அன்பெழில் Profile picture
Jun 15 14 tweets 3 min read Twitter logo Read on Twitter
#மகாபெரியவா
சொன்னவர்-சந்திரசேகர சர்மா
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு: வரகூரான் நாராயணன்.
நன்றி: குமுதம் லைஃப்

காசி யாத்திரையின் போது மகாபெரியவா தங்கி இருந்த முகாமிற்கு பால்காரர் தினமும் பால் கொண்டு வந்து கொடுத்தார். அந்த மனிதருக்கு பெரியவா யார், அவரை வணங்கி எழ வேண்டும் Image
என்பதெல்லாம் தெரியாது. ஏனெனில் அவர் மராட்டியர். யாருக்கு பால் கொண்டு போய் தருகிறோம் என்று தெரியாமலே கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் ஒரு நாள், அந்தப் பால்காரரின் மனைவிக்கு திடீரென்று உடல்நிலை கெட்டுவிட, அடுத்தடுத்த நாட்களில் ஆரோக்கியம் வெகுவாகக் குறையத் தொடங்கியது.
வீட்டில் சகல காரியங்களையும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்த அந்தப் பெண் ஒரே வாரத்தில் நிற்க முடியாமல், நடக்க முடியாமலும் தடுமாற, உடலின் இயக்கம் சுத்தமாகக் குறைந்து, படுத்த படுக்கையாகிவிட்ட நிலை. பால்காரர் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் நன்றாகப் பரிசோதித்த
பின், அப்பெண்ணுக்கு ஒரு விதமான கேன்சர் நோயினால் வெகுவாகப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், இனி எந்த வைத்யமும் அப்பெண்ணைக் காப்பாற்ற முடியாது என்றும் சொல்லி விட்டார்கள். மனதில் கவலை நிறைந்து வாட்டினாலும் தொடர்ந்து மகானின் முகாமுக்குப் பால் கொண்டு வந்து கொடுப்பதை மட்டும் அவர்
நிறுத்தவில்லை. வழக்கத்துக்கு மாறாக பால்காரர் முகத்தில் தெரிந்த சோகத்தைக் கண்ட மடத்தின் ஊழியர்கள் அவரிடம் என்ன விஷயம் என்று கேட்க, பால்காரர் தன் மனைவியின் உடல்நிலை மோசமாகி இருப்பது பற்றி சொன்னார். அதோடு, தன் மனைவிக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று அந்தப் பால்காரர் மருத்துவரிடம்
விசாரித்த போது, அப்பெண் பிழைத்திருப்பதோ இன்னும் கொஞ்ச காலம்தான், அதனால் அவள் விருப்பம் என்னவோ அந்த ஆகாரத்தை தரலாம் என்று கூறி விட்டதையும் சொன்னார். அப்பெண் எதுவும் ஆசைப்பட்டுக் கேட்கவில்லை. பச்சை மிளகாயை பதம் செய்து தின்பதில் தான் அவளுக்கு விருப்பம் அதிகம். அதை மனைவிக்குக்
கொடுப்பது ஆபத்து நிறைந்த விஷயம் என்பது நன்கு தெரிந்தும், அதையே மனைவிக்குத் தயாரித்தளிப்பதாகவும் கூறினார் வேதனையோடு. தினமும் வரும் அந்தப் பால்காரரின் பரிதாபத் தோற்றம் சிப்பந்திகளின் மனதிலும் பரிதாபத்தை ஏற்படுத்த, பால்காரரைப் பற்றி மகா பெரியவாளிடம் சொல்லி ஆறுதல் தேட முடிவு செய்து
அத்தெய்வ சன்னதியில் போய் நின்றனர். அவர்களில் ஒருவர், "பெரியவா தினமும் மடத்துக்குப் பால் கொண்டு வந்து கொடுக்கிறானே அந்தப் பால்காரன்.." என்று ஆரம்பிப்பதற்குள், மகானே பேச ஆரம்பித்தார்.
"ஆமாம் அவன் ஆத்துக்காரிக்கு உடம்பு சரியில்லை. டாக்டர்கள் கேன்சர்னு சொல்லி, இன்னும் கொஞ்ச நாள் தான்
உயிரோடு இருப்பா. அவளுக்கு இஷ்டப்பட்டதைக் குடுனு இவன்கிட்ட சொல்லிட்டா இல்லையா? அவனும் அதைத்தானே செஞ்சுண்டு இருக்கான்! இதைச் சொல்லத்தான் இங்கே வந்தேளா?" என்று அவர்களிடம் கேட்க அசந்து போனார்கள் எல்லோரும்! மகானுக்குத் தெரியாத விஷயமே இல்லை என்பதை எப்படி மறந்து போனோம்! என்று திகைத்து
நின்றார்கள். அவர்களுக்கு அப்போதுதான் மனதில் உறைத்தது. பால்காரனின் கஷ்டம் மகா பெரியவாளுக்குத் தெரிந்திருக்கிறது என்றால் அதைவிட வேறு அனுகிரகம் என்ன வேண்டும்? என்று அவர்கள் மனதில் ஒருவித நிம்மதி ஏற்பட்டது. எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம் அமைதியாக இருக்குமா? அவரது அனுகிரகம் உடனே
செயல்பட ஆரம்பித்தது. அடுத்த சில தினங்களில் பால்காரன் மனைவி படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள். பின் மெதுவாக எழுந்து நின்றாள். இது ஆரம்பம். பிறகு சில தினங்களில் பழைய நிலைக்குத் திரும்பி மிகவும் ஆரோக்கியமாக நடமாட ஆரம்பித்து விட்டாள். அதனால் மிகவும் ஆனந்தமடைந்த அந்த பால்காரர்
தன் மனைவியை டாக்டரிடம் மீண்டும் அழைத்துப் போய் காட்டினார். நன்கு பரிசோதித்து முடிவுகளைப் பார்த்த டாக்டர் முதலில் தன்னையே நம்பவில்லை. ஏனெனில், அப்பெண்ணிடம் நோயின் சுவடே இல்லை. வியப்போடு டாக்டர்,
"எந்த டாக்டர்கிட்டே அழைச்சுட்டுப் போனே?
அவர் என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தார்? இது
முத்தின நோய். இதுவே இப்படி குணமாகிவிட்டதே அந்த டாக்டர் கொடுத்த மருந்தை நான் மற்றவர்களுக்கு கொடுக்கலாம் என்று கேட்கிறேன்" என்று கேட்டார். பால்காரருக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை. மகா பெரியவா என்னும் பெரும் தெய்வமே தன் மனைவியை குணப்படுத்தியது என்று அவருக்குத்
தெரியுமா என்ன?
அடுத்த நாள் அந்த சந்தோஷத்தை மடத்து சிப்பந்திகளிடம் வந்து சொன்னபோது, அது அவர்களுக்குக் கொஞ்சமும் ஆச்ச்ரியத்தை தரவில்லை. காரணம் மடத்து ஊழியர்கள் எல்லோருக்குமே மகா பெரியவாளின் அருட்பார்வையின் அற்புதம் நன்றாகத் தெரிந்த விஷயம் அல்லவா!

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 17
#பகவத்_கீதை
ஈஸ்வரன் (பரம புருஷர்), ஜீவன் (உயிர்வாழி), பிரக்ருதி (இயற்கை), காலம் (நித்தியமான காலம்), கர்மம் (செயல்) ஆகியவை அனைத்தும் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்தில், பகவான், உயிருள்ளன, ஜட இயற்கை வஸ்துகள், காலம் ஆகியவை நித்தியமானவை என்கிறார். பிரக்ருதியின் தோற்றம் Image
தற்காலிகமானதாக இருக்கலாம், ஆனால் அது பொய்யல்ல. சில தத்துவவாதிகள் இயற்கையின் தோற்றம் பொய் என்று கூறுகின்றனர், ஆனால் பகவத் கீதையின் தத்துவப்படி, வைஷ்ணவர்களின் தத்துவப்படி, அவ்வாறல்ல. உலகின் தோற்றம் பொய்யாக ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. உண்மையானதாக, ஆனால் தற்காலிகமானதாக ஏற்றுக் கொள்ளப்
படுகிறது. அது வானில் நகர்ந்து செல்லும் மேகம், அல்லது பயிர்களை வளமுறச் செய்யும் மழைக்காலத்திற்கு ஒப்பிடப்படுகிறது. மழைக்காலம் முடிந்தவுடன், மேகங்கள் அகன்று, மழையால் வளம் பெற்ற பயிர்களெல்லாம் வாடிவிடுகின்றன. இதுபோல, பௌதிகத் தோற்றமானது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தோன்றி, சில காலம்
Read 7 tweets
Jun 17
#மகாபெரியவா அருள்வாக்கு
கிணற்று நீரில் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பிக்கிறது. அதுபோல் நம் துக்கங்களை ஞானமான தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கத்துக்கான காரணங்கள் இருந்தாலும், Image
தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரி துக்கம் லேசாகிவிடும்.
நல்ல செயல்கள் செய்தால் ஈஸ்வரன் நமக்கு கை கொடுப்பார், அவர் தான் நமக்கு கை, கால், கண் வழங்கியதுடன், ஆலோசிக்க புத்தியும் கொடுத்துள்ளார். இந்த சக்தியும், புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான நல்ல செயல்களை செய்ய வேண்டும்.
வழுக்கு மரத்தின் இயல்பு சறுக்குவது. சறுக்கிச் சறுக்கி விழுவதைச் சமாளித்துக் கொண்டு முயற்சி செய்து மேலே ஏறினால் வெற்றி உண்டாகும். அப்படியே வாழ்வில் சறுக்குவதும் இயல்பாகும்.
தீய எண்ணம் உள்ளவனோடு சேர்க்கை வைத்துக் கொள்ளும் போது தீய எண்ணம் ஏற்படுகிறது. கோபம், தீய எண்ணம் இல்லாத
Read 4 tweets
Jun 17
#பிறந்தநாள்_கொண்டாட்டம்
முன்பு நாம் பிறந்த தமிழ் மாதத்தில், நம் நட்சத்திரம் வரும் தினத்தை தான் பிறந்த நாளாகக் கொண்டாடி வந்தோம். அன்று கோவிலுக்குப் போயும், பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றும் கொண்டாடுவோம். இன்றோ ஆங்கில பிறந்த தேதி தான் ஞாபகம் இருக்கு.

ஒருவரது ஜாதகத்தை twitter.com/i/web/status/1…
எடுத்துக் கொண்டால், லக்கினம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி எனப்படும் ராசி, இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருக்கும், அதுவே நாம் #பிறந்த_நட்சத்திரம் ஆகும். பிறந்த நட்சத்திரம், அந்த நட்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர். Image
வினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர் இந்த ஜென்ம நடச்சத்திரமும், அதன் அதிபதியும். இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திரதினம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று Image
Read 12 tweets
Jun 16
#Guruvayurappan_Temple_trichy
This is a wonderful Guruvayurappan temple constructed 11 kms from Trichy. It is an exact replica of the Guruvayur temple. Construction time took only 15 months. There is a huge hall adjoining the temple for reciting #SriNarayaneeyam. #MahaPeriyava ImageImage
came in the dream of one disciple and told him that there is a Krishna (Guruvayurappan) vigraham under the banyan tree and told him to take it out and construct a temple which is a replica of the one in Guruvayur. The Temple pooja is performed by Namboodiris from Guruvayur and ImageImage
done exactly as it is in Guruvayur. There is a guest house with several rooms for pilgrims to stay. There is a Goshala with more than 100 cows. Free food including breakfast, lunch & dinner served free of cost with a very clean kitchen, dining areas, rest rooms are available. Image
Read 4 tweets
Jun 16
#MahaPeriyava
Author: A.S. Vedanarayanan, Model Colony, Pune
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol 2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya

It was in 1986. The Sri Rama Navami festival was being celebrated in the suburban layout of Khar Road, in Image
Dadar in Mumbai. I had gone there to listen to the spiritual discourse. A short while after the discourse started, I began to feel uneasy. I could not sit. I did not know what had gone wrong all of a sudden. I got into the bus because I thought it would be good to travel with a
number of people. I wrote down my home address and telephone number on a piece of paper and put it into my pocket. I chanted the Vishnu Sahasranamam continuously. When I reached my house, a doctor who lived close by saw me and enquired, “What is it? Are you not well?” He took me
Read 12 tweets
Jun 16
#மகாபெரியவா
கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
புத்தகம்-பெரியவா பெரியவாதான்.

மகா பெரியவாளின் அனுக்ரகத்துக்கு உள்ளான ஒரு பெண்மணி பெயர் சுந்தா சுந்தரம். காஞ்சிப் பெரியவா மீது அப்படி ஒரு பக்தி. காஞ்சி சென்று மகா ஸ்வாமிகளின் தரிசனம் பெற்று, அந்த ஆனந்த Image
வெள்ளத்தில் திளைப்பார். எப்போது காஞ்சி ஸ்ரீ மடத்துக்கு மகா பெரியவாளின் தரிசனத்துக்குச் சென்றாலும், ஒரு கூடை ரோஜா மலர்களைக் கொண்டு செல்வது அவர் வழக்கம். அன்றைய தினம், சுந்தா சுந்தரத்துடன் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு பாட்டியும் சென்றிருந்தார். மகா பெரியவாளைத் தரிசிக்கும்
போது, வெறும் கையுடன் செல்லக் கூடாதே என்பதற்காக, குசேலர் அவல் கொண்டு போன மாதிரி, ஒரு சீதாப்பழத்தை எடுத்து வைத்திருந்தார். மகா பெரியவாளைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் வரிசையில் சென்று கொண்டிருந்தனர். ஆளாளுக்குக் கையில் ஒரு மூங்கில் தட்டில் ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம் என்று விதம்
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(