விஸ்வா | VISWA Profile picture
May 28 10 tweets 4 min read Twitter logo Read on Twitter
#கூட்டாட்சிமுறைக்கு_சவால்

நாடாளும் மன்றத்தை ஏன் நாட்டின் முதல் குடிமகன் திறக்கலை? என்ற கேள்வியை அழகா திசை திருப்பி,

செங்கோலா?கன்னக்கோலா என விவாதம் பண்ண வச்சிட்டு,

ஜனநாயகம் - கூட்டாட்சி என்பதற்கே சாவு மணி அடிக்கும் திட்டம் தான்

நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு Image
தற்போது புதிய நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் கூடுதல் எண்ணிக்கையில் 888 எம்பிக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் 2026-ம் ஆண்டு வரை எம்.பிக்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சட்ட திருத்தம் கொண்டு வந்ததால் Image
2026-ம் ஆண்டு வரை இதே எம்.பிக்கள் எண்ணிக்கைதான் இருக்கப் போகிறது.

2026-ம் ஆண்டுக்குப் பின்னரே எம்.பிக்கள் எண்ணிக்கையில் மாற்றம் உருவாகும்.

மக்கள் தொகை அடிப்படையில்தான் எம்பிக்கள் பிரதிநிதித்துவம் வரையறுக்கப்படுகிறது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் Image
திட்டத்தை தென்னிந்திய மாநிலங்கள் முழு வீச்சில் செயல்படுத்தி இருக்கின்றன.

ஆனால் வட இந்திய மாநிலங்கள் இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை.

மக்கள் தொகை அடிப்படையில் MP எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும் போது தென்னிந்திய பிரதிநிதித்துவம் குறைந்து கூட்டாட்சி முறையே கேள்விக்குள்ளாகி விடும் Image
1962-ல் தமிழ்நாட்டுக்கான லோக்சபா எம்பிக்கள் எண்ணிக்கை 41.

குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியதால் தமிழ்நாடு லோக்சபா எம்.பிக்கள் எண்ணிக்கை தற்போது 39 ஆக குறைந்துள்ளது.

எம்.பிக்கள் பிரதிநிதித்துவம் குறையும் போது நலத்திட்டங்களுக்கான எம்.பி நிதியும் குறையும் Image
குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்டவைகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகம்

அம்மாநிலங்களுக்கான லோக்சபா தொகுதிகளும் அதிகம்.

நலத்திட்டங்களுக்கான எம்பிக்கள் நிதியும் அதிகம்

மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தியதால் பிரதிநிதித்துவம், Image
நிதி இழப்பை எதிர்கொள்ளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்குவதானே முறை?

மக்கள் தொகை 55 கோடியாக இருந்த போது லோக்சபா தொகுதி எம்.பிக்கள் எண்ணிக்கை 545

தற்போது மக்கள் தொகை 100 கோடி தாண்டியதால் 1,000 எம்.பிக்கள் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார் Image
இப்படியான ஒரு நிலைமை உருவானால் நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் கேலிக்குறியதாகிவிடும்.

உ.பி, பீகார் எம்.பிக்கள் நினைப்பதுதான் இந்தியாவின் சட்டமாகிவிடும்.

தென்னிந்திய மாநில மக்கள், வட இந்தியாவுக்கு கீழ்படிந்தவர்களாக ஒடுக்கப்படுகிறவர்களாக உருமாறும் நிலைமை உருவாகும்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒற்றுமைக்கு பெரும் சவாலாக மாறும்.

2024 லோக்சபா தேர்தலில் 3-வது முறையாக பாஜக வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால் 2026-ல் 888 எம்.பிக்களை உருவாக்கும் வகையிலான மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது Image
சமூக பொருளாதார ரீதியாக தேக்கம் எதுவும் இல்லாமல் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மிக மோசமான பாதிப்புகளை சந்திக்கக் கூடும்.

இது ஜனநாயகத்தன்மையை உலுக்கி எடுக்கக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும்.

என்ன செய்யப் போகின்றன தென் மாநிலங்கள்? Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with விஸ்வா | VISWA

விஸ்வா | VISWA Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VIS1976AL

May 27
#செங்கோல்_MythBuster
By #BBC

செங்கோல் நேருவுக்கு வழக்கப்பட்டது குறித்து Time பத்திரிகையின் 1947 ஆகஸ்ட் 25ஆம் தேதியிட்ட இதழ்:

"கடவுள் நம்பிக்கை குறித்து உறுதியான நிலைப்பாடில்லாத ஜவாஹர்லால் நேரு, இந்தியாவின் பிரதமராவதற்கு முந்தைய நாள் மாலையில், ஆன்மிக உணர்வில் வீழ்ந்தார். Image
தென்னிந்தியாவின் தஞ்சாவூரிலிருந்த ஒரு மடத்தின் தலைவரான ஸ்ரீ அம்பலவான தேசிகரின் இரண்டு தூதர்கள் வந்து இந்தியர்களின் உண்மையான அரசின் முதல் தலைவரான ஜவாஹர்லால் நேரு, பழங்கால இந்திய அரசர்களைப் போல இந்து புனிதத் துறவிகளிடமிருந்து அதிகாரத்தின் சின்னத்தைப் பெற வேண்டுமென கூறினர்
அந்தத் தூதர்களுடன் நாதஸ்வர வித்வான் ஒருவரும் வந்திருந்தார். ஒரு பழைய ஃபோர்டு காரில் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை நேருவின் வீட்டை நோக்கி அவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர். அப்படிச் செல்லும்போது ஒவ்வொரு நூறடிக்கும் இடையில் நின்று சுமார் 15 நிமிடங்கள் நாதஸ்வரத்தை வாசித்தார். மற்றொருவர்
Read 24 tweets
May 25
#லீகுவான்_சிலை_எதுக்கு?

ஐரோப்பாவின் அட்லாண்டிக் கரையோரம் இருக்கும் நாடு பெல்ஜியம்.

டச்சு மொழி பேசும் Flemish 60%
(வடபகுதி)

French மொழி வலோனியர் 40%
(தென்பகுதி)

சிறிதளவு German உண்டு
(கிழக்கு)

தலைநகர் பிரஸ்ஸல்சில் பிரெஞ்சு அதிகம்.

இவர்களுக்கு இடையே அசம்பாவிதம் மூண்டதே இல்லை Image
எப்படி?

1) டச்சு, பிரஞ்சு, ஜெர்மன் ஆகிய மூன்று மொழிகளும் ஆட்சி மொழி ஆக்கப்பட்டன

2) பிரண்ட்ஸ் மற்றும் டச்சு பேசுபவர்களுக்கு மத்தியில் சம அளவில் அமைச்சர் பதவி

3) இதனை ஏற்று தலைநகர் பிரஸ்ஸல்சில் டச்சுக்காரர்களுக்கு சம உரிமை வழங்கினர் ஃபிரஞ்ச்

4) மத்திய மாநில அரசுகள் தவிர்த்து Image
மூன்றாவதாக சமுதாய அரசு என்ற ஒன்று உண்டு.
மொழி,கலாச்சாரம் தொடர்பான பிரச்சனைகளில் சிறுபான்மை ஜெர்மனியர் பாதிக்க கூடாது என்பதற்கு இந்த ஏற்பாடு

5) மாநில அரசு மத்திய அரசுன் கீழ் இருப்பவை அல்ல.

இதே அரசியல் அமைப்பு ஸ்ரீலங்காவில் வந்திருந்தால் இன்றைக்கு அது திவால் ஆகி இருக்காது. Image
Read 8 tweets
May 24
#குவாட்மாநாடு_கூத்துகள்

போஸ் பாண்டி ஜப்பானில் G7 மாநாட்டில், teleprompter வசதி இல்லாததால் ஹிந்தியில் எழுதி ஆங்கிலத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் போது

இத்தாலியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் G7 கூட்டத்தில் இருந்து
இத்தாலி பிரதமர் உடனே திரும்பி சென்று விட்டார். Image
இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய QUAD countries குவாட் அமைப்பின் மாநாடு இந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடப்பதாக இருந்தது.

அதனால் நான்கு நாட்டு தலைவர்களும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய இருந்தனர்.

கடன் பிரச்சனை தொடர்பான
மிக முக்கிய கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் குவாட் மாநாடு பயணத்தை ஜோ பிடன் ரத்து செய்துவிட்டார்.

அமெரிக்க அதிபர் வராததால் ஜப்பான் பிரதமரும் பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

முக்கிய தலைவர்கள் இரண்டு பேர் வராததால் ஆஸ்திரேலியா இந்த குவாட் மாநாட்டையே கேன்சல் செய்துவிட்டது.
Read 10 tweets
May 23
#டெல்லி_சண்டிகர்_ட்ரக்பயணம்

தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு பிரதேசத்திற்கு அடிக்கடி சென்று "நானும் ரவுடிதான்" என பீலா விடுபவர்கள் இடையே
தலைவர் ராகுலின் வழி என்றுமே தனி தான்.

திடீரென்று பழைய டெல்லியில் டீ குடிக்க கிளம்புவார்.

அல்லது தமிழ்நாட்டில் மண்பானை சமையலை ருசி பார்ப்பார் Image
அப்படி ஒன்றுதான் இந்தியா முழுவதும் ட்ரக் இயக்கும் ஹரியானா ஓட்டுநர்களின் சிரமங்களை புரிந்து கொள்ள,

டில்லியில் இருந்து சண்டிகருக்கு 300 கிலோ மீட்டர்
ட்ரக்கிலேயே நள்ளிரவில் பயணம் மேற்கொண்டார் ராகுல்.

அந்த உரையாடல் வைரலாகி சோசியல் மீடியாவில் பொறி பறக்குது Image
வட இந்தியாவில் ட்ரக் டிரைவர்கள் ஓய்வு எடுக்க உணவு உட்கொள்ள சாலையோர உணவகங்களை "டாபா" என்பர்.

பயணம் செய்த டிரக் டிரைவர், அத்தகைய ஒரு தாபாவில் ஓய்வுக்காக நிறுத்த,

அங்கே ஏற்கனவே குழுமி இருந்த மற்றும் பல ஓட்டுனர்களுடன் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி,

அவர்களின் அனுபவங்களை கேட்டார் Image
Read 7 tweets
May 22
#கிண்டி_சலோ

எவன் கொடுத்த ஐடியாவோ தெரியல, திடீர்னு பர்பி பிரியர் அடிமைகளை கூட்டிக்கொண்டு ஆட்டுத்தாடியை பார்க்க கிளம்பினார்.

வார லீவு முடிந்து அலுவலகங்களுக்கு திரும்பியவர்கள் இன்று யார் முகத்தில் விழித்தார்களோ,

பர்பி பிரியரின் பேரணியில் மாட்டி உதிர்த்த வார்த்தைகள் தான் இவை 👇 Image
நேற்றுதான் ஒருத்தன் இதே விஷயத்தை தூக்கிக்கொண்டு ஆளுநர் மாளிகையில் கேட் வாக் நடத்தினான்.

ஒத்த கவுன்சிலர் சீட்டுக்கே வக்கில்லாதவன் மொத்த மகளிரையும் கூட்டிக்கொண்டு போய் காட்டினா

ஆளுமை எடுப்சுக்கு ரோஷம் வராதா, ஆனா நம்ம கட்சியில் தான் எல்லாம் காந்திமதியா இருக்கே Image
இவனுக அக்கபோரில் மாட்டிக்கொண்ட சென்னைவாசிகள் இவர்களின் ஏழு தலைமுறைக்கும் சேர்த்து சாபமிட்டனர்.

நிற்க,

திடீரென ஞான சூனியம் எடுப்புக்கு பேரணி போக வேண்டிய அவசியம் என்ன?

இரண்டு மேட்டர்.

1) தூத்துக்குடி படுகொலை நாள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது Image
Read 8 tweets
May 21
#கொங்குநாடு_கோட்டையிலே

சவுக்கும், ஆட்டு குட்டியும் சதா சர்வ காலமும் "செந்தில் பாலாஜி" னு ஏன் கதறிட்டு இருக்கானுங்கனு அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும்

#செந்தில்பாலாஜி பவர் பிடுங்க பட்டால் கொங்கு மண்டலம் ஆயிஆதிமுக கோட்டையாக மாற்றிவிடலாம்னு சவுக்கு வாயை வாடகை எடுத்திருக்கானுங்க Image
அதே மாதிரி அரவக் குறிச்சி தொகுதியில் டெபாசிட் வாங்க வேண்டும் என்று ஆட்டு குட்டியும் தலையால தண்ணிய குடிக்கிறான்.

ஆளுநரை மாசா மாசம் சந்தித்து ஒரு மனு கொடுக்கிறான். மக்கள் பிரச்சினை குறித்து ஒரு மனு கூட கொடுத்தது இல்லை

எல்லாம் திமுக மீது புகார்தான். அந்த புகார்களில் ஏதாவது Image
ஒன்றின் மீதாவது ஆளுநர் நடவடுக்கை எடுத்ததாக தகவல் உண்டா?

இந்த கிறுக்கனை வைத்துதான் தமிழ் நாட்டில் தாமரையை மலர செய்ய போகிறார்களாம்.

ரபேல் வாட்ச் விவகாரத்தில் ஆட்டுக்குட்டிய கோமாளியாக்கி,

பில் கேட்டு குடைந்து எடுத்ததால்
செந்தில் பாலாஜி மேல ஆட்டுக்கு பெர்சனலாவும் ஒரு காட்டம் Image
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(