My Authors
Read all threads
கொரோனாவும், சித்த மருத்துவமும் !

***

தமிழக அரசு நியமித்துள்ள கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சித்தமருத்துவ மைய மருத்துவர் வீரபாகு இந்து தமிழ் திசைக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி முக்கியமானது.

ஆனால், அவருடைய சில சொற்களை நாம் எச்சரிக்கையோடு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஏனெனில், இதை வைத்தே மரபு வழி மருத்துவம் என சொல்லி, வெகுவெளியில், எளிய மக்கள் ஏமாற்றப்படுவதற்கான அபாயம் இருக்கிறது.

என்னென்ன எச்சரிக்கைகள் அவை?

***
1. சித்த மருத்துவர் வீரபாகு சொல்லும் அடிப்படை வேறுபாடு உளவியல் சார்ந்தது.

கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள வரும் ஒரு நோயாளி, சித்த மருத்துவத்தை 'ஆரோக்கிய முன்னேற்றமாக' எடுத்துக் கொள்கிறார். இதை ஒரு நோய்க்கான சிகிச்சை என நினைப்பதில்லை என்கிறார் மருத்துவர்.
மருத்துவர் சொல்வதை எப்படி புரிந்துகொள்ளலாம்?

கொரோனாவுக்கான சித்த மருத்துவ மருந்துபொருட்கள் அநேகமாக 'உணவு நிலையாக' நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுகின்றன. கபசுர குடிநீர், மூலிகை மருந்து என்கிற பெயர்களே உளவியல் ரீதியாக நமக்கு மிகவும் பிணைப்பானவை. (1)
ஏனென்றால், இச்சொற்களோடு தெளிவான 2000ம் ஆண்டு அனுபவம் இருக்கிறது நமக்கு.
எனவே, மருந்து உட்கொள்ளும் மனநிலை முதலில் வீழ்த்தப்படுகிறது.(2)

இந்த மருந்து உண்ணும் மனநிலையின் வீழ்ச்சி, தனக்கு நோய் இருக்கிறது என்ற தன்னுணர்வை மட்டுப்படுத்துகிறது. நோய் அச்சத்திலிருந்து விடுதலை தருகிறது
2. சித்த மருத்துவம் எடுத்துக்கொள்ளும் கொரோனா நோயாளிகள் 'பதற்றம்' அடைவதில்லை என்கிறார் மருத்துவர்.

ஏன்?

மருத்துவரே குறிப்பிடுகிறார். 'இங்கு காலையில் நடைப்பயிற்சி செய்யலாம். அரச மரத்தடியில் அமர்ந்து காற்று வாங்கலாம். சூரிய ஒளி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். (1)
பதற்றம் இல்லாமல் நல்ல நிலையில் வைத்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் அதிகரிக்கும். மூலிகை ஆவி பிடிக்கலாம்' என்கிறார் வீரபாகு.(2)
அதாவது, கொரோனா சிகிச்சையின் அடிப்படையே, தனிமைப்படுத்திக் கொள்ளல் தான் என சொல்லப்படும், நேரத்தில் இந்த அணுமுறை 'ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சுதந்திர வெளியை' உருவாக்கிக் கொடுக்கிறது. இச்சுதந்திர வெளி மனிதர்கள் எப்போதும் விரும்புவது.
எதார்த்தவாழ்வின் அலுப்பிலிருந்து விடுபடுவதற்கான தேடல் மனநிலை அது. நாம் எல்லோருமே அப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்திருக்கிறோம். அவ்வாய்ப்பு, உலகமே ஊரடங்கியிருக்கும் நோய்மை காலத்தில் வழங்கப்படும்போது தனி அனுபவம் ஆகிறது. இது ஒரு நோய்மை கால 'Into the wild என நம்மை நம்பச் செய்கிறது
இந்த மனநிலையே ஒரு சாகச உணர்வை நமக்குத் தரும். அந்த சாகச உணர்வே வாழ்வை அணுகும் கண்ணோட்டத்தை மாற்றி நம்மை போராடத் தூண்டும். நாமே தேடிக்கொண்டாலும் கிடைக்காத இத்தகைய ஒரு வாய்ப்பு .
அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு, முறையான பாதுகாப்பு, வேளா வேளைக்கு உணவு, கவனித்துக்கொள்ள மருத்துவர் என சகல முன்னேற்பாடுகளுடன் செய்யப்பட்டால், 'கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா?' என கேட்டுக்கொண்டே நோய் குணமாகும்.
3. கல்லீரலில் ஏற்கெனவே பிரச்னை இருப்பவர்கள் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறார்கள். கரோனா மட்டுமல்லாமல் 'ஆர்த்ரிட்டீஸ்' பிரச்சினையிலிருந்தும் மெல்ல மெல்ல ஒரு நோயாளி விடுபட்டு வருகிறார். நீரிழிவு, கல்லீரல் பிரச்சினை, (1)
...நாள்பட்ட நோயுள்ளவர்கள், முதியவர்களைக்கூட 1 வாரத்திலேயே குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்ப இருக்கிறோம்' என்கிறார் மருத்துவர்.(2)

பேட்டியின் சிக்கலான பகுதி இது.
ஏனெனில், இதன் மூலம், நீரிழிவு, கல்லீரல், எலும்பியல் சிக்கல் உள்ளவர்கள், தங்கள் மருத்துவத்தைக் கைவிட்டு அல்லது மருத்துவம் எடுத்துக்கொள்ளாதவர்கள் கூட சித்த மருத்துவம் நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. அப்படி நகர்வதால் நமக்கு ஒன்றும் சிக்கல் இல்லை. நோயாளிகள் குணமடைவதே நமக்கான விருப்பம்.
ஆனால், தெளிவாக வேண்டியது, நீரிழிவு, கல்லீரல், எலும்பு நோய்களை குணப்படுத்துவதற்காக இந்த சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. கொரோனா நோயை குணப்படுத்துவதற்கு, அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு 'Pre Medical History'-க்கு ஏற்றவாரு சிகிச்சை அளிக்கிறார்கள்.
கொரோனா நோயை தீவிரப்படுத்துவதிலும், மட்டுப்படுத்துவதிலும் இத்தகையை Non communicable dieseas -ன் இடம் முக்கியமானது என WHO உட்பட அனைத்து மருத்துவ ஆய்வுகளும் குறிப்பிட்டிருக்கின்றன. கொரோனா மரணங்களை தீர்மானிக்கும் முன்காரணியாக இந்த 'morbidity' இருக்கிறது.
எனவே, அதைக்கட்டுப்படுத்த கூடுதல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சித்த மருத்துவம் மட்டுமல்ல. அனைத்து மருத்துவ முறையிலும் இவை வழங்கப்படுகின்றன. இந்த உடலழிவு நோய்கள் மட்டுப்படுவது என்பது கொரோனா சிகிச்சையின் உபவிளைவு. மிக முக்கியமாக இந்த உடலழிவு நோய்களின் மட்டுப்பாடு நிரந்தரமானதல்ல.
ஆனால், ஒரு கேள்வி இருக்கிறது.

ஆனால், மருத்துவர் சொல்லும் இந்த மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன? ஒரே வாரத்தில் இத்தகையை உடலழிவு நோய்களின் வீச்சு எப்படி மட்டுப்படுகிறது?

அவரே இன்னொரு இடத்தில் இதற்கான விடையை அளிக்கிறார். ஆனால், அதில் தான் சித்த மருத்துவத்தின் சாரமே அடங்கியிருக்கிறது.
ஒரு சிகிச்சை முறையாக இதனைப் பயன்படுத்தும்போது நோயாளிகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது' என்கிறார் சித்த மருத்துவர்.

அது என்ன 'சிகிச்சை முறையாக இதனை பயன்படுத்தும்போது'?
அதாவது, முறையான மருத்துவ கண்காணிப்பு, ஒருநாளின் ஒவ்வொரு வேளைக்குமான திட்டமிட்ட மருத்துவ முறைகள், அந்த மருத்துவ சிகிச்சையில் தொடர் ஒழுக்கம், மிக மிக மிக முக்கியமாக சிகிச்சைக்கு ஏற்ற வாழ்க்கைத் தகவமைப்பு.
அன்றாட வாழ்க்கையில் எதார்த்தத்திலிருந்தும், பரபரப்பிலிருந்தும், அடிப்படையாக உழைப்பு வாழ்க்கையிலிருந்தே விடுபடல்.
அதாவது, நீரிழிவு நோய்க்கு டப்பா கணக்கில் மருந்து உருண்டைகளை வேளா வேளைக்கு போட்டுக்கு வேகாத வெயில் மார்க்கெட்டிங் வேலை பார்த்தால், கல்லீரல் பிரச்னைக்கு மூலிகை சாப்பிட்டுவிட்டு நைட்டு 3 மணிக்கு பிரியாணி சாப்பிட்டால், (1)
கொரோனாவுக்கு கபசுர குடிநீரை குடித்துவிட்டு கல்யாணத்திலும் எழவு வீட்டிலும் கூட்டமாக கட்டிப்பிடித்துக் கொண்டால் சித்த மருத்துவம் உதவாது.
சித்த மருத்துவத்தின் ஆதாரமே, அதன் வாழ்வியல் சார் சிகிச்சை முறை. நம் வாழ்க்கையையே அப்படியே மாற்றிக்கொள்வதற்கு சமம் இது. அல்லது நோய் குணமாகும் வரையாவது 'சித்த மருத்துவ வாழ்வியலை' கைகொள்ள வேண்டும்.
சூரிய வணக்கத்திலிருந்து, மூலிகைச் சாப்பாடு வரை அதில் அடக்கம். இந்த கொரோனா சிகிச்சையிலும் அதைத்தான் செய்கிறார்கள்.

ஒவ்வொரு கொரோனா நோயாளிக்கும்,
'மூலிகை சார்ந்த நல்ல உணவுகள் இங்கு வழங்கப்படுகின்றன. சத்தான உனவுகளுடன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மூலிகை சேர்க்கப்படுகிறது. (1)
உதாரணமாக, தூதுவளை தோசை, கறிவேப்பிலை இட்லி, வேப்பம்பூ ரசம், கற்பூரவல்லி ரசம், தூதுவளை சூப், நவதானிய சுண்டல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன' என்கிறார் சித்த மருத்துவர் (2).
கொரோனா சிகிச்சை பலனளித்ததாக கூறும் மருத்துவர் வீரபாகு, தங்கள் சிறப்பு மையத்தில் 200 படுக்கை வசதி உள்ளது; ஆனால் இப்போது 60 பேருக்குத்தான் சிகிச்சை அளிக்கிறோம் என்கிறார்.
அதாவது மொத்தக் கட்டமைப்பில் 30%. இது வசதிகரமான சூழல் கவனிக்கத்தக்கது.
இதே சூழலை ஆயிரக்கணக்கானவர்களுக்கு செய்ய முடியும் என்றால் நாம் நிச்சயமாக சித்த மருத்துவத்தை கொரோனா சிகிச்சைக்கு விரிவாக்கலாம்.

ஏனெனில், இந்த முறைமை ஒழுக்கம் தான் சித்த மருத்துவம். அது பாடசாலை மரபின் சிகிச்சை முறைமை.
இந்த ஒழுக்கத்தை கடைபிடிக்கும் சூழலை ஒழுக்கசத்தை கடைபிடித்தால் , நீரிழிவு நோய் உட்பட எது ஒன்றுக்கும் சிகிச்சை பலனளிக்கலாம்.
மாறாக, பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு டப்பா கணக்கில் உருண்டையும், திரவமும், எண்ணையும், களிம்பும் தந்துவிட்டு, முடி கொட்டுவதை சரிசெய்ய மூலிகை தரும் போலிச்சொட்டை சித்த மருத்துவரால் அவநம்பிக்கையும், விரக்தியும், மரணமுமே மிஞ்சும்.
பேட்டி கீழே.

hindutamil.in/amp/news/tamil…
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Vivek Gananathan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!