My Authors
Read all threads
🌺கொஞ்சம் பொறுமையாகப் படித்து உணருங்கள்.....🌺

ஒரு தோட்டக்காரனின் கதை...

ஒரு ஊரில் பாரதி என்னும் ஓர் அன்புத்தாய் வாழ்ந்து வந்தாள். பெரும் செல்வந்தகையாகப் பிறந்த அவள், அனைவரயும் நேசிக்க மட்டுமே தெரிந்தவள். அவளின் பலவீனத்தைப் பயன் படுத்தி;
பலரும் அவள் சொத்தை அபகரித்துச் சென்றனர். இருந்தும் யாருடனும் எந்த வெறுப்பும் இன்றி சந்தோஷமாகவே அவள் வாழ்க்கையை நடத்தினாள்.

நிலத்தின் பெரும் பகுதியை இழந்த பாரதிக்கு மிஞ்சியது கிட்டத்தட்ட 30 சென்ட் நிலமே.. அவள் அதில் பல இனத்திலுள்ள நெல்விதைகளைப் பயிரிட்டு வந்தாள்.
செழிப்பான மண்ணில் நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்தது. பல விதமான நெற்பயிர்கள் ஒரே நிலத்தில் சண்டை சச்சரவு இல்லாமல்; அன்புடனும் ஒற்றுமையுடனும் வளர்ந்தது அனைவரயும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பாரதியும் பயிர்களைத் தன் பிள்ளைகள் போலவே அன்புடனும் பாசத்துடனும் பார்த்துக் கொண்டாள்.
பயிர்கள் சற்று வாடினாலும் அவளும் வாடிவிடுவாள்.

அவள் நிலத்தின் கிழக்கில் சப்பை மூக்கன் என்னும் ஓர் பண்ணையாரும், மேற்கில் நெட்டையன் எனும் ஓர் பன்னாடையும் நிலங்களை வைத்திருந்தனர். இருவரும் அவ்வப்போது அவள் பயிர்களை சேதப்படுத்தி குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.
பயிர்களை அழித்து நிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமித்து, அவளை ஊரை விட்டு துரத்துவதே அவர்கள் திட்டம். இதனால் பாரதி அவ்வப்போது நிம்மதி இழந்தே காணப்பட்டாள்.

வம்பிழுக்கும் நெட்டையனை அவள் அடித்து ஓடவிடுவாள்... ஆனால் இந்த சப்பைமூக்கன் பெரிய பணக்காரன். ஆள்பலம் மிக்கவன்.
அவன் சற்று பயமுறுத்தியே அவளை வைத்திருந்தான்.

பாரதியுடன் நேரடியாக மோத முடியாதென்று தெரிந்து கொண்ட நெட்டையன், தன் நிலத்தின் ஒரு பகுதியில் கொடிய விஷச் செடிகளைப் பயிரிட்டு, அந்த விதைகளை பாரதியின் நிலத்தில் தூவி விட்டான். நெற்பயிர்களுக்கு போடும் உரத்தினை சுரண்டி
அந்த களை செடிகளும் நெற்பயிர் போலவே வளர்ந்தன. பாரதியின் பயிர்களும் அவளைப் போலவே; அனைவரயும் நேசிக்க மட்டுமே தெரிந்தவை. அந்த விஷச்செடிகளையும் தங்களுள் ஒருவனாகவே பாவித்து அன்பு செலுத்தி வந்தன.

நாட்கள் போகப் போக, நன்கு வளர்ந்த விஷச்செடிகள் குறிப்பிட்ட இரு நெற்பயிர்கள் இடையே
குழப்பத்தை உண்டாக்கின... சண்டையை மூட்டின... "டேய் அவன் உன்ன அப்படி திட்றான்... டேய்... இவன் உன்ன இப்படி திட்றான்... பாரதி உனக்கு உரம் கம்மியாக போடுகிறாள்... அவங்களுக்கு பாரு நிறைய போடுகிறாள்... நீங்கள் எண்ணிக்கையில் கம்மியாக உள்ளீர்கள்...
ஆனால் அவர்களைப் பாருங்கள் நிறைய இருக்கிறார்கள்... கொஞ்சம் நாட்களில் பாருங்கள் உங்களை பாரதி அழித்து விடுவாள்..."
என்றெல்லாம் சொல்லி குறிப்பிட்ட ஓர் இனப்பயிர்களை மூளைச்சலவை செய்து பயமுறுத்தின அந்த களைச்ச் செடிகள்... அமைதியாயிருந்த அந்தப் பயிர்களும்
இவன் உண்மை தான் சொல்லுகிறான் என்று கொஞ்சம் கொஞ்சமாக விஷச்செடிகளை நம்ப ஆரம்பித்தன. குறிப்பிட்ட அந்த இரண்டு இன நெற்பயிர்களிடையே விஷச்செடிகள் வளர்ந்து, அவை இரண்டும் எப்பொழுதும் ஒன்று படாமல் பார்த்துக் கொண்டன. வயலில் ஒரே குழப்பம் ஏற்பட்டது..
இப்பயிர்கள் இரண்டும் பரஸ்பரம் சண்டை போட ஆரம்பித்தன. இரு பகுதியிலும் பயிர்கள் கருக ஆரம்பித்தன. ஆனால், அந்த களைகள் மட்டும் நன்கு செழிப்பாகவே தென்பட்டன. அந்த குறிப்பிட்ட இரு நெற் பயிர்கள் மட்டும் ஏன் செத்துப் போகிறது என்று பாரதி குழம்பினாள்.
இரு பயிர்களும் மாறிமாறி அழிவதைப் பார்த்துக் கலங்கிய பாரதி; வேலையாட்களையும் காவலாளியையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள். எந்தப்பயனும் ஏற்படவில்லை. எல்லாமே இந்த நெட்டையனும் சப்பை மூக்கனும் செய்கிற சதிவேலை தான் என்று அவளுக்குப் புரிந்தது. ஆனால் என்ன செய்வதென்று தான் விளங்கவில்லை.
மாறி மாறி வந்த வேலையாட்கள் அந்த விஷச் செடிகளைக் கண்டுபிடித்தனர். ஆனால் அவற்றை நெருங்க தைரியம் இல்லாமல் சற்று விலகியே நின்றார்கள். இது மட்டுமில்லாமல்; அந்தக் களைகளுக்குக் கொஞ்சம் உரம் அதிகமாகவே போட்டனர்.

சப்பை மூக்கனும் நெட்டையனும் ஆணவத்தால் சிரித்தனர்..
அவ்வப்போது சீண்டிப்பார்த்தனர்.. ஆனால் காவலாளிகள் ப்ரச்சனை வேண்டாம் என்று ஒதுங்கியே போனார்கள். இது அவர்களுக்கு இளக்காரமாகவே அமைந்தது.

இரண்டு பகுதியிலும் உள்ள பெருபாலான பயிர்களுக்கு விஷயம் தெரிந்தது... இது நெட்டையனின் சதி தான்! ஆனால் அவைகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பயிர்கள் வாட ஆரம்பித்தன... நம்பிக்கை இழந்தன... நம் வயல் அழிவை நோக்கிச் செல்கிறது என்று மனம் வெதும்பின.

அந்த வேளையில் ஒரு ஏழைத் தாயின் மகன் புதிய காவலாளியாகப் பொறுப்பேற்றார்... அவர் பெயர் தாமோதர்!!

பயிர்களுக்கெல்லாம் அவர் மேல் பெரிய நம்பிக்கை எல்லாம் இல்லை...
பத்தோடு பதினொன்று என்றே எண்ணின. ஆனால் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவருடைய சீர்திருத்த நடவடிக்கைகள் சுற்றுப் புறத்திலுள்ள அனைத்து ஜமீன்தார்களையும் விவசாயிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இவனைப்போல் தோட்டக்காரன் நமக்கில்லையே என அடுத்த கழனியிலுள்ள பயிர்களெல்லாம் ஏங்கின.
அக்கம் பக்கத்து விவசாயிகளுடன் பாசத்துடன் பழகி அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கண்டறிந்து செய்து, அவர்கள் மனதில் இடம் பிடித்தார்..

மிகப்பெரிய பண்ணையாரான "அம்பலத்தாரி"ன் நெருங்கிய நண்பரானார்!! அனைத்து ஜமீன்தார்களும் போற்றும் விதம் கண்ணியமாக நடந்து கொண்டார்!
பாரதியின் பயிர்கள் புத்துணர்ச்சி பெற்றன. தன்னம்பிக்கை பிறந்தது... தாமோதர் அனைத்து பயிர்களுக்கும் பாரபட்சமில்லாமல் தண்ணீரையும் உரங்களையும் வழங்கினார். விஷச்செடிகளுக்கு உரங்கள் சென்றடைவதை தடுத்தார். அந்தக் களைகள் வாடத் தொடங்கின. பிடுங்கி எறிய நேரம் பார்த்து காத்திருந்தார்.
நெட்டையனும் சப்பை மூக்கனும் என்ன செய்வதென்று கையைப் பிசைந்தனர்...

ஒரு நாள் நெட்டையன், பாரதியின் வேலியின் ஒரு பகுதியில் நெருப்பைப் பற்ற வைத்து ஓடிவிட்டான். வேலி சேதம் அடைந்ததைப் பார்த்த தாமோதர் வெகுண்டெழுந்தார். நெட்டையனின் நிலத்திற்கே சென்று,
விஷவிதைகளைப் பாதுகாத்து வைத்திருந்த கிடங்கிற்கு தீ வைத்து அழித்துவிட்டு வந்து விட்டாரர். ஆடிப்போன நெட்டையன், நேரடியாக மோத பயந்து, ஊரில் உள்ள பெரிய ஜமீன்தாரான "அம்பலத்தாரி"டம் சென்று முறையிட்டான்..

அவர் சிரித்து கொண்டே... ""யோவ்.. அவன் ரொம்ப மோசமான ஆளுய்யா....
நீ அடிச்சாக்கா சைலன்டா போறதுக்கு அவன் பழைய ஆட்கள் மாதிரி நெனச்சியா?? அடிச்சாக்கா திரும்பி நின்னு அடிக்கிற ஜாதி யா... வட்டியும் முதலும் சேர்த்து குடுத்துட்டு தான் போவான்... அதனாலே நீ என்ன பண்றேன்னா... கொஞ்ச நாளைக்கு உன் டகால்டி வேலையெல்லாம் அந்த ஆளுகிட்ட காட்டாதே சைலண்டா இரு...
இல்லையென்றால் உன் நிலத்தையும் அந்தாளு அடிச்சு புடுங்கி பாரதியின் நிலத்தோடு சேர்த்துவிடுவான்..." என்றார் பாருங்கள்... கதி கலங்கிப்போன நெட்டையன் ஓடிவந்து வாலை சுருட்டி தன்னிடத்தில் அமர்ந்து கொண்டான்.

தாமோதர் கிட்ட உஷாரா பழகணும் என்று சப்பை மூக்கனும் புரிந்து கொண்டான்..
இந்நேரம் சப்பை மூக்கனின் கர்மா தன் வேலையைக் காட்டத் துவங்கியது.

நெட்டையன் போலவே சப்பை மூக்கனும் தன் பங்கிற்கு விஷக்கிருமிகளை வளர்த்து ஒரு டாப்பாக்குள் போட்டு ஒளித்து வைத்திருந்தான். நேரம் வரும்பபோது இதை வைத்து பாரதியின் பயிர்களை அழிக்க திட்டமிட்டிருந்தான்.
இந்த விஷப்பூச்சிகள் சப்பை மூக்கனுக்குத் தெரியாமலே டப்பா மூடியைத் திறந்து வெளியேறி; அவன் பயிர்களையே அழிக்க ஆரம்பித்தன. பதறிப்போன சப்பை மூக்கன் நிலை குலைந்து பேரழிவைச் சந்தித்தான்...

பக்கத்து நிலத்திலுள்ள விவசாயிகளெல்லாம் கலக்கம் அடைந்தனர்.
"பயப்பட வேண்டாம்... இது உங்கள் நிலத்துக்குப் பரவாது".. என்றான் சப்பை மூக்கன். இதை நம்பிய பிற விவசாயிகளும், பண்ணையார்களும் சற்று கவனக்குறைவாகவே இருந்தனர்.

ஆனால் சப்பை மூக்கனைப் பற்றி நன்கு அறிந்த தாமோதர்; தன் வரப்பில் பூச்சி மருந்தைத் தெளித்து விட்டு
உஷாராக, ஆனால் ஒன்றுமே தெரியாதது போல் இருந்தார்...

ஒரு கட்டத்தில், தன் வயல் மிகப்பெரிய அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று தெரிந்த சப்பை மூக்கன், *நான் மட்டும் ஏன் அழியனும்?? அனைவரும் இந்த நிலைமையைச் சந்திக்கட்டும்* என்று எண்ணி,
விஷக் கிருமிகளை அனைத்து விவசாய நிலத்திலும் பரவவிட்டான்.

எங்கும் ஒரே அழுகுரல்! மரண ஓலம்!! பல மைல்கள் அப்பால் உள்ள அம்பலத்தாரின் பயிர்கள் கூட கருகத் தொடங்கின. கடும் கோபம் கொண்ட "அம்பலத்தார்" சப்பை மூக்கனை கழுவிக் கழுவி ஊற்றினார். சப்பை மூக்கன் ஒன்றுமே தெரியாதது போல் நின்றான்.
அப்பொழுது தான் சப்பை மூக்கன் ஒன்றைக் கவனித்தான்... *ஊரெல்லாம் கலவரம் நடக்குது... நம்ம பக்கத்துல பாரதியோட கழனியில மட்டும் பயிர்கள் செழித்துக் குலுங்குது! அப்ப தாமோதர் உஷாரா இருக்கான்* என்று புரிந்து கொண்ட சப்பை மூக்கன் மறைமுகமாக மற்ற நிலங்கள் வழியாக,
விஷக் கிருமிகளை பாரதி நிலத்தில் ஊடுருவ விட்டான்...

நாட்கள் செல்லச் செல்ல ஆங்காங்கே பயிர்கள் கருகுவதை கவனித்த தாமோதர்; சப்பை மூக்கன் தன் வேலையை காட்டி விட்டான் என்று உணர்ந்து பதறினான். பாரதியிடம் விஷயத்தைக் கூறினான். தன் பயிர்களை கண்ட பாரதி அழுது புரண்டாள்...
"என்ன தாமோதர் இப்படி ஆயிற்றே... என் பிள்ளைகளைக் காப்பாற்ற வழியே இல்லையா... எப்படியாவது காப்பாற்றுப்பா..." என்று கதறினாள்...

தாமோதர் சொன்னான்... "அம்மா நான் ரொம்பக் கடுமையான ஒரு நடவடிக்கையில் இறங்கப் போகிறேன். என்ன நடக்கும் என்று இப்பொழுது சொல்லமுடியாது..."
"நீ என்ன action வேண்டுமானாலும் எடுப்பா... எனக்கு என் பிள்ளைகள் வேணும்" என்றாள் கண்ணீர் மல்க பாரதி.

பாரதியின் கண்களைச் சற்று நேரம் உற்றுப் பார்த்த தாமோதர், ஒன்றுமே சொல்லாமல் திரும்பி நடந்தான். அவன் கண்களிலும் ஈரம் எட்டி பார்த்தது.
வேக வேகமாகத் தன் நிலத்தின் அணைத்து வேலிகளையும் பார்வையிட்ட தாமோதர், அனைத்து வழிகளையும் இழுத்து மூடினான். கேட் சாவியைத் தன் பான்ட் பாக்கெட்டிற்குள் சொருகினான்... பின் தழுதழுத்த குரலில் தன் பயிர்களை நோக்கிக் கூறினான்...

"பிள்ளைகளே.... நம் மண் ஒரு இக்கட்டான சூழலை நோக்கி
சென்று கொண்டிருக்கிறது... நம் மண்ணில் உங்களுக்குத் தெரியாமலே சில விஷக் கிருமிகள் ஊடுருவி இருக்கின்றன... அவை உங்களை அழித்து விடும்...'

"நீங்கள் அசைந்து கொண்டு இருப்பதனால் அக்கிருமிகள் என் கண்களுக்குத் தென்படவே இல்லை... ஆனால் நீங்கள் ஒன்றும் பயப்படவேண்டாம்.
நான் பார்த்துக்கொள்கிறேன்... நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், சற்று நேரம்... அதாவது ஒர் 21நிமிடங்கள் ஆடாமல் அசையாமல் நில்லுங்கள்... அதற்குள் நான் அந்த விஷக்கிருமிகளை கண்டுபிடித்து நசுக்கிவிடுகிறேன்..." என்றார்.
நெற்பயிர்கள் ஒன்றுக்கொன்று மாறிமாறிப் பார்த்தன. தங்களின் அன்புத் தலைவரின் வேண்டுகோளை மனதார ஏற்பதாகத் தலையை ஆட்டின!!

மீதிக் கதையை நீங்களே கூறுங்கள் தோழர்களே...

தாமோதர் வெற்றிவாகை சூடுவாரா... இல்லை சப்பை மூக்கன் சதியில் இந்த மண் அழிந்துவிடுமா?

தாமோதர் காத்திருக்கிறான்...
🙏:: எழுதியவர்க்கு சமர்ப்பணம்
🌺இக்கதையைப் படித்து விட்டு நான் குலுங்கி அழுகிறேன்....

இல்லை.... என் தாமோதர் தோற்கக் கூடாது.... என் பாரத தேவி தன் பிள்ளைகளை இழந்து அழக்கூடாது....

படிக்கும் உங்கள் மனமும் கரைந்தால், இதை நிறைய பேருக்கு அனுப்புங்கள்... நன்றி.🙏

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!