#கல்வி_வரம்_அருளும்_ஆலயங்கள்
திருச்சி உத்தமர் கோயிலில் சரஸ்வதி தேவி தனி சந்நதி கொண்டு அருள்கிறாள். இவள் சந்நதியில் தரப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் விசேஷமானது. மாணவர்களின் படிப்புக்கு ஊக்கமளிப்பது.
தேனி வேதபுரியில் சனகாதி முனிவர்க்கு அருள் புரியும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்
இவர் கல்விச் செல்வம் அருள்வதில் வல்லவர்.
நாகை மாவட்டம், பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூரில், கம்பருக்கு அருளிய சரஸ்வதி தேவி தனிக் கோயில் கொண்டிருக்கிறாள். படிப்பு வரம் அருள்வதில் நிகரற்ற அன்னை இவள்.
சென்னை செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள செட்டிபுண்ணியம் தலத்திலுள்ள ஹயக்ரீவ
மூர்த்தியை வணங்க, கல்வி வளம் சிறக்கும்.
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலய வாசலில் உள்ள தட்சிணாமூர்த்தி, வடிவுடையம்மனுக்கு உபதேசம் செய்யும் பாவனையில் வீற்றருள்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வலம் வந்து வணங்க வளமான கல்வியைப் பெறலாம்.
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள
இன்னம்பூர் திருத்தல ஈசன் கல்வி வளம் சிறக்க அருள்புரிபவர். இவர் திருநாமம் எழுத்தறிநாதர்!
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் கலைமகளுக்கென ஓர் ஆலயம் உள்ளது. அந்த சரஸ்வதி ஞான சரஸ்வதியாக போற்றப்படுகிறாள்.
கடலூர் மாவட்டம், திருவஹீந்திபுரம் தலத்தில் ஔஷதகிரியில் அருளும் ஹயக்ரீவ
மூர்த்தியை வணங்க, கல்வியில் முன்னேற்றம் பெறலாம்.
திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள அட்சர பீடத்தில் 51 அட்சரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த பீடத்தை தரிசித்தால் படிப்பு நன்றாக வரும்.
பாண்டிச்சேரி முத்தியால் பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர், பக்தர்களால் கல்வி, கலைகளில்
சிறக்க வைக்கும் மூர்த்தியாக வணங்கப்படுகிறார்.
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய பிராகாரத்தில் அருளும் கலைகளுக்கு எல்லாம் அதிபதியாகத் திகழும் ராஜமாதங்கியை வணங்கி வேண்டிட, கல்வியில் மேன்மை பெறலாம்.
சென்னை போரூர், மதனானந்த புரத்தில் உள்ள துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆலயத்தில் அன்ன வாகனம்
முன் நிற்க, சரஸ்வதி தனி சந்நதியில் அருள்கிறாள். இவளை வணங்கி, சகலகலாவல்லி மாலை துதியை பாராயணம் செய்ய அறிவுத்திறன் அதிகரிக்கும்.
சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலத்தில் கிழக்கு முகமாய் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசம் செய்தருளிய தட்சிணாமூர்த்தி கல்விச்
செல்வத்தை வாரியருளும்
வரப்பிரசாதியாகப் போற்றப்படுகிறார்.
தஞ்சாவூரில் உள்ள கண்டியூரில் பிரம்மசிரகண்டீஸ்வரர் ஆலயத்தில் தன் நாயகனான நான்முகனுடன் அருளும் சரஸ்வதியை தரிசிக்கலாம். இந்த சரஸ்வதியை மனமாற வணங்கி கல்வி வரம் பெறலாம்.
சென்னை பாடி திருவலிதாயநாதர் ஆலய குருபகவான் ஞானம் வேண்டும் பக்தர்களுக்கு
தப்பாமல் ஞானம் தந்து காப்பார்.
சென்னை சோழிங்கநல்லூர் ப்ரத்யங்கிரா ஆலயத்தில் அருளும் நீல சரஸ்வதி, கல்வியைப் பெருக்கி, வாக்கு வன்மையை அருள்பவள்.
முழையூரில் எட்டுப்பட்டை லிங்க வடிவில் அருளும் பரசுநாதரையும் அறிவுக் கண்களைத் திறக்க அருள் புரியும் ஞானாம்பிகையையும் தரிசித்து பக்தர்கள்
கல்வி வரம் பெறுகின்றனர்.
வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கொலுவிருக்கும் சரஸ்வதியை தரிசிக்க
கல்வியில் சிறக்கலாம். இந்த அன்னை கையில் வீணை இல்லை என்பது தனிச் சிறப்பு.
ஆந்திர மாநிலம் பாஸர் எனுமிடத்தில் சரஸ்வதிக்கென்று தனிக்கோயில் உள்ளது. இந்த சரஸ்வதி வரப்பிரசாதியாக
மாணவர்களுக்கு அருள்கிறாள்.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#தண்டபாணி_பைரவர் #காசி_வைபவம்
காசியில் 2 பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று கால பைரவர் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில் பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளி உள்ளார். காசியிலேயே பாவம் செய்பவர்களும்
இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் இந்த தண்டபாணி பைரவர். தண்டபாணி மந்திரிலிலுள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்
பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். பூர்வத்தில் பூர்ணபத்திரன் என்ற யக்ஷன் ஒருவன் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கி கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தான். அவனுக்கு ஹரிகேசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இவன்
திருவிடைமருதூர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை #அன்பிற்பிரியாள்
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டு
வந்ததுடன், அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே,
அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார். அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன்
#பாரியூர்_கொண்டத்துக்_காளியம்மன்
#ஆடிமாத_சிறப்புப்_பதிவு
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் பராபுரி என்று அழைக்கப் பட்டது. பரா என்றால் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்றால் ஊர்,
என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட தலமே பாரியூர் என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் பாரியூர் என்று அழைக்கப்படுவதாகவும்
கூறுகின்றனர். வள்ளலின் பெருமைக்கும், செழிப்புக்கும் அன்னையே காரணம் என்று குறிப்பிடப் படுகிறது. இன்றும் பாரியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளும், குளுமையான நீர் நிலைகள், அடர்ந்த மரங்களுமாகச் செழித்து காணப்படுகின்றன. கோயில் ராஜகோபுரம் 5 அடுக்குகள் கொண்டது.
#ஸ்ரீகாட்டுவீர_ஆஞ்சநேயர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற
என்ற திருநாமம் கொண்டு அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் விக்கிரகமாக உள்ளது. இப்பகுதி குன்றுகளாக விளை நிலங்களாக இருந்தது. இந்த விளை நிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின்
மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப் பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூஜித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை
#ஆற்றுக்கால்_பகவதி_அம்மன்
கேரளம் உருவெடுக்க காரணமாக இருந்த பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணம் கூறுகிறது. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயரில்லை. அவர்கள் அனைவருமே பகவதி என்றே அறியப்படுகின்றனர். கேரளாவில் பகவதி அம்மன்
கோவில்கள் அனேகம் இருக்கின்றன. இருப்பினும் அனைத்து பகவதி அம்மன் கோவில்களுக்கும் இல்லா சிறப்பு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு உண்டு. அதற்கு, இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப் படும் உலகப் புகழ் பெற்ற பொங்கல் திருவிழாதான் காரணம். இந்த விழாவின்போது லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல்
வைத்து அம்மனை வழிபடுவது பிரமாண்டமாக இருக்கும். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் நாயகி, கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரம் தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்
#தீக்ஷை
ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் ஒருவர் குருவிடம் இருந்து தீட்சை பெறுவது வழக்கம். தீட்சை என்பதற்கு ஆரம்பம் என்று அர்த்தம். அதாவது ஒரு மந்திரத்தின் மூலமாக ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைய குருவின் மூலம் பெற்ற உபதேசத்தை தொடங்கி செய்வது என்பது அதன் பொருள். தீட்சைக்கு 3
அடிப்படை விஷயங்கள் தேவை. முதலாவது, தீட்சை தருவதற்கான ஆன்மீக குரு. இரண்டாவது தீட்சை பெறுவதற்கான மாணவன். மூன்றாவது தீட்சைக்கு உரிய மந்திரம் அல்லது நெறிமுறை. இந்த 3 விஷயங்களும் மிகச்சரியாக அமைந்தால் தான் ஒருவரது ஆன்மீக வளர்ச்சி என்பது சாத்தியம். ஆன்மீக சான்றோர்கள் அவரவர்களுக்கு
உரிய வழிகளில் பல்வேறு தீட்சைகளை வழங்குகிறார்கள். அவை, ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை, வாசக தீட்சை, மந்திர தீட்சை, யோக தீட்சை, ஞான தீட்சை, வித்யா தீட்சை, தந்திர தீட்சை, பிரம்ம தீட்சை உள்ளிட்ட 81 வகையான தீட்சைகள் உள்ளன. சாஸ்திர ரீதியாக 64 முறைகள் வழக்கத்தில் கடைபிடிக்கப்