My Authors
Read all threads
வீர சிவாஜி படம் ரஜினி வீட்டில்
பொங்கும் போராளிஸ்களுக்காக இந்த பதிவு:-

வீர சிவாஜி எவ்வளவு பெரிய வீரன்
என்பதை நாடே அறியும்
காபூலில் இருந்து காந்தஹார் வரை தைமூர் குடும்பம் மொகலாய சுல்தான்களின் ஆட்சி தான்,
ஈராக், ஈரான், துருக்கி போன்ற பல நாடுகளை என் படைகள் வென்று வந்துள்ளன.
ஆனால், இந்தியாவில் தான் சிவாஜி எனக்கு பெரும் தடையாக இருந்து விட்டார். என் சக்தி முழுதையும் செலவிட்டும், அவரை வெற்றி கொள்ள முடியவில்லை.

அல்லாவே!

எனக்கு பயமில்லாத, துணிச்சலான ஓர் எதிரியைக் கொடுத்து விட்டாய். இவ்வுலகின் அஞ்சா நெஞ்சன் உன்னிடம் வருகிறான்.
அவனுக்கு உன் சொர்க்கத்தின் வாசலைத் திறந்து வைத்திரு என்று சிவாஜியின் மறைவை ஒட்டி நடந்த நமாஸ் பிரார்த்தனையில் மொகலாயச் சக்கரவர்த்தி ஔரங்கஸீப் படித்துள்ளார்.

சிவாஜி என் விரல்களை மட்டும் நறுக்கி எறிய வில்லை என் கர்வத்தையும் கூடவே நறுக்கி எறிந்து விட்டார்.
என் கனவில் கூட சிவாஜியைக் காண நான் பயப்படுகிறேன் என்று அபு தாலிபன் அரசனான ஷயிஸ்டகான் கூறியிருக்கிறார்,

என் ராஜ்யத்தில், சிவாஜியைத் தோற்கடிக்க ஓர் ஆள் கூடவா இல்லை?

என்று உள்ளக் குமுறலுடன் கேட்டார் பீஜப்பூர் சுல்தான் அலி அதில் ஷாவின் பேகம்.
நேதாஜியிடம் ஹிட்லர் உங்கள் தேசத்திலிருந்து ஆங்கிலேயர்களை விரட்ட சிவாஜியின் சரித்திரத்தை போதித்தாலேயே போதும் என்று சொன்னார்.

சிவாஜி இன்னும் உயிரோடிருந்திருந்தால், நாங்கள் இந்தியாவைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது என்று ஒரு பிரிட்டிஷ் கவர்னர் சொல்லியிருக்கிறார்.
சிவாஜி மாதிரி சண்டையிட்டால் நாம் எளிதாக சுதந்திரத்தைப் பெற்று விடலாம் என நேதாஜி புகழ்ந்திருக்கிறார்.

சிவாஜி என்பது ஒரு பெயர் மட்டுமல்ல இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சக்தி
இதனைக் கொண்டு நாட்டு விடுதலையை அடைய முடியும் என சுவாமி விவேகாநந்தர் சொல்லியிருக்கிறார்.
சிவாஜி அமெரிக்காவில் பிறந்திருந்தால், அவரை சூரியன் என்றே போற்றியிருப்போம் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா புகழ்ந்துள்ளார்.

சிவாஜியின் அம்பர்கண்ட் யுத்தம் கின்னஸ் பத்தகத்தில் பதிவாகி உள்ளது.
30000 உஸ்பெக் வீரர் படையை, 1000 பேர் கொண்ட சிவாஜியின் படை நிர்மூலமாக்கியது .
அது மட்டுமல்லாமல் எதிரிப் படையில் ஒரு வீரர் கூட திரும்பிப் போக விடாமல் அழித்தது. இது தான் உலக சாதனை:-

சிவாஜி, தன் 30 ஆண்டு காலத்தில், இரண்டு தடவை தான் நம் நாட்டு எதிரிகளுடன் மோதியுள்ளார்.

பிற யுத்தங்கள் யாவும், அயல் நாட்டுப் படைகளுக்கு எதிராகத் தான்.
சிவாஜி மோதியதெல்லாம் கொடூரத் தாக்குதலுக்குப் பெயர் பெற்ற பதான்,துருக்கி, ஆஃப்கானிஸ்தான்,மங்கோலியா படைகளுக்கு எதிராகத் தான்.

இவற்றில் ஒன்றில் கூட சிவாஜி தோல்வியே கண்டதில்லை.

ஈரான், சிவாஜியை முறியடிக்க கடற்படையை அனுப்ப முடிவு செய்த போது, சிவாஜி முதல் கப்பற்படையை ஏற்படுத்தினார்.
ஆனால் அது முழு அளவில் உருவாக்கப் படுவதற்கு முன் சிவாஜி தன் 50-வது வயதில் மரணமடைந்தார்.
Boston Universtity மேலாண்மைக்கு குரு சிவாஜி என்று ஒரு பாடம் இன்றும் போதிக்கப் பட்டு வருகிறது.
இந்தியாவில் தான் சிவாஜி போன்ற மாவீரர்களைப் பற்றியெல்லாம் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை.
தாயை மதிப்பவர்களைக் கொண்டே அவர்களின் குணாதிசயங்களைச் சொல்லிவிடலாம்.

தாயை மதித்துப் போற்றுபவர்கள் தனக்கு வந்திருக்கும் மனைவியையும் அவ்விதமே நேசிப்பார்.

அம்மாவையும் மனைவியையும் நேசித்துக் காப்பவர் தேசத்தின் மீதும் மக்களின் மீதும் மிகுந்த பிரியமும் வாஞ்சையும் கொண்டிருப்பார்.
தன் அன்னை சொல்வதே வேதவாக்கு என வாழ்ந்து தன் மொத்த ராஜ்ஜியத்தையும் அரவணைத்து வளர்த்த சத்ரபதி சிவாஜி வீர சிவாஜி என்றும் போற்றப்பட்டவர்,

தன் அம்மா சொன்னால் எதுவாயினும் செய்வார்.

தன் அம்மா சொல்லுவது அனைத்துமே நம்முடைய நம் தேசத்தினுடைய நன்மைக்கே என்று உறுதியாக இருந்தார்.
அம்மாவை உயிராக மதித்து வாழ்ந்த வீர சிவாஜி காளிதேவியே சகலமும் என பூஜித்து வந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அங்கே காளி கோயில்கள் நிறையவே உண்டு அந்தக் கோயில்களுக்கு ஆபரணங்கள் அளித்து திருப்பணிகள் செய்து எல்லாக் காலமும் காளிதேவியை ஆராதித்து சிறப்பு பூஜைகளும் செய்து வந்தார்.
அன்னையிடம் மதிப்பு, மனைவியிடம் பேரன்பு, நாட்டுமக்கள் மீது கருணை, கடவுளின் மீது பக்தி என வாழ்ந்து வந்த வீரசிவாஜிக்கு தொட்டதெல்லாம் பொன்னானது.

எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைத்தது.
தன் வீரத்தாலும் சாதுர்யத்தாலும் படை பலத்தாலும் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே இருந்தாலும்,
எல்லாம் காளிதேவியின் கருணை என்றே சொல்லிவந்தார் காளிதேவியின் தீவிர பக்தராகவே இருந்தார் சிவாஜி,

ஒரு தேசத்தின் மீது படையெடுக்கக் கிளம்பும் போது காளிதேவிக்குப் படையலிட்டு ஆயுதங்களை அவள் காலடியில் வைத்துவிட்டு ஆயுதங்களுக்கும் பூஜைகள் போட்ட பிறகுதான் போருக்குக் கிளம்புவார் வீரசிவாஜி.
வீர சிவாஜிக்கு மட்டும் அல்ல இன்னொரு சிவாஜிக்கும் காளிகாம்பாள் அருள்மழை பொழிந்திருக்கிறாள்.

அவர் சிவாஜிராவ் கெய்க்வாட்.

ஆமாம் உச்சநட்சத்திரமாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காளிகாம்பாளின் தீவிர பக்தர்.

சிவாஜி சரி அது என்ன கெய்க்வாட் என்று நீங்கள் கேட்பது புரிகிறது ?
வீர சிவாஜியும் நடிகர் ரஜினி காந்தும்: வியப்பளிக்கும் வரலாற்றுத் தொடர்பு!

மராட்டிய மாநிலத்தைப் பூர்வீக பூமியாகக் கொண்ட தலைவர், மராட்டியர்களின் அடையாளமான வீர சிவாஜியின் படத்தை தனது வீட்டில் வைத்துள்ளார்.

இதுமட்டுமே அவருக்கும் வீர சிவாஜிக்குமான தொடர்பு அல்ல,
கெய்க்வாட் எனும் பெயரில் ஏராளமான மக்கள் இருக்கின்றனர்.
மகர் சமூகத்தவர்கள் – ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.

மகர் சமூகத்தை சேர்ந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர்.
அவர்களில் – தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர் அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்,

சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) – போன்றவர்கள் முதன்மையானவர்கள்.
பேரரசர் வீர சிவாஜியின் மரணத்துக்கு பின் அவரது மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் ஆட்சிக்கு வந்தார்.

இவர் 1689-ல் முகலாய மன்னரால் சங்கமேஷ்வர் எனும் ஊரில் சிறை பிடிக்கப்பட்டார். கொடூரமான முறையில் சித்தரவதை செய்து – பின்னர் தலையை வெட்டி கொலைசெய்தார்.
உடலை அடக்கம் செய்யக் கூட அனைவரும் பயந்தனர் துலாப்பூர் அருகில் உள்ள வாது கிராமத்தின் கெய்க்வாட் பிரிவினர்தான் முகலாயர்களுக்கு பயப்படாமல் துணிச்சலாக இறுதி சடங்குகளை செய்தனர்.

அந்த ஊரினை சேர்ந்த கோவிந்த் கோபால் கெய்க்வாட் எனும் விவசாயி சாம்பாஜியின் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார்.
வாது கிராமத்தில் அமைக்கப்பட்ட சத்ரபதி சாம்பாஜி நினைவுச் சின்னத்தில் இறுதி சடங்குகளை செய்தவர் கோவிந்த் கோபால் கெய்க்வாட் என்பது முதலில் குறிக்கப்பட்டிருந்தது

ஆனால், பின்னர் அதனை அழித்து விட்டனர். இந்த வரலாற்று இருட்டடிப்புக்கு எதிராக மராட்டிய அமைப்பினர் குரல்கொடுத்து வருகின்றனர்.
சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னத்தில் மீண்டும் கோவிந்த் கோபால் கெய்க்வாட் பெயர் இடம்பெற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

வீர சிவாஜிக்கும் சிவாஜிராவ் கெய்க்வாட்’ எனும் இயற்பெயர் கொண்ட தலைவருக்கும் இப்படியும் ஒரு பூர்வீக பிணைப்பு இருக்கிறது,
ஒரு படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, சத்தமே இல்லாமல், யாரோ ஒருவர் மாதிரி, இமயமலைக்குச் சென்று சுற்றுவார். அதேபோல், காளிகாம்பாள் கோயிலுக்கு பல முறை சத்தமின்றி வந்து, தரிசனம் செய்வது தலைவரின் வழக்கம்!

ஸ்ரீராகவேந்திரர் மீது கொண்ட பக்தியால், ராகவேந்திரர் என்ற படத்தில் நடித்தார்.
மகா அவதார் பாபாஜி மீது கொண்ட பக்தியால் பாபா என்று படமே எடுத்தார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் சக்தி கொடு என்று பாடுவார்

நம் நடைகண்டு அகங்காரம் தூளாக வேண்டும்

நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்

சக்தி கொடு சக்தி கொடு

தாயும் நீயே தந்தையும் நீயே

உயிரும் நீயே உண்மையும் நீயே!
என்று சென்னை கிண்டியில் உள்ள கேம்பகோலா வளாகத்தில், காளிகாம்பாள் கோயில் அப்படியே செட் போடப்பட்டு, ஷூட்டிங் நடத்தப்பட்டது. முன்னதாக கோயிலுக்குச் சென்று காளிகாம்பாளை வழிபட்ட தலைவர் பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சிவாச்சாயரை வரவழைத்து, ஆசியும் பெற்றுக் கொண்டார்.
தலைவர் முக்கியமான தருணங்களிலெல்லாம் காளிகாம்பாள் கோயிலுக்கு வருவார் காளிகாம்பாளின் அருளை வாங்கிக் கொண்டுதான் செயலில் இறங்குவார்.

இப்போதைய சூழலில் தலைவர்
எப்போது வேண்டுமானாலும் காளிகாம்பாள் கோயிலுக்கு வருவார் என்கிறார்கள், கோயிலைச் சுற்றியுள்ள அன்பர்கள்!
சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில்.

தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது.
இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர்.

இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள் சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
சோழ தேசத்தை சரபோஜிகள் ஆட்சி செய்தார்கள். அந்தப் பக்கம் சோழ தேசமும் இந்தப் பக்கம் செஞ்சி வரையிலுமாக அவர்களின் ஆட்சி நீண்டிருந்தது,

வடக்கே,மகாரஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளையும் அக்கம்பக்க நாடுகளையும் ஆண்டு வந்த சிவாஜி தெற்கே தமிழகத்திற்கும் படையெடுத்து வந்திருக்கிறார் என்கிறது வரலாறு.
1677இல் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தார் சிவாஜி. அப்போது சென்னையின் ஆளுநராக இருந்தவர் Streynsham Master.

இவர் ஏற்கனவே சிவாஜியின் வீரத்தைப் பார்த்திருக்கிறார். 1670இல் சிவாஜி சூரத் நகரில் கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையைத் தாக்கியபோது அதனை எதிர்கொண்டவர் இதே Streynsham Master.
தனது தென்னகப் படையெடுப்பால் வேலூர்,செஞ்சி,ஆற்காடு ஆகியப் பகுதிகளை கைப்பற்றிய சிவாஜியின் அடுத்த குறி சென்னைதான் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

இதனால் மெட்ராஸ்வாசிகள் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். 1677, மே 14ஆம் தேதி சிவாஜியின் தூதர் ஒருவர் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார்.
சிவாஜி விலை உயர்ந்த கற்களையும், விஷமுறிவு மருந்துகளையும் கேட்பதாகவும், அதற்குரிய பணத்தை அளித்து விடுவதாகவும் தூதர் தெரிவித்தார்.

ஆனால் ஆங்கிலேயர்கள் எதையும் பெறாமல் பொருட்களை அனுப்பி வைத்தனர். சிவாஜி சென்னையைத் தாக்காமல் இருக்க என்ன விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர்.
சில நாட்கள் கழித்து மீண்டும் சில கோரிக்கைகளோடு திரும்பி வந்தார் தூதர்.

இம்முறை வாங்கும் பொருட்களுக்கு உரிய விலையை கண்டிப்பாக கொடுக்கும்படி சிவாஜி வலியுறுத்தியதாக கூறினார். ஆனால் இரண்டாம் முறையும் விலையில்லா பொருட்களே அவருக்கு வழங்கப்பட்டன. மூன்றாவது முறையாக மீண்டும் வந்த தூதர்
இம்முறை சில ஆங்கிலேய பொறியாளர்களை சிவாஜி அழைத்து வரச் சொன்னதாகத் தெரிவித்தார் ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாதென மிகவும் பணிவாக மறுத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள்.

இதனால் ஆத்திரமுற்று சிவாஜி சென்னை மீது படையெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை
இதனிடையே சில அரசியல் மாற்றங்கள் காரணமாக சிவாஜி மீண்டும் தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டி இருந்தது

ஆனால் காளியின் பக்தரான சிவாஜி, அக்டோபர் 3, 1677இல் தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
காளிகாம்பாளை மனமுருகி தரிசித்துப் பிரார்த்தனை செய்திருக்கிறார் என்கிறது ஸ்தல வரலாறு. காளிகாம்பாள் சந்நிதியில் நீண்ட நேரம் கண்மூடி அவளுடன் பேசிக்கொண்டிருந்தார். காளிதேவியின் பக்தரான அவர், இந்தக் காளி, உக்கிரமாக இல்லாமல், கருணையுடன் இருக்கிறாளே என்று சொல்லி வியந்து தரிசித்தாராம்!
காளிகாம்பாளின் பூரண ஆசி பெற்ற ஒரு சிவாஜியால் சென்னை கோட்டையை சந்தர்ப்ப சூழ்நிலையால் கைப்பற்ற முடியாமல் போனது ஆனால் சென்னை கோட்டையை எங்கள் சிவாஜி ராவ் கைப்பற்றவே சத்ரபதி சிவாஜி சென்னை மீது படையெடுக்காமல் விட்டுகுடுத்துள்ளார் இது காளிகாம்பாளின் கட்டளை,
வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் சிவாஜி ராவ் சென்னை கோட்டையை கைப்பற்றி மக்களுக்கு காளிகாம்பாள் ஆசியுடன் நல்லாட்சி புரிவார் மக்களும் சுபட்சியாக வாழ்வார்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை 2021இல் வெற்றியும் நமதே! கோட்டையும் நமதே! ஆட்சியையும் நமதே!
#SSR
#சூப்பர்ஸ்டார்_வெறியன்_SSR
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with SSR

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!