My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌱க்ஷத்ரியருக்கான படிப்பும் வாழ்வும் (க்ஷத்ரிய தர்மம்)🌱

க்ஷத்ரியருக்கான வாழ்க்கை முறை என்பது பிறரை விட வேறு விதத்தில் கடினமானது. அரசன் என்பவன் *முதல் க்ஷத்ரியன்* என்று கொண்டாடப்பட்டான்.
ஆரம்ப காலங்களில், குருகுலத்தில் இருந்து வரும் மாணவர்களில் குருவின் மூலம் தகுந்தவனாகக் கூறப்பட்ட மாணவர்களின் திறமையை, முதல் க்ஷத்ரியனாக இருந்த மன்னன் கனிப்பான். அவர்களின் தோள் திறன், உயரம், உடல் வாகு, தேக பலம், புஜ பலம், குரல், தீக்ஷண்யமான பார்வை, அழகு, கம்பீரத் தோற்றம்,
புத்தி கூர்மை, சமயோஜித யுக்தி, பிறரிடம் பழகும் விதம், அவன் தர்மத்தைக் கடைபிடிக்கும் விதம், நாட்டு மக்கள் மேல் கொண்ட அக்கறை, அஸ்த்ரப் ப்ரயோகத் திறன் என எல்லாவற்றையும் கவனிப்பான்.

இதனை யதார்த்த வாழ்க்கையில் இருந்து கொண்டே செய்ய, அவர்களைத் தன்னிடம் அருகே உடனிருத்தி, நடவடிக்கை முதல்
மேல் கூறிய அனைத்தையும் மந்திரிகள் மூலம் அறிவான். இவற்றில் எல்லாவற்றிலும் திறமைசாலியாக, தர்மவானாக யார் இருக்கிறாரோ அவரையே தனக்கு அடுத்த அரசன் என அறிவித்து, தான் உயிருடன் இருக்கும் போதே அவனுக்கு யுவராஜனுக்கான பட்டம் சூட்டுவான்.

இது தான் ஆரம்பத்தில் இருந்த வாழ்வு முறை.
க்ஷத்ரிய பாடம் பயின்ற மற்றவர்கள், மன்னனுக்கு எவ்விதத்தில் உதவியாக இருப்பார்களோ, அதற்கேற்ற பதவி பெற்று, அதன் பெயரில் வேலைகள் செய்தார்கள்.

இவ்வாழ்க்கை முறையை மேற்கொண்டவர்களுக்கும் பாலபாடம் எனும் அடிப்படைக்கல்வி உண்டு.

Kshatriya Warrior, detail from a Medieval Indian Sculpture.
🌱க்ஷத்ரிய தர்மம் :🌱

இவர்கள் முக்கியமாகக் கற்க வேண்டியது தேக ஆரோக்யம். இதற்கு இவர்களும் தினமும் ஸுர்யன் உதிக்கும் முன்னரே எழுந்து, தனக்கான காலைக் கடன் முடித்துவிட வேண்டும்.

பின்னர் குளித்து, ஸுர்ய நமஸ்காரம் முதல் ஆரம்பித்து, யோகம் (ப்ராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி
யோகத்தோடு சேர்ந்தது), தேகப் பயிற்சி இரண்டும் வெகு நேரம் செய்ய வேண்டும். அவர்கள் உடல் வியர்க்க பயிற்சிகள் செய்ததும் காலை உணவு கொள்ள வேண்டும்.

காலை உணவு இவர்களுக்கு அநேகமாக பால், நெய் வார்த்த சிறு தாணியச் சமையல் போன்றவையாக இருந்திருக்கிறது.
பின்னர் இவர்கள் அஸ்த்ர பயிற்சிகளுக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு வித அஸ்த்ரமும் எதற்காக, எவ்வாறு ப்ரயோகிக்க வேண்டும் என்பதை இவர்கள் கற்க வேண்டும்.

இவையும் ஸமஸ்க்ருத ஸ்லோகங்களாக இருந்ததால், அவற்றை திரும்பத் திரும்பச் சொல்லி மனதில் ஏற்ற வேண்டும். பின்னர் அவற்றைக் கையாளும் முறைகள்
கற்றுக் கொடுக்கப்படுகையில், அவை நிரந்தரமாக மனதில் அழியாது பதிந்து விடும். அஸ்த்ரப் ப்ரயோகம் என்பது இன்று போல் அன்று இல்லை.

மந்த்ர சக்திகளின் மூலமே பல அஸ்த்ரங்களைப் ப்ரயோகிக்க முடியும். எனவே அதற்கு நிறைய நினைவுக் கூர்மை வேண்டும்.

Long Bow, Hilt Design… Vedic age Sculpture..
அடுத்தது, இதில் தனது தேசத்தின் அண்டை தேசங்கள், அவற்றின் பூகோள வரைவுகள் மற்றும் அவற்றைப் பற்றிய முழு விபரங்களும் கண்டிப்பாகப் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.

நாட்டு மக்களுக்குத் தேவைகள் என்னென்ன என்பதை அவர்களின் வாழ்க்கை முறை கொண்டு அறிந்து, அதற்குத் தாங்கள் என்ன செய்ய வேண்டும்
என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வேளாண்மை முதல் வியாபாரம் வரை, போர்க்கலை, போர்க் கருவிகள் செய்முறை, தற்காப்புக் கருவிகள் செய்யும் முறை, எதிரிகளைத் தந்திரமாகத் தாக்கும் முறை, உழவு, தாவர வகைகள் மற்றும் அதன் பயன்கள், ஆரம்ப நிலை மருத்துவம்,
நாடு சுற்றி வர வாகனம் செலுத்தும் முறைகள், வானிபம் பற்றிய முழு அறிவு, நாட்டின் வர்த்தகத் தேவை, பொருளாதாரம் என அனைத்துக் கற்க வேண்டும்.

ஏனெனில் மன்னன் முதல் சேவகன் வரை, மாறு வேடத்தில் செல்கையிலோ, அல்லது போர் வேளைகளிலோ, தனக்கு ஒன்று தெரியவில்லை எனப் பிறரிடம் நிற்கக் கூடாது.
இதில் மன்னனானவன் அனைத்தும் அறிந்திருக்க வேண்டும். ஆனால், அவன் தன் பதவிக்கு எது தேவையோ அதைப் பயன்படுத்தி, பிற அறிதல் கொண்டே நாட்டை நிர்மாணிக்க இயலும்.
Soldiers on the balcony. One armed with a longbow, other armed with a broadsword that flares to the tip. Ancestor to the medieval Khanda/Patissa swords. 2nd-1st Century BC, Sanchi...

இவர்களும் மதியத்தில் குளித்து, இறைவனை வணங்கிய பின் உணவு கொள்வார்கள்.
மதியத்தில் பலவகைப்பட்ட காய்கறிகள் சமைத்து, அன்னத்துடன் உண்பார்கள். இவர்களுக்கு உணவில் கட்டுப்பாடு இல்லை. மாலை வேளைகளில் மீண்டும் போர் முறைகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்வார்கள்.

இவர்களும் ஸூர்யன் மறைந்த பின்னர், ப்ராமணர்கள் போல, உணவு கொள்ளக் கூடாது.
எனவே, மாலை இறைவனை வணங்கிய பின்னர் இரவு உணவு உண்பார்கள். அது அநேகமாக, பலவிதக் கனிகளும் பாலுமாகத்தான் இருக்கும்.

இவர்களிலும் மன்னனானவன், ப்ராமணர்களைப் போலவே தனக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளக் கூடாது. அவனுக்கு சேவை செய்ய மனிதர்கள் இருப்பார்கள்.
அவர்கள் ஆளுமையில் தன, தாண்யங்கள் நிறைந்து இருக்கும். அவற்றை உபயோகிக்கலாம். ஆனால், உரிமை கொள்ள இயலாது. இவர்களது முக்கியப் பணி தேசப் பாதுகாப்பு.

எனவே, இவர்களுக்கு வாழ்வு முறையில் தளர்வுகள் இருந்தன. இவர்கள் விரும்பிய உணவுகளை உண்ணலாம். மன்னனானவன், தன் தேசத்தின் மேல் பிற தேசத்தினர்
படையெடுக்காமல் இருக்க, அவற்றை உறவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு மன்னன், அந்நாட்டு அரச குமாரிகளை மனக்கலாம். இதில் இவர்களுக்கு கணக்கு இல்லை.

ஏனெனில் ஒரு மன்னனுடன் திருமணமாகி, குழந்தை பெற்றவளது நாட்டினர் இவனிடம் போர் புரிய மாட்டார்கள்.
அதனால் மன்னனுக்கு அந்த உரிமை இருந்தது. மேலும், அவனது சொந்த ராஜ்யத்தில் (தாய்மண்) மனைவி என யாரை முதலில் மணக்கிறானோ, அவளுக்குத் தான் எல்லாவற்றிலும் முதல் உரிமையும் மரியாதையும் தர வேண்டும் என்பது விதி.

அதனால், ஒரு மன்னன் இன்னொரு இளவரசியை மணந்த பின், அவளைத் தன்னோடு
வைத்துக் கொள்ளத்தான் முடியுமே ஒழிய, அவள் நாட்டில் அமர்ந்து ஆள இயலாது. மேலும், ஒரு மன்னனுக்கு பிள்ளைப்பேறு இல்லை என்றால், அவனது குருவின் மூலம் சிறந்த தேக ஆரோக்யம் கொண்ட ஒருவரின் உயிரணுக்கள் கொண்டு, தன் மனைவியை கர்ப்பமுற வைக்கலாம். அதற்கு மஹாராணிக்கு மாத்திரம் விதிவிலக்கு இருந்தது.
(இங்கே முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். அரைகுறையான பல கதைகளைப் படித்துவிட்டு, அவற்றையே சரி என்று விவாதிக்கும் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.

ஆரம்ப காலத்தில், மந்த்ர சக்தி மூலமே இருந்த பல விஷயங்கள், யுகங்கள் மாற மாறக் குறைந்து, இன்று மந்த்ரம் என்னும் ஒலி அதிர்வுகளின் பலன்
வெகு துர்லபமாகவே உள்ளது. எனவே, இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே சொல்லப் பட்டது போல், இவற்றை அந்த யுகத்தின் கண் நின்று பார்க்க வேண்டும்.

மேலும், இது க்ஷத்ரியனுக்கான தர்மம் மட்டுமே என்பதையும், அதுவும் நாட்டு நலன் சார்ந்தே என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றை எப்படிச் செய்தார்கள் என்பது நமக்கு வழிமுறையோடு தெரியவில்லை என்பதால், இது பொய் என்று கூற முடியாது; கூறவும் கூடாது.

இன்னும் விஞ்ஞான வளர்ச்சியில் ஒவ்வொன்றாக வரவர, நமக்கும் புரிய ஆரம்பிக்கும், நாமும் இன்றைய TEST TUBE BABY யை ஒத்துக் கொண்டது போல், இவற்றையும் ஒத்துக் கொள்வோம்.
காலம் கனியும் வரை, முன்னோர் சொல்லிச் சென்ற, நாம் அறியாததை இழித்துப் பேசக் கூடாது)

இதில் மஹாராணிக்கு இருந்த விதிவிலக்கு, பிற க்ஷத்ரியர்களுக்கு இல்லை என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் மன்னன் என்பவன் எப்போதும் ஆச்சார்யனை இறைவனுக்குச் சமமாக மதித்து நடப்பதால்,
அவர் வாக்கிற்க்குக் கட்டுப்பட்டு நடப்பான். அதே சமயம், தேசம் என்று வரும் பொழுது மன்னன் தேச மக்களுக்குப் பிறப்பித்த ஆணை எதுவாகினும் அதை ப்ராமணன் ஏற்று நடக்க வேண்டும்.

அது, குருவே ஆனாலும் அது தான் விதி. எனவே, கற்றுக்கொடுத்த குருவும் மன்னனின் ஆணைக்குக் கீழ் படிந்தவரே.
இங்கே மன்னனுக்கே முழு அதிகாரமும் உண்டு. க்ஷத்ரியர்கள் நல்ல உடை உடுத்தலாம், மூன்று வேளையும் பலம் தரும் ஆகாரம் உட்கொள்ளலாம். தேசப் பணிக்குத் தான் முன்னுரிமை தர வேண்டும்.

தேசத்திற்காக எதையும் த்யாகம் செய்ய வேண்டும். நாட்டு மக்களைத் துயரிலிருந்து காக்க, எந்த வித காரியத்திற்கும்
அஞ்சக் கூடாது. இரவு பகல் பாராது, எந்த நொடியும் வேலைக்குத் தங்களைத் தயாரக்கிக் கொள்ள வேண்டும். இவர்கள் பிற நாடுகளுக்குச் சென்று வாழக் கூடாது. தவறு நடந்தது என்றால், அதை எல்லா விதத்திலும் தீர ஆய்ந்து, தர்மத்தின் பேரில் தான் தண்டனை தர வேண்டும்.
Slab with the Shibi Jataka, Gandhara, 2nd–3rd century AD, British Museum...

அதற்கு உதாரணம் நாம் படித்த “புறாவுக்காகத் தன் சதையை ஈந்த சிபிச் சக்ரவர்த்தி மற்றும் பசுமாட்டின் கன்றைக் கொன்றதற்கு தண்டனையாக, தன் மகனைத் தேர்ச் சக்கரத்தில் ஏற்றிக் கொன்ற மநுநீதிச் சோழன் வரலாறு”.
தர்மத்திலிருந்து சிறிது வழுவினாலும் ஒரு மன்னன் தனது ராஜ்ய பதவியைத் துறந்தே ஆக வேண்டும்.

Sculpture of Sibi Chakravarthy giving his flesh equal to sparrow, atleast 3000 years back in Boropudur, Indonesia.
மன்னனும், யுவராஜனை சக்ரவர்த்தி ஆக்குகையில், தனது அத்தனை செல்வங்களையும் அவனிடம் கணக்கு வழக்குடன் ஒப்படைக்க வேண்டும். பிறகு, தனக்கும் தன் குடும்பத்தாருக்குமான சில ஆடைகள் மட்டும் கொண்டு வெளியேற வேண்டும்.

ஆனால், அவன் தேசத்தைக் காத்ததால், அவனுக்கு நிலங்கள் வழங்கப்படும்.
மேலும், அவனது மகன்களில் யாரேனும் யுவராஜனானால்; அந்த மன்னன் அரண்மனை அருகிலேயே ஒரு குடிலில் வசிக்கலாம். மகன் தந்தைக்கான அனைத்து பொறுப்புகளையும் ஏற்று பெற்றோரைப் பரிபாலிப்பான்.

இல்லை எனில், அவன் பிற மக்களைப் போல, தானும் தேசத்தில் கலந்து, தனக்குப் பிடித்த தொழில் செய்து வாழ்வான்.
இது தான் அவனுக்கு விதிக்கப்பட்ட தர்மம்.

Beautifully inscribed in the Thiruvarur Temple…

A Stone Ratham depicting the incident of Manu Neethi Chozhan sacrificing his son in his charriot wheel.
அநேகமாக க்ஷத்ரியர்களாக இருந்தவர்கள், அரண்மனை அருகிலேயே குடில் கொண்டு தான் வாழ்ந்திருக்கிறார்கள். ஏனெனில், அவன் மரணிக்கும் வரை அந்நாட்டைப் பற்றி முழுமையாக அறிந்தவன் என்ற காரணத்தால், அவனை மக்களுடன் கலந்து வாழ விடவில்லை.

அல்லது, அவனது பிற மனைவியரின் தேசத்தில் யாரேனும் ஒரு மகன்
அவனது தேசத்தில் மன்னனாகி, இவர்களைத் தன்னுடன் வைத்துக் கொண்டான். இதனால் தேச ஒற்றுமை நீடித்ததே ஒழிய, குறையவில்லை.

இப்படியே அநேகம் மன்னர்கள் வாழ்வு இருந்திருக்கின்றது. இவர்களும் அரச வாழ்வு துறந்த பின், அநேகமாக ப்ராமணர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கைக் கட்டுப்பாடு ஆகியவற்றை
மேற்கொண்டு உயிர் துறந்திருக்கிறார்கள்.

உதாரணம் : நாம் அனைவரும் விரும்பும் ராஜராஜ சோழனின் இறுதி வாழ்க்கை வரலாறு.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!