#காலகாலேஸ்வரர்_கோவில் கோயம்புத்தூர். 1,000-2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் இது. இங்குள்ள குரு பகவான் உலகிலேயே மிக உயரமானது. இந்தத் திருக்கோவில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது. அபிஷேக பிரியரான சிவனுக்கு, கோவில்களில் வித விதமான அபிஷேகம் செய்து பூஜை
செய்வர். சிவன் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சில தலங்களில் மூலிகையால் தைலாபிஷேகம் செய்வர். ஆனால், கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. மார்க்கண்டேயரின் ஆயுளை முடிக்கச் சென்ற எமதர்மன், தவறுதலாக சிவன் மீது பாசக்கயிறை
வீசினான். கோபம் கொண்ட சிவன், பணியை சரியாக செய்யாத எமனின் பதவியை பறித்து சாதாரண மனிதனாக பிறக்கும்படி செய்துவிட்டார். பூலோகம் வந்த எமன் விமோசனம் பெறுவதற்காக பல தலங்களில் சிவனை வழிபட்டு வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது, சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், இங்கு லிங்க வடிவம்
எதுவும் கிடைக்கவில்லை. எனவே, மணலால் லிங்கம் செய்ய நினைத்து, ஒரு குச்சியால் தரையை தோண்டினார். அப்போது, நுரைபொங்கியது. மணலையும், நுரையையும் சேர்த்து அவர் லிங்கமாக பிடித்து வைத்தார். உயிர்களை அழிக்கும் தனது சக்தியை இழந்த காலன் (யமன்) இத்தலத்தில் மணலும் நுரையாலுமான லிங்கம் செய்து
வழிபட்டுத் தன் அழிக்கும் ஆற்றலை மீண்டும் பெற்றார் என்பதால் இங்கு சிவன் காலகாலேசுவரர் எனப்படுகிறார். காலகாலேசுவரை வழிபட ஆயுள் பலமாகும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில், தம்பதியினர் அறுபதாம் திருமணம் செய்துகொள்கின்றனர்.
திருக்கடையூர் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் சக்தி கொண்ட திருத்தலமாகப்
பெருமை பெற்றாற்போல இத்திருத்தலம் திருக்கடையூருக்கு இணையாகக் கூறப்படுகின்றது. காரணமின்றி ஓர் இளம் பன்றியைக் கொன்ற பாவம் தீர நாரதர் அறிவுரைப்படி இத்திருத்தலத்தில் வழிபட்டு பன்றியைக் கொன்ற பாவத்திலிருந்து விமோசனம் பெற்றார் மன்னர் கரிகாற் சோழன். . கரிகால் சோழர் வில், அம்புடன் கூடிய
நஞ்சுண்டேஸ்வர சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து திருக்கோயிலைப் புனர்நிர்மாணம் செய்தார். கௌசிக மன்னர் இத்திருத்தலத்தில் யாகம் செய்ததால் #கௌசிகபுரி எனும் பெயர் பெற்றது. யாகம் செய்த இடம் #திருநீற்றுமேடு என்று வழங்கப் படுகிறது. இங்குள்ள அம்பாள் பெயர் கருணாகரவல்லி. கொடிமரத்திற்கு அடுத்து
வரும் நுழைவாயிலுக்குள் சென்றதும் இடப்புறம் சந்திரனுக்கும் வலப்புறம் சூரியனுக்கும் சிறியதாய் தனிச் சன்னிதிகள் உள்ளன. அடுத்து பலிபீடமும் நந்திதேவரும் உள்ளனர்.
சுவாமி சன்னிதிக்கு இடப்புறம் அமைந்துள்ள கருணாகரவல்லி அம்மன் சன்னிதியின் முன்பகுதியில் இடப்புறம் பூதேவி, ஸ்ரீதேவியுடன்
பெருமாளும் வலப்புறம் துர்க்கையும் உள்ளனர். சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னிதிக்கும் இடையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் கால சுப்பிரமணியர் என்ற பெயருடன் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். சுவாமி சன்னிதியின் வெளிச்சுற்றுச் சுவரின் பின்புறத்தில் சண்டிகேசுவரருக்கு எதிரில்
பிரம்மாவும் உள்ளார். இக்கோயிலின் உள்ளே #கரிவரதராஜப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சிவன் கோவிலில் விஷ்ணு, பிரம்மா இருவரும் வழிபடப்படுவது இக்கோவிலின் சிறப்பு.
கோவில் பிரகாரத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு நாயன்மார்களின் திருவுருங்களும்
தனியிடத்தில் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. கோவையில் கோவில்பாளையத்தில் உள்ள ஈச்வரனை சென்று தரிசிப்போம். ஆசி பெறுவோம்.
காலகாலேசுவராய நமஹ
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#திலதர்ப்பணபுரி_திருக்கோவில்
ஸ்ரீ ராமரே நேரில் வந்திருந்து தர்ப்பணம் செய்த கோவில் இது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் உள்ளது.
தல மூர்த்தி:
ஸ்ரீ முக்தீஸ்வரர்
தல இறைவி : சொர்ணவல்லி
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தல விருட்சம் : மந்தாரம்
திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம்,
திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி விளங்குகிறது. ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன. ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்லும் போது ஜடாயு என்ற பறவை ராவணனிடம் இருந்து சீதையை காப்பாற்ற முயன்று சிறகுகள்
#நவராத்திரி_ஸ்பெஷல்
துர்கையையும், லக்ஷ்மியையும், சரஸ்வதியையும் கொண்டாடும் 9 நாட்களை நவராத்திரி என்று கொண்டாடுகிறோம். நம் முயற்சிகள் வெற்றி தெய்வத்தின் துணை கட்டாயம் வேண்டும். இறைவன் நாம் கேட்கும் வரங்களை தாயாரின் பரிந்துரையின் பேரில் தான் நமக்கு அளிக்கிறார். சக்தி இல்லையே சிவன்
இல்லை. எனவே, அந்த சக்தியை நாம் நவராத்திரி நாட்களில் வழிபடும் போது, திருமகளின் திருவருளையும், திருமாலின் திருவருளையும் ஒருசேரப் பெற்றிட முடியும். நவராத்திரியின் 9 நாட்களுமே நம் வீட்டிற்கு வரும் பெண்களை சக்தி ஸ்வரூபமாகவே பாவித்து, அவர்களுக்கு வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் பூ பழங்கள்
என கொடுத்து அவர்களை மகிழ்விக்கும்போது சக்தி வடிவமான அம்பாளும் மகிழ்கிறாள். நவராத்திரியின் 9 நாட்களில், முதல் 3 நாட்கள் துர்கை வழிபாடு செய்கிறோம். இந்த நாட்களில், மாஹேஸ்வரி, கெளமாரி, வாராஹி என்ற பெயர்களில் துர்கைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அடுத்த 3 நாட்கள் திருமகளை
#ஒப்பிலியப்பன்_கோவில்
108 திவ்ய தேசங்களில் விண்ணகரம் என்று சிறப்பிக்கப்படும் வைணவ தலங்கள் 6. அவற்றில் ஒன்று தான் உப்பிலியப்பன் கோவில். மற்றவை
சீராம விண்ணகரம்,
அரிமேய விண்ணகரம்,
வைகுந்த விண்ணகரம்,
நந்திபுரம் விண்ணகரம்,
பரமேஸ்வர விண்ணகரம்.
5 நிலை ராஜகோபுரங்களுடன் உள்ள இந்த
ஆலயத்தில் தங்க குடம் கொண்டே திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது. அனுமனுக்கு தங்கவால், வைர கிரீடம் அணிவிக்கப்படுகிறது. திருவிண்ணகரப்பன் எனப் போற்றப்படும் உப்பிலியப்பன் மூலவராகவும், பொன்னப்பன் என்ற திருநாமத்துடன் உற்சவராகவும் பூமாதேவி தாயாருடன் காட்சி தரும் பெருமாள்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் வீற்றிருந்து அருள் புரிகிறார். இங்கு புரட்டாசி, ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். 108 திவ்ய தேசங்களில் இது 13 வது திவ்ய தேசமாகும். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. தென்திருப்பதி என அழைக்கப்
#விஷ்ணு_பாதம் #கயா
பித்ரு ஸ்ராத்தம் கயாவில் செய்வது நல்லது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதில் அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம். ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும். 16 ஸ்லோகங்கள்
கொண்டது மாத்ரு ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் தாயின் அருமை தெரியும்.
அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள்
சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி, கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும்
#பிராமணர்கள்_மேல்_சேற்றை_இறைக்கும்_அனைவரும்_படிக்க_வேண்டிய_பதிவு
குதர்க்கமாக கேள்வி கேட்கும் இளைஞனுக்கு திரு சோ அவர்கள் பதில் அளிக்கிறார்.
இளைஞன்: ராமாயணம், மகாபாரதம் எல்லாம் உண்மையாகவே நடந்தவை என்கிறார்களே, ஆனால், நிஜத்தில் எல்லாம் வெறும் கற்பனைக் கதைகள் தானே?
சோ: அவை கற்பனை
என்று எப்படித் தீர்மானித்தீர்கள்?
இளைஞன்: அப்படித்தான் சொல்கிறார்கள்!
சோ: அப்படிச் சொல்பவர்கள் எவ்வாறு அதை முடிவு செய்தார்கள்? அவர்களெல்லாம்தான் இதைச் சொல்வதற்கான அதிகாரம் படைத்தவர்களா? அவர்கள் சொல்வதே இறுதி முடிவா? இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கிறேன். உங்களுடைய தாத்தாவிற்குத்
தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தா என்று ஒருவர் இருந்தார் அல்லவா?
இளைஞன்: ஆமாம்.
சோ: அவர் நல்ல மனிதரா? கெட்ட மனிதரா?
இளைஞன்: மிகமிக நல்ல மனிதர், நேர்மையானவர், நாணயமானவர். ஒழுக்கத்தில் சிறந்தவர்.
சோ: இவையெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?
இளைஞன்: என் தாத்தா
#ராஜகாளி_அம்மன்
பாண்டிய வம்சத்தின் முதல் மன்னர் நம் அனைவருக்கும் கடவுளாக இருந்து நம்மை உருவாக்கிய சிவபெருமான் தான். இந்த பாண்டி வம்சத்தின் 108 வது மன்னராக அன்னை மீனாட்சி பொறுப்புக்கு வந்தாள். அப்பேர்ப்பட்ட பாண்டிய வம்சத்தின் ராஜ தெய்வம் தான் ராஜகாளி அம்மன். மதுரையில் இருந்து
ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் கன்னிவாடி என்ற கிராமத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் தெத்துப்பட்டி ஆகும். திண்டுக்கல்லில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை டவுன் பஸ் வசதி இருக்கிறது இது கோயில் வாசல் வரை செல்கிறது. அல்லது கன்னிவாடியில் இறங்கி நடந்தே
செல்லலாம். இந்த கிராமத்தில் இருந்து கொண்டு பாண்டிய வம்சத்திற்கு வழி காட்டியாகவும் பாதுகாவலாகவும் இருந்து அருள் வாழ்த்த வருபவள் அன்னை ராஜகாளி!
சோழர்களின் சாம்ராஜ்யம் தான் மிகப் பிரமாண்டமானது என்று நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் பாண்டியர்களின் சாம்ராஜ்யம் அதையும் விட பெரியது