அன்பெழில் Profile picture
May 17 11 tweets 2 min read Twitter logo Read on Twitter
#ஜகத்குரு_ஆதிசங்கரர்
ஆதி சங்கர பகவத் பாதாள் மிகவும் நலிவுற்று இருந்த இந்து மதத்தையும் வேதங்களையும் காத்து அருளினார். பல ஸ்லோகங்களை இயற்றி, வேத வேதாந்த நூல்களுக்கு விளக்கவுரை எழுதினார். நம் அகண்ட பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் அத்வைத மடங்களை நிறுவி இந்து மதத்தை பரப்பினார். Image
அவரின் வரலாறு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. பொ.யு 7ம் நூற்றாண்டில், (அவர் பிறந்த காலம் பற்றி இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன) கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில், சிறந்த இறை பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற அந்தண தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் இறைவன் மீது
இருந்த மிகுந்த பக்தியால், ஏழை எளிய மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வந்தனர். ஆனால் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற மனக்குறை இருந்து வந்தது. இதை பார்த்த பெரியோர்கள் அவர்களுக்கு ஓர் ஆலோசனை கூறினர். திருச்சூரில் வடக்குநாதன் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தொடர்ந்து ஒரு
மண்டலம் பூஜை செய்யுமாறு அறிவுறுத்தினர். ஆகவே சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதியினரும் பெரியோர்கள் அறிவுரைப்படி மிகுந்த பக்தியுடன், தங்களுக்கு புத்திர பாக்கியம் வேண்டும் எனபதற்காக திருச்சூர் வடக்குநாதரை வேண்டி மிகவும் கடுமையான விரதங்களை அவர்கள் இருவரும் மேற்கொண்டனர். அவர்களின்
தூய்மையான பக்தியை கண்டு மகிழ்ந்தார் வடக்குநாதர். சிவகுருவின் கனவில் தோன்றி உங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஆனால் ஒரு நிபந்தனை. குறைந்த ஆயுளுடன் எல்லா நற்குணங்களும், ஞானமும் அறிவும் மற்றும் ஒழுக்கமும் கொண்ட புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா அல்லது அறிவற்ற நீண்ட ஆயுளை உடைய
சாதாரண மகன் வேண்டுமா என்று கேட்டார். இந்த இரண்டு வரங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்து எடுக்க வேண்டும் என்றார். ஆனால் பக்தியில் சிறந்த சிவகுரு, எதை கொடுக்க வேண்டும் என்று தங்களுக்கு தெரியும். தாங்கள் எதை குடுத்தாலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியோடு அதை ஏற்று கொள்வோம் என்றார். இந்த
பதிலால் உள்ளம் மகிழ்ந்த ஈசன், நானே உங்களுக்கு மகனாக பிறப்பேன் என்று ஆசி கூறினார். சிவகுருவின் கனவைக் கேட்ட ஆர்யாம்பாள் மனமகிழ்ந்து தங்களுக்கு ஒரு ஞானக்குழந்தை மகனாகப் பிறப்பான் என்று அறிந்து ஆனந்தம் அடைந்தாள். உள்ளம் மகிழ்ந்த தம்பதியினர் தங்கள் ஊரான காலடிக்கு திரும்பினர். இறைவன்
அளித்த வரத்தின் படி காலடியில் வைகாசி மாதம், வளர்பிறை பஞ்சமியன்று சூரியன், செவ்வாய், சனி, குரு ஆகிய நான்கு கிரஹங்கள் உச்சத்தில் இருக்கும் சுபவேளையில் திருவாதிரை நட்சத்திரத்தில் இறைவனின் அருளால் தெய்வீகக் குழந்தை இந்த பூமியில் அவதரித்தது. சிவபெருமானே தெய்வத்தாய் ஆர்யாம்பாளுக்கு
மகனாகப் பிறந்தார். பிள்ளையில்லா தசரதனுக்கு மகாவிஷ்ணுவே ராமராக அவதரித்தது போல, சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு ஈசுவரனே குழந்தையாகப் பிறந்தது பெரும் பாக்கியமே. பிள்ளை பிறந்த மகிழ்ச்சியில் சிவகுரு தான தருமங்கள் செய்து சான்றோர்களுக்கு விருந்து அளித்து கொண்டாடினார். ஜோதிடர்கள்
இவன் ஒரு பெரிய ஞானியாவான் என்று கணித்து கூறினார்கள். அந்த இளம் குழந்தையைச் சுற்றி நாகம் ஒன்று சிறிதுநேரம் விளையாடி அதன் பின்னர், விபூதியாகவும் மறறும் ருத்ராட்சமாகவும் மாறியது கண்டும், உடலில் சிவச் சின்னங்கள் இருந்ததாலும் குழந்தைக்கு சங்கரன் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்தக்
குழந்தையின் தெய்வீக அழகை கண்ட மக்கள் இது சாதாரண குழந்தை இல்லை. இது தெய்வீக குழந்தை என்பதை உணர்ந்தனர். குறும்புக் கண்ணனைப் போலவே, குட்டிச் சங்கரனும் குழந்தை பருவத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 19
#மகாபெரியவா
கட்டுரையாளர்- ரா.வேங்கடசாம
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

சென்னையைச் சேர்ந்த திருமதி கமலாவிற்கு ஏற்கனவே இரண்டு பெண்கள். இரண்டாவது பெண் பிறந்து, அவளுக்கு எட்டு வயதாகும் போது, கமலா மீண்டும் தாய்மை அடைந்தார். ஏழு மாத கர்ப்பிணியான அவளை Image
அழைத்துக்கொண்டு, அவரது கணவர் மகானை (பெரியவா) பண்டரிபுரத்தில் தரிசித்தார். உடன் அவர்களின் மாமாவும் சென்றிருந்தார். அவர்தான் மாமாவிடம் கமலாவைப் பற்றிய வேண்டுகோளைச் சொன்னார்.

"இவளுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள். பல வருஷங்களுக்குப் பின்னால் மீண்டும் உண்டாகி இருக்கிறாள். இந்தக்
குழந்தையாவது ஆணாகப் பிறக்க மகா பெரியவாளின் ஆசி வேண்டும்."

"இரண்டு பெண்ணுங்க ஜாஸ்தின்னா சொல்றே?" என்றார் புன்னகையோடு மகான்.

அவர்களால் பதில் சொல்ல முடியாத கேள்வியல்லவா இது? மௌனமாக நின்றார்கள்.

"ஏழு மாதம் கழித்து என்னிடம் கேட்டால், நான் என்ன பண்ணுவது?" என்று புன்னகை புரிந்தவாறே
Read 14 tweets
May 19
#இந்து_சமய_சந்தேகங்களும்_விடைகளும்

1 - வீட்டில் விளக்கேற்றும் போது
சுவாமிக்கு பூ கட்டாயம்
போட வேண்டுமா?

காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.

2 - செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை ஏன் அடிக்கக் கூடாது?

செவ்வாயும், வெள்ளியும் பொருள் Image
வாங்கி சேர்த்தால் வளரும். அதனால் இவ்விரு நாட்களிலும் வீட்டை துடைப்பதில்லை.

3 - கோவிலில் இறைவன் சன்னிதியில் ஏன் கண்ணை மூடிக் கொண்டு
கடவுளை வழிபடக்கூடாது?

கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபடும் காலத்தில், Image
கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.

4 - திருமணஞ்சேரியில் வேண்டிக் கொண்ட பிரார்த்தனை மாலை தொலைந்து விட்டது. பரிகாரம் என்ன?

அறியாமல் செய்த தவறு! தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக் கொண்டு மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை Image
Read 67 tweets
May 18
The present day generation will never know this as mothers hardly wear Sarees now.
#Moms_SareePallu

The principal use of Mom’s pallu was to provide elegance to her drape. But along with that, it also served as a potholder for removing hot pans from the stove.

It was wonderful Image
for drying children's tears, and on occasions was even used for cleaning out dirty ears and as a hand towel.

For sleeping kids her lap was the mattress and her pallu the warm cover.

When company came, those pallus were the ideal hiding places for shy kids.

And when going out
as little kids, the pallu became an anchor, a guide to follow Mom in the big bad world.

And when the weather was cold, Maa wrapped it around her arms.

Those glorious sari pallus wiped many a perspiring brow, bent over the hot wood stove.

Chips and kindling wood were brought Image
Read 6 tweets
May 18
#புராணம் #வினாயகர்_முதல்_வாழைமரம்_வரை
ஒரு சமயம், சிவபெருமான் அசுரனை அழிக்க போருக்குச் சென்றிருந்தார். பார்வதி தேவியார், கணவன் போருக்கு சென்றதை நினைத்து அதே சிந்தனையுடன் முகத்தில் பூசுவதற்கு சிலாக் கல்லில் மஞ்சளை உரசினார். சிலாக் கல்லின் குணம் கொஞ்சம் மஞ்சளை உரசினாலும் அதிகமாக Image
வரும் தன்மை கொண்டது. பார்வதி தேவி, தனக்குத் தேவையான மஞ்சளை எடுத்துக் கொண்டு, மீதியுள்ள அரைத்த மஞ்சளைக் கொண்டு குழந்தைமேல் உள்ள ஆசையாலும் தன் கணவன் மீது கொண்ட அன்பாலும் ஓர் அழகான 9 வயது ஆண் பதுமையை செய்தார். அது பார்ப்பதற்கு அழகாக இருந்தமையால் அதற்கு ஆடை, ஆபரணங்கள் போட்டு அழகுப் Image
படுத்தி தாய்மை உணர்வுடன், எடுத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டாள் அன்னை பார்வதி. அந்த மஞ்சளால் செய்யப்பட்ட பொம்மையானது தேவியின் தாய்மை கொண்ட அரவணைப்பால், கணப்பொழுதில் உயிர் பெற்று, அழகான சிறுவனாக உருவெடுத்தது. கணப்பொழுதில் தோன்றியதால் #கணபதி என பெயர் பெற்றார். தேவியின் விக்னத்தை Image
Read 25 tweets
May 18
#MahaPeriyava
The Sage of Kanchi
Author: Shri A.R.Lakshmi Narayanan, Chennai
Source: Moments of a lifetime

I cannot explain why, but I had the sudden overwhelming urge to see the Sage. However, I had learnt the previous day that the Vice-President of India, Honourable Sri Image
Shankar Dayal Sharma was to visit Kanchipuram that day. That morning, as I sat for my prayers, I wondered how I would get to see the Sage, with the Vice President there. As I closed my eyes in prayer, the sage appeared in my vision. At about 7 pm, that evening, I entered
Sri Matam with my family. I stood bare-footed, against the wall between the two rooms. One was the room where Pooja to the Lord Sri Chandramouleeswarar is performed by the Sage every morning. We were waiting very anxiously and eagerly for the arrival of the Sage for the
Read 9 tweets
May 17
#ஆயுளை_அழிக்கும்_ஆறு_வாள்கள்
திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள்வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே. ஏன் என்று கேட்டார்.
அதற்கு விதுரர், ஆறு கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை அழிக்கின்றன. அவை
அதிககர்வம், அதிகம் பேசுதல், தியாக மனப்பான்மை இன்மை, கோபம், சுயநலம், நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது என்றார்.
விதுரர் கூறிய அந்த 6 வாள்கள் எப்படியிருக்கும்? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும்?

1. தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர் கெட்டவர்கள் என Image
நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவனைக் கடவுள் சீக்கிரம் அழித்து விடுவார். ஆகவே, கர்வம் கொள்ளாமலிருக்க வேண்டுமானால், தன் விஷயத்தில் குற்றங்களைப் பார்க்க வேண்டும். பிறர் விஷயத்தில் குணங்களைப் பார்க்க வேண்டும்.

2. அதிகம் பேசுகிறவன் வீண் விஷயங்களைப் பற்றிப் பேசி, வீண்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(