My Authors
Read all threads
"முத்து வணிகர்கள்..."

சங்க காலத்திற்கு முன்பிருந்தே மன்னார் வளைகுடாவில் எடுக்கப் பெற்ற முத்துக்கள் கிரேக்க, ரோமானிய நாடுகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கின.

இதற்கு மெகஸ்தனிஸ் முதலான வெளிநாட்டவர் குறிப்புகள், சங்க இலக்கியங்கள், பாளி மொழி நூலான மகாவம்சம் போன்றவை சான்று தருகின்றன
சங்க இலக்கியங்கள் பாண்டிய நாட்டை ஒட்டிய கடல் பகுதியில் #முத்துக்குளித்தல் பற்றியும், இத்தொழில் புரிந்த #பரதவர்கள் பற்றியும் மிகுந்து குறிக்கின்றன.

அறுபதுகள் (1960-69) வரை மன்னார் வளைகுடாவில் #முத்துக்குளித்தல் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது!
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி செயற்கையாக முத்துச்சிப்பி வளர்க்கும் தொழில்நுட்பம் இந்தியாவிலும், பிறநாடுகளிலும் சிறப்பாக ஐப்பானிலும் வளர்ந்த காரணத்தினால் மரபுவழி #முத்துக்குளித்தல் தற்போது நடைபெறுவதில்லை.
தமிழகக் கடற்பகுதியில் முத்துக்குளித்தலின் வரலாறு, முத்துக்குளிக்கும் தொழில்நுட்பம், ஆளுவோர் குறித்த ஆய்வுகள் ஏற்கெனவே செய்யப் பெற்றுள்ளன.

எனினும், "முத்து வணிகர்கள்" பற்றி தனித்த ஆய்வு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அம்முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.
இக்கட்டுரைக்குச் சான்றுகளாக சங்க இலக்கியங்கள், வெளிநாட்டவரின் பயணக்குறிப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய விடுதலைக்கு முன்னர் இலங்கையிலும் இந்தியக் கடற்பகுதியான மன்னார் வளைகுடாவிலும் #முத்தெடுத்தல் தொழிலில் ஈடுபட்டோர், இரு நாடுகளிலும் வாழ்ந்த #பரதவர்கள் ஆவர்.
மேலும் இலங்கைப் பகுதியில் #முத்துக்குளித்தல் நடைபெறும்போது இந்தியக் கடற்பகுதியில் நடைபெறாது.

அதுபோல் இந்தியப் பகுதியில் #முத்துக்குளித்தல் நடைபெறும்போது இலங்கைப் பகுதியில் நடைபெறாது.

எனவே, இருபகுதியிலும் வாழ்ந்தோர் இத்தொழிலில் ஒன்றாக ஈடுபட்டனர்.
ஆகையால், இலங்கைப் பகுதியில் நடைபெற்ற #முத்துக்குளித்தல் பற்றிய சான்றுகளும் இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களில் #முத்தெடுத்தல் குறித்த செய்திகள் அதிகம் காணப்பட்டாலும் முத்து வணிகம் செய்தோரைப் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை.
ஆனால், பொ.மு 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த #மாங்குளம் தமிழி கல்வெட்டில் முத்து வணிகரைப் பற்றிய குறிப்பு உள்ளதாகக் கருதலாம். கல்வெட்டில் உள்ள,

“வெள்அறைய் நிகமது
காவிதிஇய் காழிதிக அந்தை”

என்ற வரிகளில் காழ் என்பதை முத்து என்றும், அதிக என்பதை கண்காணிப்பாளர் (அதிகாரி) என்றும்...
வெள்ளறையைச் சார்ந்த வணிகனான முத்துக்குளித்தலின் கண்காணிப்பாளனைக் குறிப்பதாகக் கொள்கிறார், ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன்.
கீழக்கரையான நினைத்ததை முடித்தான் பட்டினத்தில் 11-ஆம் நூற்றாண்டு வரை,

“பதினெண்விசையத்து திசையாயிரத்து ஐநூற்றுவர்”

என்னும் வணிகக் குழு, முத்து வணிகத்தில் ஈடுபட்டு அவற்றின் வருமானத்தில் ஒரு பகுதியை அங்குள்ள கோயிலுக்கு அளித்துள்ளனர்.
பண்டைய போசள நாட்டின் மையப்பகுதியில் (தற்போதைய கர்நாடகா) #அரிசிக்கெரே என்னுமிடத்திலுள்ள,

12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெட்டப்பட்ட கல்வெட்டில் “சட்டி செட்டி” என்னும் பெயருடைய #ஐயவொளே வணிகக்குழுவின் வணிகர் முத்து, குதிரை, யானை ஆகியனவற்றை வணிகம் செய்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது!
13-ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு வருகைபுரிந்த "மார்கோ போலோ" (1260-1300) தனது குறிப்பில்,

#காயல் துறைமுகப்பகுதியில் நடைபெற்ற முத்துக்குளித்தலின் போது வணிகர்கள் பல குழுக்களாகப் பிரிந்து, முத்துக்குளிப்போரை வாடகைக்கு அமர்த்தி, சிப்பிகளை வெளிக்கொணர்ந்தனர் எனக் கூறியுள்ளார்.
அவ்வாறெனில், எடுத்த முத்துக்களின் ஒரு பகுதியை அரசுக்கு அளித்து பிறவற்றை வணிகக் குழுக்கள் வணிக நோக்கிற்காக எடுத்துச் சென்றிருத்தல் வேண்டும். ஆனால் எவ்வகை வணிகக் குழுக்கள் முத்துக்களை வணிகம் செய்தன என்பது குறிப்பிடப்படவில்லை.
சீனப் பயணி வாங்-த-யுவான் (பொ.பி 1349) தமது குறிப்பில், மன்னார் வளைகுடாவில் எடுக்கப்பட்ட முத்துக்கள் சல்லடைகளில் அளவு வாரியாகப் பிரிக்கப்பட்டதாகவும், அரசு அலுவலர்கள் இம்முத்துக்களுக்கு வரி விதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்!
பொ.பி 1518-ஆம் ஆண்டு தூத்துக்குடிப் பகுதிக்கு வருகைபுரிந்த போர்ச்சுகீசிய பயணி "தூயர்த் பார்போசா" (Duarte Barbosa), #காயல் பகுதி முத்துக்குளித்தலில் 'செட்டி' எனப்படும் வணிகர்களும், இசுலாமிய வணிகர்களும் வணிகத்தில் பங்கு வகித்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
"சீசர் ஃபிரடெரிக்" (Caesar Frederick, பொ.பி.1563-1581) தமது குறிப்பில்,

செட்டி (Chitti) என்னும் சான்றோர் (Learned Men) முத்துக்களை சல்லடைகளைக் கொண்டு பிரித்து எடை, அழகு , திடம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு நான்கு வகைகளாகப் பிரித்ததாகக் குறிப்பிடுகிறார்.
இம்முத்துக்களை விலைக்கு வாங்க பல நாடுகளிலிருந்து வணிகர்கள் அங்குக் கூடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, முத்துக்களைத் தரம் பிரிக்கும் செயலையும், வணிகத்தையும் இக்குழுக்களே செய்திருக்க வேண்டும்.
பெட்ரோ தெய்செய்ரா (Pedro Teixeira பொ.பி1586) தூத்துக்குடிப் பகுதியில் முத்துக்களை வாங்க வணிகர்கள் பல பகுதியிலிருந்து கூடியதைக் குறிப்பிட்டுள்ளார்.

தேவர்னியர் (1631-1668) மன்னார் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவில் நடைபெற்ற முத்துக்குளித்தல் நுட்பத்தை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்
இவர் கோவாவிற்கு வருகை புரிந்தபோது அங்கு மன்னார் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடா பகுதியிலுமிருந்து வந்த முத்துக்கள் விற்பனை செய்யப்பட்டமையையும் குறித்துள்ளார்.
இலங்கைப் பகுதியின் #முத்துக்குளித்தல் பற்றிக் குறிப்பிடும் "ரிபைரோ" (Rebeiro பொ.பி1685), முத்துக்குளிக்கும் காலங்களில் வணிகர் ஒருவர் ஓர் ஆண்டில் எடுக்கப்படும் முத்துக்களுக்கு ஓட்டுமொத்த குத்தகைக்கு எடுத்து அதனை பிற வணிகர்களுக்கு விற்பனை செய்வர் எனக் கூறியுள்ளார்!
ஃபாதர் மார்டின் (Father Martin, பொ.பி 1700) என்னும் யூதப் பாதிரியார் தூத்துக்குடிப் பகுதியில் #முத்துக்குளித்தல் தொடங்கும் முன்னரே வணிகர்கள் படகின் உரிமையாளருக்கும், முத்துக் குளிப்போருக்கும் முன்பணம் அளித்து பதிவுசெய்வர் எனவும் அவ்வாண்டில் முத்துக்கள் சரிவரக் கிடைக்கவில்லையெனில்
வணிகர்கள் மிகுந்த பணத்தை இழந்துவிட வாய்ப்புண்டு எனவும் குறிப்பிடுகிறார்.

மேலும் இம்முறையைக் கையாண்டு டச்சுக்காரர்களும் இவ்வணிகர்களுக்குப் போட்டியாகத் தொழிலில் பொ.பி 1700-ஆம் ஆண்டு நடந்த முத்துக் குளித்தலில் ஈடுபட்டனர் எனத் தெரிகிறது.
18-ஆம் நூற்றாண்டில் பிரஞ்சு பாண்டிச்சேரி அரசின் ஆளுநரின் உதவியாளராயிருந்த ஆனந்தரங்கப் பிள்ளையவர்களின் நாட்குறிப்பில் சில செய்திகள் கிடைக்கின்றன.

1749-ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 'சின்னவாண்ட செட்டி' என்பவர் ஆனந்தரங்கப் பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில்,
அவ்வாண்டு முத்துக்குளித்தலில் அதிக அளவிலான முத்துக்கள் கிடைத்தாகக் குறிப்பிட்டுள்ளதை தமது நாட்குறிப்பில் குறித்துள்ளார்.

அச்சமயம் பிரெஞ்சு ஆளுநர் முத்துக்களை வாங்க விரும்பியபோது பின்நாட்களில் விலை குறையும் என்பதால் தற்சமயம் முத்துக்கள் வாங்க வேண்டாமென தான் கருத்துரைத்ததாக...
குறித்துள்ளார்.

இலங்கை முத்துக்குளித்தலில் கண்காணிப்பாளராய் இருந்த ராபர்ட்சென் என்ற ஆங்கிலேயர் 1799-ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்துக்குளித்தலை 'குண்டப்ப செட்டி' என்பவர் ஓட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்ததாகவும், மேலும் இவரே பலகாலம் தொடர்ந்து ஆளுமை செலுத்தி வந்ததாகவும் குறிப்பிடுகிறார்
அதே இலங்கைப் பகுதியில் 1865-ஆம் ஆண்டு கண்காணிப்பாளராய் இருந்த வான் (Vane), முத்துக்களை விலைக்குப் பெறுவதில் இந்து சமய வணிகர்களான செட்டிகளுக்கும், இசுலாமிய வணிகர்களுக்கும் கடும் போட்டி நிலவியதைக் குறித்துள்ளார்!
மேற்கண்ட சான்றுகளின் அடிப்படையில் முத்துக்களை வணிகம் செய்தோரைப் பற்றி பின்வரும் முடிவுகளை எட்டலாம்.

௧) முத்துக்குளிக்கும் தொழிலில் ஈடுபட்டோர் மற்றும் அப்பகுதியை ஆட்சி செய்தோர் இவ்வணிகத்தை மேற்கொள்ளவில்லை.

௨) முத்துக்கள் வெளிக்கொணரப்பட்ட பின் அவற்றை விலைக்குப் பெற்று,
பிற இடங்களில் வணிகம் செய்வதை வணிகக் குழுக்களே மேற்கொண்டிருந்தன.

௩) #கீழக்கரை மற்றும் கர்நாடக மாநிலம் #அரிசிக்கெரே கல்வெட்டுக்கள் #ஐநூற்றுவர் (ஐநூற்றுவர் > ஐயவொளெ > அய்யப்பொழில்) வணிகக் குழுவைச் சேர்ந்த வணிகர்கள் முத்து வணிகம் மேற்கொண்டனர் என்பதைப் புலப்படுத்துகிறது.
௪) முத்துக்களை மட்டும் வணிகப் பொருளாகக் கொண்டிருந்த குழுக்கள் இருந்திருக்கமுடியாது

௫) உள்நாட்டில் மட்டுமன்றி பிற நாடுகளுக்கும் இவை எடுத்துச் செல்லப்பட்டு வணிகம் மேற்கொள்ளப்பட்டதால் இவற்றை கடல் கடந்து வணிகம் செய்யும் குழுக்களே மேற்கொண்டிருத்தல் வேண்டும்.
௬) இம்முத்துக்களை வெளிக் கொணர்ந்த பின்னர் இதை வாங்குவதற்கு வணிகர்களிடையே போட்டி இருந்தமையை சான்றுகள் வாயிலாக நன்கு அறிய முடிகிறது.

-நன்று-
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!