My Authors
Read all threads
🌺நன்றி சொல்லுங்கள் இந்துக்களே.....🌺

எப்போதும் இந்த மாதிரி புத்திசாலிகளின் வார்த்தைகளை திரும்பிப் பார்க்காத மக்கு நான். ஆனால், இப்பதிவு உண்மையைச் சொல்ல ஒரு தூண்டுகோலாக இருந்தது...
**கிருமி கண்ட சோழன்**

கி.பி. 1133 - விக்கிரம சோழன், தனது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழனை இளவரசன் ஆக்கினான். 2ம் குலோத்துங்கனுக்கு குருவாக இருந்தவர் கவிராக்ஷஸர் ஒட்டக் கூத்தர். இவர் மிகப்பெரிய சிவ பக்தர், மேலும் வைஷ்ணவத்தை வெறுப்பவர் என அறியப் படுகின்றது.
அப்போது ராமானுஜரின் செல்வாக்கு சோழகுரு போல அவரை நடத்த வைத்தது என்பதால், இவனுக்கு அவர் மேல் துவேஷம் ஏற்பட்டிருக்கும், அதை ஒட்டக்கூத்தர் விசிறி விட்டிருப்பார் என்று வரலாற்றின் மூலம் அறியப்படுகின்றது. இதன் காரணமாக, அவரிடம் வாதம் செய்து, அவரை வீழ்த்த சோழன் திட்டமிட்டான்.
இதனிடையே, விக்கிரம சோழன் தில்லைக்குப் பொற்கூரை வேய்ந்து விஸ்தரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த போது, அங்கிருந்த கோவிந்தராஜ பெருமாளின் மூலவர் சிலை பின்னப்பட்டு இருந்ததைப் பார்த்தான். அக்காலத்து வழக்கப்படி, பின்னமான மூர்த்திகள் கடலில் சேர்க்கப்படும். எனவே உற்சவர் கடலில் வீசப்பட்டார்
என்று ஒரு சாரார் ஆய்வில் கூறுகின்றனர். இல்லை, குலோத்துங்கன் ராமானுஜரை அவமதித்து, தில்லையை முழு சைவக் கோவிலாக்கி, சைவத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி, நாளை திருவரக்கத்திற்கும் இதே நிலை தான் என்பதை அவருக்கு மறைமுகமாகக் கூறவே கோவிந்தராஜப் பெருமாளைக் கடலில் வீசினான்.
இதற்கு ஆதாரம், அவன் உற்சவரையும் கடலில் வீசியபோது, சில வைஷ்ணவர்கள் அதை மட்டும் எப்படியோ மீட்டெடுத்து, அதனை எடுத்துச் சென்று கீழ்த்திருப்பதியில் பத்திரமாகப் பிரதிஷ்டை செய்தனர். இன்று அங்கிருக்கும் கோவிந்தராஜப் பெருமாள் உற்சவ மூர்த்தி, தில்லையிலிருந்து கொண்டு செல்லப் பட்டதே!
தற்போது தில்லையில் இருப்பது, பின்னாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது தான் என்றும் ஒரு ஆய்வியல் சாரார் ஆதாரத்தைக் காட்டிக் கூறுகின்றனர். எதுவாகினும், மூலவர் கடலுக்குச் சென்றாலும், சோழனுக்கு ராமானுஜரின் செல்வாக்கு ஓங்குவது கண்டு கோபம் பொங்கி எழுந்தது உண்மையே! அதுவே வைஷ்ணவ வெறுப்பாகவும்
மாறியிருக்கலாம். எனவே அவரை, தற்போது ஜெயங்கொண்டம் என்று அழைக்கப்படும் *கங்கை கொண்ட சோழபுரம்* அரண்மனைக்கு வரச்சொல்லி ஆணையிட்டான்.

அவனது ஆணையின் மேல் சில ஆழ்வார்கள் சந்தேகம் கொண்டனர். ராமானுஜர் சென்றால் அவருக்கு ஏதேனும் ஆபத்து வர நேரிடும் என்று அவர்கள் அஞ்சினர்.
அதனால் அவரை ஹொய்சாள தேசம் எனறழைக்கப்பட்ட, தற்போதைய கர்நாடகத்தில் உள்ள மேலக்கோட்டை என்னும் ஊரில் இருக்குமாறு கேட்டுக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

சோழனைச் சந்திக்க ராமானுஜரின் முதன்மைச் சீடர் பெரிய நம்பி புறப்பட்டார். அவரைத் தனியாக அனுப்ப பயந்து, அவரது மற்றொரு சீடாரான கூரத்தாழ்வாரும்
கிளம்பிச் சென்றனர். பெரிய நம்பியின் காவியுடைத் தோற்றத்தைக் கண்ட மன்னரும் பிறரும் அவரை ராமானுஜர் என்றே நம்பி, அவையில் வைஷ்ணவத்தை விட சைவமே சிறந்தது என்று வாதமிட்டனர். நம்பியும், வைஷ்ணவத்தின் பெருமைகளைச் சொல்லி வாதிட்டார்.

இறுதியில், சைவத்தை ஏற்று வைஷ்ணவத்தைப் புறக்கனிக்குமாறு
வற்புறுத்தப் பட்டனர். ஆனால், பெரிய நம்பியும் கூரத்தாழ்வாரும் அதற்கு இனங்க மறுத்ததால் அவர்களது கண்கள் குருடாக்கப் பட்டன. இதில், பெரிய நம்பி கங்கை கொண்ட சோழபுர அரண்மனையிலேயே இறந்து விட்டார். அவர் இறந்ததும், சோழன் அவரைக் கண்டு பலத்துச் சிரித்தான்.
அவனது தொண்டை கிழிக்கும் சிரிப்பினைக் கண்ட கூரத்தாழ்வார்,

“நம்பியின் மரணத்தைக் கண்டு கொக்கரித்துச் சிரிக்கும் உன் தொண்டை புழுத்துப் போய், வலி மிக்க ஆகித் தவித்துப் போய் இறப்பாய்...”

என்று சோழனுக்குச் சாபமிட்டார். பின்னர் குருடான கண்களுடன் திருவரங்கத்தை நோக்கிப் புறப்பட்டார்.
கூரத்தாழ்வாரும் பெரிய நம்பியும் குருடாக்கப்பட்டு, நம்பி துயருற்று இறந்த செய்தியை அறிந்த திருவரங்கத்தில், இரண்டாம் குலோத்துங்கச் சோழன் மேல் அனைவருக்கும் பயம் ஏற்பட்டது.

இந்நிலையில், திருவரங்கம் திரும்பி வந்த கூரத்தாழ்வாரை அங்கே யாரும் ஏற்கவில்லை. சோழனின் தண்டனைக்கு அஞ்சி,
அவர்கள் கூரத்தாழ்வாரை திருவரங்கத்தில் அனுமதிக்க மறுத்து விட்டனர். எனவே அவர் பாண்டி நாட்டிலுள்ள **திருமாலிருஞ்சோலை** (அழகர் கோவில்) சென்று தங்கினார் என்று நம்பப் படுகின்றது.

இந்நிகழ்வு 1138 ல் நடந்திருக்க வேண்டும் என்பதற்கான சான்றாதாரங்கள்...
**திவ்ய சூர்ய சரிதம்**
**குரு பரம்பரை**
ஆகிய இரு வைஷ்ணவ நூல்களில் உள்ளன.

திருவரங்கத்தில் உள்ள 1141 ம் நூற்றாண்டின் கல்வெட்டுகளில், 2ம் குலோத்துங்கனின்
**பூமன்னு பதுமம் பூத்த ஏழுலகும்** எனத் தொடங்கும் மெய் கீர்த்தியில், அவன் தன்னைத் திருமாலாகவே உருவகப்படுத்திக் கொள்கிறான்.
இதன் மூலம் திருவரங்கத்தை முழுதும் அவன் தன் கட்டுக்குள் கொண்டு வந்தான் என்பதும், தன்னையே திருமால் என்றதன் மூலம், அவன் வைஷ்ணவம் தன்னால் ஆளப்படும் என்பதை உணர்த்துகிறான் என்பதும் சில ஆய்வாளர்களால் உறுதியாகக் கூறப் படுகின்றது.

மேலும், திருவரங்கக் கோவிலை அவன் தொந்திரவு செய்யாததாலும்
இக்கல்வெட்டுக்களின் மூலமும் அவன் வைஷ்ணவத்தை எதிக்கவில்லை, ராமானுஜரைத்தான் வெறுத்தான் என்று கூறப்படுகின்றது. மேலும் ராமானுஜர் அவன் இறக்கும் வரை மேலாக்கோட்டையில் தான் தங்கி இருந்தார் என்பதற்கான் காலச் சான்றாதாரமும் உள்ளது.

இந்நிலையில் 1150ம் ஆண்டு, **இரண்டாம் குலோத்துங்க சோழன்*
தொண்டையில் புற்றுநோய் (THROAT CANCER) ஏற்படுகின்றது. அது முற்றிப் புழுத்துப் போய் அவன் அந்த வருடமே இறந்து போகிறான் என்று பல நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கண்டம் என்பது ஆண்களின் தொண்டைப் பகுதியைக் குறிக்கும். கண்டத்தில் கிருமி வந்து இறந்ததால் தான்,
2ம் குலோத்துங்க சோழன்
**கிருமிகண்ட சோழன்** என்று அழைக்கப் பட்டான். இவை எல்லாம் சரித்திரம் பற்றிய பல எழுத்தாளர்களின் குறிப்புகளில் உள்ளன. ஆனால் இவை கல்வெட்டுக்களில் இல்லாததால், இந்நிகழ்வை வரலாற்று ஆதாரம் அற்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
தசாவதாரம் படத்தின் மூலம் இது. இதைத்தான் பேரறிவாளர் அருணன் கேலி செய்துள்ளார். இவ்வரலாற்றின் படி, கூரத்தாழ்வார் சாபத்தால் 2ம் குலோத்துங்க சோழன் கண்டத்தில் கிருமி கண்டு இறந்தான்.

ஸநாதன தர்மத்தில், **சான்றோர்கள் சாபம் பொய்க்காது** என்று கூறுவதையே இச்சம்பவம் நிரூபித்து உள்ளது.
இதில், அக்கிருமியை *ஆழ்வாரின் சாபம்* என்று தான் பார்த்தார்களே தவிர, *பெருமாளின் லீலை* என்று எந்த வைஷணவ நூலிலோ, அல்லது வைஷ்ணவர்களோ குறிப்பிடவில்லை.

தெரிந்து கொள்ளாது உளறி, அதன் பயனாய் இன்று பலருக்கு இந்த வரலாற்றைத் தெரிய வைத்ததற்கு நன்றி அறிஞரே!!

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app pls compile
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!