My Authors
Read all threads
இது ஒரு நீண்ட பதிவு: பொறுமையுடன் படிக்கவும். #பிராமணன் என்பது அன்று ஒரு சபிக்கபட்ட வாழ்க்கை, அவனால் எல்லோரையும் போல இயல்பான வாழ்வினை வாழமுடியாது.மந்திரங்கள் என்பதும் அதை உச்சாடனம் செய்வதும் பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்து கொண்டு மக்கள் சேவை செய்வது சாதாரணம் அல்ல, .
அதை பிராமணர்கள் செய்தார்கள்
பிராமண‌ நியதிபடி அவர்கள் சொத்து சேர்க்க கூடாது, பொருள் குவிக்க கூடாது, அவர்கள் தானம் ஒன்றை பெற்றே பசியாற வேண்டும்
மற்ற மக்களை போல அவர்கள் உல்லாசமாய் இருந்துவிட முடியாது, கவலையற்று அவர்கள் போக்கில் இருக்க முடியாது, மக்களை காக்கவும் , மக்கள் பல பலன்களை
3. பெறவும் அவர்கள் உதவியும் சேவையும் மகா அவசியம்.உலகில் புரிந்து கொள்ளமுடியாத பல சூட்சுமங்களுக்கும், கால நிலை கணிப்பதற்கும்
இன்னும் பல விஷயங்களுக்கும் தங்களை இறைநிலையிலே பிரபஞ்சத்தோடு இணைத்திருக்கும் அவர்கள் உதவி தேவை.
அரசன் படையெடுப்பு முதல் விவசாயி விதைவிதைக்க நாள் குறிப்பது
4.வரை அவர்கள் அவசியம் இருந்தது.
நல்லது கெட்டது என எல்லாவற்றிலும் அவர்கள் தேவை இருந்தது.
சுருக்கமாக சொன்னால் உலகம் இயங்க அவர்கள் ஒருவகையில் தியாக பிம்பமாக இருந்தார்கள்.
வழிகளை சொல்வார்கள்,மந்திரங்களை ஜெபிப்பார்கள்,காலநிலை கிரகநிலைகளை கணித்து சொல்லி வழிநடத்துவார்கள்,தானமாக எது
5.கிடைக்குமோ அதை ஏற்றுகொள்வார்கள்!
உண்மையில் பிராமண வாழ்வு மிகவசதியான வாழ்வாக இருத்தல் கூடாது, இங்கு அப்படித்தான் இருந்தது.அவர்கள் நாட்டுக்காக யாகம் நடத்த வேண்டும், மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்க வேண்டும், நாடும் மக்களும் சுபிட்சம் பெற என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டும்
6.அதை ஒழுங்காக செய்தார்கள், இதனால் எல்லா தரப்பும் அவர்களை ஆதரித்தது
நாட்டில் ஏகபட்ட சமூகம் உண்டு. பயிர்தொழில் உலோக தொழில், காவல் தொழில், வியாபாரம் என ஏக தொழில்கள் உண்டு,அவனவனுக்கு தொழில் செய்ய நேரமுண்டே தவிர தெய்வத்தை தேடவோ இன்னும் பல இயற்கையின் சூட்சுமத்தினை அறியவோ நேரமிருக்கா
எல்லா தரப்பின் இந்த தேவைகளை தன் தலையில் சுமந்தவன் பிராமணன்!
தீண்டாமை என்பார்கள், அது எப்படி உருவாயிற்று என்பதற்கு கொரோனா காலமே சாட்சி.ஆம்... பிராமணன் அரண்மனை முதல் ஆற்றங்கரையில் பிண்டம் வைப்பது வரை எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டியவன்
திதியோ, திருமணமோ, சாதகம் கணிப்போ
8. அவன் பல இடங்களுக்கு சென்று பலரை சந்திக்க வேண்டும்,
பல சூழலுக்கு செல்ல வேண்டும், அதனால் அவன் நோய்வாங்கும் அல்லது பரப்பும் வாய்ப்பு இருந்தது
இதனால் அவன் தனக்கு தானே வேலியும் இட்டு கொண்டான்
பிராமணன் கல்வி பறித்தான் என்பார்கள், அடுத்தவனை வழிபடவிடவில்லை என்பார்கள்
அல்ல,
9.பக்தி யார் செய்தாலும் பலன் உண்டு, நாயன்மார்கள் 63 பேரில் பிராமணர் வெகு சிலரே!
பிராமணர் யாரின் கல்வியினையும் பறிக்கவில்லை.
அன்று கல்வி என்பது வாழ்க்கை கல்வி அது அரச பாடம், ராணுவம், விவசாயம், சிற்பம், கலை, தச்சு என பலவாறு இருந்தது
அதை எல்லாம் பிராமணர் தொட்டு ஆசீர்வதித்து
10.பிரார்த்தித்து தொடங்கி வைத்து வந்தார்களே தவிர அவர்கள் அதை செய்யவில்லை
பொற்கொல்லர், தளபதி, வியாபாரி என எல்லாவற்றுக்கும் படிப்பு இருந்தது, பிராமணன் அதை படித்தானா?
அவன் தன் எல்லையான வேத மந்திர ஆலய பணிகளில் எல்லை கட்டி நின்றான், மறுக்க முடியுமா?
அவன் அதிகாலையில் எழ வேண்டும்,
11.நீராடி தெய்வத்தை தொழவேண்டும், முன்னோர்கள் சொன்ன ஏகபட்ட மந்திர இதர உச்சாடனைகளை மனனம் செய்ய வேண்டும், அதை பரம்பரை பரம்பரையாக காக்க வேண்டும்
ஆம்.. ஓலைசுவடி ஒரு கட்டத்துக்கு மேல் கொள்ளாது, கொண்டாலும் செல்லரித்தால் நாசம். அட நூல் என்றால் எரிந்தால் நாசம், இன்றைய டிஜிட்டல் மீடியா
12.என்றாலும் ஒரே ஒரு லேசர் கதிரில் நாசம்
பின் எங்கிருந்து மந்திரங்களை மீட்டெடுப்பது?
இதனால் பாராயணம் செய்வது ஒன்றே வழி என அந்த கூட்டம் மனப்பாடமாய் படித்தது, வேறு வேலைக்கு சென்றால் அதை வழிவழியாக தொடர்வது யார்? அந்த வேலையில் கவனம் சென்றால் வேதத்தை காத்து வருவது யார்?
13.பிராமணன் ஒரு காலமும் அன்று சுகவாழ்வு வாழவில்லை, அரசனுக்கு, நிலம் கொண்டிருந்த நிலக்கிழாருக்கு , வியாபாரிகளுக்கு, உழைக்கும் மக்களுக்காக பிரார்தித்தும் ஆலோசனைகளும் சொல்லி, கடவுள்பால் அவர்களை பிடித்து வைத்த ஒரு வேலைக்காரன்!
அவனுக்கு சொத்து இல்லை, அதிகாரமில்லை, கைபொருளுமில்லை.
14. தானம் எனும் ஒரே ஒரு விஷயத்தால் வாழ்ந்தவன் அவன்.
அவனை ஆதரிக்க வேண்டியது சமூக கடமையாய் இருந்தது.
ஆம்... அன்று அவனுக்கு சம்பாதிக்க தெரியாது,
சண்டை தெரியாது, ஏமாற்ற தெரியாது
இதனால் பசுமாடும் அவனும் ஒரே வரிசையில் வைக்கபட்டிருந்தார்கள். அவர்களை சமூகமே காக்க வேண்டும் என்றும்,
16.இடையறா கடவுள்பணி செய்யும் அவர்கள், நமக்காக கடவுளிடம் மன்றாடும் அவர்களை நாம் காக்க வேண்டும் எனும் அக்கறையே இருந்தது
மந்திர முழக்கங்களும் யாகங்களும் நாடு வாழவே உச்சரிக்கபட்டன, கோவிலுக்கு சென்றால் கூட அர்ச்சகர் அவனுக்காகவே மந்திரம் முழங்கினார், அதற்கான ஒரு சிறிய கூலி அல்லது
15.அன்பளிப்பு வழங்கபட்டது,காரணம், பிராமணனுக்கு வேறு வேலை தெரியாது!
எந்த பிராமணனும் தனக்காக மந்திரம் சொல்லமுடியாது , மந்திரத்தாலோ இறை சக்தியாலோ தன்னை வளர்க்க முடியாது, அரசனின் ஜாதகத்தை கணிக்கும் அவனால் அரச பதவியில் அமரமுடியாது
அவன் வாழ்வு நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும்
17.வாழ்ந்த ஒரு தன்னலமற்ற வாழ்வு
வேதம் என்பதே விளக்கு,
வேதம் என்பதே ஒளி ,
வேதம் சொல்லபடும் நாடு செழிக்கும்
பாரதகண்டம் அப்படி இருந்தது, இந்த கண்டத்தின் எல்லா பாகங்களிலும் வேதங்கள் முழங்க முழங்க இந்நாடு செல்வ செழிப்பில் மின்னியது, இது வரலாறு.இதனால் இந்த கண்டத்தில் பிராமணருக்கு தனி
18.மரியாதை இருந்தது, அவர்கள் இக்கண்டத்தின் பொது சொத்து ஆனார்கள், அவர்களை கொல்லல் பாவம் என்றும், போர்காலங்களில் கூட அவர்களை தொட கூடாது என்றும் உத்தரவுகள் இருந்தன‌;அந்த செழிப்பில்தான் அலெக்ஸாண்டர் முதல் பிரிட்டிஷார் வரை வந்தனர், வந்து கொள்ளை அடிக்க முயன்றனர்,
20.அரசர்களின் வீழ்ச்சியில் இத்தேசம் கொள்ளைகாடு ஆயிற்று;அரசர்கள் வீழ பிராமணரை ஆதரிக்கும் வழக்கமும் குறைந்தது, ஆட்சியாளர்கள் மாற பிராமண இனம் தத்தளித்தது.தன்னை காக்க அதற்கு வேறுவழி தெரியவில்லை, அது வேத பாராணயம் பூஜை இன்னபிற விதிகள் கடமைகளிலிருந்து விலகி கணக்கெழுதுதல் குறிப்பெழுதுதல்
19.என திசைமாறிற்று, ஜோதிடம் போன்றவை விற்பனையானது இப்படித்தான்;
இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆட்சிகளில் இங்கு ஆலயங்கள் சீரழிந்தன.
பிராமண இனமும் மந்திரம் சொல்லுதலை விட்டுவிட்டு இதர மொழிகளை படிப்பதில் கவனம் செலுத்திற்றுஅது அப்பொழுது அவர்களுக்கு கைகொடுத்தது,ஆனாலும் வழிவழியாக காத்துவரும்
21.மரபினை அந்த வேத மூலங்களை அவர்கள் செய்ய தயங்கவில்லை;அவர்கள் இறைவனில் கலந்து மந்திரம் சொன்னவர்கள், மனசாட்சிக்கு அஞ்சி சராசரி மனிதனாய் இல்லாமல் தவ வாழ்வில் நின்றவர்கள் என்பதால் ஒரு நேர்மை அவர்களிடம் இருந்தது.
அதைசரியாகபயன்படுத்தினான் -வெள்ளையன், அவன் அதை அடையாளம் அவர்களிடம்
22.பெரும் பொறுப்பை கொடுத்தான், தான் செல்லும் இடமெல்லாம் அழைத்தும் சென்றான்.அவர்களிடம் இருந்த நேர்மை அவனை கவர்ந்தது, இன்றுவரை ஐரோப்பா அமெரிக்காவில் பிராமணர் பெரும் இடத்தில் இருப்பது அப்படித்தான்
#பிராமண இனத்தின்மேல் கடும் குற்றம் சாட்டும் விஷயம் எப்பொழுது தொடங்கியது?
அதை தொடங்கி
23.வைத்தவர்கள் மிஷனரிகள், பிராமண இனம் இந்துமதத்தை தாங்கி நிற்பதை அவர்களால் பொறுக்கமுடியவில்லை, காசியினை அழித்தால் இந்துமதத்தை அழிக்கலாம் என திட்டமிட்ட அவுரங்கசீப் போல,பிராமணர்களை ஒழித்தால் இந்துமதத்தை ஒழிக்கலாம் என திட்டமிட்டவர்கள் அவர்களே.இதனால்தான் அரசருக்கு நிகரான செட்டிகள்,
24.பெரும் தனவான்களான முதலியார்கள் இன்னும் பெரும் வாழ்வு வாழ்ந்த ஜமீன் கூட்டத்தை அரசிடம் அற்ப சம்பளம் வாங்கிய பிராமணனை குறிவைக்கும் திட்டம் வகுக்கபட்டது;
#நீதிகட்சிஅதைதொடங்கியது
நீதிகட்சி போராட்டம் நடத்தியது நமக்கு தெரியுமே தவிர, மேல்நாட்டில் அவர்கள் செய்த வியாபாரமோ
25.அதற்கு மிஷினரிகள் செய்த உதவியோ பலருக்கு தெரியாது;அப்பொழுது தொடங்கபட்டது தென்னக பிராமண எதிர்ப்பும், திராவிட சித்தாந்தமும்.,
வெள்ளையன் பெரும் திட்டங்களை நீண்டகால நோக்கில் வகுப்பவன், இன்று ஹாங்காங் போல, தைவான் போல இந்தியாவினை பிளந்து போடும் திட்டம் அவனுக்கு இருந்தது.
26.தென்னிந்தியாவினை பிரித்து போட அவன் திராவிட சித்தாந்தத்துக்கு தீனியிட்டான்.
மிகபெரும் பொருளாதார கேந்திரமான பம்பாயினையும் அதன் பகுதிகளை வளைக்க மகராஷ்டிரத்திலும் ஒருவரை கண்டறிந்தான்
இவர்கள் வைக்கும் தீ பற்றி எரியும் அதில் தேசம் சிதறும் என கனவு கண்டான்.
இப்படி எல்லோரும் வைத்த
27.தீதான் பிராமண எதிர்ப்பு, பிராமணனை எதிர்க்க எதிர்க்க இந்துமதம் புறக்கணிக்கபடும், மந்தைகள் சிதறும் அதை அள்ளிகொண்டு செல்லலாம் என்பது மிஷனரி கணக்கு;
அதில் தனிநாடு கண்டால் தனக்கு லாபம் என்பது பிரிட்டிஷ்காரன் கணக்கு.
#எல்லாமேஅரசியல்அன்றிவேறல்ல‌.
28.எம்மால் ஒரு விஷயத்தை உறுதியாக சொல்லமுடியும்;
இங்கு வேதங்கள் வாழ வாழ இந்திய கண்டம் வாழ்ந்தது, அது உலகின் மிகபெரும் பணக்கார நாடாய் மின்னியது;
வேதம் சரிய சரிய அது தரித்திர தேசமானது, ஆனால் பிராமணன் சுதந்திரமாக இயங்கிய நாடுகள் வளம்பெற்றன,பிராமணன் கால்வைத்த இடங்களும் ஆசிபெற்றன‌;
29.அவனை விரட்டிய தேசம் கடும் சீரழிவினை சந்தித்தது;
இங்கு வேதங்கள் முழக்கம் எவ்வளவு அவசியம், ஒரு இனம் வேறு வேலைக்கு செல்லாமல் அதை காத்துவருதலும், பொது நலத்துக்காக தனித்திருந்து பிரார்தித்து வருதலும் எவ்வளவு அவசியம் என்பதை,இப்பொழுது உலகம் புரிந்து கொண்டது;
30.இப்படி நாமே அவர்களை வெறுத்து ஒதுக்கி அடையாளமிடுவது என்பது ஒரு தேசவிரோதம்,
இந்த பாரத கண்டத்துக்கு செய்யபடும் அநீதி
31.#இன்னும்தெளிவாக#புரியவேண்டுமானால் பிராமணருக்கு தனியாக ஒரு தேசம், மிக சிறிய தேசம் அமைத்து கொடுங்கள்,
#அதுஇஸ்ரேலைவிடஉலகம்வியக்கும்தேசமாக அமையும், அது சத்தியம்!
#பிராமணர்இந்நாட்டின் #தனிஅடையாளம்
#இந்நாட்டின்சொத்து!
அவர்களை நாமே காத்து நிற்க வேண்டும்.
இவை அனைத்தும் தொகுத்து கொடுத்தது ஒரு கிறிஸ்துவர் - நன்றி ஸ்டான்லி ராஜன் - இந்த பதிவின் நோக்கமே உண்மை அறிய ஆவல்
with @HelloNNewman @wataboutery @chittukuruvi4 @almightykarthik @GunduHuDuGa @Savitritvs @swamy64
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with #AnationalistWarrior

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!