அன்பெழில் Profile picture
Jun 9 15 tweets 3 min read Twitter logo Read on Twitter
#மகாபெரியவா
"நீங்கள் செய்யும் நமஸ்காரத்தையும் ‘தண்டாகார நமஸ்காரம்’ ‘தண்டனிடுவது’ என்றுதான் சொல்வதென்றாலும் அங்கே அர்த்தமே வேறே. தண்டம் என்பது அங்கேயும் கழிதான். ஆனால் அஸல் கழியை இல்லாமல், அதை உபமித்து [உவமித்து] ‘தண்டனிடுவது’ என்று வந்திருக்கிறது. கழியை நிறுத்திப் பிடித்தால் Image
அது துளிக்கூட குழைவு இல்லாமல் அப்படியே நிற்கிறது. ‘கழியாட்டம் விறைச்சுண்டு நிக்கறயே!’ என்று பணிவு இல்லாதவர்களைக் கேட்கிறோம். அதே கழி பிடியை விட்டு விட்டால் ஒரே படிமானமாக பூமியோடு பூமி படிந்து அப்படியே கிடக்கிறது.  ஜீவ மனஸ் பொதுவாகக் கழி மாதிரி விறைத்துக் கொண்டு நிற்பதுதான்.
அஹம்பாவப் பிடிப்பில் அது அப்படி இருக்கிறது – அஹம்பாவம் அதைப் பிடித்துக் கொண்டு உசத்தி கொண்டாடிக் கொண்டு நிறுத்தியிருப்பதில்! அந்த அஹம்பாவப் பிடிப்பை விட்டு விட்டால் மனஸ் தாழ்மையாகக் கிடக்கும். அப்படிக் கிடந்தே நிஜமாக உசந்ததில் உசந்த ஸெளக்யத்தைப் பெற்று விடும். இந்த மாதிரி மனஸைக்
கிடத்துவதற்கு அடையாளந்தான், பிடியை விட்ட தண்டம் விழுகிறாற்போல பூமியோடு பூமி நமஸ்கரித்துக் கிடப்பது. ‘தண்டாகார நமஸ்காரம்’ என்ற பெயர் இதனால்தான். இந்த தாத்பர்யத்தைப் புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்தால் அந்த நமஸ்காரமே ‘தண்டம்’தான்! ‘தண்டம்’ என்றால் ஒன்றுக்கும் உதவாதது என்ற அர்த்தத்தில்
சொல்கிறோம். தாய் மரத்திலிருந்து பிரிந்து தனியாக வந்த பாகந்தானே தண்டம்? மரத்தில் அது பாகமாக இருக்கும்போதுதான் அதற்கு உயிர் இருந்தது. அப்போதுதான் அது ஜலத்தைக் குடித்து, ஸூர்ய வெளிச்சத்தைச் சாப்பிட்டு இலை, பூ, காய், பழம் எல்லாம் உற்பத்தி செய்தது. தனியாக வந்தவிட்டு உயிர்போன சவம்
மாதிரிதான் காய், பூ, இலை எல்லாம் கொட்டிப் போய் விடுகிறது. அதனால் தான் ஒன்றுக்கும் உதவாததை தண்டம் என்பது. ‘நாம், நாம்’ என்று ஸதாவும் போற்றி, பேணி, தின்று, அலங்காரம் பண்ணிக்கொண்டு சரீரம் என்பதைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோமே, இதுவும் அவனருளால் இதற்குள் உயிர் என்று ஒன்று
ஓடாவிட்டால் ஒன்றுக்கும் உதவாத தண்டந்தான். அந்த அபிப்ராயத்தில் தான் அதை அவனுக்கு முன் – அவனுடைய விபூதிகளில் [சக்திகளில்] எவற்றிலாவதொன்றிலோ பலவற்றிலோ, கொஞ்சமோ நிறையவோ உள்ள பெரியவர்களுக்கு முன் கிடத்தி தண்ட நமஸ்காரம் என்று செய்வது. பொதுவாக வைஷ்ணவர்கள் "நமஸ்கரிப்பது" என்று சொல்லாமல்
"ஸேவிப்பது" என்றே சொல்வார்கள். இன்னும் நயமாக, நைச்சியமாகச் சொல்பவர்களானால் "தண்டம் ஸமர்ப்பிப்பது" என்பார்கள். கடிதாசு எழுதினால் ‘நமஸ்காரம்’ என்று போடுவதற்குப் பதில் ‘தண்டம் ஸமர்ப்பிக்கிறேன்’ என்றே போடுவார்கள். போன தலைமுறை வரைக்கும் பிராமனோர் அல்லாதவர் கூட, ஒன்று, "கும்பிடறேன்"
என்பார்கள்; அல்லது, "ஸ்வாமீ, தண்டம்!" என்பார்கள். "தண்டம் பெட்டேதி" என்று தெலுங்கு ஜனங்களும் சொல்கிறார்கள். ராமருடைய வில்லுக்குக் கோதண்டம் என்றுதானே பேர் இருக்கிறது? அதை வைத்து அந்தக் கோதண்டபாணிக்கு "தண்டமு பெட்டேதுரா" என்று த்யாகையர் கீர்த்தனங்கூடப் பாடியிருக்கிறார். சரீரம்
தண்டம் என்றால் வாஸ்தவத்தில் அந்த சரீரத்துக்குள்ளேயிருந்து ஆட்டிப் படைக்கிற மனஸுதான் அப்படி தண்டமானது என்று அர்த்தம். சரீரம் கருவிதான். அது என்ன பண்ணும்? மனஸ்தான் அதை ஆட்டி வைக்கிறது. 'ஆட்டி வைக்கிற தன்னையும் பகவான் தான் ஆட்டி வைக்கிறான்; அதை நல்லபடியான ஆட்டமாக்க வேண்டியவனும் அவனே
எல்லா ஆட்டத்தை நிறுத்தி சாந்தி ஸெளக்யம் தரக் கூடியவனும் அவன் தான்’ என்கிற நினைப்பில், தண்டமாக மனஸை அவனுக்கு முன் கிடத்துவதுதான் நமஸ்காரம். ‘மனஸ்’ என்று அவனை விட்டு வெளி விஷயங்களிலேயே ஓடிக் கொண்டிருப்பதை அவனிடம் திருப்பி, அதற்கு அடையாளமாக ‘மந(ஸ்) என்ற அக்ஷரங்களையும் ‘நம(ஸ்)’ என்று
திருப்பிப் பண்ணுகிற க்ரியைதான் ‘நமஸ்காரம்’. தன்னுடைய கருவியான சரீரத்தைக் கொண்டே இதை மனஸ் செய்கிறது. சரீரத்தைத் தப்பு வழிகளில் ஆட்டி வைத்ததற்கு ப்ராயச்சித்தமாக அந்த சரீரத்தையே அவன் முன்னே தண்டம் மாதிரி விழப் பண்ணி அதற்குப் புண்யம் சேர்த்துக் கொடுக்கிறது; தானும் புண்யம்
ஸம்பாதித்துக் கொள்கிறது. தண்டம் என்று மட்டம் தட்டினாலும், நடக்க முடியாதவர்களுக்கு ஊன்றுகோலாக இருப்பதும் தண்டம் தானே? ஆத்ம மார்க்கத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் இந்த தண்ட நமஸ்காரம் என்றும் வைத்துக் கொள்ளலாம். [சிரித்து] செய்கிற கார்யமோ கீழே விழுந்து அசையாமல் கிடப்பது; ஆனால் அதுவே
ஆத்ம மார்க்கத்தில் நடப்பதற்குக் கைத்தடி ‘தண்டம்’! ஏதோ ஒரு தினுஸில் மனஸைத் ‘தண்ட’மாக்கி அவனுக்கு ஸமர்ப்பிப்பதே தாத்பர்யம். ஜ்வரம் வந்து சரீரத்திலே சக்தி க்ஷீணமானால் நடக்க முடியாமல் விழுந்து விடுகிறோமோ இல்லையோ? அந்த சக்தி எங்கேயிருந்து வந்தது? அந்த ஈச்வரனொருத்தன் போட்ட பிச்சைதானே?
இந்த ‘என் சக்தி’ என்கிறது வாஸ்தவத்தில் உன் சக்திதான் என்று அவனிடமே சக்தியை ஸமர்ப்பித்து அதற்கடையாளமாக சரீரத்தையும் தள்ளுவதுதான் மொத்தத்தில் தாத்பர்யம்."-
காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
Taken from mahaperiyavaa.blog/2023/06/08/rar…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 10
ஸ்ரீ அஹோபிலமடம் வேத ப்ரபந்த ஆதர்ஷ ஸம்ஸ்க்ருத மஹாவித்யாலயா மற்றும் ஓரியண்டல் உயர் நிலை பள்ளி, மதுராந்தகம Estd.1942
#ஸ்ரீஅஹோபிலமடம் ஸ்ரீமத் அழகியசிங்கர்களின் பூர்ண அநுக்ரஹத்துடன் ஸ்ரீ மாலோலன் கல்வி அறக்கட்டளையின்நிர்வாகத்தின் கீழ் நடைபெற்று வரும் ஸ்ரீ அஹோபிலமடம் வேத ப்ரபந்த ஆதர்ஷ Image
ஸம்ஸ்க்ருத மஹாவித்யாலயா மற்றும் ஓரியண்டல் உயர் நிலை பள்ளியில்2023 - 24 ஆண்டிற்கான #மாணவர்ச்சேர்க்கை நடைபெற்று வருகிறது. உபநயனம் முடிந்த மற்றும் முடியாத ஸ்ரீ வைஷ்ணவ மாணவர்கள் பத்து வயதிற்கு மேற்பட்டவர்கள் வேத ப்ரபந்த வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள். அவர்களுக்கு
சிறப்பான எதிர்காலம் அமைய வேண்டும் என்பதை உத்தேசித்து வேத ப்ரபந்தத்தோடு சேர்த்து ஸம்ஸ்க்ருத கல்வி மற்றும் பூர்வாபர வைதிக கார்யங்களுக்கான பயிற்சியும் அளிக்கப் படும். இது அவர்களுடைய வாழ்வாதாரத்தை மிகச் சிறந்த முறையில் முன்னேற்ற பாதையில் அமைத்துக்கொள்ள உதவும். 80ஆண்டுகளுக்கு முன்பு
Read 13 tweets
Jun 10
#Swamy_Ayyappan
In order to solve the childlessness of the pious Pandala Maharaja, Parantama and Lord Ishvara left a baby near a tree. Pandala Maharaja who came hunting heard the cry of a baby. He frantically searched to find the child that was crying and found the baby Ayyappan Image
with the shining Tejas under the tree. He was happy that this child solved his problem of being childless and took the baby to the palace. The queen was also very happy. Both thanked God. Whoever saw the baby was very stunned by the beauty. The astrologers said that the child Image
was a divine child. Since he was born with a bell around his neck, they decided to name the Him Manikandan and brought him up with love and praise. After Manikandan came to the palace the queen bore a male child. The joy of the king and queen could not be measured. They felt that
Read 7 tweets
Jun 10
#MahaPeriyava

Author: Raa. Ganapathi
Book: Maha Periyavalh Virundhu

Paramacharya used to quote the Tamil saying ‘Feed everyone without any distinction’ (yaarukkum idumin, avar ivar ennanmin யாருக்கும் இடுமின், அவர் இவர் எண்ணாமின்) and explain that no distinction of any kind Image
must be entertained in offering food. He would be delighted to explain the Keralite tradition of feeding even the thieves at night! This custom existed in the place called Cherukkunnam, Kerala, in the Annapurani temple. After feeding the bhaktas in the temple, food packets were
prepared and kept tied to the trees in the night, for the use of any prowling thieves. Paramacharya also took delight in explaining the reference in the Sangam Literature of how the Chera king Udhiyan Cheraladhan earned the name Perum Sotru Cheraladhan (the king who was the chief
Read 12 tweets
Jun 10
#ராமகரி_ஸ்ரீகல்யாண_நரசிங்க_பெருமாள்
மூலவர்: நரசிம்மர் பெருமாள்
தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
தீர்த்தம்: குடகனாறு
ஆகமம்: பாஞ்சராத்ரம்
வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது இக்கோவில். சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியர்கள் என்ற இனத்தவர் இங்கு அமைந்துள்ள பாறைப்பகுதியில் Image
ஒட்டி வாழ்ந்து வந்துள்ளனர். நாளைடைவில் #குஜிலியர் என்ற இனத்தவரின் பெயரோடு அவர்கள் வாழ்ந்து வந்த பாறைப்பகுதியையும் சேர்த்து #குஜிலியம்பாறை என இவ்வூர் அழைக்கப்பட்டது. குஜிலியம்பாறையில் இருந்து 4 கிமீ தொலைவில் ராமகிரி வேடசந்தூர், என்ற ஊர் உள்ளது. இங்கு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த Image
ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இங்கே பெருமாள், நரசிம்மர் என்ற பெயரில் இருந்தாலும், பெருமாளின் நரசிம்ம வடிவம் இங்கே கிடையாது. மூலஸ்தானத்தில், சங்கு சக்கரத்துடன் அபய வரத முத்திரைகள் காட்டியபடி, ஸ்வாமி திருமண கோலத்தில் காட்சி தருகிறார். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்கள்
Read 12 tweets
Jun 10
#சுந்தரேஸ்வரர்_எனும்_திருத்தோற்றமுடையார்_கோயில்
மேலப்பழுவூர் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் அரியலூரிலிருந்து 15 கி.மீ, திருச்சியிலிருந்து 55 கிமீ தொலைவில் உள்ளது. மேலப் பழுவூரில் அமைந்திருக்கும் இக்கோயில் கல்வெட்டுகளில் #பகைவிடைஈஸ்வரம் என்றே குறிக்கப் பட்டுள்ளது, இவ்வூரின் அடுத்த Image
கல்வெட்டு பெயராக அறியப்படுவது மன்னு பெரும்பழுவூர். இவ்வூர் குன்றக் கூற்றம் என்ற நாட்டுப் பிரிவின் கீழ் இருந்துள்ளது. பழுவேட்டரையர்களால் கட்டப்பட்ட இக் கோயிலின் சிற்பங்ககள் பழுவேட்டரையர்கள் கால கலையழகினை வெளிப்படுத்துகின்றன. அவற்றுள் மகா மண்டபத்தில் வீற்றிருக்கும் ரிஷபத்தின் Image
சிற்பம் தத்ரூபமாக பெரிய அளவில் நிஜமாகவே அமர்ந்திருப்பது போல் இருக்கிறது. இங்குள்ள ஸப்தமாதர்கள் சிற்பங்களும், சண்டேஸ்வரர் சிற்பமும் பழுவேட்டரையர்களின் பிரமிக்க வைக்கும் கலைப்படைப்புக்கு எடுத்துக் காட்டாய் உள்ளது. சண்டேஸ்வரர் இளமை ததும்பும் கோலத்தில் உள்ளார். விநாயகர், அக்னி, Image
Read 22 tweets
Jun 10
#MahaPeriyava
Periyava was an incarnation of God Himself and He followed all the daily rituals and observed all the vrathams to make sure He set an example for all us.
Aippasi pooram is the Janma Nakshatram of Kamakshi Amman. On this day, Periyava does milk Abhishekam for Devi Image
Kamakshi. As usual on this day, as soon as Periyava woke up, He bathed and completed His daily rituals and Pooja. He did not drink a single drop of water until then.
Without further delay He started walking towards Kamakshi Amman temple. Periyava’s disciples carried milk and
Periyava carried milk in His wooden pot. It was 4 o’clock in the evening.
Periyava without drinking even a drop of water was walking to Kamakshi Amman temple. He could take Bhiksha only after returning to SriMatham after having darshan and seeing the abhishekam at the temple.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(