அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

May 27, 2022, 8 tweets

#நோய்கள்_தீர்க்கும்_சில_திருத்தலங்கள்

#வைத்தீஸ்வரன்கோவில் இந்த ஆலயத்தில் உள்ள வைத்தியநாதரை வணங்கி வழிபட, தீராத நோய் தீரும். இத்தலம் செவ்வாய் பகவானின் தோல் நோய் தீர்த்த தலமாகும். இங்கு வழங்கப்படும் திருச்சாந்துருண்டை பிரசாதம் பல நோய்களை குணமாக்கும்.

#சங்கரன்கோவில் ராஜபாளையம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது சங்கரன்கோவில். இங்கு தரப்படும் புற்றுமண் பிரசாதம் சகல சரும நோய்களையும் குணமாக்கும். நாகதோஷத்தால் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட நல்ல முன்னேற்றம் ஏற்படுவது கண்கூடு.

#திருச்செந்தூர் ஆதிசங்கரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம். இங்கு பன்னீர்

இலையில் தரப்படும் திருநீற்றை நெற்றியில் பூசியும் வாயில் இட்டு கொள்வதும் நோயை தீர்க்கும்.

#ஸ்ரீமுஷ்ணம் விருத்தாச்சலத்தில் அருகில் உள்ளது இங்குள்ள பூவராகசுவாமி கோவிலில் கொடுக்கப்படும் முஷ்தாபி சூரணம் தீராத நோய் தீர்க்கும் அருமருந்தாகும்.

#பழனி இவ்வாலயத்தில் அதிகாலையில் தரப்படும்

கபினி தீர்த்தம் மற்றும் சாற்றுச் சந்தனம் எந்த நோயையும் குணமாக்கும் ஆற்றல் படைத்தது

#தாடிக்கொம்பு திண்டுக்கல் தாடிக் கொம்பு சௌந்தராஜ பெருமாள் கோவிலில் அனைத்து வியாதிகள் நீக்கும் இலேகியம் மற்றும் தைலம் அமாவாசை தோறும் செய்து தரப்படுகிறது.

#இருக்கன்குடி விருதுநகர் மாவட்டம் சாத்தூர்

அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் ஆயிரம் கண்ணுடையாள் என்றும் அழைக்கப்படுகிறாள். தீராத அம்மைநோய், கண்நோய் மற்றும் கை காலில் வரும் வியாதிகளையும் தீர்த்து வைக்கிறாள்.

#திருநின்றவூர் சென்னையில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள இறைவன் இருதயாலீஸ்வரர் இருதயம்

சம்பந்தமான நோய்களை குணமாக்கவல்லவர். இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இருதய நோய் வரக் கூடாது என்பதும் இங்கு சென்று வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும்.

#கூரம் காஞ்சிபுரத்தில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள கூரத்தாழ்வார் கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளையும் தீர்க்கும்

அரிய சக்தி உள்ளவர்.

#திருவீழிமிழலை தஞ்சை- திருத்துறைப்பூண்டி அருகில் உள்ளது திருவீழிமிமலை. இங்குள்ள பெருமாள் தன் கண்ணை கொண்டு சிவபூஜை செய்தார் என்பது சிறப்பானதால் ஞாயிறு தோறும் சிவனுக்கு தாமரை மலர் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இங்கு வந்து வணங்கி வழிபட்டால் கண்நோய்

தீரும் என்பது திண்ணம்.

#திருவாதவூர் மதுரைக்கு அருகில் உள்ளது இங்குள்ள சிவன் வாதபுரிஸ்வரர் சனி பகவானின் வாதநோய் குணமான திருத்தலம் எனவே இங்கு சிவனை வில்வம் கொண்டு திங்கள் கிழமையும் சனியை சனிக்கிழமையும் விளக்கு போட்டு வழிபட வாத நோய்கள் குணமாகும்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling