#வைத்தீஸ்வரன்கோவில் இந்த ஆலயத்தில் உள்ள வைத்தியநாதரை வணங்கி வழிபட, தீராத நோய் தீரும். இத்தலம் செவ்வாய் பகவானின் தோல் நோய் தீர்த்த தலமாகும். இங்கு வழங்கப்படும் திருச்சாந்துருண்டை பிரசாதம் பல நோய்களை குணமாக்கும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது சங்கரன்கோவில். இங்கு தரப்படும் புற்றுமண் பிரசாதம் சகல சரும நோய்களையும் குணமாக்கும். நாகதோஷத்தால் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட நல்ல முன்னேற்றம் ஏற்படுவது கண்கூடு.
#திருச்செந்தூர் ஆதிசங்கரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம். இங்கு பன்னீர்
இலையில் தரப்படும் திருநீற்றை நெற்றியில் பூசியும் வாயில் இட்டு கொள்வதும் நோயை தீர்க்கும்.
#ஸ்ரீமுஷ்ணம் விருத்தாச்சலத்தில் அருகில் உள்ளது இங்குள்ள பூவராகசுவாமி கோவிலில் கொடுக்கப்படும் முஷ்தாபி சூரணம் தீராத நோய் தீர்க்கும் அருமருந்தாகும்.
கபினி தீர்த்தம் மற்றும் சாற்றுச் சந்தனம் எந்த நோயையும் குணமாக்கும் ஆற்றல் படைத்தது
#தாடிக்கொம்பு திண்டுக்கல் தாடிக் கொம்பு சௌந்தராஜ பெருமாள் கோவிலில் அனைத்து வியாதிகள் நீக்கும் இலேகியம் மற்றும் தைலம் அமாவாசை தோறும் செய்து தரப்படுகிறது.
அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் ஆயிரம் கண்ணுடையாள் என்றும் அழைக்கப்படுகிறாள். தீராத அம்மைநோய், கண்நோய் மற்றும் கை காலில் வரும் வியாதிகளையும் தீர்த்து வைக்கிறாள்.
#திருநின்றவூர் சென்னையில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள இறைவன் இருதயாலீஸ்வரர் இருதயம்
சம்பந்தமான நோய்களை குணமாக்கவல்லவர். இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இருதய நோய் வரக் கூடாது என்பதும் இங்கு சென்று வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும்.
#கூரம் காஞ்சிபுரத்தில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள கூரத்தாழ்வார் கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளையும் தீர்க்கும்
அரிய சக்தி உள்ளவர்.
#திருவீழிமிழலை தஞ்சை- திருத்துறைப்பூண்டி அருகில் உள்ளது திருவீழிமிமலை. இங்குள்ள பெருமாள் தன் கண்ணை கொண்டு சிவபூஜை செய்தார் என்பது சிறப்பானதால் ஞாயிறு தோறும் சிவனுக்கு தாமரை மலர் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இங்கு வந்து வணங்கி வழிபட்டால் கண்நோய்
தீரும் என்பது திண்ணம்.
#திருவாதவூர் மதுரைக்கு அருகில் உள்ளது இங்குள்ள சிவன் வாதபுரிஸ்வரர் சனி பகவானின் வாதநோய் குணமான திருத்தலம் எனவே இங்கு சிவனை வில்வம் கொண்டு திங்கள் கிழமையும் சனியை சனிக்கிழமையும் விளக்கு போட்டு வழிபட வாத நோய்கள் குணமாகும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#தீபாராதனை
ஒரு சிறுவனுக்குச் சூரியனைப் பார்க்க ஆசை ஏற்பட்டது. அம்மா! எனக்கு சூரியனைக் காட்டு என்றான. அம்மா, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு வாசலுக்கு வந்தாள். அதை உயர்த்தி இதோ பார் சூரியன் என்று காட்டினாள். அந்தப் பையனுக்கோ சிரிப்பு வந்துவிட்டது. சூரியனைக் காட்ட எதற்கம்மா
மெழுகுவர்த்தி என்றும் கேட்டான். இதே கதைதான் தினமும் கோவிலில் நடக்கிறது. கோவில் ஆரத்தியின் போது, ஐயர்கள் பலவிதமான தீபங்களை ஏற்றி சுவாமிக்கு முன் காட்டுகிறார்கள். ஆனால் இந்த ஐயர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. அவர்கள் மெத்தப் படித்த மேதைகள். அவர்கள் வானியலை நன்கு அறிந்த வந்த விஞ்ஞானிகள்
இன்று வானியல் அறிஞர்கள் பல்லாயிரம் கோடி சூரியன்கள் இருக்கின்றன என்று சொல்லுவதற்கு முன்பே, பல 1000சூரிய மண்டலங்கள் இருக்கின்றன என்பதை அறிந்தவர்கள். #மாணிக்கவாசகர் போன்ற தமிழ்ப் பெரியோர்கள் இதைத்தெள்ளத் தெளிவாகவே பாடி வைத்துள்ளனர். ஆகையால் தீபாராதனை காட்டும் ஐயர்கள் #கடோபனிஷத்தில்
#பர்வதமலை_சிவன்_கோவில்
20975 படிகள் ஏறி இக்கோவிலை அடைய முடியும். 3500 அடி உயர பர்வதமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவ மலை, கொல்லிமலை, சுருளி
மலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை. பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால்
மலைகளுக்கெல்லாம் மலை, மலைகளின் அரசன் என்று பொருள். பர்வதமலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்ற வேறு பெயர்களும் உண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களைப்பற்றியும், அப்பகுதி மக்களைப்பற்றியும் குறிப்பிடும் ஒரே சங்க
#நற்சிந்தனை
விதுரர் திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி. பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா. விதுரரின் தாயார் ஒரு பணிப் பெண்ணாக இருந்தவர். விதுரர் மகா நீதிமான். தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர். 100 வயது வரை வாழ விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம் கீழே!
திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதனுக்கு ஆயுள் 100 வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே இது ஏன் என்று கேட்டார். அதற்கு விதுரர், 6 கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை குறைகின்றன என்றார்
அவை:
அதிக கர்வம் கொள்ளுதல்
அதிகம் பேசுதல்
தியாக மனப்பான்மை இல்லாமை
கோபம்
சுய நலம்
நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது
விதுரர் கூறீய அந்த 6 வாள்கள் எப்படி இருக்கும்? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
#முதலாவது_வாள் அதிக கர்வம் கொள்ளுதல்- தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர்
பஞ்ச பாத்திரம்
பஞ்ச பாத்திரத்தை பற்றி 3 விதமான விவரங்கள் உண்டு. முதலில் ஆராதனத்திற்க்கு பயன்படும் அந்த பஞ்ச பாத்திரம் இயற் பெயர்
பஞ்ச பத்ர பாத்திரம் என்பர் பெரியோர். அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை
பத்திரங்களை (இலைகள்) அதிலுள்ள நீரில் இட்டு அந்நீரை உத்தரணி என்ற சிறு கரண்டியால்
எடுத்து ஆராதனைகளுக்கு பயன் படுத்துவதால் அப்பெயர்.
பஞ்ச பத்ரம்
அது, துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் என்பர். இந்த பத்திரங்களும் தீர்த்தமும் விடப்படும்
பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம். இதுவே காலப் போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது. இந்த
பத்திரங்கள் மூலிகைகளாகும். இந்த பத்ரங்கள் தெய்வீகமானவை பூஜைகளுக்கு ஏற்றவை. இப்படியாக 5 இலைகளையும் பகவத் கைங்கர்யத்திற்க்கு அர்ப்பணித்து அர்க்யம், பாத்யம், ஆசமனியம் என தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஶ்ரீ வைஷ்ணவர்கள் விஷ்ணு பகவான்
முருகன் கோவில்களில் உள்ள சில சிறப்புகள்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோவிலில் கொடிமரத்தில் இருந்து வலமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ஓம் என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்துள்ளதைக் காணலாம். இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்து தருவர்.
இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் 12 நரம்புகள் இலையில் இருப்பதை உணரலாம். இவை முருகனின் 12 திருக் கரங்களைக் குறிக்கின்றன. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கென்று தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு
உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை, பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன்படுத்தப் படுகின்றன.
திருக்கழுக்குன்றம் மலை மீதுள்ள வேதகிரீஸ்வரர் ஆலயத்தில், முருகப்பெருமான் 6 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். முருகப் பெருமானோடு வள்ளி-தெய்வானை
வானமாமலை கலியன் ஸ்வாமி மிகுந்த புலமை உள்ளவர். தமிழ் ஹிந்தி ஆங்கிலம் தெலுங்கு ஆகிய மொழிகளை பேசவும் எழுதவும் படிக்கவும் தெரியும். நவோதயா பள்ளியில் பலவற்றில் பணியாற்றி அதன் தலைமை பீடத்திலும் அமர்ந்தவர். திருக்குறளை ஹிந்தியில்
மொழி பெயர்த்தவர். அவர்களை ஶ்ரீவைணவ உலகில் இந்திய அளவில் அனைவருக்கும் தெரியும். ஜீயரின் 75வது சம்வஸ்த்ர வைபவம் நடந்த போது அவரை கம்யூனிச சித்தாந்தத்தை கொண்ட பத்திரிகை நிருபர் பேட்டி எடுத்தார். இந்து மதத்தை சிறுமைப்படுத்தியும் கிறிஸ்தவ முஸ்லிம் மார்க்கங்களை உயர்த்தியும் தாங்கிப்
பிடிப்பதிலேயே அவர் ப்பேட்டியின் சாரமாக இருந்தது. ஸ்வாமியிடம் தன்னை அறிமுகபடுத்தி கொண்டு பேட்டியை எடுத்தவர் பேட்டியின் இடையே இஸ்லாத்தை கண்டு பிடித்தவர் யார் ஸ்வாமிஜி என கேட்டார். முகம்மது நபி என்றார் ஸ்வாமி. கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்தவர் ஸ்வாமி என கேட்க
ஏசுகிரிஸ்து என்றார் ஜீயர்.