My Authors
Read all threads
🌺இன்றைய யதார்த்தத் துளி...🌺

🌻கையிலிருக்கும் வரை காசருமை தெரியாது.... என்ற பழமொழியை ஒட்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்...🌻

வெளிநாட்டு நண்பர் ஒருவர் வாட்ஸ்அப் பில் அனுப்பிய பதிவு இது. கொரோனா கொடுத்த படிப்பினை... என எழுதியிருந்தார். அதைப் பற்றிய நம் நிலயென்ன பார்ப்போம்...
எதை எதை எல்லாம் இந்திய முன்னோர்கள் வாழ்க்கை நெறிமுறை எனப் பின்பற்றி வாழ்ந்தார்களோ, அவற்றை எல்லாம் மூடநம்பிக்கை என்று ஆங்கிலேயர் நம்ப வைத்தனர். அது எல்லாம் தப்பு என்று நம் மக்களும் கோஷம் இட்டனர்/இடுகின்றனர்.

ஆனால் விதி என்பது வேறு.
எதையெல்லாம் எதிர்த்ததோ இவ்வுலகம், அதையெல்லாம் தான் இன்று தேடி ஓடுகிறது. அதுதான் ஸநாதன தர்மம். இது ஓர் மதமல்ல. மனித வாழ்வியல் நெறி.

நம் சமயத்தின் வழிபாட்டு முறைகளை மூட நம்பிக்கை எனக் கூறிய பகுத்தறிவு வாதிகள், இதையே மேலை நாட்டினர் இன்று விஞ்ஞானம் என்றதும் பல் இளிக்கின்றனர்.
மனிதர்களைத் தொற்ற ஆரம்பித்ததும், அதிரடியாக சீனாவைத் தொடர்ந்து ஐரோப்பாவில், அதுவும் குறிப்பாக இத்தாலியில் பலியெடுக்கின்றது கொரோனா.

கொரோனாவால் அதிக உயிர்கள் பலியானது சீனாவில். இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் ஈரானும், நான்காம் இடத்தில் தென் கொரியாவும் உள்ளன.
இவற்றின் தொடர்ச்சியாக பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மன் ஆகிய நாடுகளில் கொரோனா பரவிக் கொண்டிருக்கின்றது.

பல சமய வழிபாட்டு முறை கூட்டு வழிபாடாகவே உள்ளது. மொத்தமாக கூடித்தான் பிரார்த்திப்பார்கள். இது கொஞ்சம் அதிகமாக நேரம் எடுக்கும் விஷயம் என்பதால், நோய் பரவ வாய்ப்பு உள்ளது.
என அத்தகைய வழிபாட்டுத் தல அதிகாரிகள் முடிவெடுத்து, பாதுகாப்பின் காரணமாக அவற்றை மூடி விட்டார்கள்.

இந்நிலையில் இந்துக்களின் கோவில்களும் பக்தர்கள் வர சிறிது காலம் தடை விதித்துள்ளது. ஆனால் கர்பக் கிருஹங்கள் மூடப்படவில்லை. நித்ய பூஜைகள், திருமஞ்சனம், நைவேத்யம் எல்லாம் தொடர்கின்றன.
கோவில் தேரோட்டங்கள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. ஆனால் அதற்குப் பதிலாக, தேரில் இருந்து பகவான் தரிசனம் தர ஏற்பாடு ஆகியுள்ளது.

தற்போது கோவிலையும் இழுத்து மூடியே ஆக வேண்டும் என்று சில கும்பல் கிளம்பியுள்ளது. இது தேவையற்றது என்பதை நாம் எடுத்துக் கூறலாம். ஏற்பது அவரவர் உரிமை.
முதலில் ஆலய பிரவேசத்தையும், உண்மையான வழிபாட்டு முறைகளையும் கவனிப்போம். ஆச்சரியமான பல விஷயங்கள் புலப்படும்.

இந்துக்களில் கூட்டு வழிபாடு என்பது பெரும்பாலும் இல்லை. யாரும் எப்பொழுதும் வரலாம். வழிபடலாம். கோவில்களில் விசேஷமான ஆறுகால பூஜைகள் தரிசிப்பது கூட கட்டாயம் இல்லை.
அங்கே நடக்கும் திருமஞ்சன, தீபாராதனைகளும் எப்போதும் போல் ஆறுகாலம் நடக்கும். நாம் விருப்பப் பட்டால் அந்நேரம் கோவிலில் இருக்கலாம். அவ்வளவே...

🙏இந்து ஆலயங்களில் ஆலயம் நுழைவாயில் தாண்டியதும், முதலில் சம்பிரதாய முறைப்படி, அங்கிருக்கும் குளத்தில் கை, கால் கழுவி,
சிறிது நீரை உள்ளங்கையில் அள்ளி உச்சதலையில் வைத்து, குளிரச் செய்துவிட்டு தான் உள்ளே செல்ல வேண்டும். இதனால் நோய் பரவும் முதல் வழி தடுக்கப் படுகின்றது.

🙏 கோவிலுக்குச் செல்கையில் பருத்தி அல்லது பட்டு ஆடைகள் மட்டுமே உடுத்த வேண்டும். இவை அண்டவெளியின் நேர்மறைக் கதிர்களின் ஆற்றலை
உள்ளிழுத்து நம் உடலில் தக்க வைக்கும் தன்மையை உடையவை. இவை நம் உடலுக்கு நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதால் நோய் தொற்று வருவது தடைபடும். இது இரண்டாம் வழி. இதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுள்ளது.

🙏 ஆலயத்தில் சுவாமிக்கு நெய் தீபத்தால் தீபாராதனையைக் காட்டும் போது,
கர்பக் கிருஹத்தில் உள்ள அண்டஆற்றல் வெளியில் பக்தர்கள் மேல் பரவும். அந்த தீபத்தில் கையினை வைத்து, அதனைக் கண்களில் ஒற்றும் பொழுது, அந்த பசுநெய் தீபத்தில் வரும் சூடுபட்டு கையில் கிருமிகள் இருந்தால் அழிந்து விடும்.

கற்பூரம் ஏற்றிக் கண்ணில் ஒற்றுவதன் உண்மைத் தத்துவம் இதுதான்.
கையினால் முகத்தை தொடாதீர்கள், கண்ணை மூக்கை தொடாதீர்கள். அடிக்கடி கழுவுங்கள் என இப்போது உலகம் சொல்கிறது.

தீபச் சுடரில் கைகளைக் காட்டிச் சூடேற்று. அதை முகத்துக்கும் கொடு, நோய் பரவாது என என்றோ சொன்னவர் நம் முன்னோர்.
🙏 கர்ப்பக் கிருஹத்தின் முன் வழிபாடு முடிந்ததும், சைவத் தலங்களில் கொடுக்கும் விபூதியினை நெற்றியில் பூசினால், நோய்க் கிருமிகள் முகத்தில் அண்டாது.

காரணம், முன்பெல்லாம் விபூதி சுத்த பசுஞ்சாணத்தால் மட்டுமே தயார் செய்யப்பட்டது. சாம்பல் நிறத்தில் கொரகொரவென இருக்கும். அது கிருமிநாசினி.
அது நெற்றியில் உள்ள நீரையும் இழுக்கும். மண்டைநீர் சேராது, சளி பிடிக்காது. நீர்த் தும்மல் வராது. தற்போதைய திருநீறு இப்படி இல்லை.

🙏 வைணவத் திருத்தலங்களில் மஞ்சள் காப்பு வழங்கப் படும். அதை நடுநெற்றியில் வைத்துவிட்டு, சிறிது எடுத்து நெற்றியின் உச்சியில் வைப்பார்கள்.
மீதமுள்ள மஞ்சளை ஆண்கள் பருத்திப் பூநூலின் பிரும்ம முடிச்சிலும், பெண்கள் திருமாங்கல்யத்திலும் சேர்ப்பார்கள். இவை உடலோடு ஒட்டியிருக்கும்.

மஞ்சள் எத்தகைய கிருமிநாசினி என்பது உலகம் அறியும். நாம் ஏற்க மாட்டோம். அதனால்தான் அதற்கான காப்புரிமையை யாருக்கோ கொடுத்துவிட்டு நிற்கிறோம்.
🙏 திருக்கோவில்களின் சுற்றுப் பிரகாரங்கள் முழுதும், முன்பெல்லாம் நல்லெண்ணெய் தீபத்துக்கான விளக்குகள் தொங்கிக் கொண்டிருக்கும். அவற்றில் பஞ்சுத் திரியால் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டு, எரிந்து கொண்டிருக்கும்.

பக்தர்கள் சுற்றி வருகையில், நல்லெண்ணையை அவற்றில் ஊற்றிச் செல்வர்.
இதனால் கோவில் பிரகாரங்கள் வெளிச்சத்தோடு இருப்பது மட்டுமன்றி, அந்த எண்ணெய் விளக்குகளில் இருந்து வரும் மெல்லிய புகை, மூச்சிழுப்பைத் தடுக்கும். ஆஸ்துமா, வீசிங் வராது. இது நோய்தொற்றைத் தடுக்கும் அடுத்த வழி.

🙏 பல திருக்கோவில்களில் சாம்பிராணி புகையை இறைவனுக்குக் காட்டும் வழக்கமுண்டு.
சாம்பிராணித் தூபத்தினால், காற்றில் பரவும் கிருமிகள் அழிந்து விடுகின்றன. நறுமணம் மூளையைக் குளிர்வித்து, மனதையும் ஆசுவாசப் படுத்தும்.

ஆலயமெங்கும் புகை பரப்பும் நோக்கம் இதுதான். இதனால் நோய்த் தொற்று காற்றில் பரவும் வழியும் அடைபட்டு விடும்.
🙏 வைணவத் திருக் கோவில்களில், அடுத்ததாக தீர்த்தப் பிரசாதம் என்று தருவார்கள். வெள்ளிப் பாத்திரத்தில், திருத்துலா எனப்படும் துளசி இலைகளைப் போட்டிருப்பார்கள். அதனுடன் சிறிதளவு பச்சைக் கற்பூரமும் சேர்ந்து இருக்கும்.

வெப்பமான தீபம், புகை முடிந்ததும் அடுத்து தீர்த்தம் வழங்கப்படும்.
இதனை ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் இணைத்து, உள்ளங்கையைக் குழித்துப் பெற்று, உயிர்ரேகை வழியாக மணிக்கட்டருகே உறிஞ்சிக் குடிக்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை அந்நீரைக் குடிக்க வேண்டும்.

இதற்கு ஜல பரிசேஷனம் என்று பெயர். வெள்ளி உடலுக்கு ஆரோக்கியம் ஏற்றும்.
மேலும் அதிலிட்ட பச்சைக் கற்பூரம் கரைத்த நீரில் ஊறிய துளசி, நெஞ்சில் சளி சேர்வதை ஆரம்பத்திலேயே கரைத்து விடும். இதனால் உள்ளே செல்ல ஆரம்பித்த தொற்றும் காணாமல் போய்விடும்.

இது நம் நெஞ்சில் தோன்றும் சளியை ஆரம்பத்திலேயே ஒழித்து விடும். இது தவறிப்போய் தொற்றும் கிருமியை அழிக்க
அடுத்த கட்ட வழி. வெள்ளி போல் செப்புப் பாத்திர நீரும் இதே ஆரோக்கியத்தைத் தரும். இன்று பலர் தேடித்தேடி செப்புச் சொம்புகள், கூஜாக்கள் வாங்குவதைப் பார்க்கின்றோம்.

அன்று முக்கால்வாசி மனிதர்கள் செப்புச்சொம்பு மட்டுமே பயன்படுத்தினர். இன்றும் அதை ஒரு சமூகத்தினர் கடைப்பிடிக்கின்றனர்.
🙏 அடுத்ததாக, மிளகு கலந்த பொங்கலே பெரும்பாலும் பிரசாதமாகத் தரப்பட்டது. ஸ்ரீரங்கம் போல சில கோவில்களில் தரும் தோசைகளிலும், இவ்வாறு மிளகு கலந்து வார்த்திருப்பார்கள்.

மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத மருந்து. வறட்டு இருமலுக்கும், சளிக்கும் கூட,
மிளகைப் பொடித்து சிறிது நெய், வெல்லம் கலந்து உருட்டி வாயில் அடக்கிக் கொண்டால், உமிழ்நீருடன் அதன் ரஸத்தை மெதுவாக விழுங்குகையில் இருமல், சளி பறந்து போகும். தொற்றிய நோயைத் துரத்த இது அடுத்தகட்ட வீரிய வழி.

🙏 ஆலயங்களில் வெண்கலத்தால் ஆன ஆலயமணி ஒலிக்க ஒலிக்க வழிபாடு நடத்துவது ஏன்?
ஆலயமணியின் ஒலி அதிர்வுகள் நம் உடல் நரம்புகளில் நுண்ணிய அதிர்வுகளை ஏற்படுத்தும். இதை உண்மை என்கின்றார்கள் மேலை விஞ்ஞானிகள் பலர்.

மெல்லிய எலக்ட்ரிக் ஷாக் சிகிச்சைக்குரிய அதிர்வினை அது கொடுக்கும், ரத்த ஓட்டம் சீர்படும். மேலும் மனதில் படபடப்பு குறையும். இது ஆரோக்கித்தை அதிகரிக்கும்.
ஆரோக்கியம் எதிர்ப்புச் சக்தியை வளர்கும். சுற்றி வந்து பின் மண்டபத்தில் அமர்ந்து அஙௌகே ஒலிக்கப்படும் நாதஸ்வரம் மற்றும் மேளங்களின் இசையைக் கேட்கலாம் அல்லது மௌனமாக தியானிக்கலாம். கர்நாடக சங்கீதத்தின் ஒலி அதிர்வுகளும் மனதை அமைதிப் படுத்தும்.

இப்படி நுழைவது முதல் வெளியேறுவது வரை....
முழுதும் அறிவியல் பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட இடம் கோவில். மேலும் அதன் கருங்கல்லாலான கட்டிட அமைப்பு, அண்டவெளி ஆற்றலை அள்ளித்தரும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது...

🙏 இத்தகைய திருக்கோவில்கள் எல்லோரும் வரும் இடம். எனவே தான் அங்கிருக்கும் வெண்கல மற்றும் தாமிர விக்கிரகங்களையும்
அவற்றைத் தொட்டுப் பூஜை செய்யும் மனிதரையும் எப்பொழுதும் மிகவும் சுத்தமாக இருக்கச் சொன்னார்கள். அவர்கள் தேகம் மற்றும் மனம் இரண்டாலும் சுத்தமாக இருக்கவே அவர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன.

அவர்கள் தள்ளி நிற்பதும், யாரையும் தொடாததன் காரணமும் இவைதான். தீண்டாமை அல்ல.
🙏 மாமிச உணவு உடல் வெப்பத்தை கூட்டும். அதனால் ஆலயங்களில் கூடுதல் வெப்பம் நிலவும் என்பதாலும், அத்தகைய உடல்கள் அண்டவெளிக் கதிர்களை ஈர்த்து வெளிவிடாது என்பதாலும் தான் அசைவ உணவினை உண்பவர்க்கு ஆலயத்தில் கர்பக் கிருஹம் நுழையவோ எதையும் தொடவோ அனுமதி இல்லை என்றார்கள்.
ஆலய நெறிமுறைக்கு ஏற்ப வாழ்க்கையை முறையை வாழாத அவர்களைச் சார்ந்தவர்களே ஆனாலும் உள்ளே நுழைய முடியாது.

🙏 அடிக்கடி காலையும் மாலையும் சில விக்ரஹங்களை அபிஷேகம்/திருமஞ்சனம் என‌ மஞ்சள் நீர், வேப்பிலை நீர் எனக் கழுவுகின்றார்களே, அதுவும் மருத்துவம் தான்.
🙏 ஆலய்த்தில் பலர் வந்து செல்லும் நிலையில் நோய் பரவிவிடக் கூடாது என்பதற்காக அடிக்கடி நீரும் இன்னும் சில வஸ்துகளும் இட்டு கழுவி சாம்பிராணியிட்டு சுத்தமாக்கி வைத்தார்கள்.

🙏 நறுமண பூக்களால் அலங்கரித்தார்கள். கண்களுக்கு இதமானதாக இருப்பதால் பார்வையாலும் மனம் அமைதியானது.
🙏 முன்னோருக்கு நாம் திதி கொடுக்கையில் அர்ச்சகர் நமது கையில் தர்ப்பையைக் கட்டுகின்றாரே ஏன்? தர்ப்பைப் புல்லில் நோய் கிருமி பரவாது என்பதை அன்றே அறிந்திருந்தனர் முன்னோர்.

🙏 நம் ஸநாதன தர்மத்தில் முன்னோர்கள் எவற்றை எல்லாம் செய்யச் சொன்னார்களோ அவை எல்லாம் நோய் தடுப்பென்றும்,
எவற்றை எல்லாம் தீட்டு என்றார்களோ அவை எல்லாம் நோய் பரப்பும் விஷயம் என்பதையும் இப்போது மௌனமாக ஒப்புக் கொள்கின்றது உலகம்.

🙏தொற்றுநோய் என எல்லா இடங்களும் மூடப்பட்ட நிலையில், இந்து ஆலயங்களில், குறிப்பாக ஆகம விதிப்படி கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களில்
அன்றாட நிகழ்வுகளில் உள்ள நோய் தடுப்பு முறையினையும், அக்காலத்திலே மிக நுட்பமாக செய்யப் பட்டிருக்கும் விஞ்ஞான ஏற்பாடுகளையும் பற்றி வியந்து கொண்டிருக்கின்றது உலகம்.

இங்கு எதுவும் மூட நம்பிக்கை அல்ல! நாம் கற்கத் தவறிய, புரிந்து கொள்ள முடியாதவற்றை,
ஏற்க மறுப்பவற்றை, அகங்காரத்தை மறைத்துத் தப்பிக்க மூடநம்பிக்கை என்கின்றனர். அறிவுள்ள உலகம் நெருக்கடியான இந்நேரத்தில் நம் ஆலயங்களின் பெருமையினை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஆம், நம் சமயம் ஓர் மதமல்ல.
மனித வாழ்வியல் நெறி. இதில் உள்ள சில விஷயங்கள் மட்டும் சொல்லிவிட்டேன்.
இதுபோல் ஸநாதன தர்மத்தில் ஆயிரக்கணக்கான விஷயங்கள் உண்டு. இதை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம். ஏற்றாலும் சரி. இல்லையென்றாலும் சரி. ஆனால், தெரிய வேண்டும் என்றால் தேடிப்போய் பழைய புத்தகங்களைப் படியுங்கள்.

இவை எல்லாம் படித்தால் மட்டும் புரியாது. வெப்பம், குளிர், மற்றும் பல
உணர்வுகள் போல இதையும் அநுபவத்தால் தான் உண்மை என உணர முடியும்.

தேவையெனில் முழு மனதோடு அநுபவித்து உணருங்கள். அதைவிடுத்து நம்பாதவர்கள் வெட்டிக்கு கேள்வி கேட்டுச் சண்டைக்கு வராதீர்கள்.

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app. Pls compile
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!