, 16 tweets, 2 min read
பிராமணர் பொல்லாதவர்கள்,சாதி பார்ப்பவர்கள் அடுத்த சாதியினை ஆலயத்திற்குள் விடாத கொடுமதியாளர்கள் அவர்களை விரட்டாமல் சமூக நீதி இல்லை என சொல்லிகொள்ளும் கும்பல் இங்கு எக்காலமும் உண்டு

அப்படியே இந்த சமயசீர்திருத்தம்,சமூக சீர்திருத்தம் எல்லாம் வெள்ளையனும் திராவிட இயக்கமும் கொண்டுவந்தது
என சொல்லும் கும்பலும் எக்காலமும் உண்டு

உண்மையில் இங்கு இந்துசமயத்தின் பல கொடுமைகளை இந்துக்களே எதிர்த்து சீர்படுத்தினர். இந்த உடன்கட்டை ஏறும் கொடுமையினை தடுத்த மோகன்ராய் ஒரு இந்து, குழந்தை திருமணமத்தை தடுக்கும் சாரதா சட்டத்திற்கு காரணமானவர் இந்து
நாராயணகுருவும், அய்யா வைகுண்டரும் செய்யா புரட்சி இல்லை அவர்களும் இந்து

அந்த வரிசையில் தமிழகம் கண்ட மாமனிதர் வைத்தியநாத அய்யர்

ஆம் அவர் அய்யர்,ஆனால் போராடியதெல்லாம் தாழ்த்தபட்ட மக்களுக்காக‌

அவர் அன்றே வழக்கறிஞர் என்றாலும் போராட வந்தார், உப்பு சத்தியாகிரகத்தில்
வேதாரண்யத்தில் கலந்து கொண்டு வெள்ளையனால் அடியும் உதையும் வெறும் தரையில் 400 மீட்டர்கள் இழுத்து செல்லபட்ட சித்திரவதைகள் எல்லாம் பெற்றவர்,அப்பழுக்கற்ற சுதந்திர போராட்ட வீரர்

எப்படிபட்ட அப்பழுக்கற்றவர் என்றால் உப்பு சத்தியாகிரகத்தில் குடும்பத்தோடு கலந்து கொண்டவர்,அவர் மனைவி மகன் என
குடும்பமே சிறையில் இருந்த காலம் உண்டு

ஒருமுறை சிறையில் இருந்தபொழுது மூத்த மகன் இறந்தான் அவருக்கு பரோல் கிடைக்கவில்லை சிறையிலே அழுதார், மகள் திருமணத்திற்கு பரோலில் ஒரு நாள் வந்திருந்தார்

கவனியுங்கள்,சட்டம் படித்தவர். கொஞ்சம் வெள்ளையனுக்கு ஒத்துழைத்திருந்தால் ஏராளமான கைதிகளுக்கு
வாதாடி சம்பாதித்திருக்கலாம்,வக்கீல் எத்திராஜ் அளவு சம்பாதித்து கல்லூரி எல்லாம் கட்டி இருக்கலாம்

ஆனால் மனிதர் பாரதி சாதி,வாழ்வை நாட்டிற்காக தொலைத்தார்

வைத்தியநாத அய்யர் எதில் தனித்து நிற்கின்றார் என்றால் முதன் முதலில் தாழ்த்தபட்ட மக்களை ஆலயத்தில் அனுமதிக்க வேண்டும் என போராடினார்
அல்லவா?அங்கு நிற்கின்றார்

ஆம் மதுரையில் தாழ்த்தபட்ட சாதியினர் ஆலயத்தில் நுழைய தடை இருந்தது,அவர்கள் நுழைந்தால் பஞ்சம் வந்துவிடும் என்ற மூடநம்பிக்கை இருந்தது

1924ல் வைக்கம் சென்ற பெரியார் கூட மதுரை பக்கம் வருவதற்கு யோசிக்கும் அளவிற்கு நிலமை சிக்கலாய் இருந்தது,பகுத்தறிவு பகலவன்கள்
அப்பக்கம் வர நிரம்ப யோசித்தனர்

1937ல் மதுரை வந்த காந்தி அந்த ஆலயத்தில் தாழ்த்தபட்டோர் நுழையமுடியாது என அறிந்து, அவர்கள் நுழையாத ஆலயத்தில் நானும் நுழையமாட்டேன் என அறிவித்தார் என்றால் நிலமையின் வீரியத்தை புரிந்துகொள்ளுங்கள்

ஆனால் வைத்தியநாத அய்யர் துணிந்தார்,
அவருக்கு பசும்பொன் முத்துராமலிங்கம் முழு ஆதரவு அளித்தார், எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய முதல்வர் ராஜாஜி மதுரை ஆலயத்தில் எல்லா சாதியும் நுழைய தடை இல்லை என அறிவித்தார்

சாதி வெறியர், ஆச்சாரவாதி , உடம்பெல்லாம் விஷம் என பலரால் சொல்லபட்ட ராஜாஜிதான் அந்த அறிவிப்பினை செய்தார்
கவனியுங்கள் மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோர் நுழைய போராடியதும் பிராமணன், உத்தரவிட்டதும் பிராமணன்

உத்தரவு வந்தும் நிலைமை சுமூகமாக இல்லை, கோவில் கோஷ்டி அராஜகத்தில் இறங்கியது, பின் பசும்பொன் முத்துராமலிங்கம் வந்ததும் அக்கோஷ்டி கோவிலை இடமாற்றுகின்றோம் என தமிழ்சங்கம் பக்கம் ஓடிவிட்டது
(ஆம் தாழ்த்தபட்டோர் வந்தால் ஆலய அர்ச்சனை செய்யமாட்டோம் என சொல்லி ஓடிய கும்பல் பின் 1945ல்தான் கோவிலுக்குள் வந்தது..)

வைத்தியநாத அய்யர் தாழ்த்தபட்டவர்களுடன் கோவிலுக்குள் நுழைந்தார், மிகபெரும் புரட்சி அங்கு நடந்தது. அதுதான் புரட்சி

காந்தி அதனை பாராட்டி நாடெல்லாம் சொன்னார்,
தன் பத்திரிகை எங்கும் எழுதி மகிழ்ந்தார், அதன்பின் அவரும் மதுரை ஆலயம் நுழைந்து வழிபட்டார். வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி அது

நாடே திரும்பி பார்த்தது

மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோருக்கான முதல் வெற்றி அது.

அதன் பின் திராவிட கோஷ்டி மதுரை பக்கம் வந்தன,
சில திகவினரின் அத்துமீறிய செயலால் பெரியாரை ஆபத்து சூழ்ந்தபொழுது அவரை காப்பாற்றியதில் வைத்தியநாத அய்யருக்கு பங்கு உண்டு

பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி என சொன்ன பெரியார் அன்று அய்யரால் காப்பாற்றபட்டார்

அதன் பின்னும் தாழ்த்தபட்ட மக்களுக்காக ஹரிஜன் சேவா சங்கம்
போன்ற சங்கங்களை நடத்தி அவர்களுக்காக பாடுபட்டார்

மக்கள் சேவையே மகேசன் சேவையாக, தன் உயிருள்ள வரை இந்திய நாட்டிற்கு உழைத்த தன்னலமற்ற தியாகியாக, அஞ்சா நெஞ்சராக, மனிதநேய பண்பாளராக, மிகச்சிறந்த தேசபக்தராக, காந்தீயவாதியாக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பாதுகாவலராக,
இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சியாளராக இப்படி பல பரிமாணங்களில் வாழ்ந்து தேசீயத்தையும் தெய்வீகத்தையும் காத்தவர் வைத்தியநாத ஐயர்

தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக கண்டது தேவர் மட்டுமல்ல இந்த வைத்தியநாத‌ அய்யரும் கூட‌

தமிழகத்தில் மறக்கமுடியாத மாமனிதர் அவர்,
இவரை போன்ற பெருமனிதர்களின் வரலாற்றை மறைத்துத்தான் திராவிட பிம்பமும் பெரியார் பிம்பமும் கட்டமைக்கபட்டிருகின்றது

காரணம் அரசியல், இந்திய தேசியத்தில் தமிழகம் கலந்துவிட கூடாது எனும் திருட்டு அரசியல்
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Wolfrik

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!