Erode Kathir Profile picture
Life coach • Speaker • Author of #கிளையிலிருந்துவேர்வரை #பெயரிடப்படாதபுத்தகம் #உறவெனும்திரைக்கதை #வேட்கையோடுவிளையாடு #திரையெனும்திணை • Publisher
May 13, 2023 9 tweets 1 min read
Kind attention PARENTS

• தம் பிள்ளைகள் குறித்து பெரும் பதட்டத்துடனும் பரிதவிப்புடனும் பேசும் பெற்றோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. நேற்று மட்டும் மூன்று பேர். ஒற்றுமை என்னவெனில் மூன்று பேருடைய சிக்கல்களும் ஏறத்தாழ 90% ஒரே மாதிரியானவைதான்.

1/9
• புகார்களில் இருப்பவர்கள் குறிப்பாக பையன்கள். புகார்களும் கடுமையானவை. கணிசமான எண்ணிக்கையில் கல்லூரிப் படிப்பைத் தொடர மறுக்கின்றனர். சிலருக்கு கல்லூரி வருகைப் பதிவு போதாமல் தேர்வு எழுத முடியாத நிலை.

2/9
Nov 19, 2022 7 tweets 2 min read
International Men's Day - Thread

'நாங்க அடி வாங்காத இடமே இல்லை!' எனும் கைப்புள்ள வசனத்தை நினைவூட்டும் வகையில் அடிவாங்கும் தினங்களில் குறிப்பிடத் தகுந்த ஒன்று ’சர்வதேச ஆண்கள் தினம்’.

மனப்பூர்வமான வாழ்த்துகளைவிட அடித்துத் துவைக்கப்படும் மீம்களே அதிகம் தென்படுகின்றன.

1/7
குறிப்பாக தன் படத்திற்கு தானே மாலையிடும் கன்னிராசி கவுண்டமணி காட்சியும்.

இந்த தினத்திற்கான காரணம் மற்றும் நோக்கம் என்னவாக இருக்குமெனத் தேடிப்பார்த்ததில், நோக்கங்கள் நிமித்தம் உரக்கப் பேசப் படவேண்டிய தினம் என்றே தோன்றுகிறது.

2/7
Aug 21, 2021 9 tweets 2 min read
#Thread
இரண்டாவது அலை குறித்தெல்லாம் நம்மிடம் எந்த விழிப்புணர்வும் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி(!) குறித்து இருந்த ஒருவித இறுமாப்பால், விழிப்புணர்வு தேவை எனும் நிலையில்கூட நாம் அப்போது இருந்திருக்கவில்லை.

1/9
மூன்றாவது அலை குறித்து சமகால இடைவெளியில் சுகாதாரத் துறை அவ்வப்போது எச்சரிக்கை செய்தாலும், தற்போது நிலவும் எண்ணிக்கை, அவங்க அப்படித்தான் சொல்வாங்க, ”நாம நம்ம வேலையப் பாப்போம், வந்தா பாத்துக்கலாம்” எனும் மனநிலையையே வளர்த்துள்ளது.

2/9
Aug 20, 2021 8 tweets 3 min read
பத்து ஆண்டுகளாகத்தான் மலையாளத் திரைப்படங்களுடனான பழக்கம். இந்தக் காலகட்டத்தில் மிகச் சாதாரணமாகப் பார்த்த சுராஜ் வெஞ்சரமூடு, சௌபின் சாஹிர் அடைந்திருக்கும் இடம் கற்பனைக்கு எட்டாதது. அவர்கள் குறித்து கடந்த ஆண்டு எழுதிய கட்டுரை maaruthal.blogspot.com/2020/04/blog-p…

@threadreaderapp
இப்போது பார்த்தால்...

நாற்பது ஆண்டு கால அனுபவம் கொண்ட, ஆனால் சமீப காலங்களில் மிக அரிதாக பயன்படுத்தப்பட்டு வந்த மம்முக்காயா 'குருதி’ திரைப்படத்திலும், இந்தரன்ஸ் ‘ஹோம்’ திரைப்படத்திலும் விஸ்வரூபம் எடுத்துள்ளார்கள்.
Nov 19, 2020 7 tweets 2 min read
ஈரோட்டில் எந்தவொரு இலக்கியக் கூட்டம் என்றாலும் 1990 களில், ஓடிப்போய் அமர்ந்துகொள்வது வழக்கம். அவற்றில் ஒன்றுமே புரியாதென்பது வேறு விசயம். பெரும்பாலும் கம்பராமாயணம் திருக்குறள் தாண்டியெல்லாம் பேச மாட்டார்களே. 1/7 அப்படியானதொரு கூட்டத்தில்தான் வெள்ளைவெளேர் உருவம், திடமாத்திரமான உடல், வெள்ளை முடி என்று இவரைப் பார்த்தேன். ‘இவர் எதுக்கு இங்கே!’ எனும் ஆச்சரியத்தில் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது அவர் தமிழில் பேசியது. சற்றே மழலை கலந்த தொணியில் உரை நடைத் தமிழ். 2/7
Nov 16, 2020 26 tweets 5 min read
ஒரு விதை போட்டால்...
- ஈரோடு கதிர்

கிராமங்களில் பெரு, சிறு, குறு விவசாயி என யாராக இருந்தாலும் சரி, அவர்களிடம் எப்போதும் ஓர் அறியாமை நிரம்பிய வீம்பு இருப்பதுண்டு. தம் நிலங்களில் விற்பனை செய்வதற்கான பயிர் வகைகள் மட்டுமே விளைவிக்க வேண்டும் எனும் வீம்புதான் அது.

1/n பயன்பாட்டில் இருக்கும் நிலம் முற்றிலும், தாம் காலம் காலமாகச் செய்து வரும் முறையில், அந்தந்தப் பகுதிகளுக்கேற்ப, நீர் வசதிக்கேற்ப விவசாயம் செய்து விடும் பழக்கம் தவறில்லை. பெரும்பாலான விதைப்பு என்பது காலங்காலமான பழக்கம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே நிகழ்கின்றது.

2/n
Nov 10, 2020 5 tweets 1 min read
மொபைல் ஃபோனில் தமிழ் வானொலி எனும் செயலியில் நாட்டுப்புறப்பாட்டு எனும் சேனல் இருக்கின்றது. அவ்வப்போது கேட்பதுண்டு. சில ரசனையாக இருக்கும், பல கத்தல்களாக இருக்கும்.

இன்று கேட்ட பாடல்கள், கொஞ்சம் கோக்குமாக்காதான் இருந்தது. அதென்னனு தெரிஞ்சுக்கனும்னா நீங்களும் கேட்டுப் பாருங்க
1/4
பாடல்கள் வரிசையில் முக்கியமானதொரு பாட்டு வந்தது

அதன் வரிகள் ஏறத்தாழ...

“அத்த மக உன்ன
கண்ணாலம் பண்ண ஆசப்பட்டேன்
சித்தப்பனுக்கு வாக்கப்பட்டு
சின்னாத்தாள ஆகிட்டியே”... எனத் தொடர்ந்தது.

அடப்பாவமே இப்படியெல்லாமா சிக்கல் வரும். அதை இப்படியுமா பாட்டாகப் பாடி வைப்பார்கள் 2/4
Aug 30, 2020 7 tweets 1 min read
வட மாநில தொழிலாளிகள்

சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் 5 கிமீ தொலைவிற்குள் சாலையோர பேக்கரிகளில் ஆறு பேருந்துகளைப் பார்த்தேன். அத்தனையும் அழுக்கடைந்த தனியார் சொகுசு பேருந்துகள். பேருந்தின் வெளியே பனியனும், ட்ரவுசருமாக நாட்கணக்கில் பயணத்ததில் அழுக்கடைந்த வட மாநிலத்தினர். 1/7 மார்ச் ஏப்ரல் மாதங்களில் ரயில்களிலும் பேருந்துகளிலும், கால்நடையாகவும் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய தொழிலாளிகள் போன வேகத்தில், தாம் தொடர்பில் இருந்த நிறுவன முதலாளிகளை, மேலாளர்களை அழைத்திருக்கின்றார்கள். 2/7
Apr 8, 2020 8 tweets 3 min read
"10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் தான் முடிவு மேற்கொள்ள வேண்டும்" என்று தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ட்விட்டரில் தகவல் பகிர்ந்துள்ளார்.

முதற்கண் அதை அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளதை வரவேற்கிறேன். என்னைப் பொறுத்தவரையில்...
தேர்வை ரத்து செய்வதுதான் சரியான தீர்வாக இருக்கும். உடனே, “அப்படியெல்லாம் கேன்சல் செய்தால் என்னென்ன பிரச்சனை வரும் தெரியுமா!?” என்று குரல்கள் எழலாம்.