இது பற்றி நான் கேள்விப்பட்டதை அளிக்கிறேன்.
இது பற்றி பொதுவாக உலவும் வரலாற்றுக் கதை,
“குலோத்துங்க சோழனுக்குப் பெண்கேட்டுச் சென்ற ஒட்டக்கூத்தன், பாண்டிய அவையில் பாண்டி தேசத்தை விட சோழத்தை உயர்வாகக் கூறி பாடல் கூற,
மன்னன், தேச ஒற்றுமைக்காகத் தன் மகளை சோழனுக்கு மணமுடித்து, புகழேந்தியையும் அவளுடன் சீதனமாக்கி அனுப்பினார். ஆனால் கூத்தன் அவர் மேலுள்ள வெறுப்பால் அவரை சிறையிலிட்டான்.
அதுவே *ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்* என்று ஒரு கருத்து உண்டு.
இரண்டாவதாக, சரஸ்வதியின் அருள் பெற்ற கூத்தன்,
இவ்வாறு அவன் பாடும் இரு பொருள் கொண்ட பாக்களை
*ஒட்டக் கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்*
எனும் பழமொழி வந்தது என்பது இரண்டாவது செய்தி.
மூன்றாவதாக,
புகழேந்தியிடம் பகைமை கொண்ட கூத்தன், அவர் தனது *நள வெண்பா* வைச் சோழன் அவையில் அரங்கேற்றுகையில், அவரைக் குறை கூறி அசிங்கப் படுத்தி, சிறையிலடைக்க எண்ணினான்.
*மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணையெறிந்து மெய்கரப்ப முல்லைமலர்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது*
எனும் வெண்பாவில்,
*மல்லிகை மலரை வெண்சங்காய் பாவித்து அதில் தேனருந்த வரும் வண்டு ஊத*
என்னும் உவமை அளித்திருந்தார்
“சங்கு ஊதுபவர்கள் அதன் பிற்பகுதியைத் தான் வாயில் வைத்து ஊதுவார்களே தவிர, சங்கின் வாய்ப் பகுதியில் அல்ல!
ஆனால் வண்டு மலரின்
வாய்ப்பகுதியின் வழியாகத்தானே தேனை அருந்துகிறது?
ஆகவே இவ்வுவமானம் தவறு. பாடலில் பொருள் குற்றமுள்ளது, அதனால் இதை ஏற்பதற்கில்லை."
என்றான்.
அதாவது, கள் அருந்தியவனுக்கு முன், பின் தெரியுமா?
என்று புகழேந்தி பதிலுக்குக் கேட்க, கூத்தன் பதிலேதும் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போய்விட்டான்.
இது கூத்தனின் பாடும் வாய்க்குப் போடப்பட்ட முதல் தாழ்ப்பாள்.
*செப்பிளம் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக்
கொப்புளங் கொண்ட குளிர்வானை எப்பொழுதும்
மீன்பொதித்து நின்ற விசும்பென்ப தென்கொலோ
தேன்பொதித்த வாயாற் றெரிந்து*
என்றான்.
"சந்திரனின் கதிர்கள் பட்டதால்
உண்டான கொப்புளங்களான நட்சத்திரங்கள்”
என்று நட்சத்திரங்களை உவமைப்படுத்தி இருந்தான். உடனே கூத்தன்,
"வானத்தில் கொப்புளங்கள் உண்டானால் அதிலிருந்து சீழாவது சிலைநீராவது வடிய
வேண்டுமே"
அதனால் இப்பாடல் பொருள் குற்றமுள்ளது. ஏற்க முடியாது என்றான்.
"சீழ் வடியவில்லை, சிலைநீர் வடிகிறது, அதுதான் விண்ணிலிருந்து பெய்யும் பனி"
என மறுமொழி கூறவே, கூத்தன் கப்சிப்பென்று அடங்கிவிட்டான். நள வெண்பா அரங்கேற்றமும் இனிதே நிறைவேறியது.
இவ்வாறு இரண்டம் முறையாக கூத்தனின் பாடும் வாய்க்கு தாழ்ப்பாள் போடப் பட்டது.
“ஆடாதே! அடங்கி இரு!”
என்று சொல்வதற்குப் பதிலாக,
*ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்*
எனப்பட்டது என்றும் ஒரு கூற்று உண்டு.
🍁வாஸவி நாராயணன்🍁