My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

ப்ரும்மா அதனால், தனது மற்றொரு மனைவியாகிய ஸாவித்ரியின் துணையுடன் ஆஹுதி அளித்து யாகத்தை நடத்தினார். இதை அறிந்த ஸரஸ்வதி, பெருங்கோபத்துடன் அந்த ய்க்ஞத்தை அணைப்பதற்கு வேகவதியாகப் பாய்ந்து ஆறாக ஓடி வந்தாள். இதை உணர்ந்த ப்ரும்மா,
மீண்டும் விஷ்ணுவிடம் தஞ்சம் புக, பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணு வேகவதியின் குறுக்கே தடை போல படுத்துக் கொண்டார்.

கோபமாகப் பாய்ந்து வந்த வேகவதி அவரைக் கண்டதும் வெட்கமுற்று, அந்தர்வாகினியாக பூமிக்குள் மறந்து விட்டாள். இதுதான் ஸரஸ்வதி நதி பூமியில் மறைவதற்கான காரணம் என்று புராணத்தில் உள்ளது.
கதையைத் தாண்டி, ஆதாரம் நோக்கிடின்

1) ரிக்வேத நாதிஸ்துதி சூக்தம் அனைத்து முக்கிய நதிகளை விவரமாய்ச் சொல்கிறது. கிழக்கின் கங்கையிலிருந்து மேற்கின் சிந்து வரை தெளிவான புவியியல் வரிசைப்படி சொல்கிறது.

ரிக் வேதம் (10.75.5) கங்கை, யமுனை, ஸரஸ்வதி மற்றும் ஷுதுத்ரி எனும் வரிசைமுறையானது
சரஸ்வதியை யமுனைக்கும் சட்லெஜ்ஜிற்கும் இடையே பொருத்துகிறது. அது கக்கார் நதியினை (ஸரஸ்வதி நதியாக) அடையாளப்படுத்துவதில் தொடர்ச்சியுடன் காணப்படுகிறது.

2) ரிக் வேதம் (3.23.4) இன் பாடல் ஸரஸ்வதி நதியை த்ருசத்வதி நதியுடனும் அபயா நதியுடனும் இணைத்துக் கூறுகிறது.
ரிக் வேதம் (6.52.6) ஸரஸ்வதி நதிகளால் (சிந்துபி) பெருக்கமடைவதாக (பின்வாமனா) விவரிக்கிறது.

3) யஜூர் வேதத்தின் (34.11) வாஜசனேயி - ஸம்ஹிதாவின் துணை அத்தியாயத்தில், ஸரஸ்வதி சிந்துவைத் தெளிவாகப் பொருள்படுத்தும் சூழலில் குறிப்பிடப்படுகிறது:
"ஸரஸ்வதியை நோக்கி தங்களது வழியில் வேகமாக ஐந்து நதிகள் பாய்கின்றன; ஆனால் பின்னர் நிலத்தில் ஐந்து மடிப்புக்களோடு கூடிய ஸரஸ்வதி நதியாக ஆகின்றன".

இடைக்கால **ஆய்வுரையாளர் உவாதா** விற்கு இணங்க, ஸரஸ்வதியின் ஐந்து கிளை நதிகள் பஞ்சாபின் த்ரிஷத்வதி, சதுத்ரி (சட்லெஜ்), சந்த்ரபாகா (செனாப்),
விபாஸா (பியாஸ்) மற்றும் ஐராவதி (ராவி) ஆகியனவாகும்.

4) *ஸ்கந்த புராணம்*, ”ஸரஸ்வதி நதியானது பிரம்மாவின் நீர்க் குவளையில் இருந்து உருவாகிறது, மேலும் இமயத்தின் பிளாக்ஸாவில் இருந்தும் பாய்கிறது, அதன் பிறகு அது மேற்கில் கேதாராவில் திரும்புகிறது,
மேலும் நிலத்திற்கு அடியிலும் கூடப் பாய்கிறது” என்று குறிப்பிடுகிறது.

5) *மேகதூதத்தில்* தெய்வக்கவி *காளிதாஸன்*, *மேகங்களை முதலில் வடக்கில் இமயம் தொட்டுப் பல பகுதிகளுக்கும் செல்லச் சொல்கிறார். பின் குருக்ஷேத்திரத்திற்கு விஜயம் செய்துவிட்டு, ஸரஸ்வதி நீரைப் பருகச் சொல்கிறார்.
அவர் எழுதிய *அபிஜான ஸாகுந்தல*த்திலும், வெறுமையாகிப் போன தன் வாழ்வைப் பற்றி ஒரு அரசன், ”அந்தர்வாகினியான ஸரஸ்வதி போல் என் வாழ்வு ஆனதே”* என்பதாகக் கூறுகிறார்.

6) *பெஹோவா*வில் குர்ஜா – ப்ரதிஹார வம்சத்தைச் சேர்ந்த *மிஹிர போஜன்* என்ற அரசனின் *கல்வெட்டு* கிடைத்துள்ளது.
அதில் *ப்ருதுடாகா* நகரம் *ப்ராச்சி ஸரஸ்வதி* (கிழக்கு ஸரஸ்வதி) க்கு அருகில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

9 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு, ஸரஸ்வதி நதி பெஹோவா வரையிலாவது ஓடியிருக்கிறது என்பதற்கு ஆதாரப் பூர்வமான சான்று.
7) *மைக்கேல் டானினோ* என்ற ஆசிரியர் ஸரஸ்வதியைப் பற்றிய தமது நூலில், *வேத சாஸ்திரங்கள் கி.மு. 3,000 த்தில் இயற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்*.

மேலும் மொழியியல், வானவியல், மனித இனவியல் என பல ஆராய்ச்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
ஸரஸ்வதி நதி சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு வற்றியிருக்கலாம் என்பதால், ஸரஸ்வதி நதியைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட
1) ரிக் வேதம் 2) மஹாபாரதம் முதலிய வேத இலக்கியங்கள் யாவும் அக்காலத்திற்கு முன்பாகவே இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறுதியிட்டுச் சொல்கிறார்.

ஆதாரம் கீழே 👇
Source : Writings of Mr. Chakrapani Doss.

வேதகால புவியியல் தரவுகளின்படி, அரபிக் கடல் அப்போது இல்லை. மேலும், அந்நிலப் பரப்பானது, தற்போதைய இந்தியாவில் இருந்து ஆஃப்ரிக்கா வரை தொடர்ந்து பரந்திருந்தது.

நாம் மேற்கண்ட அதே வலிமை வாய்ந்த ஸரஸ்வதி நதியானது, ஹிமாலயத்தில் தொடங்கி,
4500 மைல்கள் கடந்து ஆஃப்ரிக்காவை அடைந்து, அதன் பின்னரே சமுத்திரத்தில் கலந்தது. அந்நாட்களில் இதுவே உலகின் மிக நீளமான நதி ஆகும்.

மூன்று பெரும் நதிகளான கங்கை, யமுனை, ஸரஸ்வதி ஆகியவற்றில், கங்கையும் யமுனையும் இன்றும் கரைபுரண்டு பாய்ந்து கொண்டிருக்கின்றன.
ஸரஸ்வதி *தற்போதைய ஹரியானா*வில் உள்ள *ஸிர்ஸா* என்னும் இடத்தில் பூமிக்குள் மறைகின்றது.

ஸரஸ்வதி என்னும் நதி இருந்தது ஒரு கட்டுக் கதை என்றே தற்காலத்தில் கூறப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய செயற்கைக் கோள் ஆராய்ச்சிகள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் அது அளித்த புவியியல் தடயங்கள்,
ஸரஸ்வதி நதி என்னும், வேதகால புண்ணிய நதியின் இருப்பினையும், அது பாரத வர்ஷத்தில் பரவி இருந்த பகுதிகளையும், அதன் கால அளவையும், தற்போது துல்லியமாக நிரூபித்து உள்ளது.

இது பற்றி மேலும் பல ஆச்சரியமூட்டும் தகவல்களும் உள்ளன. இதன் முழு விபரங்களையும் கீழே உள்ள தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Source :

books.google.co.in/books?id=aq1dD…

References :
The Origin of Human Past – Children of Immortal Bliss Author: V Lakshmikantham, Professor of Mathematics, Florida Institute of Technology, USA

இப்போது தங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றி இருக்கலாம்.
பாரத தேசத்தைப் பற்றி விவரிக்கையில் எதற்காக இந்த ஸரஸ்வதி நதி பற்றி இத்தனை விளக்கம்? என்று.

ஒரு நாட்டின் பூர்வ புவியியல் அமைப்பை, அந்நாட்டின் நதிகளைக் கொண்டே கணக்கிடுவர். அவ்வாறு இருக்கையில், ஸரஸ்வதி நதியின் விபரங்கள் பற்றிச் சொல்வது,
அந்த நாடு பற்றிய தகவல்கள் உண்மை என்பதை நிரூபிப்பதற்காகவும், அதன் பெருமையைப் புரிந்து கொள்வதற்காகவும் தான் இங்கே தரப்பட்டது.

எனவே முதலில் இந்தப் புண்ணிய பூமியாம், இறைவன் அவதாரங்கள் எடுத்த, ஞானிகள் மற்றும் சித்தர்கள் வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்
ஞான பூமியாம் பாரதத்தில் பிறந்ததற்கு நாம் பெரும் மகிழ்ச்சி கொள்வோம்.

🇮🇳ஜெய் பா:ரத்🇮🇳

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!