Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Jul 16, 2020, 17 tweets

#காமராஜருக்கு கருணாநிதி மரியாதை கொடுத்தது போல் யாரும் கொடுத்ததில்லை -- #ஸ்டாலின்.

#காமராஜர் வசித்த வாடகை வீட்டை ஏழையின் மாடமாளிகையை பார் - முரசொலி.

ஹைதராபாத் ஸ்டேட் பாங்கில் ஒன்றரை கோடி போட்டுள்ளார் - முரசொலி.

அண்டங்காக்கை - முரசொலி. +

ரஷியாவிற்கு இத்தனை நாள் எருமைதோல்தான் போய் கொண்டிருந்தது. இன்று எருமை மாடே #ரஷியா சென்றுள்ளது(காமராஜர் ரஷியா பயணத்தை) - முரசொலி.

காமராஜர் #நாடார் ஜாதி என்பதற்காக மரம் ஏறி சாணான் - முரசொலி +

காமராஜரை சட்டசபை தேர்தலில் சீனிவாசன் என்பவரை நிற்க வைத்து தோற்கடித்த பிறகு தோற்கபட வேண்டிய விஷகிருமி - முரசொலி.

இத்தனையும் பேசியவர் திருட்டு ரயில் ஏறி வந்து தமிழ்நாட்டை சூறையாடி கொள்ளையடித்து உலக பணக்கார குடும்பத்தின் தலைவன் #கட்டுமரம் பேசியது. +

இன்று காமராஜர் படத்தை அறிவாலயத்தில் திறந்துள்ளார் ஸ்டாலின். இதற்கு காங்கிரஸும் கூட்டு.

காமராஜர் ஆவி கூட உங்களை மன்னிக்காது.

#கர்மவீரர்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானம், சத்தியமூர்த்தி பவன் இவையெல்லாம் பலகோடி ரூபாய் மதிப்புள்ளவை. இவை #காமராசர் தேடிய செல்வம். +

ஆனால் #தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக அவர் தேடியவை.

சென்னையில் #வாடகை வீட்டில்தான் கடைசி வரை காமராசர் வசித்தார்.

முதல்-அமைச்சராக இருந்த போது, அவர் வீட்டில் அரசு சார்பில் ஒரு தொலைபேசி இருந்தது. எப்போது பேசினாலும் பேசிய நேரம், பேசிய ஊர் முதலியவற்றை ஒரு +

நோட்டில் குறித்து வைக்க வேண்டும். அப்போதெல்லாம் எஸ்.டி.டி. வசதிகள் கிடையாது.

#டிரங்கால் பதிவு செய்துதான் பேச வேண்டும். டெலிபோன் பில் வந்தவுடன் அந்த நோட்டில் உள்ள விவரங்களைப் பார்த்து அரசு சம்பந்தப்பட்ட #தொலைபேசி அழைப்புக்கான கட்டணத்தை மட்டும் அரசு கணக்கில் செலுத்தவும், +

மீதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கணக்கில் செலுத்த வேண்டும் என்பது காமராசரின் உத்தரவு.

#முதல்_அமைச்சராக இருந்த போது கட்சி நிகழ்ச்சிகளுக்காக செல்ல நேர்ந்தால் அரசுக்கு சொந்தமான காரில் போவதில்லை.

முதல்-அமைச்சருக்கான சம்பளத்தை அரசு காசோலையாக (பேங்க் செக்) வழங்கும். +

அதைப் பணமாக மாற்றுவதற்காகவே காமராசரின் பெயரில் ஒரு #வங்கிக்கணக்கு இருந்தது.

முதல்-அமைச்சருக்கான சம்பளம் முழுவதையும் காமராசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் கொடுத்து விடுவார்.

அவரது #அம்மாவுக்கு ரூ. 150ஐ காங்கிரஸ் கமிட்டி அனுப்பி வைக்கும் கட்சிக்காக டில்லிக்கு விமான பயணம் +

செய்தால் விமான டிக்கெட்டு களை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிதான் வாங்கும்.

பழைய #தியாகிகள் யாராவது பண உதவி கேட்டு வந்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு கடிதம் கொடுப்பார். அங்கு #பணம் கொடுத்து விடுவார்கள்.

மாதத்தில் பாதி நாட்கள்தான் சென்னையில் இருப்பார். +

மீதி நாட்களில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பார்.

அதற்கான பயணப்படி உண்டு. ஆனால் பெருந்தலைவர் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் பயணப்படி கோரியதும் இல்லை, பெற்றதும் இல்லை.

வெளியூர்களில் பயணம் செய்யும்போது #பயணிகள் விடுதியில் (டிராவலர்ஸ் பங்களா)தான் தங்குவார். +

அந்தந்த ஊர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விடுதிக்கான வாடகையைக் கொடுக்க வேண்டும்.

காமராசரின் சட்டையில் ஒரு பெரிய பை இருக்கும். ஆனால் அதில் பணமே இராது. சில சமயங்களில் #சில்லறை நாணயங்களை வேஷ்டி மடியில் வைத்திருப்பார்.

யாராவது #யாசகம் கேட்டால் போடுவதற்காக அந்த காசுகள் உபயோகப்படும்.+

காமராசரின் சொந்த காருக்கு டிரைவராக ஒரு #போலீஸ்காரர் தான் இருந்தார். அந்த டிரைவருக்கான சம்பளத்தையும் காமராசரே கொடுத்து வந்தார்.

எனக்குதான் "டிரைவர் அலவன்ஸ்'’ என்று சம்பளத்தோடு கொடுக்கிறாங்களே!!

அந்த பணத்தையும், என் பணம் கொஞ்சத்தையும் #டிரைவருக்கு கொடுக்கிறேன் என்றார்.

#காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் சென்னையில் இருந்த மொத்த #பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே. (இது அப்போதைய அமைச்சர் ராசாராம் சொன்னதகவல் என்று `சாவி’ எழுதியுள்ளார்)

காமராசர் பல வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கிறார் என்று பலர் மேடைகளில் பேசியதுண்டு, கருணாநிதி உட்பட எழுதிய துண்டு. +

அது #பொய் என்று நிரூபித்தது இந்த 67 ரூபாய்.

ராம்மனோகர் லோகியா என்று வட இந்தியாவில் ஒரு தலைவர் இருந்தார். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதியாகப் போற்றப்பட்டவர். வெளி நாட்டில் படித்துப் பட்டம் பெற்றவர். காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்தார்.

காங்கிரஸ் #கட்சியில் வெளிநாட்டு இலாக்கா என்று +

ஒரு பிரிவு இருந்தது. அந்த வெளிநாட்டு இலாக்காவுக்கு லோகியாதான் தலைவராக இருந்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அப்போதையத்தலைவராக இருந்த #ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்தே வெளியேறிய #லோகியாசோஷலிஸ்ட் கட்சியைத் துவக்கினார். +

லோகியாவுக்குக் காங்கிரஸ் கட்சியே பிடிக்கவில்லை. நேரு என்றாலே வெறுப்பு. நேருவை எதிர்த்துத்தேர்தலில் போட்டியிடுவதும் உண்டு. நேருவின் கொள்கைகளை மிகவும் கடுமையாகச் சாடுவது லோகியாவின் வாடிக்கையாகி விட்டது.

நேரு பிரதமராக இருந்தபோது லோகியா எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.

நேரு பிரதமரான காலத்திலேயே நேருவுக்குப் பின் யார் என்று ஒரு பிரபலமான கேள்வி அடிக்கடி எழுவது உண்டு.

ஒரு #நிருபர் நேருவுக்குப் பின் யார்?? உங்கள் கருத்து என்ன? என்று லோகியாவைச் சீண்டினார். காமராஜ் இருக்கும் போது என்னிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்?

ஆம் அவர் தான் #காமராசர் 😍

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling