My Authors
Read all threads
நம் இந்து மதத்தில் ஒரு மனிதனின் வாழவினூடாக அவனை ஒரு உயர் வாழ்வுக்குத் தகுதி கொண்டவனாகச் செய்து, ஆதர்ச இலக்குக்கு இட்டுச் செல்லும் புனிதச் சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்களின் தொடரே #சம்ஸ்காரங்கள். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்துக்கும் உரிய குறிப்பிட்ட ஒரு சம்ஸ்காரம் அல்லது
சில சம்ஸ்காரங்கள் உண்டு. சம்ஸ்காரம் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. நினைவுச் சுவடு, சுத்திகரிப்பு, ஏதோ ஒரு நன்மை செய்வது- போன்றவை பொருந்தும். ஒரு கலாசார பாரம்பரியத்தின் ஒட்டுமொத்த தொகுப்பையும், தனி மனித வளர்ப்பையும் பேச சம்ஸ்காரங்கள் விழைகின்றன. வாழ்வின் ஒரு பருவத்திில்
இருந்து வேறொரு பருவத்துள் நுழையும்போது செய்யப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் சமஸ்காரங்கள். உடல், உள்ளம், புத்தி முதலானவற்றை சுத்திகரித்து புனிதமாக்கும் நோக்கம் கொண்ட பழக்க வழக்கங்களே இவை. இந்தப் பதினாறும் இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து கடைபிடிக்கப்படுமா என்பதும் சந்தேகமே. சாதி
வேறுபாடின்றி இந்த சம்ஸ்காரங்கள் இந்து மதத்தின் அனைவருக்கும் பொதுவானவை.
1. கர்ப்பதானம்-பாலுறவு அனுபவத்தை ஒரு புனிதச் செயலாக இந்தச் சடங்கு துவக்கி வைக்கிறது.
2. பும்சவனம் – கருவில் உள்ள குழந்தையை இவ்வுலகில் பிணைத்து, அதற்கு ஊட்டம் அளிக்கும் நோக்கில், கர்ப்பம் தரித்த மூன்றாம்
மாதத்தில் இச்சடங்கு செய்யப்படுகிறது. இந்தச் சடங்கில் கருத்தரித்த அன்னை, கருவுற்ற மனைவி தாய் ஸ்தானத்தை அடைகிறாள். எனவே கணவன் அவளை தாயைப் போல பராமரித்து பணிவிடை செய்யவேண்டும். அவள் மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூட பேசாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். பிருகதாரண்யக உபநிடதம் (6.4), மனைவி
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவன் அவளுக்கு ஆரோக்கியமான உணவைச் சமைத்துக் கொடுக்க வேண்டும் என அறிவுரை செய்கின்றது. கணவன் மனைவிக்காக பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும்.
4) வளைக்காப்பு (சீமந்தம்) – கருவுற்ற பெண் எந்தவொரு சிரமமும் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக
மேற்கொள்ளப்படும் முக்கிய சடங்காகும். 8ஆவது அல்லது 9ஆவது மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது. வேத மந்திரங்களைக் கேட்டபடியே ஒரு மணி பார்லியையும், இரு மணி கருப்பு எள்ளையும் சிறிது தயிரையும் உட்கொள்கிறாள். அரச மர வேரைக் குழைத்தும் அதிலிருந்து எடுக்கப்பட்ட சிறிது பாலையும் வலது நாசிக்குள்
பூசுவதும் உண்டு. கர்ப்பமாக இருக்கும் பெண்மணிக்கு உறவினர்கள், நண்பர்கள் பழங்கள் பலகாரங்கள் கொடுத்து, வளையல்களும் அணிவிததுக் கொண்டாடுவார்கள். மேலும் பிரசவ காலம் நெருங்கும் போது அவளின் கணவன் (மற்றும் பெற்றோர்) எப்போதும் அவளின் அருகில் இருக்கவேண்டும் என்று அறிவுரைக்கப்படுகின்றது.
4. ஜாதகரணம் – குழந்தை பிறந்தபின் ஒண்ணரை நாட்களுக்குள் நிகழ்த்தப்படும் சடங்கு இது. பிறந்த குழந்தையின் நாவில், சிறிது பொன், நெய், மற்றும் தேன் கலந்த கலவையைத் தந்தை தடவுவார்.
5. நாமகரணம்– இது குழந்தைக்கு பெயர் சூட்டும் சடங்கு. குழந்தைக்குப் பொருத்தமான பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு
அப்பெயரை, தாயின் வலது செவியில் தந்தை மும்முறை கூறுவார். தாய் குழந்தைக்கு அந்தப் பெயரை மும்முறை கூறுவார். குழந்தை பிறந்த பத்து அல்லது பன்னிரண்டாம் நாள் இச்சடங்கு நடைபெறுவது வழக்கம்.
6. நிஷ்க்ரமணம்– குழந்தையை முதல் முறை வீட்டைவிட்டு வெளியே எடுத்துச் செல்லும்போது செய்யப்படும் சடங்கு
இதை நான்காம் மாதம் செய்வது வழக்கம்.
7. அன்னப்பிரசன்னம்– குழந்தைக்கு ஆறு மாதம் ஆனபின் செய்யப்படும் சடங்கு. சமைக்கப்பட்ட உணவு முதல் முறையாகக் குழந்தைக்கு ஊட்டப்படுகிறது. சாதத்தை நெய்யிலும் தேனிலும் பிசைந்து தந்தை குழந்தைக்கு ஊட்டுவார். தற்போது குழந்தையை ஒரு கோவிலுக்கோ
திருத்தலத்துக்கோ அழைத்துச் சென்று அங்கு இந்தச் சடங்கு நிறைவேற்றப்படுகிறது.
8. சூடாகரணம்– குழந்தையின் தலைமுடியை முதல்முறையாக மழிக்கும் சடங்கு இது. குழந்தைக்கு ஒன்று, அல்லது மூன்று அல்லது ஐந்து வயது ஆனபின் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது.
9. கர்ணவேதனம்– காது குத்தும் சடங்கு. தந்தை/
தாய்மாமன் தன் மடிவில் குழந்தையை வைத்துக் கொண்டு காது குத்துவது வழக்கம்.
10. வித்யாரம்பம்– குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயதானதும், அதன் கல்வியைத் துவக்கும் சடங்கு இது. குழந்தைக்கு அகரமுதலியின் முதல் சில எழுத்துக்கள் கற்றுத் தரப்படுகின்றன. ஒரு பாத்திரத்தில் அரிசி குவிக்கப்பட்டு
அதில் எழுத்துக்களையும் சில மந்திரங்களையும் உரக்கச் சொல்லிக் கொண்டே குழந்தையின் கைப் பிடித்து வீட்டுப் பெரியவர்கள் எழுதக் கற்று கொடுப்பார்கள்.
11. உபநயனம்–குழந்தை வளர்ந்து பாலப் பருவம் எய்தியவுடன் அவனை/அவளை பாடசாலையில் சேர்க்க வேண்டும். இங்கு அந்த குழந்தை முறையான கல்வியைக் கற்க
தொடங்கும். முறையான கல்வியை துவங்கும் போது ஒரு மனிதன் இரண்டாவது முறையாகப் பிறக்கிறான் என சொல்லப்படுகின்றது. கல்வி கற்றுத்தரும் ஆசான் அவனுக்கு தாய்தந்தை ஆகிறார். ஆரம்பகாலங்களில் உபநயனம் என்பது ஒருவன் யஜ்ஞோபவிதம்-பூணூல் அணிந்து முறையானகுருகுல கல்வியில் ஈடுபடுதல் ஆகும். பிரம்மோபதேசம்
என்று சொல்லப்படும் காயத்ரி மந்திரோபதேசமும் அளிக்கப்படுகிறது. உபநயனம் என்ற சொல்லின் வேரசைகள், உப என்பதன் பொருள் அருகில், நயனம்- கொணர்தல், என்ற பொருள். எனவேஉபநயனம் என்றால் குழந்தையை குரு அல்லது ஆசிரியரிடம் அழைத்துச் சென்று முறையான கல்வி புகட்டுதல் என்று பொருள்படும்.
12. ப்ரைஸார்த்தம்– வேதக்கல்வியின் துவக்கம். இந்தச் சடங்குக்குப்பின் குழந்தைக்கு வேதங்களும் உபநிடதங்களும் கற்பிக்கப்படுகின்றன. குருகுலவாசமும் இனி துவங்குகிறது.
13. ருதுசுத்தி– பெண்ணின் முதல் மாதவிடாயின்போது நடத்தப்படும் சடங்கு. இது தொடர்பாக எண்ணற்ற சடங்குகள் பழக்க வழக்கங்கள் உள்ளன
14. சமாவர்த்தனம்– பிரம்மச்சரிய ஆசிரமம் என்று சொல்லப்படும் மாணவ பருவம் நிறைவடைவதைக் குறிக்கும் சடங்கு இது.
15. விவாகம்– திருமணச் சடங்கு. ஆணும் பெண்ணும் மனதளவிலும் உடலளவிலும் கூடுவதற்கு சமய அந்தஸ்து கொடுக்கும் புனிதச் சடங்கு இது. வாழ்வில் வளர்ச்சி காண இது ஒரு தளம் அமைத்துக்
கொடுக்கிறது. சமூக ஒழுங்கு நலனைக் காக்கவும் திருமண அமைப்பு உதவுகிறது.
16. அந்த்யேஷ்டி– நீத்தார்களுக்காகச் செய்யப்படும் சடங்கு. மரணதின சடங்குகள் மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் பிற தேவதைகளுக்கும் அளிக்கப்பட வேண்டிய ஸ்ராத்தங்கள் என்னென்ன என்று வெவ்வேறு சாஸ்திரங்களில் இந்த சம்ஸ்காரம்
குறித்து விளக்கமாக விவரிக்கப்படுகின்றன. இந்த பதினாறு சடங்குகளையும் இந்துக்கள் கட்டாயமாக மேற்கொள்ளவேண்டும் என எந்த சாஸ்திரநூலும் தெரிவிக்கவில்லை. மாறாக அக சடங்குகள் என்று சொல்லப்படும்
1) எல்லா உயிர்களிடமும் கருணை
2) பொறுமை
3) பொறாமை இல்லாமை
4) மனத்தூய்மை
5) சாந்தம்
6) நல்ல எண்ணங்களைக் கொண்டிருத்தல்
7) தாராளகுணம்
8) பேராசை இல்லாமை
ஆகிய எட்டு நற்பண்புகள் தான் கட்டாயமானவை. புற சடங்குகளின் உண்மையான அர்த்தங்களை உணர்ந்து, அகசடங்குகளைக் கடைப்பிடித்து, எளிமையான முறையில், தானம் மற்றும் தர்மத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப்படும் சடங்கு
தான் சாலச்சிறப்புடையதாகும். திருமணம், குழந்தைக்குப் பெயர்சூட்டுதல், தலைமுடி நீக்குதல், காது குத்துதல் மற்றும் இறுதிச்சடங்கு போன்ற ஐந்து சடங்குகளை தற்போது பெரும்பாலான இந்துக்கள் மேற்கொள்கின்றனர். காலச்சுழற்சியில் மற்ற சில சடங்குகள் அரிதாகி விட்டன.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with அன்பெழில்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!