SundarRajaCholan☀சுந்தர்ராஜசோழன்☀ Profile picture
வல்லமை தாராயோ-மாநிலம் பயனுற வாழ்வதற்கே. . #Bharathiyan #nationalist🇮🇳 #Tamizhhindu🌟 Chozha Nadu (TamizHagam)
mariappansiva... Profile picture 1 added to My Authors
Mar 13 7 tweets 1 min read
'RRR' திரைப்படத்திற்கு உலக அரங்கில் கிடைக்கப்பட்ட எல்லா விருதுகளும் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கிறது.காரணம் அது இந்தியர்களின் மன உறுதியை,தியாகத்தை,கனிவை உயர்த்திப் பிடிக்கிறது..(1) Image குடும்ப அமைப்பும் இந்த தேசமும்,நமது ஒற்றுமையும் - நட்பும் பிரிக்க முடியா நரம்புகளென விரிவதை உணர்த்திய திரைப்படம்..

திரு.ஜேம்ஸ் கேமரோன் ராஜமெளலியிடம் அன்று சொன்ன வார்த்தைகள்தான் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்ட வேண்டியது..👇(2)
Mar 2 16 tweets 3 min read
தமிழக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை மீறி யாரும் ஜெயிக்க முடியாத நிலை உள்ளது என்பதை நாமறிவோம்.ஆர்.கே.நகர் தேர்தல் மட்டும்தான் விதிவிலக்கு அதற்கு காரணம் வேறு.மதுசூதனன் வெல்லக் கூடாது என அதிமுகவிற்குள்ளே பல கோஷ்டிகள் அன்று நினைத்தார்கள்.அதை மதுசூதனனே கூட கூறியுள்ளார்.(1)

#ErodeEast ImageImage டிடிவி தினகரன் வெல்ல வேண்டுமென திமுகவும் நினைத்தது.அதுதான் அதிமுகவை பிளக்குமென்று பேருக்கு ஒரு வேட்பாளரை திமுகவும் நிறுத்தியது..டெப்பாஸிட் போகுமென நினைத்திருக்க மாட்டார்கள்.ஆனால் அதில் ஆளுங்கட்சியும் வெற்றி பெறவில்லை.இது தனி.(2)
Feb 24 14 tweets 3 min read
விவசாய போராட்டம் என்கிற பெயரில் 2021 குடியரசு தினத்தன்று,செங்கோட்டையில் ஏற்பட்ட காலிஸ்தானிய கலவரங்களுக்கு பின்னால் இருப்பவராக குற்றஞ்சாட்டப்பட்டவர் நடிகரும்,அரசியல்வாதியுமானவர் தீப் சித்து.(1) இந்த நபர் திடிரென பிப்ரவரி 2022 ன் போது,ஒரு கார் விபத்தில் பலியானார்.அடுத்து,அவர் உருவாக்கிய 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற சீக்கிய அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் என்பவர் நியமிக்கப்பட்டார்..(2)
Feb 16 10 tweets 1 min read
நாம் முன்பே சொன்னதுதான்..வடமாநில தொழிலாளர்கள் மீது வன்மத்தை கட்டியமைப்பது சரியான முறையல்ல.முதலில் அதை பொதுமைப்படுத்துவதே தவறு.இங்கே அதிகமாக வந்து பணி செய்பவர்கள் அஸ்ஸாம் - மேற்கு வங்கம் போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களாக உள்ளார்கள்.(1) அதே போல பீஹார்,ராஜஸ்தான் என அங்கிருந்து வருபவர்களும் பிராமணர்களோ,பூமிகாரோ,காயஸ்தாவோ,ராஜபுத்திரர்களோ,ஜாட்டோ கிடையாது..சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலமற்ற ஏழைகளும்,பட்டியல் சமூகத்தவர்களும்தான் அதிகம் வருகிறார்கள்.(2)
Feb 14 17 tweets 4 min read
கொரோனா மற்றும் உக்ரைன் - ரஷ்யா யுத்தத்திற்கு பிறகு மாறி வரும் உலகில் இந்தியா பலமாக எழுந்துள்ளது.இன்னொரு நாட்டின் விருப்பு வெறுப்புகளை மேற்கு நாடுகள் ஏற்றுக் கொள்வதும்,அதை பல்லைக் கடித்துக் கொண்டு நமது சுதந்திரமாக அவர்கள் பார்க்கும் அதிசயமும் இப்போதுதான் நடக்கிறது.(1)

#SriLanka ImageImage இந்த நேரத்தில் இந்தியா பல ராஜதந்திர அடிப்படையில் தங்களுக்கு சாதகமான நடவடிக்கையில் இறங்கியுள்ளது வெளிப்படையான உண்மை.அண்டை நாடான இலங்கையில் ராஜபக்ஷேக்கள் வீழ்ச்சியும்,சீனாவினுடைய ஆதிக்கமும் நாம் முக்கியமான இலக்குகளை நோக்கி நகர வேண்டிய தேவையை உணர்த்தியது.(2)
Feb 11 34 tweets 6 min read
எடியூரப்பா விலகி பொம்மை கர்நாடக முதல்வரானதில் இருந்தே ஒரு நிலையற்ற தன்மை கட்சிக்கு உள்ளேயும்,வெளியேயும் உருவானது.(1)

#karnatakapolitics கர்நாடக பாஜக சந்தித்த அழுத்தங்களாக அறியப்படுவது இவைதான்.எடியூரப்பா ஆதரவாளர்கள் - வாக்குறுதி கொடுத்து அழைத்து வரப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் - எடியூரப்பா எதிர்ப்பாளர்கள் என இம்மூன்று தரப்பையும் திருப்திப்படுத்தும் இடத்தில் நிறைய சறுக்கல் இருந்தது.(2)
Feb 5 17 tweets 2 min read
கர்நாடக சட்டமன்ற தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனம் வெறும் கௌரவப்பதவி இல்லை.கிட்டத்தட்ட போர்படைத் தளபதியை போல பணி செய்ய வேண்டிய நிர்பந்தமிருக்கும் பொறுப்பாகும்..(1) கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழந்துவிடும் என்ற கடும் பிரச்சாரத்தை முறியடித்து,மிக மிக நுணுக்கமான செயல்பாடுகள் வழியே மீண்டும் அதிகாரத்தை தக்க வைக்க பாஜக எடுத்துக் கொண்ட முக்கியமான ஆயுதம் அண்ணாமலை..(2)
Jan 6 10 tweets 2 min read
நரேந்திர மோடி - பிரவீன் தொக்காடியா - சுனில் ஓசா இவர்கள் மூவரும் குஜராத் இந்துத்துவ அரசியலில் பலமான படைத் தளபதிகளாக இருந்தவர்கள்.போராட்டங்கள்,ஆள்திரட்டல் என கட்சியின் தார்மீக பலமாக இவர்களுடைய உழைப்பு இருந்தது..களத்திலிருந்து எழுந்து வந்த தலைவர்கள்..(1) இதில் ஓசா இதழியல்,கருத்தியல்களை உருவாக்குபவர்.தேர்தல் அரசியலில் மிகச்சிறந்த வியூகங்களை வகுப்பவர்.இரண்டுமுறை குஜராத் MLA வாக இருந்தவர்.ஆனால் நரேந்திர மோடி குஜராத் முதல்வரான பிறகு மிகப்பெரிய ஈகோ யுத்தம் அமைப்பில் உருவானது..(2)
Jan 4 6 tweets 1 min read
அன்றைய நிலையில் மூன்றாவது அணியை காங்கிரஸ் என்ன செய்யும்,அதன் வியூகம் என்ன என்று மோடி பேசுவதை கவனிக்கும் காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ்,"திரு.மோடி நீங்கள் என்றாவது பாஜகவை விட்டு வெளியேறினால் காங்கிரஸில் உங்களுக்கான இடம் உள்ளது என்பதை மறக்காதீர்கள்" என்று சொல்கிறார்..(1) அதற்கு மோடி,"உங்களுக்கு ஏற்கனவே பல பிரச்சனை உள்ளது..நான் சங்கப்பரிவாரத்தை சேர்ந்தவன் என்னை அழைத்து உனக்கு ஏன் புதிய பிரச்சனைகளை தேடிக் கொள்கிறாய்" என்று நக்கலடிக்கிறார்..(2)
Nov 20, 2022 22 tweets 5 min read
ஸ்ரீ குமரகுருபர சுவாமிகளையும்,தர்மபுர ஆதீனத்தையும்,காவிரி முதல் கங்கை வரை உள்ள செழும் ஞானத் தொடர்பையும் உணர்த்தும் விதம் பிரதமர் நரேந்திரமோடி எடுத்துரைத்துள்ளார்..

பிரிவினை பேசும் திராவிட நாத்திக கூட்டத்தார்களின் போலித்தனத்தை,கங்கைக்கரையில் வைத்து சம்ஹாரம் செய்தார் நமோ..🔥(1) பொயு 1625 ம் வருடம் சுவாமி குமரகுருபரர்,ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கைலாசபுரத்தில் சண்முக சிகாமணி கவிராயருக்கும்,சிவகாம சுந்தரி அம்மையாருக்கும் நன்மகனாய்த் தோன்றினார்

தன் 5 வயது வரை வாய்பேச முடியாத குழந்தையாய் இருந்தவர் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கருணையால் நாவன்மை வரப்பெற்றார்.(2)
Nov 19, 2022 7 tweets 1 min read
உத்தரகாசி தொடங்கி தென்காசி வரை,உத்தர மதுரை தொடங்கி தென் மதுரை வரை,அயோத்தி தொடங்கி ராமேஸ்வரம் வரை கலாச்சாரத்தாலும் ஆன்மீக வழிபாட்டாலும் இது ஒரே நிலம்..

இந்தியாவை ஒருங்கிணைப்பது பண்பாட்டு தேசியமும்,ஆன்மீகமுமே.(1) சமயம் அழிந்தால் இந்த நாடு சிதறும் என்பது பாலபாடம்.இந்த உண்மை உணராத,ஆன்ம விழிப்பற்ற அசட்டர்களால் இந்த தேசம் ஆளப்பட்டதே எல்லா தீமைக்கும் காரணம்..

இந்த நாடு பல பிரதமர்களை கண்டது ஆனால் பாரத தர்மத்தின் பாதுகாவலனை இப்போதுதான் ஆட்சி பீடத்தில் காண்கிறது.(2)
Sep 14, 2022 5 tweets 2 min read
நரிக்குறவர்கள் - குருவிக்காரர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டுமென பல பத்தாண்டுகளாக,எந்த வித பிரதிபலனும் பாராமல் உழைப்பவர்களை நேரிடையாக அறிவேன்..(1) Image 2011 ல் செல்வி.ஜெயலலிதா அதிகாரத்துக்கு வந்த பிறகு இந்த விவகாரத்தில் சீரிய முக்கியத்துவத்தை கொடுத்தார்.அன்றைய மன்மோகன்சிங் அரசிற்கு தொடர் அழுத்தத்தை கொடுத்தார்.இறுதியாக 2013 சமயத்தில் மத்திய அரசு அதை ஏற்றுக் கொண்டது.ஆனால்,அதை மசோதாவா தாக்கல் செய்யாமல் ஏமாற்றியது..(2)
Aug 20, 2022 16 tweets 3 min read
கொங்கு வெள்ளாளரை OBC ஆக்கியது கருணாநிதி ஆகையால் திராவிடத்தால் படித்தார் அண்ணாமலை என்கிறார் கார்த்திகேய சிவசேனாபதி..மதிப்பெண்களை பற்றி எல்லாம் பேசாதே,நீ OBC என்றுதானே சான்றிதழ் வைத்துள்ளாய் அதை பேசு என்கிறார்..(1) நான் என்ன கேட்கிறேன்,சுதந்திர இந்தியாவில் OBC இட ஒதுக்கீட்டிற்கு கமிட்டி அமைத்து,சட்டத்திருத்தம் செய்தது பண்டிட் நேரு.இதற்கு நியாயமாக காரணகர்த்தாவாக காமராஜர் இருந்தார்.முதல் சட்டத்திருத்தத்தின் மூலவர் காமராஜர் என்று திரு.ஸ்டாலினே புகழ்ந்துள்ளார்..(2)
May 2, 2022 13 tweets 3 min read
திரு.அண்ணாமலை தன் லங்கா விஜயத்தை கொண்டு போகும் விதம் ஆச்சர்யப்படுத்துகிறது நம்மை.அங்கே அவருடைய செயல்பாடுகளும்,தேர்ந்தெடுத்து பேசும் வார்த்தைகளும் பல்லாயிரமாண்டு பண்பாட்டு அடையாளங்களை அரசியல் தளத்தில் மீள்கட்டமைப்பதாக அமைந்துள்ளது..(1) அண்ணாமலையின் லங்கா விஜயத்தில் தன்னுடைய முதல் பயணமாக நுவரெலியாவில் உள்ள ஹனுமன்,சீதா மாதா கோவிலுக்கு சென்று வழிபட்டார்..இராவணனால் சீதையம்மாவை சிறைபிடித்து வைக்கப்பட்ட அசோகவனம் இதுதான் என நம்பப்படும் இடத்திலிருந்தே தன் பயணத்தை துவங்கினார்.(2)
Apr 30, 2022 7 tweets 1 min read
இந்தியா அல்லாமல் தமிழர்களுக்கு மிக முக்கியமான நாடு இலங்கை.ஆனால் எந்த தமிழ் தலைவர்களும் அல்லது இந்தியத் தலைவர்களும் அங்கே சென்று மக்களோடு உரையாடி,மக்களின் அன்றாட வாழ்வு,அதனுடே படர்ந்த அரசியலை இதுவரை விவாதித்து வந்ததில்லை..(1) Image பெரியார் - காந்தி எல்லாம் சுதந்திரத்துக்கு முன்பு சென்றவர்கள்.கண்டியில் பிறந்த எம்ஜிஆர் கூட 1965 ல் ஒரு சினிமா நடிராகத்தான் சென்று வந்தார் சரோஜா தேவியுடன்..அங்கே தீவிரமான போராட்டங்கள் துவங்கிய பின்,விடுதலைப் புலிகள் ஆதரவுடன் ரகசியமாக வைகோ போன்ற தலைவர்கள் தொடங்கி பலர் சென்றனர்(2)
Apr 15, 2022 11 tweets 3 min read
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் ஜெயந்தியை முன்னிட்டு, புளூகிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை 'Ambedkar & Modi - Reformer’s Ideas, Performer’s Implementation' என்ற புத்தகத்தை வெளியிடுகிறது.அதற்கு முன்னுரை எழுதியுள்ளார் திரு.இளையராஜா அவர்கள்.(1) அம்பேத்கரை வெறும் பட்டியல் சமூக அரசியல்வாதி என்று முன்னிறுத்தாமல்,சுருக்காமல் அவருடைய மேதாவிலாசத்தையும் அளப்பறிய சிந்தனைகளையும் பொதுவெளியில் பேசி,அவற்றை நிறைவேற்றுவதில் மோடி அரசு பல உச்சங்களை தொட்டுள்ளது.(2)
Apr 9, 2022 5 tweets 2 min read
1. 1941 ல் காரைக்குடி கம்பன் கழகம் வெளியிட்ட தமிழ்த்தாய் படம்.

2.பாரதிதாசன் எழுதிய தமிழியக்கம் நூலின் அட்டையில் உள்ள தமிழ்தாய் படம்.

3.'சமநீதி'இதழின் சிறப்பாசிரியராக இருந்து எம்ஜிஆரே அதை நடத்தினார்.அதன் 1968 பொங்கல் மலரில் உள்ள தமிழ்தாய் படம்.(1) 4.1981 ல் அன்றைய முதல்வர் எம்ஜிஆரால் நடத்தப்பட்ட உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிட்ட தமிழ்தாய் படம்.

5.1993 ல் காரைக்குடியில் கட்டப்பட்ட தமிழ்தாய் கோவில்..
(2)
Apr 9, 2022 6 tweets 1 min read
இந்தி எதிர்ப்பும்,மூடத்தனமான தமிழ்ப்பற்றும் இங்கு எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டுவிட்டன.மொழி என்கிற மிக உன்னதமான கலாச்சாரச் செல்வத்தின் பெயரால் நமது சமூக வாழ்க்கையின் முகம் மிகக்கோரமாக எப்போதும் இல்லாத முறையில் அலங்கோலப்படுத்தப்பட்டது.(1) அதைக் கண்டு அஞ்சிய அரசியல் கோழைகள் சொந்த லாபங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு இவ்வளவும் நடந்து முடிந்ததற்குப் பிறகு இந்த இந்தி எதிர்ப்புக்குப் பின்னால் ஏதோ நியாயமும் புலப்படவில்லை.அவற்றுக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லை.(2)
Apr 9, 2022 15 tweets 4 min read
இரண்டாவது இந்தி எதிர்ப்பு போரை பற்றி பெரியார் பேசியவற்றை எல்லாம் பெரியாரியர்கள் இப்போது பேசவோ,வெளியிடவோ தயாராக இல்லை.1948 லேயே,இந்தி வேண்டவே வேண்டாம் என்பது நோக்கமல்ல,அதை சில காரியத்துக்கு கட்டாயமாக்க வேண்டுமானால் ஆக்குங்கள் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார் ஈவேரா..(1) அதன் பிறகு 1962 - 1967 வரை நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டதிற்கு முற்று முழுதாக எதிராகவே அவர் இருந்தார்.அன்று இந்திக்கு ஆதரவாக காங்கிரஸ்காரர்களை விட ஒரு மடங்கு மேலே பேசிக் கொண்டிருந்தார் என்பதே எதார்த்தம்.(2)
Apr 9, 2022 4 tweets 1 min read
திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் சொல்கிற இதே செய்தியைத்தான் திரு.அமித்ஷாவும் சொல்கிறார்..

ஆங்கிலம் கூடாது என்பதோ,வேண்டாம் என்பதோ அல்ல அது..(1) நம்மை அடக்கி ஆட்சி செய்த,நம்மை கலாச்சாரத்தை விட்டு வெளியேற்ற புகுத்தப்பட்ட அதிகார மொழியை,இந்நிலத்திற்கு வெளியே இருந்து நம்மை அடிமை செய்த மொழியின் அதிகார வீச்சை,இந்திய மனங்களில் இருந்து நீக்குவது குறித்தே அவர் பேசுகிறார்..(2)
Mar 17, 2022 13 tweets 2 min read
#TheKashmirFiles

இந்த மரபின் ஞானமும்,குருதி மையினால் எழுதப்பட்ட நமது வரலாறும் இன்று பலருக்கு தெரிவதில்லை.அதை அறிந்தவர்களையும் நவீன களம் மென்று தின்றுவிடுகிறது..(1) ஒரு ஹிந்துவின் முக்தியைத் தேடும் மனநிலைக்கும்,இன்றைய உலகின் பொருளியல் - அதிகாரம் - சுயநலம் ஆகிய தளங்களுக்கும் இடையே பெரும் போரொன்று நடக்கிறது..இதில் ஒரு ஹிந்து அலைக்கழிப்பட்டு இல்லாமலாக்கப்படுகிறான்..(2)