Avvai 🇮🇳 Profile picture
May 10, 2020 15 tweets 3 min read Read on X
கலைஐஞரின் மறுபக்கம்-கண்ணதாசன் பார்வையில்(பகுதி-3)

கண்ணதாசன் “வனவாசத்தில்” தன்னை ‘அவன்’ என்றே கூறிப்பிட்டுள்ளார்.(1/15)
#வனவாசம் #கண்ணதாசன் Image
போலி சீர்திருத்தவாதிகள்:

அந்த அரசியலிலேயே அவன் ஊர்ந்து சென்றாலும் சில விஷயங்களில் அவன் எச்சரிக்கையாக இருந்தான்.கழகத்திற்கு என்றே ஒரு தனித்தமிழ் நடை உண்டு.அண்ணாத்துரையின் நடையை பின்பற்றி,எல்லோருமே ஒரே மாதிரி ‘துள்ளு தமிழ்’ எழுதுவார்கள்.(2/15)
எழுதியவரின் பெயரை எடுத்துவிட்டுப் பார்த்தால் யார் எழுதியதென்றே தெரியாது.கதை ஒன்றில் தொடங்கி,பிறகு அதை கட்டுரையாக விரிக்கும் அலுத்துப்போன முறையை அனைவருமே கையாண்டார்கள்.
அவற்றில் எதையும் அவன் படிப்பதில்லை.காரணம் அந்த நோய் தன்னையும் பற்றிக்கொள்ளக்கூடாது என்பதுதான்.(3/15)
தன்னுடைய எழுத்துக்களை அவன் படிப்பதில்லை என்பதிலே அவனுடைய நண்பர் கருணாநிதிக்கு அசாத்திய கோபம் வரும். ஒருநாள் அவர்,புதிதாக வெளியாகியிருந்த தனது இரண்டு புத்தகங்களை எடுத்து அவன் முன்னால் போட்டு “இதையெல்லாம் படியய்யா” என்றார்.ஒரு புத்தகத்தை விரித்தான்.நல்ல பண்பாடு உள்ள கதை அது.(4/15)
“வாழ முடியாதவர்கள்” என்ற தலைப்பில் வெளியாகிருந்தது. கதையென்ன தெரியுமா?விவரமாக சொல்கிறேன்.
மனைவியை இழந்த ஒரு போலீஸ்காரன்.வறுமை தவழ்ந்து விளையாடும் சின்னஞ்சிறு வீடு அவன் குடியிருப்பு.மாண்டுபோன அவன் மனைவி சும்மா போகக்கூடாதென்று ஒரு மகளை விட்டுப் போயிருந்தாள். (5/15)
கதையின் ஆரம்பத்திலேயே அந்த மகள்,தளதளவென்று வளர்ந்து பளபளவென்று மெருகேறி கவர்ச்சிப் பாவையாக விளங்குகிறாள். சின்னஞ்சிறிய வீட்டில் தன்னந்தனியாக இருக்கும் அவள் திருமணத்திற்காக காத்துக் கிடக்கிறாள்.இரவுகள் வந்துபோகின்றன.திருமணம் வரவில்லை.(6/15)
ஒவ்வொர் இரவிலும்,தந்தையும் மகளும் மட்டுமே அந்த வீட்டில் துயில்கின்றனர்.அவளோ கல்யாணமாகாதவள்.அப்பனோ மனைவியை இழந்தவன்.தந்தை மகளையே மனைவியாக்கிக் கொள்கிறார்.
பண்பாடற்றவர்களெனக் கருதப்படும் வெளிநாட்டவர் கூட, வறுமையைச் சித்தரித்து கதையெழும்போது,பண்பாட்டோடு எழுதினார்கள்.(7/15) Image
ஆனால் மகளைக்கெடுத்த தந்தையை வறுமைக்கு உதாரணமாக்கினார் ‘முற்போக்கு' கதாசிரியர்.தமிழ் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவன் நெஞ்சில் சூழ்ந்தது. அடுத்தடுத்து ‘குமரிக்கோட்டம்’, ‘ரோமாபுரி ராணிகள்’, ‘கபோதிபுரக் காதல்’ முதலிய நூல்களைப் படித்தான்.(8/15)
அந்த நூல்களில்,பலரிடம் கெட்ட ஒருத்தியை பளபளப்பாக வருணித்திருந்தார் கட்சியின் மூலத்தலைவர்.சமுதாயத்தில் தாழ்ந்துகிடப்போர்,மேலெழ வேண்டும் என்ற நன் நோக்கத்திற்கு, இவை எவ்வகையில் துணை புரியும்? எழுதுகின்றவனின் வெறித்தனத்தை இவையுணர்த்துமே அல்லாது,நாட்டுக்கு என்ன பயன் தரும்?(9/15)
பொது இடத்திலோ,குலமகளிர் மத்தியிலோ வைக்கக் கூடாத அளவுக்கு,பகுத்தறிவு வீரர்கள் புத்தகம் எழுதுவானேன்?

பண்பு குன்றாத பங்கிம்சந்திரர்,சாகாவரம் பெற்ற சரத்சந்திரர், நாடக அமைப்பில் கதையெழுதிய ரவீந்திரநாத் தாகூர் இவர்களெல்லாம்,வங்காளம் போற்றிப் புகழும் இலக்கிய மேதைகள்.
(10/15)
இவர்களுடைய கதைகளையெல்லாம் படிக்கும்போது, பண்பாட்டுக்கு பெயர்போனது உலகத்திலேயே வங்காளம் தான் என்று எண்ணத் தோன்றுகிறது.வங்கத்தின் இருண்ட பகுதியை அவர்கள் காட்டவே இல்லை.ஒளி மிகுந்த குடும்ப வாழ்க்கையையே உன்னதமாகச் சித்தரித்தார்கள்.(11/15)
கட்டுப்பாடான குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பும் ஒருவன்,தன் குடும்பம் முழுவதும் தன்னிடத்தே பக்தி கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணும் ஒருவன்,தான் வங்காளத்தில் பிறந்திருக்கக்கூடாத என்று ஆசை கொள்ளும் அளவுக்கு,வங்க இலக்கிய ஆசிரியர்கள் கதைகளை சமைக்கின்றனர்.(12/15)
மாளிகையை பார்க்க வந்தவன் மாட்டுக் கொட்டகையை ரசிப்பதுபோல்,ஒளி உலகைக் காணவந்த சீர்திருத்தவாதிகள், இருண்ட பகுதிகளையே சுவைத்து எழுதினார்கள்.அவற்றை ‘ஆபாசம்’ என்ற கணக்கில் அவன் சேர்க்க வரவில்லை.அவை என்ன பயன் தரும் என்பது தான் அவன் கேள்வி.(13/15)
அன்றிலிருந்தே, கட்சியின் முக்கியஸ்தர்கள் எழுதும் கதை, கட்டுரைகளை அவன் படிப்பதில்லை.ஓடிப்போனவள் கதையும், உருப்படாதவள் வாழ்க்கைச் சித்திரமும்,ஆட்டங்கண்ட கிழவனுக்கெழுந்த ஆசையும்,அந்தி நேரத்துச் சுந்தரியின் தளுக்கும்,நிரம்பி வழிந்த கழகப் புத்தகங்கள்,ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.14/15
இளைஞர்களை அந்த மயக்கம் பற்றியது உண்மை. வெளியிலிருந்து வந்த விமர்சனங்களை வெறுத்து ஒதுக்கி அவற்றை இளைஞர்கள் விரும்பிப் படித்தார்கள். நாகரிகம் மிகுந்த ஒரு சமுதாயத்தின், அழிவுக் காலம் அதிலேதான் தொடங்கிற்று என்றும் சொல்லலாம்.(15/15) Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

Jan 17
பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், ‘இதை விற்காதே. ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்' என்றார். அவனும் அப்படியே செய்தான். Image
காலகிரமத்தில் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப-புண்ணிய கணக்கை பரிசீலித்து, "ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய். அதற்காக என்ன வேண்டுமோ கேள்" என்றார்.
ராம நாமத்தை உபதேசித்த ஞானி, ‘அதை விற்காதே' என்று கூறியது
நினைவுக்கு வந்தது.அதனால் அதற்கு விலை கூற மறுத்து,"ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்"என்றான்.திகைத்த யமதர்ம ராஜா, ‘ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது' என்று எண்ணி,"இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும்.வா இந்திரனிடம் போகலாம்"
Read 10 tweets
Dec 30, 2023
பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்:

1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்.

2: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க,செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார். Image
3: புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.விவசாயம் செழிக்கும்.

4: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்.
5: உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்.

6: வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்.செல்வம் உயரச் செய்வார்.

7: விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும். Image
Read 6 tweets
Dec 21, 2023
கோபத்தில் வியர்க்கும் முருகர் சிலை:

திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும்போது நிறைய தண்ணீர் இருக்கும். Image
சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும்.
வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது. சர்வ அலங்காரங்களுடன் எம்பருமான் கந்தவேல் திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்போது (1803 ஆம் ஆண்டு) திருநெல்வேலி மாவட்ட கலக்டராக இருந்த லூசிங்டன் பிரபு
என்பவர் திருச்செந்தூர் வந்திருந்தார். முருகனுக்கு நடைபெறும் வழிபாடுகளை கண்டார்.இறைவனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான விசிறியை வீசுவதை கண்டார் லூசிங்டன்.
Read 10 tweets
Dec 16, 2023
பல ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் சூரியக்காலடி என்று அழைக்கப்பட்ட நம்பூதிரி இல்லம் ஒன்று இருந்தது.வசதிமிக்க இந்த நம்பூதிரிக்கு தென்னந்தோப்பு ஒன்று,மூத்த செக்கன் என்னும் காவலாளியின் பொறுப்பில் இருந்து வந்தது.அவனும் எஜமானர் மீது விசுவாசம் கொண்டவன்.உண்மையே பேசுவான்.மற்றவர் பொருளுக்கு Image
ஆசைப்பட மாட்டான்.எஜமானரின் பொருளை,தன் பொருளாக பாதுகாத்தான்.தென்னை மரத்தில் இருந்து முற்றிய நெற்றுக் காய்கள் காற்றில் அடித்து விழும்.அந்த காய்கள் காவலாளிக்கு உரியதாகும்.ஒருநாள் மார்கழி மாத இரவில் செக்கனுக்கு குளிர் தாங்க முடியவில்லை.தென்னை மட்டைகளை குவித்துத் தீ மூட்டினான்.
இரவு முழுவதும் கண்விழிக்கவே பசிக்க ஆரம்பித்தது. நெற்றுக்காய் இரண்டை எடுத்து உரித்து,கொப்பரைகளை பிரித்து,தீயில் சுட்டு சாப்பிட்டான்.தினமும் இதை இரவு வழக்கமாக்கினான்.ஒருநாள் தேங்காய் சாப்பிடும்போது, பின்புறத்தில் இருந்து ஒரு துதிக்கை நீண்டது.
Read 13 tweets
Dec 14, 2023
சிவன் அர்ச்சனையில் புஷ்பங்களின் பலன்கள்:

செல்வம் வேண்டுபவன் தாமரை,வில்வம்,திருநூற்றிப்பச்சை,சங்குப்பூ கொண்டு சிவபூஜை செய்யவேண்டும்.

முக்தி விரும்புபவன் தருப்பை புல்லினால் ஒரு லட்சம் முறை சிவார்ச்சனை செய்யவேண்டும்.

ஒரு லட்சம் முறை ரோஜாவினால் அர்ச்சிக்க பகைவர்கள் அழிவர். Image
நீண்ட ஆயுள் வேண்டியவன் அருகம்புல்லினால் ஒரு லட்சம் முறை ஜபிக்கவேண்டும்.

புத்திரப்பேறு வேண்டுபவன் ஊமத்தம்பூவினால் ஒரு லட்சம் முறை ஜபிக்கவேண்டும்

அகஸ்திய புஷ்பத்தால் லட்சம்முறை ஜபிப்பவன் நிலைத்த புகழைப் பெறுகிறான்.

துளசிதளத்தால் சிவனை பூசிப்பவன் போக மோட்சங்களை எளிதில் பெறுகிறான்
வெள்ளெருக்கு சிவப்பெறுக்கு நாயுருவி வெண்தாமரை ஆகிய புஷ்பங்களால் லட்சம் முறை பூஜிப்பதாலும் இகபர நலன்களைப் பெறலாம்.

அரளிப்பூவினால் லட்சம்முறை அர்ச்சிக்க நோய்களை விரட்டும் திறன் பெறுவர்.

பந்தூகம் எனும் தித்திப்புஷ்பத்தால் பூசிக்க ஆபரணங்கள் சேரும்.
Read 7 tweets
Dec 13, 2023
சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ?

சங்கடங்களை உடனடியாக நீக்குவார் சக்கரத்தாழ்வார்.
திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர்.
திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது. சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம்.
Image
Image
பக்தனான பிரகலாதனை காக்க திருமால், நரசிம்மாராக அவதரித்தார்.
தாயின் கருவில் இருந்து வராததாலும், கருடருடன் வராத காரணத்தாலும், இந்த அவதாரத்தை  'அவசர திருக்கோலம்' என்பர்.
பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி, யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.
நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார். அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.சக்கரத்தாழ்வாரின் தலை நெருப்புபோல ஒளிர்ந்து கொண்டிருக்கும்.பாதங்கள் சக்கரத்தைப்போல சுழன்று
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(