள்ளிட்டார்,

நான் எதுவும் பேசாமல் இருப்பது அவருக்கு புரிந்தது நீங்களும் கும்பம் தானே என்றார்,

நான் ஆம் என்றேன்,

அப்ப உங்களுக்கும் தான் எழரை சனி நடக்கிறது நீங்க என்றார் ?

வேலை பளு தவிர எந்த பிரச்சனையும் இல்லை Normal ஆக இருக்கிறேன் என்றேன்.

2/28
நானும் தான் அடியார், தினமும் கோவிலுக்கு வருகிறேன், உங்களை மாதிரி தீட்சை மட்டும் தான் வாங்கல மத்தபடி நாம ஒன்னு தான் நீங்க சந்தோஷமா இருக்க நான் மட்டும் கஷ்டபடுறேன் ஏன் இப்படி ?

கடவுளுக்கு ஒரு நியாயம் தருமம் இல்லையா அடியார்களை கூட சமமாக பார்க்கமாட்டாரா என்று கடவுளை திட்டினார்

3/28
Read 28 tweets
May 13
தஞ்சை பெரிய கோவில் (Thread)
Part-1

பெரிய கோவில் பற்றியும் இராஜராஜ சோழரின் பெருமை பற்றியும் பேச இந்த ஆயுள் போதாது,

எனக்கு தோன்றும் போதும், நேரம் கிடைக்கும் போதும் இராஜராஜ சோழனையும் இராஜேந்திர சோழனையும் பற்றி பேசுவதை பெருமையாக நினைக்கிறேன்.

#நோக்கம்சிவமயம்
#SSRThreads

1/25 Image
பெருமகனார் இராஜராஜ சோழரை பற்றி பேச மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அதற்கு காரணம் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஒரு காரணம்.

திரைப்படத்தில் சொல்ல மறந்து செய்தி தஞ்சை பெரிய கோவில்,

இதற்கு முன் ஆறு திரேட் எழுதி உள்ளேன் இது ஏழாவது,

2/25 Image
இராஜராஜன் என்றால் நம் நினைவுக்கு வருவது
அவரின் வீரமும்,
அவரின் ஆட்சியும்,
ஆட்சி நடத்திய விதமும்,
அவரின் பிரம்மாண்ட பெருவுடையாரை தாங்கிய தஞ்சை கோவிலும்,
கோவில் இருக்கும் கல்வெட்டுகளும்,
செப்பேடுகளும், மெய்க்கீர்த்திகளும் தான்.

சிவபாதசேகரனை வணங்கி திரேட்க்குள் செல்வோம்.

3/25 Image
Read 25 tweets
May 12
நேற்று பக்கத்தில் கோவில் சென்றேன் அந்த கோயில் அடியார்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்,

அவர்களின் பக்கத்தில் அமைதியாக எதும் பேசாமல் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தேன்

(கோவில் சென்றால் மட்டும் இல்லை வர வர அதிகமா யாருடனும் பேச தோன்றுவதில்லை)

#SSRThreads
#நோக்கம்சிவமயம்

1/24 Image
கைலாய வாத்தியம் வாசித்துவிட்டு அசதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்,

இவன் தான் தாளம் சரியா வாசிக்கல, பயிற்சி எடுக்கனும், Sunday எல்லாரும் வாங்க practice பண்ணலாம் நிறைய இடத்துல சரியாக Sync ஆகல என அவர் தான் மூத்த அடியார் போல பேசினார்,

எல்லாருக்கும் சிறு வயசு தான்.

2/24
வாய் வாத்தியம் இல்லாம சங்கு மட்டும் வாசித்தால் இந்த பிரச்சனை வரும் என்று இவர்களுக்கு யார் கூறுவது,

சங்கு மட்டும் தான் வாய் வாத்தியம் என்றும் மற்ற வாத்தியத்தின் பெயரும் பெருமையும் தெரியாத நிறைய அடியார்கள் கைலாய வாத்தியம் வாசிப்பது தான் கொடுமை

சரி இதை பற்றி தனியாக பேசுவோம்,

3/24
Read 24 tweets
Apr 20
சிறுத்தொண்டர் ஆற்றிய பெருந்தொண்டு:

''பிள்ளைக்கறி சீராளன் அமுது படையல் விழா":20-4-2023 இன்று இரவு 11-55க்கு துவங்கி மறுநாள் விடிய விடிய திருச்செங்காட்டங்குடி சூளிகாம்பாள் உடனுறை உத்திராபதீஸ்வரர் திருக்கோயில் நடைபெருகிறது,

#நோக்கம்சிவமயம்
#சீராளன்
#பிள்ளைக்கறி
#அமுதுபடையல்

1/23 Image
சம்பந்தர், திருநாவுக்கரசர், காளமேகப் புலவர், அருணகிரி நாதர் போன்ற அடியார் பெருமக்களின் பாடல் பெற்றது இவ்வாலயம்,

இன்று காலை உத்திராபதீஸ்வரருக்கு மகா அபிஷேகமும்,பின்னர் வெள்ளை சாத்தி புறப்பாடும் மதியம் 2 மணிக்கு அமுது கேட்க சிறுத்தொண்டர் மடத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும்,

2/23 Image
(21-4-2023) அதிகாலை 2 மணிக்கு அமுது உண்ண உத்திராபதீஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பிள்ளைக்கறி அமுது பிரசாதத்தை பெற்று பரணி விரதமிருந்து உட்கொண்டால் குழந்தை பேறு கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

3/23 Image
Read 23 tweets
Apr 18
மகாபாரதம்;

சூதாடி வெல்ல முடியாமல் முடிதுறந்ததால்,

தன் முடிவிழுத்தி முடிவிரித்து
முடியை முடியேன் என
முடிவெடுத்தாள் ஒருத்தி,

குருதியில் ஓடியது குருசேத்திரம்,
முடியாத முடியால் அழிந்தது குருகுலம்,
நடந்து முடிந்தது மகாபாரதம்,

-திரௌபதி

1/4
சிலப்பதிகாரம்;

தன் சிலம்பு ஒன்று சிக்கியதால்
சினம்கொண்டு சீறி முடிகலைத்து
மூர்க்கமாய் எழுந்தாள் இன்னொருத்தி,

முடிவாய் முடிதுறந்தான் பாண்டியன்,

முடியாத அவள் கூந்தலால் தன் கற்பின் வலிமையால் எரிந்து கரியாய் முடிந்தது மதுரை.

- கண்ணகி

2/4
கணவனை வேண்டி
முடியாத தன் நீள் முடியை
முடியாது முடிவாக இருந்தாள்
அசோகவனத்தில் ஒருத்தி,

முடியாத அவள் கூந்தலால்
முடிந்தது அரக்கர் குலம்,

எரிந்து பொரிந்து முடிந்தது இலங்கை.

- சீதை

3/4
Read 5 tweets
Apr 3
இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து,

புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது,

இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள் எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

#மூலிகைஅறிவோம்

1/8
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

2/8
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

3/8
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(