அன்பெழில் Profile picture
Jun 8 11 tweets 2 min read Twitter logo Read on Twitter
#மகாபெரியவா
கும்பகோணம் ஸ்ரீநிவாச சாஸ்திரிகள் எனும் ஸ்ரீ பெரியவா பக்தர் கூறியது.
ஸ்ரீ மஹாபெரியவா சிவாஸ்தானத்தில் அருள் செய்து கொண்டிருந்த சமயம். 12 வயது சிறுவன் கருணாமூர்த்தியிடம் அடைக்கலமாக வந்து நின்றான். சிறுவன் கண்களில் நீர்மல்கியிருந்தது “பெரியவா! எனக்கு அப்பா இல்லே, என் Image
தாயாரும், தங்கையும் பம்பாயில் ஒரு வீட்டில் இருக்கிறார்கள். அந்த வீட்டில் அம்மா சமையல் வேலை செய்கிறாள். என்னை மெட்ராஸில் கிறிஸ்துவ கான்வெண்டில் சேர்த்தார்கள். நான் எட்டாவது படிக்கிறேன். நிறைய மார்க்கு வாங்கறேன். இப்போ என்னை அவா கிறிஸ்துவ மதத்தில் சேருமாரும், எம். ஏ வரைக்கும்
படிக்க வைச்சு வேலை வாங்கி தருவதாயும் சொல்கிறார்கள். ஆனா எனக்கென்னவோ மதம் மாற மனசே இல்லை. மதம் மாற மாட்டேன். எனக்கு உபநயனம் நடக்க வேண்டும். எங்கம்மா கிட்டேயிருந்து நாலுமாசமா கடிதமே இல்லே. என் தாயும் தங்கையும் என்ன ஆனார்கள். எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை”
சிறுவன் அழுதவாறே
ஸ்ரீ பெரியவாளிடம் முறையிட்டான். அந்த சிறுவனை சிவஸ்தானத்திலேயே இருக்கச் சொல்லி ஸ்ரீ பெரியவாளிடமிருந்து உத்தரவாயிற்று. 10, 15 நாட்கள் நகர்ந்தன. சிறுவனுக்கு ஸ்ரீ பெரியவா எப்படி அருளப் போகிறார் யாருக்கும் புரியவில்லை. ஒரு நாள் ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க, 40 பேர்கள் சிவஸ்தானத்திற்கு
வந்தனர். வந்தவர்கள் பம்பாயிலிருந்து வருவதாக கூறினர். ஸ்ரீ பெரியவாளை தரிசித்துவிட்டு திரும்பியும் போய்விட்டனர்.
ஸ்ரீ பெரியவா திரும்பி சென்றவர்களை கூப்பிடுமாறு உத்தரவிட்டார். எல்லோரும் வந்தனர். ஒவ்வொருவரையும் தங்களின் பெயரைச் சொல்லுமாறு ஸ்ரீ பெரியவா கேட்க, வந்திருந்த பக்தர்களுக்கு
பெருமகிழ்ச்சியானது. நடமாடும் தெய்வம் தங்கள் பெயரை கேட்டு பிரத்யேகமாக அருள் செய்ததில் எல்லோருக்கும் பரம சந்தோஷம். இப்படி ஒன்றன் பின் ஒருவராக ஸ்ரீ பெரியவாளிடம் தங்கள் பெயரை சொல்லி வந்தபோது, ஒரு குறிப்பிட்ட நபர் தன் பெயரை சொன்னபோது, 10 நாட்கள் தங்கியிருந்த சிறுவனை ஸ்ரீ பெரியவா
கூப்பிட்டு வரச் சொன்னார். அந்த குறிப்பிட்ட நபரிடம், “பையனை திரும்பவும் குடும்ப நிலைமையை ஸ்ரீ பெரியவா சொல்லச் சொன்னார். அதை கேட்டதும் அந்த பெரிய மனிதர் நெகிழ்ந்து போனார். அப்பையனை முன்பேதும் அவர் பார்த்ததில்லை. ஆனால் பையன் சொன்ன விபரங்களிலிருந்து தன் வீட்டில் வேலை பார்த்து வந்தது
அவனுடைய தாயாரும், சகோதரியும்தான் என்று ஊகிக்க முடிந்தது. உடனே அவர் ஸ்ரீ பெரியவாளிடம் பையனை முன்னே பின்னே பார்த்ததில்லே, இவனோட அம்மா எங்க வீட்லேதான் பெண்ணோட இருந்தா. ஆனா அந்த அம்மாள் காலமாகிவிட்டாள். நாலு மாசமாறது. உடனே இவன் படிக்கிற கான்வென்ட்டிற்கு தகவல் கொடுத்தேன். பதிலே இல்லே
அதனால இவனோட தங்கையை கொண்டே காரியங்களை செய்ய வைச்சேன். இப்போ ஸ்ரீ பெரியவாளை தரிசனம் பண்ணிட்டு நேரே மெட்றாஸ் போய் கான்வென்ட்டிலே இவனைப் பத்தி கேட்கலாம்னுதான் இருந்தேன். ஆனா ஸ்ரீ பெரியவா அனுக்ரஹத்தாலே பெரியவா சன்னதியிலேயே இவன் கிடைச்சுட்டான்” என்று மெய்ச்சிலிர்க்க அந்த மனிதர் கூறி
முடித்தார். உடனே ஸ்ரீ பெரியவா “இந்த பையனை உன் கூட பம்பாய்க்கு அழைச்சுண்டுபோ. அவனோட தாயாரோட சம்ஸ்காரங்களை செய்து வை. அவனையும் உன் பிள்ளைப்போல் பாவிச்சு படிக்க வை. அவனது தங்கைக்கும் விவாஹம் செய்து கொடு. இது உன் கடமை” என்று அன்பே உருவான தெய்வம் சிறுவனின் வாழ்க்கைக்கு பூர்ண
வெளிச்சம் காட்டி அவரிடம் உத்தரவிட்டருளியது.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 9
பூஜையின் போது பயன்படுத்தும் மந்திரங்களை தவறுதலாக சொன்னால் தீய விளைவுகள் ஏற்படுமா? இது பலருக்கும் உள்ள சந்தேகம்.

ஒரு பக்தர் இருந்தார். பரம்பரையாக அவர்கள் செய்து வந்த தொழில் பெரிய நஷ்டத்தை சந்தித்து விட்டது. வறுமையின் கொடுமையை அவரால் தாங்க முடியவில்லை. வசதியாக வாழ்ந்து பழகிய Image
பிள்ளைகள் அரை வயிற்றுக்கு கூட உண்ண வழியில்லாமல் தவித்தனர். பக்தருக்கு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை. வீட்டிலிருந்த தட்டுமுட்டு சாமான்களில் கடைசியாக மிஞ்சியவைகளை விற்று அரிசி பருப்பு வாங்கி கொண்டார். கூடவே விஷமும் வாங்கினார். சாகும் நேரத்திலாவது
குழந்தைகள் பசியாறி சாகட்டும் என்பது அவரது எண்ணம். வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த பக்தரின் காதில் அவ்வூர் கோவிலுக்கு ஆதிசங்கரர் என்ற மகா ஞானி வந்திருப்பதாக செய்தி விழுந்தது. ஒரு வேளை இந்த ஞானியை தரிசனம் செய்தால் நமது கஷ்டம் தீர கூடுமோ? என்ற எண்ணத்தில் கோவிலை நோக்கி நடந்தார்.
Read 8 tweets
Jun 9
#MahaPeriyava
Author: Mrs Seetha Chidambaram
Source: kamakoti.org
My mother Mrs. M.S. Chidambaram and her mother visited Paramacharya of Kanchi Kamakoti Peetham in 1952 at a Siva temple in Mambalam to ask and receive His benign blessing before Sri M.A. Chidambaram Image
started to build the Adyar House at Kotturpuram, Madras. The Paramacharyal greeted the proposal heartily. He recalled His stay many times at the residence of Mrs. Chidambaram's father in Konapet in Chettinad and reminisced His carrying her as a baby.
At this meeting, His Holiness
was seated under the Nelli tree. Suddenly Nelli fruit got dislodged and fell on the ground. His Holiness asked my mother to eat the fruit remarking that it would taste sweet. Then He blessed her and granted her wish. He said that the house to be built at Kotturpuram will be
Read 6 tweets
Jun 9
#மகாபெரியவா
"நீங்கள் செய்யும் நமஸ்காரத்தையும் ‘தண்டாகார நமஸ்காரம்’ ‘தண்டனிடுவது’ என்றுதான் சொல்வதென்றாலும் அங்கே அர்த்தமே வேறே. தண்டம் என்பது அங்கேயும் கழிதான். ஆனால் அஸல் கழியை இல்லாமல், அதை உபமித்து [உவமித்து] ‘தண்டனிடுவது’ என்று வந்திருக்கிறது. கழியை நிறுத்திப் பிடித்தால் Image
அது துளிக்கூட குழைவு இல்லாமல் அப்படியே நிற்கிறது. ‘கழியாட்டம் விறைச்சுண்டு நிக்கறயே!’ என்று பணிவு இல்லாதவர்களைக் கேட்கிறோம். அதே கழி பிடியை விட்டு விட்டால் ஒரே படிமானமாக பூமியோடு பூமி படிந்து அப்படியே கிடக்கிறது.  ஜீவ மனஸ் பொதுவாகக் கழி மாதிரி விறைத்துக் கொண்டு நிற்பதுதான்.
அஹம்பாவப் பிடிப்பில் அது அப்படி இருக்கிறது – அஹம்பாவம் அதைப் பிடித்துக் கொண்டு உசத்தி கொண்டாடிக் கொண்டு நிறுத்தியிருப்பதில்! அந்த அஹம்பாவப் பிடிப்பை விட்டு விட்டால் மனஸ் தாழ்மையாகக் கிடக்கும். அப்படிக் கிடந்தே நிஜமாக உசந்ததில் உசந்த ஸெளக்யத்தைப் பெற்று விடும். இந்த மாதிரி மனஸைக்
Read 15 tweets
Jun 8
#Kambar
He was born in Mayiladuthurai district in a town called Thiuvrezhundhur in the 12th century. It is said that Kambar's father was Adithan and Kambar's son was Ambigapathi. Ambikapati, being a poet, fell in love with Amaravati, the daughter of the Chola king. A failed Image
competition in poetry led to the Chola king refusing his daughter and killing Ambikapati. Due to this misfortune Kambar poignantly poems by Dasaratha when he misses his son Rama in Ramayana. Due to the conflict with the Chola king, Kambar went to Andhra for sometime. He was
supported by Sadayappa Vallal when he had no support from the king. Sadayappar was the Lord of a small area called Trikartha. Later the Chola king himself supported Kambar. The Chola king bequeathed Kambanadu to Kambar. Chola also gave the title Kavichakaravarthy. The epic
Read 7 tweets
Jun 8
#அறிவோம்_மகான்கள் #தாமாஜி_பண்டிதர்
வயல்கள் சூழ்ந்த பேதரி கிராமத்தில் அவதரித்த தவசீலர் தாமாஜி பண்டிதர். வேதம் கற்ற இவர் தர்மசிந்தனை மிக்கவராகவும் இருந்தார். ஊர் மக்கள் இவரை ஆசானாகவும் நண்பராகவும் காக்கும் கடவுளாகவும் மதித்து வாழ்ந்தனர். இவரது நற்குணங்களை அறிந்த அந்த நாட்டு மன்னன் Image
தாமாஜியை மங்கள்பட் என்னும் ஊருக்கு அதிகாரியாக நியமித்தான். பண்டிதர் மக்களிடம் பக்தி உணர்வை வளர்த்தார். ஒரு சமயம் மழை பெய்யாமல் வஞ்சித்தது. பஞ்சம் தலை விரித்தாடியது. விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் வருந்தினர். மக்கள் உணவின்றி வாடுவார்களே என்று வருந்திய தாமாஜி பண்டிதர் தன்னிடம்
இருந்த தானியங்களை வாரி வழங்கினார். இதனால் அவரது புகழ் ஊரெங்கும் பரவியது. பண்டரிபுரத்தைச் சேர்ந்த அந்தணர் ஒருவர் தாமாஜியின் வீட்டுக்கு வந்தார். அவரை வரவேற்ற தாமாஜி விருந்து படைத்தார். இலையில் உணவைப் பார்த்ததும் அந்தணரின் கண்கள் கலங்கி விட்டன. சுவாமி உங்கள் கண்கள் ஏன் கலங்குகின்றன?
Read 19 tweets
Jun 7
#பூரிஶ்ரீஜெகன்நாதர் #நிர்மால்ய_பிரசாதம்
பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதருக்கு நைவேதித்த பிரசாதமானது விமலா தேவிக்கு அர்ப்பணிக்கும் போது அது மகா பிரசாதமாக மாறி விடுகிறது. இந்த மஹா பிரசாதத்தை உலர்த்தி, சிறிய துணிகளில் கட்டி, உலர்ந்த நிர்மால்ய பிரசாதமாக விற்பனைக்கு Image
வைத்திருப்பார்கள். பகவான் ஶ்ரீ ஜெகன்நாதருடைய பக்தர்கள் மணிக்கணக்கில் மிக நீண்ட வரிசையில் நின்று நிர்மால்ய மகா பிரசாதத்தை வாங்குவார்கள். ஏனென்றால் மகா பிரசாதத்தை ஏற்பதன் மூலம் மிகப்பெரிய புண்ணியத்தை அடைவதாக ஐதீகம்.
ஒடிசா மக்கள் தங்கள் தினசரி பூஜைக்கு பிறகு கடுகளவேணும் நிர்மால்ய Image
பிரசாதத்தை ஏற்றுக் கொள்வதற்காக அதை பாதுகாத்து வைக்கிறார்கள். ஒரிசா மக்களிடம் ஒரு முக்கியமான பழக்கம் என்னவென்றால் திருமணப் பேச்சு வார்த்தையின் போது மணப்பெண் மற்றும் மணமகன் நிர்மால்யத்தை தங்களது கைகளால் பற்றிக்கொண்டு , இந்தப் பேச்சு வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதாகவும் இதிலிருந்து மாற
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(