My Authors
Read all threads
டெலோ இயக்க தலைவர்
#சிறி_சபாரத்தினம் யார் ?

1986 மே 6ம் தேதி, கிட்டுவின் தலைமையில் யாழ் கோண்டா பகுதியில் ஈழ விடுதலயை லட்ச்சியாமாக வைத்திருந்த அந்த இதயம் தோட்டக்களால் சுக்குநூறாக சிதறடிக்கபட்டது, ஒன்றல்ல இரண்டல்ல, எதிரில் நிராயுதாபாணியாக நின்ற அந்த போராளியின் உடலை 20க்கும்.
அதிகமான குண்டுகள் சல்லடையாக்கின, சுட்டது எதிர்த்த சிங்களவன் அல்ல , தன் ரத்தம் பகிர்ந்த சகோதரன்.என்ன தவறு செய்திருந்தாலும் சபாவுக்கு இந்த தண்டனை அதிகம், அதற்கு என்ன காரணம், எந்த தரப்பில் இருந்து சொல்லபட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.அன்று சரிந்து விழுந்தது சபாவின் சடலம் மட்டுமல்ல.
ஈழம் என்கிற ஒரு தேசத்தின் நம்பிக்கை. சபா மட்டும் அல்ல அவரின் டெலோ இயக்கத்தின் போராளிகள் #அறுநூறு பேர் படுகொலை செய்தார்கள், டயர்களில் போட்டு கொளுத்தி படுகொலை செய்தார்கள்....
நடராஜன் தங்கதுரை மற்றும் யோகசந்திரன்(குட்டிமணி) என்பவரால் உருவாக்கபட்ட ஒரு சிறு குழு தான் பின்னாளில் தமிழிழ விடுதலை இயக்கமாக(டெலொ) மாறியது. அப்பொழுது அவர்களுடன் களத்தில் தளபதியாக செயல்பட்டவர் சிறி சபாரத்தினம். ..
இந்தியாவிற்க்கு தப்ப முயன்ற தலைவர்கள் இருவரும் இலங்கை ராணுவத்தால் கைது செய்யபட, ( இது கூட பிரபாவின் காட்டி காட்டி கொடுப்பு என்று போராளிகள் வட்டம் பேசிக்கொளவது உண்டு ).

குட்டிமணியும், தங்கதுரையும் சிறையில் கொடுராமக கொலை செய்யபட, டெலோவின் தலைவரானார் சிறி சபாரத்தினம்.
தலைவர் என்று ஆணையிடுபவரல்ல சபா, களத்தில் இறங்கி போராடுபவர்.இன்றும் சபாவை அப்படி தான் ஈழ தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் நினைவு கூறுகின்றனர்.ஈழ விடுதலை இயக்கங்களும் அனைத்தும் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க, இந்திராவும் போராளி இயக்கங்களுக்கு தாரளமாகவே உதவியளித்தார்.
டெலோ, இராஸ்,விடுதலை புலிகள் என பல இயக்கங்களாக சிதறிகிடந்தவற்றை ஒன்றாக இணைத்து ENLF ஆக உருவாக்கபட்டது.அனைத்து போராளிகளும் ஒன்றாக இணைந்து தனி ஈழத்திற்க்காக் போராடுவது என உறுதி செய்யபட்டது.

தங்களின் தொப்புள் கொடியான தமிழகத்தின் அரசியல்வாதிகள்.
ஈழ பிரச்ச்னையை அரசியலாக்க முயலுகிறார்கள் என்ற ஒரு சிறு விஷ்யம் தெரியாமல், புலிகளும் ,மற்ற இயக்கங்களும் பிரிந்தனர். எம்ஜிஆர் புலிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய, கலைஞர் டேலொவிர்க்கு தன் ஆதரவை தெரிவித்திருந்தார். சபா, கலைஞரின் அன்பிற்க்குரியவரானார்.
கலைஞர் திரைக்கதை எழுதிய ‘பாலைவன் ரோஜாக்கள்’ படத்தில் கதநாயகனின் பெயர் சபாரத்தினம்.

இந்திய உளவுத்துறை போராளி இயக்கங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து அவர்களுக்கு வியுகங்களையும் அமைத்து கொடுக்க, இதனை ஏற்க புலிகள் தயங்கினர்.
இந்தியா தன் சுயலாபத்திற்க்கு ஈழ போராளிகளை பயன்படுத்துகிறதென முடிவு செய்த்னார், ஆனால் இந்தியாவின் உளவுத்துறையின் வாக்கை வேத வாக்காக் மற்ற இயக்கங்கள் எடுத்து கொள்வதாக் கோபப்பட்டனர்.

தனி ஈழத்தை குறிக்கோலாக கொண்டு மற்ற இயக்கங்கள் இந்தியாவின் உதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருந்தன..
அவர்களுக்கு தேவை தனி ஈழம்.

இயக்கத்துனுள் கருத்து வேறுபாடுகள் முற்றின,எந்த இயக்கம் பெரியது என்ற மிக மோசமான ஃமாபியா அரசியல் ஈழ விடுதலை இயக்கத்தினுள் புகுந்தது. பரஸ்பரம் சில நபர்கள் கொலை செய்ய்பட்டனர், அந்த கொலைகள் மற்ற இயக்க்ங்கள் தான் செய்கின்றன என தமக்குள் சந்தேக பட தொடங்கினர்.
அந்த வழியில், புலிகள் இயக்கதிற்கு உயிர் சேதமும், தனி ஈழம் என்ற லட்சியத்தில் விரிசல் இருபதாக புலிகள் மற்ற இயக்கங்களை சந்தேக பாட தொடங்கியது, அவர்கள் ஒரு படி மேலே போய் சில கொலைகளுக்கான காரணத்தை ஆராயமால் ‘துரோகி’ பட்டத்தை சபாவிர்க்கு கொடுத்தனர்.
துரோகி’ என்ற வார்த்தை வந்துவிட்டால் விடுதலை புலிகள் அதற்கு ஒரே தண்டனையாக வைத்திருத்து மரணத்தை.

சபாவிற்க்கு டார்கெட் வைக்கபட்டது. அப்பொழுது சபாவிற்க்கு யாரும் அடைக்கலம் தர கூடதெனவும், சபாவை உடனடியாக் பிடித்து கொடுக்குமாறும் மக்களுக்கு விடுதலை புலிகள் ஆணையிட்டனர்..
சபா என்ன செய்வதறியாமல் மறைந்து வாழ்ந்து வந்தார்.

தமிழகத்தில் அப்பொழுது நடைபெற்ற டெசோ மாநாட்டின் போது, சபாவின் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த கலைஞர், விடுதலை புலிகள் இயக்கத்திடம் தன் சார்பில் சபாவை ஒன்றும் செய்ய வேண்டாம் என கோரினார், புலிகளும் அதற்க்கு செவி சாய்த்தனர்.
சபாவின் உயிருக்கு தங்களால் ஆபத்து வராது என உறுதியளித்தனர்.

கஞ்சா காடு ஒன்றில் சமாதானத்திர்க்கு வந்த சபாரத்தினத்தை புலிகள் இயக்கத்தை சேர்ந்த கிட்டு, மண்டியிட்ட சபாரத்தினம் எவ்வளவும் கெஞ்சியும் அவருக்கு மரணத்தை பரிசாகளித்தார்.
போராளி என ஆனபோதே சபாவின் மரணம் உறுதியானது தான் என்ன தன் சகோதரனால் கொல்லபட்டார்.

#சகோதரயுத்தம்
இலங்கை தமிழ் மக்களின் பாதுகாப்பில் தான் இந்தியாவின் பாதுகாப்பும் தங்கி உள்ளது என்னும் அரசியல் தீர்க்க தரிசனமான கொள்கையை இருதுருவ அரசியல் இருந்த காலத்தில் துணிந்து 1984 ஆண்டு செர்மனிக்கு விஜயம் செய்தபோது ...
எண்ணம் எனும் பத்திரிக்கை பேட்டியில் #டெலோ தலைவர் சிறிசபாரத்தினால் இக்கருத்து கூறப்பட்டுள்ளது.

விடுதலை இயக்கங்களில் ஒரு தெளிவான வெளிநாட்டு கொள்கையை அன்று 80 பதுகளில் கூறும் போது #டெலோ விடம் அரசியல் இல்லை ...
இவர்கள் இந்தியாவின் கூலி படை என்று கூறிய அனைத்து விடுதலை அமைப்புக்களும் இறுதியில் இந்தியாவின் காலடியில் வீழ்ந்தது தான் வரலாறு.

விடுதலை புலிகள்1986ல் டெலோவை அழிக்காமல் விட்டிருந்தால் இன்றைய #முள்ளிவாய்க்காலை தவிர்த்திருக்கலாம்.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with sivagsk

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!