என்னென்ன எச்சரிக்கைகள் அவை?
***
கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள வரும் ஒரு நோயாளி, சித்த மருத்துவத்தை 'ஆரோக்கிய முன்னேற்றமாக' எடுத்துக் கொள்கிறார். இதை ஒரு நோய்க்கான சிகிச்சை என நினைப்பதில்லை என்கிறார் மருத்துவர்.
கொரோனாவுக்கான சித்த மருத்துவ மருந்துபொருட்கள் அநேகமாக 'உணவு நிலையாக' நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுகின்றன. கபசுர குடிநீர், மூலிகை மருந்து என்கிற பெயர்களே உளவியல் ரீதியாக நமக்கு மிகவும் பிணைப்பானவை. (1)
எனவே, மருந்து உட்கொள்ளும் மனநிலை முதலில் வீழ்த்தப்படுகிறது.(2)
இந்த மருந்து உண்ணும் மனநிலையின் வீழ்ச்சி, தனக்கு நோய் இருக்கிறது என்ற தன்னுணர்வை மட்டுப்படுத்துகிறது. நோய் அச்சத்திலிருந்து விடுதலை தருகிறது
ஏன்?
மருத்துவரே குறிப்பிடுகிறார். 'இங்கு காலையில் நடைப்பயிற்சி செய்யலாம். அரச மரத்தடியில் அமர்ந்து காற்று வாங்கலாம். சூரிய ஒளி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். (1)
பேட்டியின் சிக்கலான பகுதி இது.
ஆனால், மருத்துவர் சொல்லும் இந்த மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன? ஒரே வாரத்தில் இத்தகையை உடலழிவு நோய்களின் வீச்சு எப்படி மட்டுப்படுகிறது?
அவரே இன்னொரு இடத்தில் இதற்கான விடையை அளிக்கிறார். ஆனால், அதில் தான் சித்த மருத்துவத்தின் சாரமே அடங்கியிருக்கிறது.
அது என்ன 'சிகிச்சை முறையாக இதனை பயன்படுத்தும்போது'?
ஒவ்வொரு கொரோனா நோயாளிக்கும்,
'மூலிகை சார்ந்த நல்ல உணவுகள் இங்கு வழங்கப்படுகின்றன. சத்தான உனவுகளுடன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மூலிகை சேர்க்கப்படுகிறது. (1)
அதாவது மொத்தக் கட்டமைப்பில் 30%. இது வசதிகரமான சூழல் கவனிக்கத்தக்கது.
ஏனெனில், இந்த முறைமை ஒழுக்கம் தான் சித்த மருத்துவம். அது பாடசாலை மரபின் சிகிச்சை முறைமை.