My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

பாகம் : 1 : 2

ப:ரத கண்டம் :

இனி நாம் வாழந்து வரும் பாரதம் என்று அழைக்கப்படும் பரத கண்டத்தைப் பற்றிப் பார்ப்போம். பரத கண்டம் என்பது எந்த இடம் என்பதற்கான வர்ணனை, வேதகாலத்திலேயே விஷ்ணு புராணத்தில் சொல்லப் பட்டுள்ளது.
उत्तरं यत्समुद्रस्य हिमाद्रेश्चैव दक्षिणम् ।
वर्षं तद् भारतं नाम भारती यत्र संततिः ।।

உத்தரம் யத் ஸமுத்ரஸ்ய ஹிமாத்ரேஷ்சைவ தக்ஷினம் !
வர்ஷம் தத்: பா:ரதம் நாம் பா:ரதி யத்ர ஸந்ததி: !!

அதாவது, சமுத்திரங்கள் சூழ்ந்த தக்ஷினத்தையும் (தெற்கு), பனிமலைகள் கொண்ட உத்திரத்தையும் (வடக்கு)
கொண்டது பரத: கண்டம் என்கின்றது அந்த ஸ்லோகம் (Poem) .

அது வடக்கே ஹிமாச்சலம் மலைத் தொடரில் ஆரம்பித்து, தெற்கே கன்யாகுமரி வரை உள்ள பரப்பு என்பது விளங்குகின்றது.

அடுத்ததாக, பரத: கண்டம் (அதாவது) பாரதம் என்ற பெயர் இந்நிலப் பரப்பிற்கு ஏன் வந்தது ?
இது குறித்து சில வித்தியாசமான கருத்துக்கள் உள்ளன. அவை எல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்க விதமே உள்ளன. அதனால், இப்பெயர் வர உண்மைக் காரணம் என்ன என்பது என்றும் கேள்விக் குறியே???????????

அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1) சமஸ்க்ருதத்தின்படி பா:ரத என்பதில்
பா: - ஞானத் தேடுதல் கொண்ட
என்று பொருள் உண்டு. இந்த பரத: கண்டமானது ஞான பூமி / புண்ணிய பூமி என்று போற்றப்படுகின்றது. இதுவரை நடந்துள்ள அனைத்து அவதாரங்களும், நம் பாரதத்தில் தோன்றியவையே….

அந்த அர்த்தத்தின் அடிப்படையிலேயே பரத: கண்டம் எனப் பெயர் பெற்றது.

2) ”தஸராஜனா” என்னும் கதையில், பாரத வர்ஷத்தை
ஆண்டு கொண்டிருந்த பத்து விதமான ஆதிவாசி மக்கள், தங்களுக்குள் போர் நடத்தினார்கள்.

அவர்களுக்குள் நடந்த போரில், **த்ருத்ஸூ** என்னும் ஆள்குடியினத்தைச் சேர்ந்த பரத: என்னும் ஆதிவாசிகள் கூட்டத்தின் தலைவன் **ஸுதாஸ ராஜன்** என்பவன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றான்.
அது முதல் அவர்கள் தங்கள் மன்னன் ஆண்ட தேசத்தை பரத: தேஷ: என்றார்கள். இந்நிகழ்வு ரிக் வேதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதுவே நிலைத்து பரத: கண்டம் என்றானது.

3) அடுத்ததாக **த்ரேதாயுகத்தில்**, ராமரது தமையன் பரதன், அண்ணன் இல்லாத அரசு பீடத்தில் தான் அமர மாட்டேன் எனக் கூறி,
ராமரின் பாதுகையை வைத்து ஆட்சி புரிந்தான்.

பரதனின் அந்த உயர்ந்த குணத்தால், அவர் குடியின் கீழ் இருந்த மக்கள், அவர் பெயரைக் கொண்டு இக்கண்டத்தை பரத: கண்டம் என்றும், தம்மை பரத: வாசி என்றும் குறிப்பிட்டுக் கொண்டனர் என்றும் ஒரு கூற்று உள்ளது.
4) இறுதியாக **த்வாபரயுகத்தில்** , ஹஸ்தினாபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, பாரத வர்ஷம் முழுதும் நெடும் காலத்திற்கு ஆட்சி செய்தவர் பரத: சக்ரவர்த்தி என்பவர்.

இவர் *ஸகுந்தலா – துஷ்யந்தன்* என்னும் க்ஷத்ரிய வம்சாவளித் தம்பதியினருக்குப் பிறந்தவர்.
சந்திர வம்சத்தில் பிறந்த இவர் வம்சாவளியில் தான் பீஷ்மரின் தந்தை *ஷாந்தனு* பிறந்தார். பின்னர், பீஷ்மர் முதல் பாண்டவ – கௌரவர்கள் வரை எல்லோரும் பிறந்தனர்.

இந்த பரத: சக்ரவர்த்தியின் பெயரால் தான் பரத: கண்டம் என்ற பெயர் வந்தது என்பது பொதுவாக உலவும் கூற்று.
இப்படிப் பல்வேறு கூற்றுக்கள் இருப்பினும்,
பரத: கண்டம் என்ற பெயரே 800 ஆண்டுகளுக்கு முன் வரை நிலவி வந்தது.

அதன் பின்னரே இங்கு படை எடுத்து வந்தவர்கள், சிந்து நதி தீரத்தில் இருப்பதால் சிந்து தேசம் எனக் கூறி, பின்னர் அதுவும் இந்து தேசம் என்று மாறியது.
அதனால் இங்கே இருப்பவர்கள் இந்துக்கள் என்று ஆனார்கள். அதுவரை இங்கே பாரதத்தில், மதம் என்ற ஒன்று இல்லவே இல்லை.

நம் பாரத தேசம் ஆதி காலம் தொட்டே கல்வி, செல்வம், கலை, ஞானம், ஆன்மீகம் என எல்லா வகையிலும் மிகச் சிறந்து விளங்கியது. அதனால், உலகின் பல நாடுகளில் இருந்தும்
நமது பாரதத்தை நோக்கி, பலர் படையெடுத்து வந்தனர். நம்மை வெற்றி கொள்வதே அவர்களுக்கு உலகின் மிகப் பெரிய வெற்றியகக் கருதப்பட்டது.

மேலும் உலக மொழிகள் சில, நமது பாரதத்தை எத்தகைய பெயர்களால் குறிப்பிட்டனர் என்பது கீழே தரப்பட்டுள்ளது. ஆனால், இது தற்போதைய, 2000 ஆண்டுகளுக்கான விஷயங்கள்.
நாடுகளும் அவை பாரததிற்கு இட்ட பெயர்களும் :

French – Ynde / Inde
Greek – Indika / India
Early Sanskrit – Aryavartha
Later Sanskrit – Jambudveepa
Jain Text – Nabhi Varsha
China – Tianzhu
Japan – Tenjiku
Older Persian - Hindush
Persian – Juandu
Arab – Al-Hind
Sumerian – Meluhha / Melukhkha
(Tamil says as Melakham – Highland country)

நமது புராணம் மற்றும் இதிஹாஸங்கள் முழுவதிலும், பாரத வர்ஷத்தின் வரலாற்று வளர்ச்சி பற்றிய குறிப்புகள்
நாம் நினைத்தும் பார்த்திராத அளவு கொட்டிக் கிடக்கின்றன.

தற்போது பூமிக்குள் சென்று மறையும் ஸரஸ்வதி நதியானது, நம் வேதகால நாகரிகத்தின் இதயமாக, ஏகப்பட்ட இடங்களில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. அதன் குறிப்புகளின் படி, ஸரஸ்வதி நதியானது, பரத கண்டத்தில் தோன்றி, பாரத வர்ஷம் முழுதும்
நமது வேதகால நாகரிகத்தைக் கொண்டு சென்றது எனக் குறிப்புகள் உள்ளன.

“பாரதம் தாண்டியும் உள்ள பாரதத்தின் வேதகால நாகரிகம்” என்ற தத்துவம் இது பற்றிய பல கருத்துக்களைப் பற்றிப் பேசுகின்றது.

ஸரஸ்வதி நதியானது, மஹாபாரத காலத்தில் நிலத்துக்குள் சென்று மறைகின்றது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
வேதங்களிலும் மகாபாரதத்திலும் வெகுவாகப் புகழப்பட்டிருக்கும் ஸரஸ்வதி நதி, பூமியில் மறைந்ததற்கு புராணக் கதை ஒன்று உண்டு.

லக்ஷ்மி, ஸரஸ்வதி இருவருக்குள் யார் உயர்ந்தவர் எனும் வாக்குவாதம் ஒரு முறை வந்தது. அதற்கு பதில் வேண்டி அவர்கள் ப்ரும்மனை அணுக, அவர் லக்ஷ்மியே சிறந்தவள்
என்று தீர்ப்பளித்தார். இதனால் கோபமுற்ற ஸரஸ்வதி, அவரின் ப்ரும்மதண்டத்தைப் பறித்துச் சென்றாள். இதனால், படைப்புத் தொழில் நின்று போகவே, ப்ரும்மா விஷ்ணுவிடம் சரண் அடைந்தார்.

குறைதீர, 100 அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும், அல்லது காஞ்சியில் அதை ஒரு முறை செய்யவேண்டும் என்றார் விஷ்ணு.
விஷ்ணுவின் ஆக்ஞைப்படி யக்ஞம் செய்ய மனைவி உடன் வேண்டும் என்பதால் வ்யாஸ முனிவரிடம், ஸரஸ்வதியை சமாதானப் படுத்தி அழைத்து வர உதவி கோரினார் ப்ரும்மா.

வ்யாஸ பகவான் வேண்டிக் கேட்டும், ஸரஸ்வதியின் கோபம் குறையாததால் வர மறுத்து விட்டாள்.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!