#மத்தூரு_உக்ர_நரசிம்மர்_ஆலயம்
கர்நாடக மாநிலத்தில் பல நகரங்கள், கிராமங்களில் நரசிம்ம பெருமானுக்கு பல ஆலயங்கள் உள்ளன. நரசிம்ம பெருமான் அவற்றில் லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர் மற்றும் உக்ர நரசிம்மர் எனும் பெயரில் அவதாரம் எடுத்து அமர்ந்துள்ளார். இப்படியான ஓர் ஆலயம் உகர நரசிம்மர்
ஆலயம் எனும் பெயரில் மத்தூரில் வைத்யநாத ஸ்வாமி ஆலயத்தின் அருகில் உள்ளது. இதுவும் மஹாபாரத கதையுடன் இணைந்த கோவில் ஆகும். ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. துவாபர யுகத்தில் பல மைல் தூர பரப்பளவில் இருந்ததாக கூறப்படும் மத்தூர் அன்று அர்ஜூனாபுரி என்று அழைக்கப்பட்டது.
அங்கு மஹாபாரத போரின் இறுதி கட்ட முக்கியமான சண்டை பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடைபெற்று வந்த நேரம். அந்த நேரத்தில் இரு தரப்பிலும் பல உயிர்கள் செடிகொடிகள் வெட்டி சாய்ப்பதை போல வீழ்ந்து மரணம் அடைவதைக் கண்ட அர்ஜுனனின் மனம் தளர்ந்து போயிற்று. இறப்பவர்கள் எதிரிகளாக
இருந்தாலும் ரத்த சம்மந்தம் கொண்ட உறவினர்களே என்பதினால், இழந்த மன அமைதியை திரும்பப் பெற்று யுத்தத்தில் முழு மனதுடன் ஈடுபட, மனபலம் அதிகரிக்க வேண்டும் என எண்ணிய அர்ஜுனன் கிருஷ்ணனிடம் அவர் ஒருமுறை எடுத்த உக்ர நரசிம்ம அவதாரத்தைத் தனக்குக் காட்டுமாறு வேண்டினான். நரசிம்மர் சிங்க
முகத்தையும் மனித உடலையும் கொண்டவர் என்றாலும் தீமைகளை அழித்து நன்மைகளை அளிக்கவே அந்த பயங்கரமான உருவைக் கொண்ட அவதாரத்தை எடுத்தவர். லட்சுமி நரசிம்மர் அல்லது யோக நரசிம்மர் என்ற நிலையில் அவரை ஆராதிக்கும்போது நம் பாவங்கள் தொலைந்து துன்பங்கள் நீங்கும். நரசிம்ம பெருமானை வணங்கி
துதிப்போர்க்கு மன அமைதி கிடைக்கும், வளமான வாழ்க்கை அமையும், தீயவை விலகும், துன்பங்கள் மறையும் மற்றும் மனதில் பயமின்மை போன்ற நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏன் எனில் அவர் தீமைகளை அழித்து நன்மைகளை அளிப்பவர். அவர் தருவது வெளிப்
பார்வைக்கான மன அமைதி மட்டுமே அல்ல, அது உளமாற கிடைக்கும் ஆழ்ந்த மன அமைதி ஆகும். இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவரே நரசிம்மத் பெருமான் என்பதால் தான் அர்ஜுனன் தனக்கு அந்த அவதார கோலத்தை காட்டுமாறு பகவானிடம் வேண்டுகோள் வைத்தான். கிருஷ்ண பகவானுக்கு அர்ஜுனனின் மனம் புரிந்தது. தனது
உற்றாரும் உறவினரும் செடிகொடிகள் போல சாய்ந்து விழுவது அவன் உள்ளத்தில் தளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது,அதை அப்படியே விட்டு விட்டால் நடைபெறும் யுத்தத்தின் முடிவே மாறிவிடும் என்பதை உணர்ந்தார். அதே நேரத்தில் தான் அர்ஜுனனுக்கு நேரடியாக நரசிம்ம அவதாரத்தின் உக்ர கோலத்தைக் காட்டினால், அந்த
பயங்கரக் காட்சியைக் காணும் அவன் உடைந்து போன மனது மேலும் பயம் கொண்டு அவன் வீரத்தை தளர்ச்சி அடைந்து விட வைத்து விடும். ஆகவே அவனுக்கு முன் நேரடியாக அந்த காட்சியில் தான் தோற்றம் எடுக்கக் கூடாது என முடிவு செய்தார். அவன் வேண்டுகோளை ஏற்று அவன் முன் அந்த கோலத்தில் தான் தோன்றி விட்டால்
உடனடியாக சில காலம் தான் அவனுக்கு யுத்தத்தில் உதவிக்கொண்டு இருக்கும் கிருஷ்ணர் என்ற நிலையில் இருந்து விலகி நிற்க நேரிட்டு விடும் என்ற நியதியும் இருந்தது. ஆகவே தன்னால் எந்த உதவியையும் அர்ஜுனனுக்கு செய்ய இயலாமல் போய் விடும் என்பதாக அவனிடம் எடுத்துரைத்தார். அதே சமயம் அர்ஜுனனின்
ஆசையை நிராகரிக்க விரும்பாததால் அந்த கோலத்தை பிரும்மா மூலம் காட்டுவதாக அவனை சமாதானப் படுத்தினார். பிரும்மாவும் கிருஷ்ணனின் வேண்டுகோளை ஏற்று அதே இடத்தில் உக்ர நரசிம்மர் ஹிரண்யகசிபுவை எவ்வாறு அழித்தாரோ அதே கோலத்தில் தத்ரூபமாக நரசிம்மரின் சிலா ரூபத்தை நிர்மாணித்தார். எட்டு கைகள்
3 கண்களைக் கொண்ட த்ரிநேத்ர நரசிம்ம விக்கிரகத்தில் இரு கைகளினால் ஹிரண்யகசிபுவை தனது தொடையில் அழுத்தி வைத்துக் கொண்டு இன்னும் இரு கைகளினால் அவனது குடலைப் பிடுங்கி மாலையாக போட்டுக் கொண்ட காட்சி இருந்தது. அவனை வதம் செய்யும்போது மூன்றாவது கண்ணை திறந்து காட்டுகிறார் என்று அர்ஜுனனுக்கு
கேட்கும் வகையில் அசரீரி ஒலியை எழுப்ப வைத்தார். மற்ற நான்கு கைகளிலும் ஆயுதங்கள் இருக்க அவர் காலடியில் இடப்புறம் கருட பகவான் மற்றும், வலப்புறத்தில் பிரஹலாதன் காணப் பட்டார்கள். சாதாரணமாக சிவபெருமானுக்கு மட்டுமே 3 கண்கள் உண்டு என்பதினால் அந்த த்ரிநேத்ர நரசிம்ம பெருமான் மேன்மை
பெற்றவராக உள்ளார். அந்த கோலத்தில் அவரை தரிசிக்கும் பக்தர்கள் மன அமைதி பெற்று மன பலத்தையும் பெறுகின்றார்கள். இப்படிப்பட்ட மேன்மையான கோலத்தில் நரசிம்ம பெருமானை தரிசனம் செய்த அர்ஜுனன் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் இருந்தான். அவன் மீண்டும் கண் விழித்தபோது புதுப்பொலிவோடு
யுத்தத்தில் ஈடுபடும் மன உணர்வைப் பெற்று இருந்தான். அவனுடைய மனோதிடம் அதிகரித்து இருந்தது. அவன் எதிரில் கிருஷ்ண பகவான் சிரித்துக் கொண்டு நின்று இருந்தார். காலப்போக்கில் அந்த இடமே அதே விக்ரகத்துடன் கூடிய உக்ர நரசிம்மர் ஆலயமாயிற்று. பிரும்ம பகவான் நிர்மாணித்த சிலையைக் கொண்ட ஆலயத்தில்
பிற்காலத்தில் தனித் தனி சன்னதியில் கிருஷ்ண பெருமான் குழந்தை கோலத்தில் இருக்க அவரை தனது மார்போடு அழுத்தி வைத்துக் கொண்டு அவருக்குத் தன் மடியில் இருந்து பால் தரும் காட்சியில் தேவகி யசோதா இருக்க, ஸ்ரீனிவாசப் பெருமான் இன்னொரு சன்னதியிலும், நரசிம்ம பெருமானின் மனைவிகளான பூதேவி மற்றும்
ஸ்ரீதேவி எனும் தாயார்கள் சௌம்யா நாயகி மற்றும் நரசிம்ம நாயகி எனும் பெயர்களிலும், இன்னொரு சன்னதியில் ராம-லக்ஷ்மண சீதா சமேத சிலைகளும் அமைக்கப்பட்டன. அந்த ராம-லக்ஷ்மண சீதா சமேத சன்னதியில் ஆஞ்சநேய பகவான் கைகளைக் கூப்பி ராமபிரானை வணங்கி நிற்கும் காட்சியில் விக்ரகம் உள்ளது. ஹோய்சால
மன்னர்கள் ஆட்சி காலத்தில் நலிவடைந்து இருந்த இந்த ஆலயத்தை புதுப்பித்து உள்ளார்கள். இந்த இடம் கடம்ப முனிவர் காலத்தில் #கடம்பஷேத்ரா என அழைக்கப்பட்டு அந்த முனிவரும் இங்கு தங்கி இருந்து ஆலயத்தில் வழிபட்டு வந்ததாக ஆலய வரலாறு கூறுகிறது. குழந்தை செல்வம் அற்ற தம்பதிகள் இங்கு வந்து
திருமஞ்சனம் செய்து மஞ்சள் காப்பு சாத்தி அந்த திருமஞ்சனத்தை நீரை கலந்து அந்த தண்ணீரில் குளித்தால் அவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும், மற்றும் ஸ்வாமிக்கு திருமஞ்சனம் சாத்தி வேண்டுதல்கள் செய்தால் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பது ஆலய நம்பிக்கை. இந்த ஆலயம் அற்புதமான ஆலயம் என்பதில்
சந்தேகமே இல்லை.
மாண்டியாவிற்கு 22 கிமீ, பெங்களூரிலிருந்து மைசூரு பேருந்து வழித்தடத்தில் மத்தூரு உள்ளது. மத்தூரு மாண்டியாவிலிருந்து 22 கிமீ மைசூரிலிருந்து 72 கிமீ, பெங்களூருவிலிருந்து 80 கிமீ தொலைவிலும் உள்ளது.
ஜெய் நரசிம்ம
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#தண்டபாணி_பைரவர் #காசி_வைபவம்
காசியில் 2 பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று கால பைரவர் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில் பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளி உள்ளார். காசியிலேயே பாவம் செய்பவர்களும்
இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் இந்த தண்டபாணி பைரவர். தண்டபாணி மந்திரிலிலுள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்
பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். பூர்வத்தில் பூர்ணபத்திரன் என்ற யக்ஷன் ஒருவன் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கி கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தான். அவனுக்கு ஹரிகேசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இவன்
திருவிடைமருதூர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை #அன்பிற்பிரியாள்
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டு
வந்ததுடன், அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே,
அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார். அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன்
#பாரியூர்_கொண்டத்துக்_காளியம்மன்
#ஆடிமாத_சிறப்புப்_பதிவு
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் பராபுரி என்று அழைக்கப் பட்டது. பரா என்றால் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்றால் ஊர்,
என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட தலமே பாரியூர் என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் பாரியூர் என்று அழைக்கப்படுவதாகவும்
கூறுகின்றனர். வள்ளலின் பெருமைக்கும், செழிப்புக்கும் அன்னையே காரணம் என்று குறிப்பிடப் படுகிறது. இன்றும் பாரியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளும், குளுமையான நீர் நிலைகள், அடர்ந்த மரங்களுமாகச் செழித்து காணப்படுகின்றன. கோயில் ராஜகோபுரம் 5 அடுக்குகள் கொண்டது.
#ஸ்ரீகாட்டுவீர_ஆஞ்சநேயர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற
என்ற திருநாமம் கொண்டு அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் விக்கிரகமாக உள்ளது. இப்பகுதி குன்றுகளாக விளை நிலங்களாக இருந்தது. இந்த விளை நிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின்
மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப் பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூஜித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை
#ஆற்றுக்கால்_பகவதி_அம்மன்
கேரளம் உருவெடுக்க காரணமாக இருந்த பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணம் கூறுகிறது. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயரில்லை. அவர்கள் அனைவருமே பகவதி என்றே அறியப்படுகின்றனர். கேரளாவில் பகவதி அம்மன்
கோவில்கள் அனேகம் இருக்கின்றன. இருப்பினும் அனைத்து பகவதி அம்மன் கோவில்களுக்கும் இல்லா சிறப்பு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு உண்டு. அதற்கு, இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப் படும் உலகப் புகழ் பெற்ற பொங்கல் திருவிழாதான் காரணம். இந்த விழாவின்போது லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல்
வைத்து அம்மனை வழிபடுவது பிரமாண்டமாக இருக்கும். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் நாயகி, கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரம் தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்
#தீக்ஷை
ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் ஒருவர் குருவிடம் இருந்து தீட்சை பெறுவது வழக்கம். தீட்சை என்பதற்கு ஆரம்பம் என்று அர்த்தம். அதாவது ஒரு மந்திரத்தின் மூலமாக ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைய குருவின் மூலம் பெற்ற உபதேசத்தை தொடங்கி செய்வது என்பது அதன் பொருள். தீட்சைக்கு 3
அடிப்படை விஷயங்கள் தேவை. முதலாவது, தீட்சை தருவதற்கான ஆன்மீக குரு. இரண்டாவது தீட்சை பெறுவதற்கான மாணவன். மூன்றாவது தீட்சைக்கு உரிய மந்திரம் அல்லது நெறிமுறை. இந்த 3 விஷயங்களும் மிகச்சரியாக அமைந்தால் தான் ஒருவரது ஆன்மீக வளர்ச்சி என்பது சாத்தியம். ஆன்மீக சான்றோர்கள் அவரவர்களுக்கு
உரிய வழிகளில் பல்வேறு தீட்சைகளை வழங்குகிறார்கள். அவை, ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை, வாசக தீட்சை, மந்திர தீட்சை, யோக தீட்சை, ஞான தீட்சை, வித்யா தீட்சை, தந்திர தீட்சை, பிரம்ம தீட்சை உள்ளிட்ட 81 வகையான தீட்சைகள் உள்ளன. சாஸ்திர ரீதியாக 64 முறைகள் வழக்கத்தில் கடைபிடிக்கப்