விஸ்வா | VISWA Profile picture
May 20 10 tweets 3 min read Twitter logo Read on Twitter
#இதுக்கு_ஒரு_எண்டே_இல்லையா

எந்த பக்கம் திரும்பினாலும், 2000₹ பேச்சாகத்தான் இருக்கிறது.

ஆனால், அடித்தட்டு மக்களை அதிகம் பாதிக்கும் 10₹ நாணயம் பற்றி ஒருத்தரும் வாயே திறப்பதில்லை.

அந்த 10₹ காயின் செல்லுமா? செல்லாதா? என்று மண்டையை பிய்த்து கொள்கிறார்கள் நம் மக்கள். Image
மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009-ம் வருடம், 10 ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்தது.

அப்போது, அந்த நாணயத்தில் "வேற்றுமையில் ஒற்றுமை" மற்றும் "இணைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்" என்ற கருப்பொருள் இடம்பெற்றிருந்தது.

பிறகு, புது புது டிசைன்களில் 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது Image
இருந்தாலும், 10₹ நாணயத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே

காரணம், அடிக்கடி பரவி வரும் வதந்திகள் காரணமாக கடைக்காரர்கள், வணிகர்கள், வங்கிகள் அவற்றை வாங்க மறுக்கின்றனர்.

இதனால், பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கவும், வைத்திருக்கவும் தயக்கம் காட்டுகின்றனர். Image
இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாடு வங்கியாளர்கள் குழும அதிகாரிகள் இது தொடர்பாக கூடி விவாதித்தனர்.

அப்போது அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் 10₹ நாணயங்களை வாங்க மாநில அரசு அறிவுறுத்த வேண்டும், பேருந்துகளில் இது தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. Image
அதேபோல, வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித மறுப்புமின்றி நாணயங்களை வாங்க வேண்டும்.

வங்கிகளிலும் இதுகுறித்த அறிவிப்பை ஒட்ட வேண்டும்.

அனைத்து வங்கிகளும் இணைந்து விளம்பரங்களை வெளியிட வேண்டும்.

பிரச்சினை முடிந்தது என நம்பினர்

ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. Image
சென்னையில் மட்டுமே 10 ரூபாய் நாணயம் செல்லுபடியாவது போல தெரிகிறது.

கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி போன்ற சில மாவட்டங்களில் மட்டுமே புழக்கத்தில் உள்ளதாகவும் தெரிகிறது.

மற்றபடி, வேறு எந்த இடங்களில் 10 ரூபாய் காயின் தந்தால் ஏற்க மறுக்கிறார்கள்.. ரிசர்வ் வங்கியும்,
மத்திய அரசும், இந்த 10₹ நாணயம் குறித்த நம்பகத்தன்மையை சொன்னாலும்கூட, பெரும்பாலானோர் அதை ஏற்க மறுக்கிறார்கள்.

இதனால், இந்த 10 ரூபாய் காயினை வைத்து கொண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் பலர் விழித்து வருகிறார்கள்.

கடைக்காரர் ஒருவர் தன் கடையில் 10 ரூபாய் நாணயம் வாங்கிவிட்டார் Image
என்றால், அதை மறுபடியும் வேறு வாடிக்கையாளரிடமோ, வேறு கடையிலோ மாற்ற முடியாது.

இதற்காக அந்த கடைக்காரர், நேரம் செலவழித்து வங்கிக்கு செல்ல வேண்டும்.

வங்கியிலும் வரிசையில் நின்று படிவத்தை நிரப்பிய பிறகுதான் நான், அந்த பணத்தை தன் சொந்த வங்கிக் கணக்கில் செலுத்த முடியுமாம்.. Image
அதேபோல, ஸ்விக்கி போன்ற நிறுவனத்தில் வேலை பார்ப்போருக்கு, இந்த 10 ரூபாய் நாணயம் நடைமுறை சிக்கலை தருவதாக சொல்கிறார்கள்.

கஸ்டமர்களுக்கு உணவு தந்தபிறகு, அவர்கள் தரும் பணத்தை, ஸ்விக்கி நிறுவனத்தில் டெபாசிட் செய்ய வேண்டுமாம்.

அப்படி செய்யும்போது நாணயங்களாக இருந்தால்,
கடைகளில் பரிவர்த்தனை செய்ய முடியாது. அதனால்தான், 10 ரூபாய் நாணயங்களை கஸ்டமர்கள் தந்தால் ஏற்க மறுக்கிறோம் என்கிறார்கள்.

அவசரத்துக்குகூட 10 ரூபாயை யாரும் வாங்கி கொள்ளாத சூழல் உள்ளதால்,

2000₹ விவகாரம் ஒருபக்கம் இருந்தாலும், இந்த 10₹ நாணயத்துக்கான வழியை முதலில் சொல்லுங்கப்பா Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with விஸ்வா | VISWA

விஸ்வா | VISWA Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VIS1976AL

May 19
#கர்நாடக_எதிர்க்கட்சி_தலைவர்யார்?

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் ஒரு‌ அரசியல் விமர்சகர் ஒருவர், "டி.கே.சிவக்குமார் இன்னும் இறுக்கமாக இருப்பதைத்தான் அவரது உடல்மொழி காட்டுகிறதா.? இவ்வளவு ஆன பிறகும் டி.கேவும், சித்துவும் இணைந்து ஆட்சி நடத்த முடியுமா.? வரும் காலங்களில் இருவரின் Image
தொண்டர்களும் தாக்கிக் கொள்வார்களா.?"

என்றெல்லாம் அரிய பல சந்தேகங்களை முன்வைத்துப் பேசிக் கொண்டிருக்கையில், அவரை இடைமறித்த நெறியாளர் "பெங்களூர் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திலிருந்து சில நேரடி காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனை இப்போது பார்ப்போம்" என்கிறார்... Image
அந்த நேரடிக் காட்சியைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சியின் அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தொண்டர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக 'ஜெய் சித்தராமையா!', 'ஜெய் டி.கே.சிவக்குமார்!' என்று இரண்டு தலைவர்களின் ஆதரவாளர்களும் இணைந்து வாழ்த்து Image
Read 7 tweets
May 18
#முதல்வரும்_தளபதியும்

சித்தாராமயா முதல்வராக விட்டுக் கொடுத்து, குழப்பத்தை எதிர்பார்த்தவர்கள் முகத்தில் கறியை பூசி இருக்கிறார் #DKShivkumar

90 எம்எல்ஏக்கள் சிவக்குமாரை CM ஆக்க ஆதரவு தெரிவித்தும் காங்கிரஸ் மேலிடம் வேண்டுகோள் ஏற்றார் கர்நாடகா வெற்றிக்கு வழி வகுத்த காங்கிரஸ் தளபதி Image
வெகு நாட்கள் மதவெறியில் உழன்ற கர்நாடகாவிற்கு, சித்தாராமயாவின் மதச்சார்பற்ற முகம் தற்போது தேவை என ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

இந்துக்கள் அல்ல என்று கருதும் லிங்காயத்துக்கள், கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதி குரும்பர்கள் டி கே எஸ் ஐ விட சித்துவை விரும்புவதாக கூறப்படுகிறது Image
திப்பு சுல்தான் சமாதி அஞ்சலி செலுத்தியது, சாவர்க்கர் பற்றிய பாடங்களை நீக்கும் முடிவு என டி கே எஸ் தனது மத நல்லிணக்கத்தை பறை சாற்றி இருந்தாலும்,

மதவெறி பிஜேபியை அதன் போக்கிலேயே அடித்து தூக்க காங்கிரசுக்கு ஒரு இந்து முகம் தேவை.

அதற்கு டி கே எஸ் கச்சிதமாக பொருந்துகிறார் Image
Read 11 tweets
May 17
#சேக்கிழார்_பிழைத்_தமிழ்
செய்தியாளர்:

நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது 2016 - 20 ல் 20 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக செய்திகள் உள்ளன

எடப்பாடி :

எங்கே ரிப்போர்ட்?சும்மா பொதுவாக எல்லாம் பேசக்கூடாது. ஆதாரம் கொடுங்கள். நீங்கள் இதை திசை திருப்ப பார்க்கிறீர்கள் நன்றி வணக்கம் Image
ஏற்கனவே தமிழ்நாட்டை குடிகார மாநிலமாக சங்கிகளும் ஜோம்பீகளும் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து பரப்பி வருகின்றனர்..

எதிர்க்கட்சித் தலைவர் நான் தான் என காட்ட போராடும் எடப்பாடி அடிக்கடி ஏதாவது உளறி வைப்பது வழக்கம்.

அதையே விகடனார்கள் ஆதாரமாகக் கொண்டு செய்தி வெளியிடுவர் Image
கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து மத்திய அரசின் குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைப்படி,

2019-ல் கள்ளச்சாராயம் குடித்து அதிக நபர்கள் உயிரிழந்த மாநிலங்கள்

1,கர்நாடகா -268
2,பஞ்சாப் -191
3,,மத்தியப்பிரதேஷ் -190
4,சட்டீஸ்கர்,ஜார்கண்ட் -115
5,ராஜஸ்தான் -88

தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லை Image
Read 10 tweets
May 16
#தமிழ்நாட்டில்_மதுவிலக்கு

1971க்கு முன் மது நுகர்வு அடிப்படையில் மாநிலங்கள்:

1) Dry States

குஜராத், மகாராஷ்டிரா
விற்பனை & நுகர்வு தடை

2) Wet States

J&K, Bihar, WB வடகிழக்கு
கட்டுப்பாடு அற்றவை

3) Partially Dry States

பிற மாநிலங்கள்.
அனுமதி பெற்று நுகரலாம் Image
1) காந்தி பிறந்த மண், மாநில பிரிவினை முழுமை அடையாததால் குஜராத் - மகாராஷ்டிராவில் தடை

2) சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணியர்க்காக காஷ்மீர் உள்ளிட்டவை வீட்டிலேயே மதுபானம் இருப்பு வைக்க அனுமதி

3) தொழில் நிமித்தம் வரும் வெளிநாட்டினர் அனுமதி பெற்று பிற மாநிலங்களில் குடிக்கலாம் Image
தமிழ்நாட்டில் மதுவிலக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டது 1971

கலைஞர் கூறிய காரணம் :

சுற்றி எரியும் நெருப்பிடையே கற்பூரமாக தமிழ்நாடு இருக்க முடியாது.

வருவாய் இழப்புக்காக ₹26 கோடி ஒன்றிய அரசிடம் கேட்டார்

வரவில்லை.

மது விலக்கு ரத்துக்கு முன் தமிழ்நாட்டில் குடிகாரர்கள் எண்ணிக்கை
Read 15 tweets
May 15
#முத்துபாண்டிvsபோஸ்பாண்டி

கர்நாடக தேர்தலில் திருப்புமுனை ஏற்படுத்திய பொது ஜனங்களின் பிரதிநிதி

திரையில் அநியாயத்தை எதிர்க்கும் ஹீரோக்கள் வாயை மூடிக் கொள்ள இந்த வில்லன்

கௌரி லங்கேஷ் படுகொலைக்கு பிஜேபியை குற்றம் சாட்டி ஹீரோ ஆனார்

அதற்காக லக்னோவில் அவர் மேல் வழக்கு போட்டனர் Image
2017 செப்டம்பரில் சங்கிகளை எதிர்த்த மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் தன் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கொலையில் மோடியின் மௌனத்தை கேள்வி கேட்டதிலிருந்து பிரகாஷ் ராசின் அரசியல் வாழ்க்கை துவங்கியது.

அதற்கு அவர் கொடுத்த விலை அதிகம் Image
கான்களும், கபூர்களும் சங்கியாகவே மாறிவிட்ட பாலிவுட்டில் தெற்கிலிருந்து எழுந்த எதிர்ப்பு அசவுகரியம் ஏற்படுத்த,

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பிசியாக இருந்த பிரகாஷ் ராஜூக்கு,
பாலிவுட் கதவுகள் முதுகெலும்பெற்ற கோழைகளால் அடைக்கப்பட்டது.

பிரகாஷ்ராஜ் முழு மோடி எதிர்ப்பாளர் ஆனார் Image
Read 11 tweets
May 14
#அண்ணாஅறிவாலய_வரலாறு

திமுக தொண்டர்களுக்கு புனிதஸ்தலம் என்றால் அது கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் தான்…

ஒரு கட்சி தலைமையகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கட்டப்பட்டது

1949 இல் தொடங்கப்பட்ட திமுகவுக்கு முதல் அலுவலகம் சென்னை ராயபுரத்தில் "அறிவகம்" பின்பு Image
தேனாம்பேட்டையில் 1964ல் "அன்பகம்" உருவானது, என்றாலும் கட்சியின் பிரம்மாண்டத்திற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு அலுவலகம் தேவை, பெரிய கட்டிடம் தேவை எனவே 1972ல் அண்ணா சாலையில் 86 கிரவுண்ட் நிலத்தை வாங்கி 1980ல் பணியைத் தொடங்கினார் கலைஞர்.

நிதி பிரச்சினையால் வேலை அசை போட்டது,
1984ல் அரசினர் தோட்டத்தில் இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தை MGR பறித்தபோது அறிவாலயம் கட்டுமானப்பணி விஸ்வரூபம் எடுத்தது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நிதி திரட்டித் தர 20/07/1985 தலைவர் எழுதிய உணர்ச்சிகரமான கடிதம் அந்த ஒரு வருடத்தில் 96 லட்சம் குவிய வழிவகுத்தது. Image
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(