, 18 tweets, 3 min read
My Authors
Read all threads
திமுகவுக்கு இது சோதனையான காலம், குறிப்பாக முக ஸ்டாலிக்கு மகா நெருக்கடியான காலம்

ஆம் , மாரிதாஸ் வெளியிட்டிருக்கும் வீடியோ ஸ்டாலினின் மிசா பிம்பத்தை மட்டுமல்ல, திமுக இதுகாலமும் நாங்கள் மிசாவினை எதிர்த்தவர்கள் எனும் அந்த பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்து போட்டிருக்கின்றது
மிசாவினை திமுக ஆட்சி நீடிக்க முதலில் ஏற்றுகொண்டது, ஆட்சிக்கான காலம் முடியும் பொழுதே மிசாவினை எதிர்ப்பதாக சீன் போட்டது, ஆக தானாக கலையும் ஆட்சியினை மிசாவில் கலைத்ததாக பொய் சொல்லி ஊரை ஏமாற்றுகின்றது என்கின்றார் மாரிதாஸ்

ஆம் அது உண்மையாக இருக்கலாம்,நாமும் நம் ஆதாரங்களை தருகின்றோம்
மிசா கொண்டுவரபட்டது ஜூன் மாதம் 1975ம் ஆண்டு, அப்போதைய குடியரசு தலைவர் பக்ரூதின் அலி அகமது அதை அறிவித்தார்,

அவர் மோடிக்கு பன்னீர் செல்வம் போல இந்திராவுக்கு அடிமையாய் இருந்தார்

அந்த மிசா சட்டம் 1975, ஜூன்மாதம் அறிவிக்கபடுகின்றது, திமுக அதன் போக்கில் ஆட்சியில் இருக்கின்றது,
ஒரு எதிர்ப்புமில்லை

அட எதிர்ப்பு கூட பிரச்சினை இல்லை, அதைவிட அதிர்ச்சியான விஷயம் ஸ்டாலின் திருமணம் அடுத்த ஆகஸ்டு, அதாவது 20/08/1975 அன்று நடந்தது

அதன் சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? அதே குடியரசு தலைவர் பக்ரூதின் அலி அகமது

திமுக உண்மையிலே மிசாவினை எதிர்த்திருந்தால்
ஏன் இந்திராவின் பினாமியும்,நெருக்கடி நிலையினை அறிவித்த குடியரசு தலைவரை ஏன் அழைக்கின்றார்கள்?

இன்று டயர்நக்கி என பன்னீர்செல்வத்தை அழைக்கும் கோஷ்டி இது,அந்த பக்ரூதின் அலி டயர்நக்கிகளை விட மாபெரும் இந்திரா அடிமையாய் இருந்தார்

அடிமைகளை வணங்கும் கலாச்சாரம் எங்கே தொடங்கியிருக்கின்றது
பார்த்தீர்களா?

அரசியல் நாகரீகம் என்றாலும் இன்று மோடிக்கு கருப்புகொடி காட்டும் திமுக அன்று பக்ரூதின் அலி என்பவரை
தன் சொந்த வீட்டு விழாவுக்கு அழைத்திருக்க முடியுமா?

அதுவும் நெருக்கடி நிலை உச்சத்தில் இருக்கும் அழைப்பார்களா?

ஆக திமுக மிசாவினை எதிர்க்கவில்லை, அதன் போக்கில்
ஆட்சியில் இருந்து தன்னை காத்து கொண்டது, ஏதும் எதிர்த்தால் அன்றே திமுக அரசு டிஸ்மிஸ் செய்யபட்டிருக்கும்

திமுக ஆட்சி நீடித்ததிலே அவர்கள் மிசாவினை எதிர்க்கவில்லை என்பது தெரிகின்றது

அடுத்த வருடம் அவர்கள் ஆட்சி முடியும் நிலை வந்தது,அதாவது 1971ல் நடந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்றது,
5 ஆண்டுகள் முடிந்து 1976 வந்தது

அப்பொழுது திமுக அரசு காலாவதியாகி மறுதேர்தல் நடக்க வேண்டிய நேரம், அப்பொழுதுது காந்தியவாதி கிருபாளியினை மிசா கைது செய்தது

இது நாடுமுழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது, திமுக ஆட்சி முடிய சில வாரங்களே இருந்தன‌

விரைவில் மிசா விலக்கபடும் என்றும்
தேர்தல் வரலாம் என்றும் உணரபட்ட காலம் அது, கருணாநிதிக்கு ராமசந்திரன் காமராஜர் என இரு எதிரிகள் இருந்தனர்

அதுவரை மிசாவினை எதிர்க்காமல் இருந்த கருணாநிதி, தேர்தல் வரப்போவது அறிந்ததும் உஷாராகின்றார்,இரு எதிரிகளில் ஒரு எதிரியான காமராஜரிடம் "அய்யயகோ காந்தியவாதி கிருபாளினி கைது
செய்யபட்டார், இனி எனக்கு ஏன் ஆட்சி வாருங்கள் போராடுவோம்" என அழைத்தார்

ஆம் 1967ல் எந்த காமராஜரை ஓட அடித்தாரோ அவரிடமே சென்று தலையினை சொரிந்து கொண்டு நின்றார் கருணாநிதி

கருணாநிதியினை நன்கு அறிந்த காமராஜர் "நீங்க ஆட்சியின தொடருங்க, இதெல்லாம் நான் பார்த்துக்குறேன்" என
சொல்லிவிட்டார் பின் அவருக்கு நெருக்கமானவர்கள் அய்யா நீங்களும் கைது செய்யபடலாம் கருணாநிதி சொன்னதை கேட்டிருக்கலாமே என்றார்கள்

"அட அவங்க தேர்தலுக்கு நாடகம் போடுதாங்கண்ணேன்.. போன வருஷமே ஆட்சி இழந்தா எண்ணண்ணேன்?. ஜனதிபதி எல்லாம் கூப்பிட்டாங்களா இல்லியா

இப்போ நான் இவங்க பின்னாடி போனா
தமிழ்நாடு முழ்க்க பஸ்ஸ எரிச்சி ஆர்ப்பாட்டம் பண்ணி 100 பேரை கொல்லுவாண்ணேன், பழி என்மேல் விழுமுண்ணே, இவங்கள பத்தி எனக்கு தெரியாதாண்ணேன்.."

ஆம் அதில் உண்மை இருந்தது

அடுத்து காமராஜர் கைவிட்ட நிலையில் தானாக காலவதி ஆகவேண்டிய ஆட்சி கலைந்தது, அய்யகோ மிசா என் ஆட்சியினை
டிஸ்மிஸ் செய்துவிட்டது என ஒப்பாரி வைத்தார் கருணாநிதி

ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடு எதிர்கட்சியான பின் ஒரு நிலைப்பாடு எனும் இரட்டை நிலைப்பாட்டை அன்றே கொண்டிருந்த கருணாநிதி அதன் பின்பே மிசாவினை எதிர்ப்பதாக சொல்லிகொண்டார்
இந்நிலையில் முக ஸ்டாலினும் சில குற்றசாட்டு அல்லது பழிவாங்கலில் உள்ளே தள்ளபட "அய்யகோ மிசா தியாகி ஸ்டாலினை பாரீர்.." என மறுபடியும் தொடங்கினார்

ஸ்டாலின் மிசா கைதி என பாபநாசம் கமலஹாசன் போல கருணாநிதி உருவாக்கிய அந்த பிம்பம், மிக தந்திரமாக உருவாக்கபட்ட அந்த பிம்பமே
இன்று ஸ்டாலின் திமுக தலைவராய் இருக்க உதவிற்று

"தந்தை மகற்காற்றும் உதவி" என்ற குறளுக்கு கருணாநிதியின் விளக்கம் இதுதான்

ஆம், உண்மைகள் வரதொடங்கிவிட்டன , கருணாநிதி மிசாவினை எதிர்க்கவுமில்லை அவரின் அரசு மிசாவினால் டிஸ்மிஸ் செய்யபடவுமில்லை என்பது உறுதியாகின்றது
இது அன்றே தெரிந்துதான் அடுத்த தேர்தலில் ராமசந்திரனுக்கு தமிழ்நாடு வாக்களித்து அவரை அரசர் போல அமைத்திருந்தது

ஆக கருணாநிதி ஆடியதெல்லாம் நாடகம் என்பது அன்றே மக்களுக்கு புரிந்திருக்கின்றது, திமுகவினருக்குத்தான் இன்னமும் புரியவில்லை, புரிந்தாலும் சொல்லமாட்டார்கள்
ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யபட்டது உண்மை,ஆனால் இந்திராவினையோ மிசாவினையோ எதிர்த்து அவர் சிறை செல்லவில்லை வேறு ஏதோ காரணத்திற்காக சென்றார் என்பதும் உண்மை

அந்த ஏதோ ஒரு காரணத்தை மறைக்க திமுகவினர் ஆயிரம் நாடகமாடினாலும் இனி ஒருநேரம் அது வெளிபட்டு தீரும்

பாவம் திமுகவினர்
ஒரு காலத்தில் திராவிட நாட்டுக்காக போராடினர்,பின் தமிழுக்காய் போராடினர்,ஈழத்துக்கும் கொஞ்சகாலம் போராடினர்,மாநில சுயாட்சி,இந்துத்வ ஒழிப்பு என எதற்கெல்லாமோ போராடினர்

இப்பொழுது முக ஸ்டாலினின் பிம்பத்தை காக்க,சிறைக்கு அவர் சென்ற காரணத்தை மறைக்க மகா கடுமையாக போராடுகின்றனர் பரிதாபம்..
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Wolfrik

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!