M.SivaRajan Profile picture
May 28 13 tweets 3 min read Twitter logo Read on Twitter
#ஸ்ரீ_மாங்களீஸ்வர_ஸ்வாமி

மாங்கல்ய பாக்கியம் அருளும் மாங்களீஸ்வர ஸ்வாமி :

இடையாற்று மங்கலம் என்ற சிற்றூரில் உள்ளது ஸ்ரீ மாங்களீஸ்வரர் ஆலயம்.

இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மாங்களீஸ்வரர்.

இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.

இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ImageImage
முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரமும், மகாமண்டபமும் காணப்படுகின்றன.

மகாமண்டபத்தினுள் தெற்கு முகப்பு வழியே உள்ளே நுழைந்ததும் எதிரே அன்னை மங்களாம்பிகையின் சன்னிதி உள்ளது.

இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள்.
அன்னை தனது மேல் இரு கரங்களில் தாமரை மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் இளநகை தவழும் இன்முகத்துடன் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

மகா மண்டபத்தை அடுத்த அர்த்த மண்டபம் உள்ளது.
அதையடுத்து உள்ள கருவறையில் இறைவன் மாங்களீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

இறைவனின் கருவறை தேவக் கோட்டத்தில் தெற்கில் பிச்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தியும், வடக்கில் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.
திருச்சுற்றில் மேற்கில் விநாயகர் சன்னிதி உள்ளது.

அந்த சன்னிதியின் இடதுபுறம் மாங்கல்ய மகரிஷியின் திருமேனி உள்ளது.

மகரிஷி தனிச்சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தொடர்ந்து சுப்பிரமணியர் சன்னிதியும், வடக்கில் சண்டிகேஸ்வரர் சன்னிதியும் உள்ளது.

வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களின் தனிச்சன்னிதி உள்ளது.

சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், அழகான உயரமான திருமதில் சுவற்றுடன் அமைந்திருப்பதே தனி அழகு தான்.
2006-ம் ஆண்டு ஜூன் முதல் நாள் இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

இங்கு மேற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கும் மாங்கல்ய மகரிஷி இந்த ஊரில் அவதரித்து இங்கேயே சித்தியானவர் எனக் கூறுகின்றனர் பக்தர்கள்.
இவர் இங்கு அருள்பாலிக்கும் இறைவனுக்கும், இறைவிக்கும் திருமணம் செய்து வைத்தவர் என்றும் தல வரலாறு சொல்லப்படுகிறது.

இந்த மாங்கல்ய மகரிஷி கன்னிப் பெண்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார்.
திருமணமாகாதவர்கள் உத்திர நட்சத்திரத்தில் இந்த மகரிஷிக்கும், இறைவன் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, சீப்பு, கண்ணாடி, குங்குமம், மஞ்சள், சட்டைத்துணி, பழம், பூ போன்ற மங்கலப்பொருள்களை பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
இப்படி வழிபடும் கன்னியரின் கல்யாணக் கனவு பலிக்கிறது. மனதிற்கு பிடித்த மணாளனை அவர்கள் கரம் பற்றுகின்றனர்.

மணமானதும் அவர்கள் தம் கணவருடன் இந்த ஆலயம் வந்து, மாங்கல்ய மகரிஷியை வழிபட்டு சர்க்கரைப் பொங்கல், கேசரி, அக்கார வடிசல் போன்ற
இனிப்பு பிரசாதங்களை அவருக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர்.

தவிர அந்தக் கன்னியர்கள் தங்களது வேண்டுதல் பலித்து, திருமணம் நிச்சயமாகி, பத்திரிகை அடித்ததும், அந்த முதல் பத்திரிகையை சமர்பிப்பது மாங்கல்ய மகரிஷியின் பாதத்தில் தான்.
இந்த மாங்கல்ய மகரிஷியை வணங்கி பிரார்த்தனை செய்தால், அமைதியான அன்பான கணவனைப் பெண்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் - இறைவியை, உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆராதனை செய்து வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கக் கூடும் என்பது ஐதீகம்.
திருச்சி - அன்பில் சாலையில் உள்ள லால்குடி பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது இடையாற்று மங்கலம் என்ற தலம்.

#ஸ்ரீ_மாங்களீஸ்வரர்

#ஸ்ரீ_மாங்களீஸ்வர_ஸ்வாமி

#மாங்கல்ய_தடை_நிவர்த்தி

#ஓம்_சிவாய_நமஹா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

May 28
#சிவ_அடியார்_பூசனை

சிவபூசனைக்குரிய நிலைக்களங்கள் மூன்று என்பர்.

அவை

சிவலிங்கப் பூசனை,

சிவ அறிவு பெற்ற சிவ ஆசான் பூசனை,

சிவ அடியார் பூசனை என்பனவாகும்.
மக்களால் கட்டப் பெற்ற,
படம் வரையப் பெற்ற கொடிச்சீலையை உடைய திருக்கோயிலில் இயங்காமல் எழுந்து அருளியிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை அன்பினால் படைத்தால் அது எங்கும் இயங்குகின்ற உயிர்களின் உடம்பாகி கோயிலினுள் எழுந்து அருளியிருக்கின்ற இறைவனுக்குப் போய்ச் சேறாது என்கின்றார் திருமூலர்.
ஆனால் எழுந்து இயங்கும் உயிர்களின் உடம்பாகிய கோயிலினுள் எழுந்து அருளியிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளைக் கொடுத்தால் அச்சிவனுக்கு படைத்தல் ஆவதுடன், கொடிச்சீலை ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுக்குப் போய்ச்சேரும் என்பதனை,
Read 31 tweets
May 28
#விளக்கின்_நவகிரக_தத்துவம்

கோயில்களிலும் ,வீடுகளிலும் நாம் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.

விளக்கிற்க்கும் நவகிரகங்களுக்கும் உள்ள தொடர்பு பலருக்கும் தெரியாது.

இந்த பதிவில் அதனை தெரிந்து கொள்வோம் . Image
1). விளக்கு = சூரியன் ஆகும்

2). நெய்/எண்ணெய் - திரவம் = சந்திரன்

3) திரி = புதன்

4). அதில் எரியும் ஜ்வாலை =செவ்வாய்

5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு

6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = சனி

8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது

9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை);

அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்.
Read 4 tweets
May 27
#ஜோதிடம்_அறிவோம்

இல்லற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகாத ராசிகள் :

ஒவ்வொரு ராசிக்கும் ஒருசில அடிப்படை குணாதிசயங்கள் பொதுவாக இருக்கும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது ஒரு சிலர் மத்தியில் வேறுப்பட்டு கூட போகலாம். Image
இதன் அடிப்படையில் பார்க்கும் போது இரண்டு ராசிகளின் குணாதிசயங்கள் ஒன்றாக சேரும் போது அங்கு நன்மை, தீமை இரண்டும் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த வகையில் ஒருசில ராசிகள் ஒன்றிணைந்தால் அவர்கள் இயல்பாகவே மகிழ்ச்சியாக இருப்பார்கள்,
ஒருசில ராசிகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பார்கள்.

இதில் இல்லற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப் போகாத ராசிகள் எவையென இனிப் பார்க்கலாம்…
Read 16 tweets
May 27
மிக மிக முக்கியமான பதிவு :

கங்கையில் கரைக்கப்படும் பாவங்கள் எங்கே மறைகின்றது?

ஒரு முறை, பாவங்கள் எதுவும் செய்யாத புண்ணியாத்மாவான முனிவர் ஒருவர், கங்கையில் நீராட சென்றார்.

அப்போது, அங்கே குளித்துக் கொண்டு இருந்தவர்கள், Image
"மாதா கங்கே,
என் பாவத்தினை போக்கி காத்தருள்க"
என்று கூறி நீராடினார்கள்
இதை கேட்ட அந்த முனிவருக்கு ஒரு சந்தேகம் வந்தது.

"இப்படி பாவங்களை ஒழுக்கி விடப்படும் கங்கையில் நான் குளித்தால் இந்த பாவங்கள்
என்னை வந்து ஒட்டி கொள்ளுமல்லவா?"
எனவே அதில் குளிக்காமல் இருப்பதே நலம் என்று புறப்படலானார்.

அந்நேரம் ஒரு பெண் அங்கு வந்து, ஏன் முனிவரே நீங்கள் குளிக்காமல் செல்கிறீர்கள் என்று கேட்க முனிவர் தன் சந்தேகத்தை அவரிடம் கூறினார்.
Read 21 tweets
May 26
#பலராமர்

நன்றிக் கடனாக உருவான அவதாரம் ..!!

திருமாலின் மற்ற அவதாரங்கள்,

வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி எடுக்கப்பட்டவை.

ஆனால் பலராம அவதாரம் அவரது கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்புடையது. Image
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரம் பலராம அவதாரம்.

இது மற்ற அவதாரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. .

வேதத்தைத் திருடிச் சென்ற சோமுன் என்ற அசுரனை அழித்து,

வேதத்தை மீட்பதற்காக எடுக்கப்பட்டது மச்ச அவதாரம்.
தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க வேண்டி மேரு மலையை தாங்க எடுக்கப்பட்டது கூர்ம அவதாரம்.

இரண்யாட்சனை அழித்து கடலுக்கு அடியில் இருந்து பூமியை மீட்க எடுக்கப்பட்டது வராக அவதாரம்.

தன் பக்தனான பிரகலாதனை காப்பாற்ற எடுக்கப்பட்டது நரசிம்ம அவதாரம்.
Read 23 tweets
May 26
#இலுப்பை_எண்ணெய்

ஐஸ்வர்யம் தரும் இலுப்பை எண்ணெய் :

திருஇரும்பை மாகாளம், திருப்பழமணிப் படிக்கரை, திருக்கொடி மாடச் செங்குன்னூர், திருவனந்தபுரம் முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் தல விருட்சமாக இருக்கிறது. Image
இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்யெண்ணை எனப்படுகிறது. 

இலுப்பை எண்ணெய் சகல தேவர்களுக்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது.

ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது.
இந்த எண்ணெயை  விளக்கில் ஊற்றி இறைவனை வழிபட காரியங்கள் வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

பிரம்ம முகூர்த்த வேளையான அதிகாலை 04 - 30 மணி முதல் 06 மணி வரை நேரம் குறிப்பிடப் படுகிறது.

அந்நேரம் இறைவன், இறைவி  நம் வீட்டிற்கு வரும் அற்புதமான நேரமாகும்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(