Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 Profile picture
வீர சாவர்க்கர் பரம்பரையை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகீ ஜெய் பரத கண்டத்தை சேர்ந்தவன் பிரதமர் மோடிஜி அவர்களின் குடும்பம்

May 3, 2022, 14 tweets

மோடி மல்லையா, நீரவ்மோடி மாதிரி கடன்காரனுங்கள எல்லாம் தப்பிக்க விட்டுட்டார் பாத்தீங்களா - எட்டு வருஷமா காங்கிரஸ், தி.மு.க சொல்ற முக்கியமான குற்றச்சாட்டு -

இருபது முப்பது வருஷம் திருடித், திருடி சொகுசா வாழ்ந்த ஒருத்தன் இருக்கற எடத்த விட்டு, சொத்தவிட்டு, சொந்தங்களவிட்டு

பொறந்த நாட்டை விட்டே ஓடறான்னா அதுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? -

நம்மள்ள பலர் நம்ப ஊர்லயே பாத்திருப்போம் ஊரச்சுத்தி கடன் வாங்கி, திருப்பிக் கட்ட முடியாம ஊரவிட்டு ஓடிப்போனவங்கள, அது எவ்வளவு அசிங்கம், அவன் செத்ததுக்குச் சமம்னு நாம நெனைப்போம் -

இது மல்லையாவுக்குக் கெடையாதா?-

இருக்கு, அப்பறம் ஏன் ஓடிப்போனான்?-

அதான், இருபது முப்பது வருஷமா சொகுஷா வாழ்ந்தவன் திடீர்னு ஓடிப்போறான்னா இங்க அவனால இனி திருடி, ஏமாத்தி பழயபடி சொகுசா வாழ முடியாம தடுக்க யாரோ அல்லது ஏதோ புதுத் தொல்லை வந்திருக்குன்னு அர்த்தம்-

அந்த யாரோ யார்னா 2014-ல பிரதமர் ஆன #மோடி-

அந்த எதுவோ என்னன்ன #IBC -
அதாவது #Insolvency_and_Bankruptcy_Code_

தனிநபரா இருந்தாலும் சரி பெரிய, பெரிய நிறுவனங்களா இருந்தாலும் சரி பேங்ல கடன் வாங்கறதே திரும்பக் கட்டத் தேவையில்லைன்ற மனநிலையோடதான் கடன் வாங்கறாங்க-

ஒரு வேளை சட்டநடவடிக்கை எடுத்தா கூட கோர்ட் கேஸ்னு அவனோட ஆயுள் முடியற வரைக்கும் இழுத்துக்கிட்டே இருக்கலாம் இதுதான் 2015 வரைக்கும் இருந்தது -

ஆனா, மோடி அரசு டிசம்பர் 2015 - ல #IBC மசோதா அறிமுகம் செஞ்சதுக்கு அப்புறம்தான்

கடன்காரனுங்களுக்கெல்லாம் அஸ்தில ஜூரம்னு சொல்லுவாங்களே அது வந்துச்சு -

#IBC-பத்தி சுருக்கமா, ஒருத்தன் அல்லது ஒரு கம்பெனி தொடர்ந்து 90 நாள் தவனை கட்டாம இருந்தா அவனோட கடன வாராக்கடனா மாத்தி (Write off) சட்டரீதியா வசூல் செய்ய ஏற்பாடு செய்றது -

அதன்படி இந்தத் தீர்பாயம் ஆறுமாசம் (180 நாள்) அவகாசம் கொடுக்கும்-

அதுக்குள்ள கட்ட முடியலன்னா, திரும்ப ஒரு 90 நாள் அவகாசம் அப்பவும் முடியலன்னா அந்த நிறுவனம் தீர்பாயம் Control-க்கு போய்டும் -
அடமானம் கொடுத்த சொத்துக்கள வித்து பணத்த வசூல் பண்ணுவாங்க-

சம்பந்தப்பட்ட நபர் திவால் ஆனாத அறிவிச்சுடுவாங்க (செத்த பொணத்துக்குச் சமம்)-

இது தான் #IBC யோட சுருக்கம்-

சட்டம் அறிமுகமானது 2015 டிசம்பர்ல மல்லய்யா ஓடிப்போனது 2016 மார்ச் 2-ல-
சட்டம் நிறைவேறினது மே 5 2016-ல-

குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்தது மே 28 2016-ல-

ஆக, ஆப்பு ரெடியாய்டிச்சின்னு தெரிஞ்சே தான் மல்லய்யா எஸ்கேப் ஆகியிருக்கான்-

அவனோட சேத்து அவனமாதிரியே 36 கடன்காரனுங்களும் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சி நாயப் போல ஓடிப்போயிருக்காங்கன்னா அதுக்கு மோடி மட்டும்தான் காரணம்-

ஆனா, அவனுங்கத் தப்பிக்க விட்டது மோடி இல்ல 70 வருஷமா இங்க அதிகாரத்துல இருக்கற வாங்கி மட்டுமே பழகின அதிகாரிங்கதான் காரணம் (அத அப்பறம் விரிவா பேசுவோம்)-

இப்ப இந்த #IBC வந்ததால என்னத்த சாதிச்சீங்கன்னு நீங்க மனசுல நெனைக்கறது எனக்குக் கேட்குது-

2016 இந்தச் சட்டம் வர்றதுக்கு முன்னாடி வாராக்கடன்றது ஒரு வருஷத்துக்கு வெறும் 2000 கோடி கூட வசூல் ஆகாது-

ஆனால் -
இந்தச் சட்டம் வந்ததுக்கு அப்பறம் -

கடந்த 2016 - 17 நிதி ஆண்டில் 61,930 கோடி ரூபாய் -
2017 - 18 நிதி ஆண்டில் 77,563 கோடி ரூபாய் -

2018 - 19 நிதி ஆண்டில் 1,21,076 கோடி ரூபாய் -
ஆக,
மூன்று வருடங்களில் 2,65,569 கோடி ரூபாய் வசூல் ஆகியிருக்கு-

இந்தச் சட்டத்துக்குப் பயந்துதான் 21,000 கம்பெனிகள் தங்களோட நிலுவைத் தொகையக் கட்டி இருக்காங்க, கட்டிகிட்டே இருக்காங்க-

மனசாட்சியத் தொட்டுத் சொல்லுங்க இது சாதனை இல்லையா?-

ஊரான் வீட்டு நெய் மாதிரி காங்கிரஸ் வாறி எறச்ச கடனயெல்லாம் மோடி அரசாங்கம் உயிரக் கொடுத்து வேலை செஞ்சு மீட்டுட்டிருக்கு அது மட்டும்தான் உண்மை -

ஏன்னா, அது உங்க பணம், என் பணம்-நம்ம பணம்

நீங்க யாரும் மோடிய பாராட்ட வேண்டாம்_
தயவு செஞ்சு அநியாயம் பேசாதீங்க அது பாவம் -

தேசப்பணியில் என்றும்-

நன்றி நமுரா முகநூல்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling