, 32 tweets, 4 min read
My Authors
Read all threads
#ஆகமம்
#சைவம்

சில காலமாகச் சிலர் இவ்வாறெல்லாம் சொல்லி வருகிறார்கள்:

"சைவம் வேறு, சனாதன தர்மம் வேறு.

வேதத்துக்கும் சைவத்துக்கும் தொடர்பு இல்லை.

குடமுழுக்கு தமிழில் தான் நடத்தப்பட வேண்டும்.

சமஸ்கிருதம் எதற்கு?"

இவற்றில் உண்மையோ சைவம் சம்பந்தப் பட்ட விஷய அறிவோ இல்லை.+
முதலில் - சைவம், வை(ஷ்)ணவம், சாக்தம், கௌமாரம் முதலிய பெயர்கள் சமஸ்கிருதம் தான்.

சரி, தமிழ்ச் சைவ முதல்வர்கள் யார்? சைவ சமயக் குரவர்கள் நால்வர். அவர்கள் பாடல்களில் மேலோட்டமான பரிச்சயம் இருந்தாலும் மேற்கண்ட கூற்றுகள் தவிடுபொடி ஆகிவிடும்.+
திருஞானசம்பந்தர் தேவாரம் எங்கணும் வேதம், வேள்விகள், அந்தணர் சிறப்புகள் விரவியுள்ளன.

எ.கா:

"அருநெறிய மறைவல்ல முனி" (அதாவது, சிவபெருமான் அரிய வேதங்களில் வல்லவர்)

"வேதத்தில் உள்ளது நீறு"

"வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதமில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே"+
"சாமநல் வேதன்"

"சாமவேதம் ஓதினீர்" (சாம வேதம்)

"சதுரம் மறைதான் முறை செய்து வணங்கும்.." (நான்கு வேதங்களும் வணங்கும்..)
"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக"

அதாவது,
வேதம் ஓதி ஹோமம் செய்யும் அந்தணர், ஹோமப் பொருட்கள் தரும் பசுக்கள் - இவர்கள் தங்கள் கடமையைச் செய்தால் குளிர்ச்சி தரும் மழை பொழியும்; அரசும் மக்களும் தழைப்பர்.

"தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழற் சேர" !!!!!
அப்பர் (திருநாவுக்கரசர்) தேவாரம் முழுவதும் வேதச் சிறப்புகள். இறைவன் வேத வடிவினன்; வேத நாவன் என்று நூற்றுக்கணக்கான குறிப்புகள்.

"சொற்றுணை வேதியன்"

"நான்மறையோடு ஆறு அங்கமானாய்"

"வேதியனை, வேதத்தின் கீதம் பாடும் பண்ணவனை"

"வேதியன் காண், வெண்புரிநூல் மார்பினன் காண்"+
"இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும்" (இருக்கு=ரிக் வேதம்)

"வானவர் இருக்கொடும் பணிந்தேத்துவர்" (ரிக் வேதம்)

"சாமத்தின் இசை வீணை தடவிக் கொண்டார்" (சாம வேதம்)

"சாம வேதர்" (சிவபெருமான்)

"சங்கரனை, சாமம் ஓதும் வாயானை"

"அரியானை அந்தணர்தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை"+
சுந்தரர் தேவாரத்திலும் பலப்பல குறிப்புகள்:

"இருக்கு வாய் அந்தணர்கள் .. வேள்வியிருந்து" (இருக்கு=ரிக் வேதம்)

"சாம வேதம் பெரிது உகப்பானை"

"சாம வேதனை"

"மறை நான்கும் கல் ஆல் நிழற் கீழ்ப் பன்னிய எங்கள் பிரான்"

"அந்தணர் ஓமப்புகையால்.."+
மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகம்:

"நமசிவாய வாழ்க" (வேதத்தின் நட்டநடு வாசகம் திரு ஐந்தெழுத்து. அதில் தான் திருவாசகம் ஆரம்பம்.)

"ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க" !! (ஆகமமே இறைவன் தான்)

"மூவா, நான்மறை முதல்வா போற்றி"

"ஆய் நான்மறையவனும் நீயேயாதல் அறிந்து"+
மாணிக்கவாசகர் இயற்றிய திருப்பள்ளியெழுச்சி:

"இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்" (இருக்கு = ரிக் வேதம்)+
இவ்வாறு, சைவ சமயக் குரவர்கள் நால்வரின் பாடல்கள் முழுமையும் - வேதம் பற்றிய குறிப்புகள், வேதக் கருத்துகள், அந்தணர் மற்றும் ஹோமங்களின் சிறப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன.

இது ஏதும் அறியாமல் "63 நாயன்மார்களும் வேதத்தைப் போற்றவில்லை" என்பது அறியாமை.+
63 நாயன்மார்களில் ஒருவரான உருத்திர பசுபதி நாயனார் ஸ்ரீ ருத்ரம் ஓதியே சிவபெருமானை அடைந்தார் என்று பெரிய புராணம் போற்றுகிறது.

அதாவது, நாயன்மார்களில் ஒருவர் கூட வேதத்தை, சமஸ்கிருதத்தைத் தூற்றவில்லை; மாறாகப் போற்றியே உள்ளனர்.+
தமிழ் பக்தி இலக்கியம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது மேற்கண்ட விஷயங்களில் இருந்து கண்கூடு.

அடுத்து, ஆகமங்கள் பற்றி.

"ஆலய அர்ச்சனைக்கு ஆகமங்களே அடிப்படை" என்ற நூலில் இருந்து சில தகவல்கள். (ஆசிரியர்: கே. சி. லட்சுமிநாராயணன். எல் கே எம் பப்ளிகேஷன்.)+
"ஆகமம்" = இறைவனிடம் இருந்து வந்தது என்று பொருள். இறைவனிடம் இருந்து வேதம் தோன்றிய போது, அதனுடன் வந்தது ஆகமம்.

அதில், சிவாகமங்கள் 28.

இவற்றில் என்ன உள்ளன?+
ஆலய அமைப்பு
தெய்வப் பிரதிஷ்டை
தினசரி பூஜைகள்
அர்ச்சனை முறை
அபிஷேகத் திரவியங்கள்
அர்ச்சனைக்கு உகந்த பூக்கள்
மாத பூஜைகள்
யாகசாலை அமைப்பு
உற்சவங்கள்
கும்பாபிஷேகம்

..

என்று, திருக்கோவில் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும்.
"வேதம் பெரிய ஆறு. சைவம் அதன் ஒரு துறை. வேதத்தின் சாரம் ஆகமங்கள். கோவில் அமைப்பு, வழிபாட்டு முறை, தத்துவ நுட்பங்கள் முதலியவற்றை ஆகமங்கள் விளக்குகின்றன."
- தருமை ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.+
திருமந்திரம் ஆகமப் பொருளே ஆன நூல். அதிலிருந்து சில குறிப்புகள்:

"அரனடி நாடொறுஞ் சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேன்"

"அஞ்சொடு இருபத்து மூன்றும் ஆகமம்" (அதாவது, 28)

"பாடி எழுகின்ற வேத ஆகமங்களும் நாடியின் உள்ளாக நான் கண்டவாறே"

+
"ஐம் தெழுத்தே அனைத்து ஆகமங்களும்" (ஓம் நமசிவாய தான் ஆகமங்கள் ஆனது)

"ஐம்பதெழுத்தே அனைத்து ஆகமங்களும்" (வடமொழியின் 50 எழுத்துகளே ஆகமங்கள் ஆயின)+
சுந்தரர் தேவாரம்:
"அரவொலி ஆகமங்கள், அறிவார் அறி தோத்திரங்கள்"

மாணிக்கவாசகர் திருவாசகம்:
"ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க"+
பெரியபுராணம்:
"நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரியப் பொங்குகிறது என் ஆசை" என்று இறைவி, இறைவரிடம் சொல்கிறார். அதாவது,
1) ஆகமங்களை அருளியவர் இறைவன்.
2) அதன்படி அவரை அர்ச்சனை செய்ய வேண்டும்.

"பூசனைக்கு நிபந்தம் ஆராய்ந்தான் துங்க ஆகமம் சொன்ன முறையால்"+
மனுநீதிச் சோழன், பூஜை செய்ய ஆகம முறைப்படி நிவந்தங்கள் ஏற்படுத்தினான் என்று பொருள்.

இது போலவே, சைவ சித்தாந்தத்தின் மெய்கண்ட சாத்திரங்கள் ஆகமங்களின் பொருளையும் சிறப்பையும் விளக்கி அமைபவை.+
திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் அருளிய திருக்களிற்றுப்படியார் சாத்திர நூல் பாடல்:
"ஆகமங்கள் சொன்ன அவர் தம்மை"

திருத்துறையூர் அருள்நந்தி சிவாசாரியார் இயற்றிய "சிவஞான சித்தியார்" நூல்:

"சுத்தவடிவு இயல்பாக உடைய சோதி சொல்லிய ஆகமங்கள்"

"படிக்கும் நூல் சிவாகமம்"+
"அருமறை, ஆகமம் *முதல்* நூல்
(ஸ்)மிருதி, புராணம், கலைகள்.. மெய்நூலின் வழிபுடையாம்"

அதாவது - வேத, ஆகமங்கள் முதலில் தோன்றின. கலைகள், புராணங்கள் அந்த "உண்மை நூல்களில்" இருந்து தோன்றின.

"உண்மை விளக்கம்" நூலில்:

"அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும்"+
உமாபதி சிவாசாரியார் அருளிய "நெஞ்சுவிடு தூது":

"சுருதிபயில் செம்மைதரும் ஆகமங்கள்" (சுருதி = வேதம்)

சரி, உமாபதி சிவாசாரியார் "கொடிக்கவி" அருளினாரே. அது, சிதம்பரம் கோவிலில் *ஆகம முறைப்படியான* கொடியேற்ற நிகழ்வின் போது தானே.
அருணகிரிநாதர் திருப்புகழில்:
"சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் மறை ஓதும் அன்பர் திருவடிகளே"

"நாலாரும் ஆகமத்தின் நூலாய ஞானமுத்தி"

கந்தரநுபூதியில்:
"வேதாகம ஞான விநோத (முருகா)"+
கோவை பேரூர் திருமடம் ஸ்தாபித்த தவத்திரு சாந்தலிங்க அடிகளார் இயற்றிய "வைராக்கிய தீபம்" நூலில்:

"வேத ஆகமம் அவன் எனக்கண்டுரைத்த"

அவரது "கொலை மறுத்தல்" நூலில் இருந்து:

"அருமறை ஆகமநெறி சொற்பொருள் அமைத்து.." +
தாயுமானவ சுவாமிகள் பாடல்:

"வேத ஆகமத் துணிபு இரண்டில்லை ஒன்று"

"தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலும்"+
இப்படி, சைவ சித்தாந்தத்தின் அத்தனை நூல்களிலும் வேதமும் ஆகமமும் மிகமிகச் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளன. +
பத்மஸ்ரீ சில்பகலாமணி முத்தையா ஸ்தபதி சொல்வது:

"சிற்பங்களைச் சிற்ப சாஸ்திரத்தைப் பார்த்துத் தான் செய்ய வேண்டும் என்று ஆகமநூல் சொல்கிறது.

சிவாகமங்களின் படியும் சிற்பசாஸ்திரங்கள் படியும் மட்டுமே கோவில்களை எழுப்ப வேண்டும்."+
இவ்வாறு, சைவ சமயப் பெரியோர் அத்தனை பேரும் வேத, ஆகமங்களின் பெருமையைப் போற்றுகின்றனர்; அம்முறையில் வழங்கும் கோவில்கள் அப்படியே தொடரவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

சைவம் வேறு, ஹிந்து மதம் வேறு என்ற வாதத்தில் எவ்வளவு அறியாமை/பொய் என அறியமுடிகிறது அல்லவா?+
மாமன்னர் ராஜராஜன் எம்முறையில் எடுப்பித்தாரோ, அம்முறையிலேயே அக்கோவில் தொடரவேண்டும் என்பதன் முக்கியத்துவம் தெரிகிறது அல்லவா?

அவர் கைக்கொண்ட முறையில் சமஸ்கிருத மொழியில் யாகம், கலசாபிஷேகம்; தமிழ் வேத தேவார இன்னிசை - இது தானே சரியாக இருக்க முடியும்?! இது தான் நடக்கிறது.+
சைவக் குரவர்கள், சந்தானக்குரவர்கள் என்று அத்தனை பேரும் காட்டிய வழி இது.

அவர்கள் வழியில் நடப்பதே சைவநெறி.
🙏🙏
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Sriram

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!