இந்த முரண்பாடே, இப்போது சீனம் காட்டும் 'ஆக்ரோஷத்திற்கும்' முக்கிய காரணம் என்றே ராஜுய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
காஷ்மீர் மாநில அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அடுத்த ஒரே வாரத்தில், 1984 முதல் பல நூறு உயிர்களையும், கோடிகளையும் கொட்டி காத்துவந்த சியாச்சின் முகடு பகுதிகளை சுற்றுலாவுக்குத் திறந்துவிட்டது மத்திய அரசு
சீனம் எப்போதுமே உளவியல் ரீதியாக எதிரிகளை அச்சுறுத்தும். எண்ணிக்கை பலம், ஆயுத பலம், தளவாட பலம் குறித்த கட்டுக்கதைகளை உருவாக்கி உளவியல் ரீதியாக எதிரியை நடுக்குறச் செய்யும். சீனப்போர், டோக்லாம், இப்போது லடாக் எல்லாவற்றிலும் அதுதான்உத்தி
ஏப்ரல் 19ம் தேதியே எல்லையில் சீன ராணுவ convey குவிக்கப்பட்டு வருவதை உளவுத்துறை மத்திய அரசுக்கு சொன்னது. ஆனால், நிலைமை குறித்து 1 மாதம் கழித்து, மே 18 அன்று தான் பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்தியது.
டோக்லாம் பிரச்னை போல ஒரு இடத்தை மையப்படுத்தி இப்போதைய சிக்கல் இல்லை.
சீனா தன் கட்டமைப்புகளை வலுப்படுத்தியுள்ளதை நிர்மலாவே ஒருமுறை ஒத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரை ஒரு வணிக பூமியாக பாஜக அரசு பார்க்கிறது.
மாநில அந்தஸ்து நீக்கப்பட்ட சில தினங்களில் அதானி முதலீட்டு முயற்சிகளில் இறங்கினார்
காஷ்மீர் சொர்க்க பூமியாகப் போகிறது என பீடில் வாசிக்கப்பட்டது.
ஆனால், எல்லா காலத்திலும் காஷ்மீர் எல்லைச் சிக்கலுக்குரிய பிரச்னை என சீனா நிறுவ நினைக்கிறது.
ஆனால், எல்லா காலத்திலும் காஷ்மீர் எல்லைச் சிக்கலுக்குரிய பிரச்னை என சீனா நிறுவ நினைக்கிறது.
பாஜகவின் வணிக விருப்பத்துக்கும், சீனத்தின் நில ஆசைக்கும் இடையில் சிதைந்துகொண்டிருக்கிறது காஷ்மீரின் வரலாறும், வாழ்க்கையும்.