My Authors
Read all threads
Thread

1/n . அண்ணாவின் கார்ட்டூன் : "மக்களை காணார்; மக்கள் குறை கேளார்; அன்பு மொழி பேசார்;". இன்னைக்கு யாருக்கு இது பொருந்துதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா Image
2/n. "பெரும்பான்மை பலம் இருந்தாலும் சிறுபான்மை மக்களின் நலன் பாதிக்காத வகையில் அரசாள்வதுதான் உண்மையான ஜனநாயகம்" - அறிஞர் அண்ணா. 22-1-1950 சென்னை மாநாட்டில் ஆற்றிய உரையில் இருந்து.

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
3/n. "உங்கள் மனதில் சுயமரியாதை சுடர் விழுந்தால் போதும். அது உங்கள் பழைய எண்ணங்கள்,முடிவுகள்,கொள்கைகள் யாவற்றையும் பொசுக்கி விடும்." - அறிஞர் அண்ணா. 14-11-1937 - திருப்பத்தூர்.

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
'4/n. "பெரியவர்' எனப்பெயரெடுத்தவர் எதை கூறினும், அது அறிவிற்கும், சரித்திரத்திற்கும் மாறுபட்டதாக இருப்பினும், 'அவர்' சொல்கிறார், அதன்படி நடப்பதே சரி என்ற பிராமணீயம் அரசியலிலே முக்கியமான அம்சமாகிவிட்டது." - அறிஞர் அண்ணா. 12-12-1937.

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
5/n. "பார்ப்பனர் என்ற ஆட்களை, அவர்களின் வகுப்பு காரணமாக, விஷமத்துக்காக கண்டிக்கிறோம் என்று எண்ணிவிட வேண்டாம். நாம் கண்டிப்பது பார்ப்பனீயம் எனும் முறையையே." - அறிஞர் அண்ணா.

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
6/n. "உபகாரம் (உதவி) செய்ய சம்மதிக்கிறார்கள்; உரிமையை தர சங்கடப்படுகிறார்கள். உதவி செய்வது சுலபம், உரிமையை தருவது கஷ்டம். உதவி பெறுவது ஏறத்தாழ அடிமை எஜமானன் என்ற நிலையே. ஆனால் உரிமை பெறுவது என்பது சமநிலை ஏற்பட செய்கிறது." - அறிஞர் அண்ணா.

Source : arignaranna.net
7/n "'தீண்டாமையை அறவே ஒழிக்க வேண்டும் வாரீர்' என்று அழைத்தால் தர்மம், தயை, அன்பு, நட்பு முதலிய குணங்களெல்லாம் ஓட்டுக்குள் மறந்து கொள்ளும் ஆமைகளாகி விடுகின்றன." - அறிஞர் அண்ணா.

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
8/n "ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செல்பவர்கள், ஆலயங்களிலே நுழைய தடை உண்டா என்றால் இல்லை. ஆனால் ஆதிதிராவிடரை மட்டும் ஆலயத்துக்கு வரக்கூடாது என்று தடுப்பது நியாயமா?"

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
9/n "ஜாதிதான் மக்களுக்குள் பேதத்தை ஏற்படுத்தும் முதல் சாதனம். மக்களின் ரத்தத்தில் கலக்கப்பட்டிருக்கும் கடுவிஷம். பேதமற்ற சமுதாயத்தை,சமத்துவத்தை,சமதர்மத்தை காண ஜாதி தொலைந்தாக வேண்டும்." - அறிஞர் அண்ணா

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
10/n "நாம் உத்தியோகத்தில் போட்டிபோட நினைக்காத வரை, ஆங்கிலம் நல்ல பாஷையாய் இருந்து வந்தது. நாம் எப்போது போட்டி போட ஆரம்பித்தோமோ, அன்றே அவர்கள் ஆங்கிலம் அடிமை பாஷை, நீசபாஷை என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்." - அறிஞர் அண்ணா

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள்
11/n "பெங்குவின் எனும் பிராணிக்குரிய சொல் தமிழ்மொழியிலே இல்லை என்பதால் தமிழ்மொழியும் தாழ்ந்துவிடாது, பெங்குவினும் உயர்ந்துவிடாது. தமிழர்க்கு உரியனவற்றினை உணர்த்தப் போதுமான சொல்வளம் தமிழ் மொழிக்கு உண்டு."- அறிஞர் அண்ணா

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அண்ணா
12/n அண்ணாவின் பிறப்பை பற்றி கீழ்த்தரமாக எழுதிய ஒரு தட்டியை கண்டு ஆத்திரமுற்ற ஒருவர் அதை அகற்ற முற்பட்டபோது, 'அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். இரவிலும் எல்லோரும் இதை படிப்பதற்கு வசதியாக விளக்கை ஏற்பாடு செய்' என்றார் அண்ணா. மறுநாள் வைத்தவர்களே வெட்கப்பட்டுக் கழற்றிவிட்டார்கள்.
13/n "கோட்சே கூட்டம் இன்னும்
கொடிகட்டி ஆளுவதா!
கொலைகாரக் கும்பலின் கொட்டம்
தரைமட்ட மாக்கோணும்,
குலமும் ஒண்ணு, கடவுளும் ஒண்ணு
என்றேதான் ஓதணும்..." - அறிஞர் அண்ணா

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
14/n "ஒன்றில் குறிவைத் தால்அது
நன்றென்று எண்ணல் வேண்டும்.
ஆங்கத னைப்பெற் றிடவோ
அயரா துழைக்க வேண்டும்!
தூங்கிடுதல் துவண்டிடுதல் தூய்மைக்கு அழகல்ல!" - அறிஞர் அண்ணா

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
15/n "ஆசை காட்டினோம் மயங்கவில்லை!
அதட்டிப் பேசினோம் அஞ்சவில்லை!
அவரும் இவரும் மாறினபோதும்
அணுவளவேனும் மாறவில்லை!
எதையும் துருவி ஆராய்ந்து
ஏழைக்கேற்றது எதுவென்று
இடித்துக் கேட்கிறார் எப்போதும்." - அறிஞர் அண்ணா

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா
16/n "மனிதா!
நீ யாருக்கும் தலைவணங்காதே,
நிமிர்ந்து நட!
செல்வரை, செருக்குள்ளவரை,
மதவெறியரைத் தள்ளிஎறி.
மனசாட்சியே உன் தெய்வம்!
உழைப்பே மதி, ஊருக்குதவு.
உனக்கு எட்டாத கடவுளைப் பற்றிப் பிதற்றாதே!
சிந்தனை செய்! செயலாற்று!" - அறிஞர் அண்ணா

Source : arignaranna.net

#அண்ணா
17/n "வரும் தேர்தல் தன்னிலே வகையுடன் நில்லாவிடில்
வானம் இடித்திடாது, வாழ்வும் வறண்டிடாது.
வருமுன் உணர்ந்தேன் உண்மை, தெரிமின் இதுநன்மை
வகை உண்டெனின் சொல்மின், வாய்திறந்து பேசுமின்!

ஊரெங்கும் செல்லுக! உட்பகை வெல்லுக!
உற்றதுணை யெனவே ஒரு ஏடு தேடுக!
நாம் வெல்வோம், ஏகியே!" - அண்ணா
18/n "கொள்ளையிடும் கும்பலது கூண்டோடே தொலையணும்!
பள்ளுபறைஎன்ற பேச்சைப் பழசாக்கிப் போடணும்!
ஏழை எளியவங்க பிழைக்கவழி தேடணும்!
என்ஜாதி உசந்த தென்னும் எண்ணக் காரன் ஒழியணும்!
எல்லாரும் ஒண்ணு என்னும் எண்ணம் உதிக்கணும்!"- அறிஞர் அண்ணா.

Source : arignaranna.net

#அண்ணா
19/n "எனக்குத் தயக்கம் ஏற்படும்பொழுது உற்சாகங் கொடுங்கள். தவறு செய்தபோது திருத்துங்கள். தடுமாற்றம் ஏற்படும்பொழுது உற்சாகங் கொடுங்கள். இதுதான் மக்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்" - அறிஞர் அண்ணா

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
Image
21/n "பொதுத் தேர்தலில் வெற்றி அடைந்த பிறகு எந்தக் கட்சியும் பெருமிதம் கொள்ள உரிமையுண்டு. ஆனால் வெற்றியில் பெருமிதம் கொள்வதைக் காட்டிலும் ஆளும் கட்சி பணிவையும், ஜனநாயகத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்." - அறிஞர் அண்ணா

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அண்ணா
22/n "சமத்துவம் என்பது எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்துவது அல்ல. எல்லோருக்கும் சமவாய்ப்பு தருவதாகும். ஆனால், இங்கே சமவாய்ப்பு தரப்பட்டது, தந்து கொண்டிருக்கிறோம் என்று கூறமுடியுமா? தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்பட்ட வகுப்பு என்பதெல்லாம் எதைக் குறிக்கிறது?" - அறிஞர் அண்ணா
23/n "ஒருமைப்பாடு பெற்ற மக்கள் சமுதாயம்தான் நாடாகிறது. அப்படி ஒரு நாடு உருவாகி இருந்தால் ஒருமைப்பாட்டிற்கு இப்போது என்ன அவசியம் வந்தது? கால வெள்ளத்தில் மறைந்து போய்விட்ட தத்துவங்களின் வறுமைதான் தேசிய ஒற்றுமை" - அறிஞர் அண்ணா.

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள்
24/n "நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன்,என்னைத் திராவிடன் என்று அழைப்பதில் பெருமைப்படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிர்ப்பானவன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் சொன்னது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான்." - அறிஞர் அண்ணா
25/n "இந்தி ஆட்சிமொழியாவதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்பது மட்டுமல்ல, ஆட்சிமொழியாக வருவதற்கு இந்தி மொழியே தயாராக இல்லை." - அறிஞர் அண்ணா

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
26/n "வளர்ச்சியடையவேண்டிய - வளமில்லாத ஒரு மொழியை வைத்து, மற்ற வளர்ச்சியடைந்த மொழிகளை நொறுக்கி, அடிமைப்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? " - அறிஞர் அண்ணா

Source : arignaranna.net

#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
27/n "நாட்டிற்கு ஆபத்து வந்தபோது மக்கள் ஒற்றுமையாக நின்றதை கண்டோமே? சொந்த மக்களிடமே ஏன் அச்சம், அவநம்பிக்கை?

நாட்டுப்பற்று உணர்ச்சிக்குத் தாங்களே மொத்த உரிமையாளர்கள், மற்றவர்களுக்கு அந்த உணர்ச்சியே கிடையாது என்ற அகம்பாவம் கொள்ளக்கூடாது." - அறிஞர் அண்ணா

arignaranna.net
28/n "நாட்டை மொழிமூலமாகத்தான் இணைக்கமுடியும் என்று கருதாதீர்கள்! நாட்டுப் பற்று என்பது, பல்வேறுவகையான பற்றுக்களின் கூட்டு! மொழிப்பற்று என்பது, மற்ற எந்தப் பற்றைக் காட்டிலும் மெய்யுணர்வு அற்றது அல்ல எழுச்சிக் குறைவானது அல்ல!" - அறிஞர் அண்ணா

arignaranna.net

#அண்ணா
29/n ""பெரியார் என்னுடைய தலைவர்! நானும் அவரும் பிரிகிறபோதுகூட நான் அவரையேதான் தலைவராகக் கொண்டேன். வேறு ஒருவரைத் தலைவராகப் பெறவேண்டிய அவசியமும் வரவில்லை. இன்றும் அவரையே தலைவராகக் கொண்டுதான் பணி செய்து வருகின்றேன்." - அறிஞர் அண்ணா. 29-1-68.

arignaranna.net

#அண்ணா
30/n "தமிழகத்தில் தூய்மையுடன் மனத்திற்குச் சரியென்று பட்டதை எவரும் எடுத்துரைக்கலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. அறிவுப்புரட்சியின் முதல்கட்ட வெற்றி இது! இதற்கு முழுக்க பொறுப்பாளர் பெரியார்! இதற்கு அவர் ஆற்றிய தொண்டு மிகப்பெரியது." - அறிஞர் அண்ணா. 29-1-68.
31/n ""பெரியார் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? சிக்கித் திணறாத ‘பழமை’ உண்டா? எதற்கு அவர் பணிந்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது!

பெரியாருடைய பெரும் பணி, தனி மனிதனின் வரலாறு அல்ல, ஒரு சகாப்தம் ஒரு திருப்பம் என்று கூறுவேன்." - அறிஞர் அண்ணா. 29-1-68.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Ponniyin Selvan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!