My Authors
Read all threads
திரு சிவகுமார் அவர்களே,

ஊரெல்லாம் ராமாயணம் பேசுனீங்க மகாபாரதம் பேசுனீங்க இந்து மதம் மேலயும் அதன் சம்பிரதாயம் மேலயும் உங்களுக்கு அவ்வளவு ஆர்வம் அக்கறைனு சந்தோஷமா இருந்துச்சு,

திருவண்ணாமலை கிரிவலம் போகும்போது உங்க சொற்பொழிவு Cassette எல்லாம் வாங்கிட்டு வந்து போட்டு கேட்டுருக்கேன்
சூர்யா சார் நடத்தும் அகரம் பவுண்டடேஷன் மூலம் செய்யும் நற்காரியங்களால் அவர் மீது மதிப்பு மரியாதையை வந்தது,

உங்க வடநாட்டு மருமகள் எவ்வளோவோ பேசிட்டாங்க அதுக்கு சூர்யா சார் குடுத்த விளக்கமும் தான் தாங்கிக்க முடியல,

ஜோத்பூர் அரண்மனையும் தஞ்சைப் பெருவுடையார் கோவிலும் ஒண்ணுங்களா?
அரசன் கண்ட பொம்பள கூட படுத்த அரண்மனையும் புனிதமான கோவிலும் ஒண்ணுங்களா?

உங்க மருமக ஜோதிகா மகராஷ்ட்ரா அரசு ஆஸ்பத்திரி பார்த்ததே இல்லியா?

அங்கெல்லாம் அரசு ஆஸ்பத்திரி பார்க்காம தஞ்சாவூர்ல பாத்தாகளோ..?

சூர்யா சார் விளக்கத்தில் இது கோவில்களுக்கு மட்டுமல்ல...
மசூதி மற்றும் சர்ச்க்கும் பொருந்தும் சொல்லவேண்டியது தானே,

மதங்களை கடந்த மனிதன் என்றால்,

இந்துமத பெருமையினை நிலைநாட்டிய விவேகானந்தர் கோவிலுக்கு செல்லாதே என சொன்னாரா?

அணுவிலே சிவனை கண்டேன் என சொன்ன திருமூலர் அன்பே சிவம் என்றுதான் சொன்னாரே தவிர, சிவனை வழிபடாதே என எங்கு சொன்னார்.
வடக்கே ஒரு திருகயிலை போல தெற்கே கயிலையாக அமைந்து அருள் புரிகின்றது அந்த சிவனருள் உடையார் ஆலயம்

சிவபாதசேகரன் எனும் இராஜராஜ சோழன் ஒரு சிவனடியார்

கண்ணப்ப நாயனார் கண்ண கொடுத்த மாதிரி

சிறுதொண்ட நாயனார் மகனை கொடுத்தமாதிரி

தன் அரசாங்கத்தோட மொத்த சொத்தையும் கொடுத்து கோவில் காட்டினார்
அத ஊர்,உலகமே பார்த்து வணங்குது, ஆச்சரியபடுது,கன்ணீர்விடுது

நாயன்மார்கள் 63 பேர் அல்ல சிவபாதசேகரனையும் சேர்த்து 64

அந்த ராஜராஜ சோழனும் ஒரு நாயன்மார், சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அவரும் ஒரு நாயனார்.

எல்லா நாயன்மாரும் தங்களிடம் என்ன இருந்ததோ அதை எல்லாம் சிவனுக்கு கொடுத்தார்கள்.
ராஜராஜ சோழன் தன் சாம்ராஜ்யத்தில் எதெல்லாம் இருந்ததோ அதை எல்லாம் சிவனுக்கு கொடுத்தான்

இத்தனை ஆண்டுகளாக அவன் பெயரும் அவன் ஆலயமும் நிலைத்து நிற்பது அந்த பக்தியில்தான் அவனின் சிவன் தொண்டில்தான் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக எதிரிகளுக்கு சவால் விட்டு நின்று கொண்டிருக்கின்றான் இராஜராஜன்.
#திருட்டுதிமுக போல
துரோக கோஷ்டிகளை அடையாளம் காட்டுகின்றது அவன் கட்டிய ஆலயம்

யாரெல்லாம் உள்ளொன்று புறமொன்று வைத்து கொண்டு அதிகார தோரணையில் அங்கு நுழைந்தார்களோ அவர்களுக்கு அழிவை தவிர ஏதுமில்லை, யாரெல்லாம் சைவத்தை சரிக்கலாம் என எழும்பினார்களோ அவர்களெல்லாம் காணமாலே போனார்கள்,
இந்துமதத்தை எதிர்த்தவரை எல்லாம் பணிய வைத்து,யாரெல்லாம் சைவம் காக்க கிளம்பினார்களோ அவர்களுக்கெல்லாம் எந்நாளும் காவல் அவன் புலிகொடியும் அவன் ஆலயமும்.

இன்றும் ஒவ்வொரு சைவ விரோதியை அடையாளம் காட்டி கொண்டே இருக்கின்றது அந்த சிவனடியார் எனும் சிவபாதசேகரன் கட்டிய பெருவுடையார் ஆலயம்.
ஜெயில்சிங், எஸ்.டி.சர்மாவில் ஆரம்பித்து பசுவதையினை தடுக்க இந்திரா காந்தி வரை இங்கு வந்து சிக்கினார்கள்,

ஆம் வடக்கத்திய சந்நியாசிகளின் குரலை அசட்டை செய்த இந்திரா, சோழன் ஆலயத்தில் கால் வைத்ததும் அதற்கான தண்டனையினை பெற்றார்.

மறைமுகமாக தான் ஒரு இந்து என ஒப்புகொண்ட எம்.ஜி.ஆர் அதை
பகிரங்கமாக ஒப்புகொள்ள தயங்கினார், தஞ்சை கோவிலுக்கு சென்றாலும்
திறுநீறு இட மறுத்தார் அல்லது மறைத்தார்

அதன் பின் சிக்கலில் வீழ்ந்தார் மறைந்தார்

சாணக்கிய தலைவர் கர்ம பலன் நிரம்ப வாய்த்த கருணாநிதி முதல்முறை சென்று திறுநீறு இடாமல் சும்மா சுற்றிவந்து பெரும்
சிக்கலை சந்தித்தார்.
பின் சதயவிழா என சென்று மீளா சிக்கலில் சிக்கி அத்தோடு அஸ்தமனமானார் கருணாநிதி, ஆ.ராசா, கனிமொழி, கோ.சி.மணி,
பழனிமாணிக்கம் இவர்கள் கதை ஊர் அறியும்,

முழு நாத்திக கலைஞன் என எவனுமில்லை, கருணாநிதியே கடைசியில் ராமானுஜரிடம் சரணடைந்தார்

நாத்திக வீம்பு கொள்கைகளின் சாபம் அவர்களை அழித்தது,
நிச்சயம் N.S.கிருஷ்ணன், M.R ராதா ஆகியோரின் திறமையிலும் புகழிலும் 100க்கு ஒரு பங்கு கூட இக்கால நடிகர்கள்
வரமுடியாது,ஆனால் அவர்கள் அழிந்தார்களே எப்படி?

ஆம்,இங்கு வாழ்ந்த ஆத்திகன் யார்?

நடிகனோ,அரசியல்வாதியோ நாத்திகம் பேசிவிட்டு வாழமுடியாது வெல்லவும் முடியாது நிலைக்கவும் முடியாது
கீதையில் கண்ணன் சொல்வார்.

அர்ஜூனா நீ உயர்ந்த இடத்தில் இருக்கின்றாய் எல்லோரும் உன்னை கவனிக்கின்றனர் உயர்ந்த இடத்தில் இருப்பவன் நல்லதை சொல்ல வேண்டும் நல்லதை செய்ய வேண்டும்.

அவன் தவறான வழிகாட்டினால் அது மாபெரும் பாவம் என்று,
அப்படி N.S.கிருஷ்ணன், M.R.ராதா,கமலஹாசன் என ஏகபட்ட உதாரணங்களை சொல்லலாம், இவர்கள் நிச்சயம் திறமையானவர்கள்
ஆனால் ஆணவமும் மனமறிந்து செய்த பாவமும் அவர்களை சரித்தன‌,

ஆனால் எம்.ஜி ஆர்,ஜெயலலிதா போன்றோர் அழியா இடத்தில் உயரமாகவே இருந்தார்களே எதுவும் அவர்களை அசைக்க முடியவில்லையே எப்படி?
நம் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் இன்னும் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றார் எப்படி?

எத்தனையோ இசை அமைப்பாளர்கள் வந்து ஓடிய தமிழகத்தில் இளையராஜாவும் A.R ரகுமானும் அசையாமல் இருக்கின்றார்களே எப்படி?

பாடகர்களில் பாலசுப்பிரமணியமும் ஜேசுதாசும் அழியா கலைஞர்களாக இருகின்றார்களே எப்படி?
கண்ணதாசனும் வாலியும் காலமும் நிலைத்தது போல் வைரமுத்துவால் நிலைக்க முடியவில்லையே எப்படி?

இந்து எதிர்ப்பு என பேசிவிட்டு இங்கு நிலைத்த கலைஞன் எவன்?

எந்த கொம்பபனும் அப்படி நிலைத்ததில்லை வெட்டபட்ட மரம் ஓசையோடு வீழ்வது போல ஆடிவிட்டு விழுவான் அதன் பின் அவன் எழுச்சி சாத்தியமில்லை.
அதுதான் கடவுளின் கணக்கு திறமையால் மேலே செல்லும் ஒருவன் எல்லோராலும் கவனிக்கபடும் ஒருவன் நிச்சயம் நல்லதை
சொல்லி கொடுக்க வேண்டும், மாறாக கடவுள் இல்லை என பேசினால் அவன் வீழ்வான்

சும்மா அதிகார தோரணையில் சென்று திறுநீறு பூசி சிவனை வணங்காமல் பொழுது போக்குக்கு சுற்றிவந்தால்
சும்மா விடுவதில்லை ராஜராஜ சோழன்,

அவர்களின் சுயரூபத்தை தோலுரித்து காட்டுவான் எம் இராஜராஜன்.

அவன் தாள்பணிந்து வாசலிலே வணங்கி, நேரே சென்று நெடுஞ்சாண் கிடையாய் வணங்கி திறு நீறிட்டு நின்றால் அந்த தெய்வம் புன்னகைக்கும் வாழ்த்தி அனுப்பும்.

மாறாக வணங்க மாட்டேன்,திறுநீறு பூசமாட்டேன்,
இந்த ஆலயம் என்னை என்ன‌ செய்யும் என மதம் பிடித்து எதிர்த்து நின்றால்,புறம் தள்ளினால் அவர்களுக்கு பெரும் சிக்கலும் எழும்ப முடியா அழிவு நிச்சயம்.

இது வரலாறு ஆயிரம் வருடமாக சொல்லும் உண்மை இது, சத்தியமான உண்மை இது
நாயனாராக சைவம் காக்கும் ராஜராஜ சோழனின் விளையாட்டு,
யாரெல்லாம் தமிழகத்தில் சைவத்தை தொலைத்துவிடலாம் என வந்தாலும் கோவிலை தொட்டு அல்லது பேசி உளறி சிக்கி கொள்வதெல்லாம் சிவனின் விளையாட்டு,

சைவ எதிர்ப்பு திருட்டு கோஷ்டிகளுக்கு சவால் விட்டு அவர்கள் முகதிரையினை கிழித்து அடேய் உங்களால் ஒன்னும் பிடுங்க முடியாது என சவல் விட்டு நிற்ப்பான்.
எந்த மன்னனும் அழிக்க முடியாமல் உயரத்தில் இருந்து தமிழகத்தின் சைவத்தை காக்கும் அந்த ஆலயம் எக்காலமும் இங்கு காவல் இருக்கும்.

ராஜராஜ சோழன் எனும் மகத்தான சிவனடியாரின் அற்புதமான காவல் அரண் அது,

அவன் வாழ்ந்த நாட்களில் மட்டுமல்ல இறந்து ஆயிரம் ஆண்டுகளாக சைவ தொண்டில் நின்று அதை காக்கும்
ராஜராஜன் என்னும் சிவனடியார் நாயன்மார்களில் தலை சிறந்தவர்.

சைவம் இங்கு வாழ கால காலத்துக்கும், அதன் பெருமை நிலைக்க,அதன் எதிர் சக்திகளை எல்லாம் அடையாளம் காட்டி
களையெடுக்க வைக்க ராஜராஜன் எனும் சிவனடியாரின் ஆலயம் இங்கு பெரும் பணி புரிகின்றது,
அடுத்த 100 வருஷம் கழித்து உங்களையும் உங்க பிள்ளைகள்,மருமகளை உலகத்துக்கு தெரியுமா?

இராஜராஜனும் ,தஞ்சை கோவிலும் சிவன் மேல அவர் வச்ச பக்தியும் இன்னும் 1000 வருடங்கள் கடந்தும் உலகம் அறியும் அந்த கோவில் வெறும் கோவில் இல்ல
நம்ம நாகரீகம்,
நம்ம பக்தி,
நம்ம வாழ்வு,
நம்ம அடையாளம்.
தோல்வியே பார்க்காத இராஜராஜ சோழன் தன்னை சிவபாதசேகரன் என்று சொல்லிக் கொள்வதில் பூரித்துப் போன மிகச்சிறந்த
சிவனடியார்..

தஞ்சை ஆலயத்தின் ஒவ்வொரு கல்லிலும் அவன் வாழ்கின்றான்,அவனின் சிவ பக்தி வாழ்கின்றது, அது எக்காலமும் இங்கு
சைவத்தை காக்கின்றது, காலமெல்லாம் காக்கவும் போகின்றது,
தமிழகத்தில் மாபெரும் அரசியல்வாதிகளும் கலைஞர்களுமே நாத்திகம் பேசி எப்படி சரிந்தார்ககள் என்று நாடறியும்,

அதை காலம் காட்டும்,அதுவும் மிக விரைவில் காட்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி🙏எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏
சிவபாதசேகரா போற்றி🙏
இராஜராஜ சோழா போற்றி🙏

நன்றி-FB,Google
#SSR
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with SSR

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!