My Authors
Read all threads
இட ஒதுக்கீடு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை இல்லையா?

*

கேள்வி: இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல என்ற தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

வீரமணி: வகுப்புவாரி ஒதுக்கீடு காலத்திலிருந்தே இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றங்களை பயன்படுத்தும் போக்கு சூழ்ச்சி இருக்கிறது. Image
1950ல் இதே மாதிரியான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

அப்போது, நாடாளுமன்றத்தில் பேசிய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர், (1)
( அரசியலமைப்பின் சமத்துவம் என்பதை ஒட்டுமொத்த புரிந்துகொள்ள ) Directive Principles of state policy-ல் இருக்கக்கூடிய பிரிவு 46ல் உள்ள சமூக அநீதியை நீக்குவதற்கான நடிவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும் என்பதை நீதிபதிகள் புரிந்துகொள்ளவில்லை. (2)
(இடஒதுக்கீடு அடிப்படை உரிமை ஆகாது என) உச்சநீதிமன்றம் சொல்லிருக்கும் தீர்ப்பு என் வாழ்வையும் உள்ளடக்கி இருக்கலாம் - ஆனால் அதற்காக நான் அந்தத்தீர்ப்பை மதிக்க வேண்டும் என்பதில்லை என விமர்சித்தார் அம்பேத்கர்.
அம்பேத்கர் அன்று சொல்லியது இன்றும் பொருந்தும். அதற்குபிறகுத்தான், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக திருத்தம் செய்யப்பட்டு இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
அடிப்படை உரிமைகள் பகுதி, அரசியலமைப்பின் Preamble என்கிற மாற்ற முடியாத அடிப்பகுதியைச் சேர்ந்தது. அரசியலமைப்பின் அடிக்கட்டுமானத்தை ஒட்டி வழங்கப்படும் இடஒதுக்கீடு அடிப்படை உரிமையே ஆகும். (இங்கு Social& Educational backwardness அடிப்படையிலான இடஒதுக்கீடுதான். பொருளாதார ஒதுக்கீடு அல்ல)
கேள்வி: இட ஒதுக்கீட்டை மாநிலங்களே முடிவு செய்யலாம் என்பது, இதை நிரந்தரமான மொழிதேசிய பிரச்னையாகவே விட்டு விட வேண்டும் என்கிற உத்தியா?

வீரமணி: இதை மாநில பிரச்னை என்று சொல்வதே எந்நாளைக்கும் இந்த பிரச்னை நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். (1)
இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கான சரத்து "State' என்றே சொல்கிறது. State என்றால் அரசு.

எனவே, அரசியலமைப்பின் படி, Social & Educational backwardness-ஐ நீக்க, இடஒதுக்கீட்டை உறுதிசெய்வதில் மத்திய அரசுக்கு பங்கு இருக்கிறது.
கேள்வி: இட ஒதுக்கீடு என்பதை சட்டப்போராட்டமாக அணுகவேண்டும் என்கிறீர்களா? அல்லது அரசியல் போராட்டம் தான் தீர்வா?

அரசியல் போராட்டம் தான் தீர்வு. ஏனென்றால், நீதிபதிகள் தங்களுக்கு ஏற்றவாரு வியாக்கியானம் சொல்வார்கள். ஆனால், மக்கள் மன்றத்தின் கருத்தை அவர்கள் கருதுவதில்லை.
மக்கள்மன்றத்தால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்குத்தான், மக்களின் விருப்பமான இட ஒதுக்கீட்டை உறுதிசெய்வதில் பங்கு உண்டு. மக்கள் மன்றத்தின் மீது எங்களுக்கு பெரும் நம்பிக்கை உண்டு. யார் என்ன தீர்ப்பு கொடுத்தாலும் இறுதியில் மக்கள் மன்றம் தான் வெல்லும்.
*

15.02.20 அன்று எனக்களித்த நேர்காணல்.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Vivek Gananathan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!