Second Show Profile picture
YouTube - https://t.co/W00VAvaike Facebook - https://t.co/uMxVQo3EHb Instagram - https://t.co/J3uj7zOiM0 Telegram - https://t.co/S7dmGIvAdp

Sep 15, 2020, 6 tweets

#HBDPerarignarAnnaa ❣️

• பேரறிஞர் #அண்ணா என்ற ஒருவர் இல்லையென்றால், இந்நேரம் நாமும் 'ஹிந்தி திணிப்பு தவறில்லை' என்று சொல்லிக்கொண்டு இருந்திருப்போம்.

• ராஜஸ்தானி, பஞ்சாபி, குஜராத்தி, காஷ்மீரி, மராத்தி ஆகிய பிராந்திய மொழிகள் போல, #தமிழ் மொழியும் ஹிந்தியால் காவு

1/N

வாங்கப்பட்டு அழிந்து ஒழிந்து போயிருக்கும்.

• சொந்த ஜாதியிலேயே திருமணம் செய்தாலும், கல்யாண நாள் வரை கணவன் முகத்தை கூட பார்க்க முடியாது என்கிற நிலையிலிருந்து... ஜாதியை தாண்டி, மதத்தை தாண்டி காதல் திருமணம் செய்ய #பெரியார் வலியறுத்திய சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டம்

2/N

கொண்டுவந்தவர் அண்ணா.

• தமிழர்களின் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பை 'முட்டாள்தனம்' என சொன்னதற்காக பிரதமர் நேருவையே எதிர்த்து போராடியவர்.

• மதராஸ் மாகாணத்தை பெயர் மாற்றி, 'தமிழ்நாடு' என்று பெயரிட்டவர்.

• அண்ணா இல்லையென்றால், இந்நேரம் மற்ற மாநிலங்கள் போல தமிழ்நாட்டையும்

3/N

பா.ஜ.க தான் ஆண்டுகொண்டிருக்கக்கூடும். தேசிய கட்சிகளை முதன்முதலில் வீழ்த்தியவர் அண்ணா.

• தமிழகத்தில் சமூக நீதி கொள்கைகளும், மாநில சுயாட்சி கொள்கைகளும் மேலோங்கி இருப்பதற்கான விதையை இட்டவர்.

• சினிமாவை அரசியல் பேசும் ஒரு அற்புதமான கருவியாக கையாள முடியும் என காட்டி,

4/N

மக்களிடையே பெரும் புரட்சியை உண்டாக்கியவர்.

• ஜாதிரீதியான பாரம்பரிய 'குலக்கல்வி' திட்டத்தை புகுத்த நினைத்த ராஜாஜியை எதிர்த்தவர்.

• தான் ஒரு தீவிரமான கடவுள் மறுப்பாளராக இருந்தபோதிலும், மதரீதியான மூடநம்பிக்கைகளை கேள்விகேட்ட போதிலும்,

5/N

மக்களின் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவராக இருக்கவில்லை. "நான் பிள்ளையாருக்கு தேங்காயும் உடைப்பதில்லை, பிள்ளையார் சிலையையும் உடைப்பதில்லை" என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது.

பேரறிஞர் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! ❤️❤️❤️

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling