, 18 tweets, 3 min read
அந்த வியாதி கொடூரமானது, ஒருவன் வாழ்வினையே முடக்கும் அளவு இரக்கமே இல்லாதது. இளம்பிள்ளை வாதம் என தமிழிலும், போலியோ என ஆங்கிலத்திலும் அழைக்கபட்ட வியாதி அது

அது ஆதிகாலத்திலே இருந்திருக்கின்றது, இயேசு கூட அப்படி ஒருவனை குணமாக்கியதாக தெரிகின்றது, சப்பாணிகள் என்றும் முடவர்கள் என்றும்
கடவுள் குணப்படுத்துவார் என ஜெருசலேம் கோவிலில் காத்து கிடந்தவர்கள் எல்லாம் அந்நோயால் பாதிக்கபட்டவர்கள் என்கின்றது வரலாறு

அப்படிபட்ட நோயின் தாக்கம் கடந்த தலைமுறைவரை இருந்தது, ஒவ்வொரு ஊரிலும் போலியோ தாக்கபட்டவர்களை காணாலம் இருக்க முடியாது

சில குழந்தைகளை இரு கை இரு கால் என
முடக்கும், சிலருக்கு ஒரு கை ஒரு கால் என முடக்கும்

1997வரை ஒவ்வொரு வகுப்பிலும் போலியாவால் தாக்கபட்டு அங்ககீனமான ஒரு மாணவனோ இல்லை பலரோ சாதாரணம்

அவர்கள் இன்றும் சரியான பணி இன்றியும், குடும்ப வாழ்வு இன்றியும் வாழ்வதை சாதாரணமாக பார்க்கலாம். மாற்று திறனாளிகள் என கலைஞர்தான் அழைக்க
ஆரம்பித்தாரே தவிர அதற்கு முன்பு அழைக்கபட்டதெல்லாம் மிக கொடூரமான மனதனை பாதிக்கும் வார்தைகள்

உடலால் செத்த அவர்களை மனதாலும் கொல்லும் நோய் போலியோ

குழந்தையிலே அவர்களை தாக்கும் அந்நோய், காலமெல்லாம் யாரையாவது நம்பியே அவர்கள் அன்றாட கடமையினை செய்யுமளவு அவர்களை முடக்கிவிடும் பெரும்
வலியினை கொடுத்து விடுகின்றது

அப்படிபட்ட கொடூரமான நோய் வருதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை, அம்மை நோய் என்றால் அம்மனை காட்டும் சமூகம் விஞ்ஞானமாக வேப்பிலை மருந்தை சொன்னாலும், போலியோ என்றால் விதிபயன் என சொல்லிவிட்டது

நோய்க்கு சாதி, மதம், இனம், மொழி எதுவும் தெரியாது,
போலியோ பல்லாண்டு காலமாக உலகில் ஆட்சி புரிந்தது, உலகம் முழுக்க குழந்தைகளை தாக்கி அவர்கள் வாழ்வினை முடக்கியது அந்நோய்

இரண்டாம் உலகபோருக்கு பின் நச்சு ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்ட்ட பல கொடூர வைரஸ்களை கட்டுபடுத்தி மருத்துவத்திற்கு பயன்படுத்தமுடியுமா என்ற ஆய்வு தொடங்கிற்று
அதில் ஏதாவது ஒரு மருந்தை கொண்டு இந்த போலியோவினை வெல்லமுடியுமா என கனவு கண்டவர் டாகடர் யோனஸ் சால்க்

அவர் அமெரிக்க யூதர், அப்பொழுதே டாக்டர். இந்த பாலும் பழமும் சிவாஜி கணேசன் சினிமாவில் புற்றுநோய்க்கு பாடுபட்ட காலங்களில் அவர் அமெரிக்காவில் உண்மையாக போலியோவிற்கு எதிராக பாடுபட்டார்
ஒரு நோய் குணமாக முதலில் அதற்கான வைரஸ் கண்டுபிடிக்கபட வேண்டும்,சால்க் முதலில் எந்த வைரசால் அந்நோய் ஏற்படுகின்றது என கண்டறிந்து உறுதிபடுத்தினார்

ஆம் அது நரம்பு மண்டலத்தை தாக்கும் ஒருவித வைரஸ் என்பது உறுதியானது

நரம்பு மண்டலத்தை தாக்கும் ஒருவித வைரஸ் ஆயுதம் ஹிட்லரால் உருவாக்கபட்டது
என்பதும், அதற்கு அமெரிக்கா பதில் மருந்து உருவாக்கியது என்பதும் அக்கால செய்திகள்

ஆனால் அந்த அடிப்படைதான் சால்கினை போலியோவினை குணபடுத்த முடியும் என்ற நம்பிக்கையினை கொடுத்தது

அதன் பின் தன் வாழ்வினை அதற்காக அர்பணித்து பெரும் உழைப்பிற்கு பின் அந்த அருமருந்தினை கண்டுபிடித்தார்
ஆனால் பரிசோதனைக்கு யாரை பயன்படுத்துவது? நன்றாக இருப்பவர்களுக்கு கொடுத்து ஏதும் ஆகிவிட்டால்?

மனிதர் தானே பரிசோதனை ஆனார், அந்த மருந்தை தன் உடலில் செலுத்தி நம்பிக்கை அளித்தார்

அதன் பின் அந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தது, அமெரிக்காவில் இளம்பிள்ளை வாதம் ஒழிந்தது
உலக நாடுகள் அதை குறித்து கொண்டன, சால்க் மிகபெரும் கொண்டாட்டத்தை பெற்றார், உலகெல்லாம் அம்மருந்து குழந்தைகளுக்காக கொடுக்கபட்டது

உலக சுகாதார அமைப்பு அந்த அருமருந்தினை உலக மக்கள் எல்லோருக்கும் கொடுத்து நோயினை ஒழிக்க உறுதி பூண்டது

எதுவுமே தாமதமாக வரும் இந்தியாவில் பின்னாளில்
போலியோ மருந்து அரசால் வழங்கபட்டு இன்று எல்லா குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்கபடுகின்றது

உறுதியாக சொல்லலாம், இந்தியாவில் இப்பொழுது இளம்பிள்ளைவாதம் ஒழிக்கபட்டிருக்கின்றது, பழைய தாக்கம் இல்லை

ஆரோக்கியமாக குழந்தைகள் வளர்கின்றன,மறுக்கமுடியாது

உலகின் மாபெரும் சொத்துக்கள் குழந்தைகள்,
அவர்கள்தான் உலகின் எதிர்காலம்,அவ்வகையில் அந்த அருமருந்தினை கண்டறிந்த சால்க் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியாக கொண்டாடபடுகின்றார்

பைபிளில் சூம்பிய கையினை குணமாக்கினார் யூத ஞானி இயேசு கிறிஸ்து,அதன் பின் அந்த நோய்க்கு மருந்தும் யூத விஞ்ஞானியிடம் இருந்தே வந்தது

இன்று நாமெல்லாம் இலவசமாக
அம்மருந்தினை பெறுகின்றோம்,ஏன் உலகெல்லாம் சல்லிவிலையில் கிடைக்கின்றது. ஆம் இலவசமாக கிடைக்கும் பொருள் எவ்வளவு அருமருந்தாயினும் மதிப்பில்லை

இதுவே மிகபெரும் விலையான மருந்தென்றால் என்னாகும்? குழந்தைகள் விவகாரம் அல்லவா? காசு கொடுத்துத்தான் வாங்கி இருக்க வேண்டும்

ஆனால் எப்படி இவ்வளவு
மலிவாக கிடைக்கின்றது,அரசுகளின் கருணையா?

இல்லை,சால்க் தன் கண்டுபிடிப்பினை பதியவில்லை,அதற்கான பாடன்ட் எனும் காப்புரிமையோ இம்மருந்தால் கிடைகும் வருமானம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் என்றோ அவர் எழுதி வைக்கவுமில்லை,சட்டபடி பதியவுமில்லை

ஏன் கவனகுறைவா என்றால் இல்லை, அந்த பெருமகன்
அதுபற்றி கேட்டபொழுது மெதுவாக சொன்னான் "சூரியன் தன் ஒளிக்கு காசு கேட்டால் உலகம் தாங்குமா?"

நல்ல மருத்துவனின் மனம் என்பது இதுதான்,நோயினை விரட்ட வேண்டும்,மானிட குலம் காக்கபட வேண்டும்,பணம் என்பதெல்லாம் யாருக்கு வேண்டும்?

மானிட நேயமும் மருத்துவமும் கலந்த சில மேதைகள் இப்படித்தான்
இருந்திருக்கின்றார்கள்

அவர் மட்டும் மருந்துதினை பதிந்து சம்பாதித்திருந்தால் இன்றைய பில்கேட்ஸ் இன்னபிற மில்லியனர்களை விட பெரும் உயரத்தில் இருந்திருப்பார்

அதன் பின்னாலும் சால்கின் ஆராய்ச்சி தொடர்ந்தது தன் இறுதி காலங்களில் எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் இருந்தார்,
ஆனால் விதி முடிந்தது.

போலியோ எனும் கொடும் வியாதியினை உலகில் இருந்து விரட்டிய அந்த மாமனிதனின் பிறந்தநாள் இன்று

அவனுக்கு குழந்தைகள் உலகமும், பெற்றோர் உலகமும் மாபெரும் அஞ்சலியினை செலுத்தி கொண்டிருக்கின்றது

நிச்சயம் அந்த யூத விஞ்ஞானி இரண்டாம் கிறிஸ்து,அதில் சந்தேகமில்லை.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Wolfrik

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!