My Authors
Read all threads
ஸ்ரீமத் பாகவதத்தில் #ஸ்யமந்தகமணி பற்றி ஒரு பகுதி வருகிறது. விநாயக சதுர்த்தி அன்று இதை படிக்க வேண்டும் என்று மஹா பெரியவா சொல்லி இருக்கிறார்கள். இந்த கதையைக் கேட்டால் நமக்கு மனத்தெளிவு ஏற்படும். செய்யாத தப்பிற்கு வந்த கெட்ட பெயர் விலகும் என்ற பலஸ்ருதி சொல்கிறது. #சங்கடஹரசதுர்த்தி
வழிபாடு வரக் காரணமும் இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். சியமந்தகம் என்பது உயரிய ஒரு வகை மணி. மிகுந்த சிறப்பு வாய்ந்தது. எவரிடம் இந்த மணி இருக்கிறதோ, அவருக்கு ஏராளமான ஆற்றலும் செல்வமும் வந்து சேரும். சியமந்தக மணி இருக்கும் இடத்தில் மாதம் மும்மாரி பெய்யும். சுபிட்சம் நிலவும்.
பகைவர்களால் எந்தத் துன்பமும் உண்டாகாது. ஆனால், தூய்மையற்றவர்கள் அந்த மணியை அணிய நேர்ந்தால் கொடுந்துன்பம் நேரும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அரசாங்கத்தில் குறுநில மன்னராக யதுகுல வம்ச சத்ராஜித் எனும் மன்னன் மிக ஏழ்மையான பகுதியை ஆண்டுகொண்டிருந்தான். சூரிய பகவான் மீது அளவற்ற பக்தியுள்ள
அவன் வறுமை நீங்க, வாழ்வு செழிக்க சூரியனை அவன் தொடர்ந்து வழிபட சூரிய பகவான் அவனின் பக்தியை மெச்சி, தன் சூர்ய அம்சத்திலிருந்து ஒரு இரத்தினக் கல் எடுத்து அவனிடம் கொடுத்தார். அதுவே சியமந்தக மணி. அதன் சிறப்பம்சம் ஒவ்வொரு நாளும் அந்த சியமந்தக மணியிலிருந்து எட்டு பாரம் (எடையளவு) அளவு
தங்கம் சுரந்து கொண்டேயிருக்கும்.
பக்தியின் பயனாக தான் பெற்ற சியமந்தக மணியை பயபக்தியுடன் பூஜைகள் செய்து வந்தான் சத்ராஜித். அந்த மணியிலிருந்து பெற்ற தங்கத்தினைக் கொண்டு தன் வாழ்வையும் மக்களின் வாழ்வையும் வளப்படுத்தினான். ஒரு நாள் தனது சக்ரவர்த்தியான ஸ்ரீ கிருஷ்ணரைக் காணவும், இந்த
மணியைப் பற்றி சொல்லவும் விழைந்தான். சியமந்தகமணியைத் தன் கழுத்தில் கட்டிக்கொண்டு கிருஷ்ணரைக் காணச் சென்றான். கிருஷ்ணர் சத்ராஜித்தை அன்புடன் வரவேற்று உபசரித்தார். சியமந்தக மணியைப் பற்றி கண்ணனிடம் விவரித்தான் சத்ராஜித். அதைக் கண்ட ஸ்ரீ கிருஷ்ணர் அதன் சிறப்பம்சங்களை உணர்ந்து, அவனின்
பக்தியைப் பாராட்டி, அந்த மணியைப் பாதுகாப்பாக வைத்திருக்க நினைந்து, துவாரகாக் கோட்டையில் பூஜையில் இருக்கட்டும், ஒவ்வொரு நாளும் அதிலிருந்து சுரக்கும் தங்கத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றார். ஆனால் சத்ராஜித் கிருஷ்ணர் தன்னிடமிருந்து சியமந்தக மணியை அபகரிக்க நினைக்கிறாரோ என்று பயந்தான்.
சத்ராஜித்தின் உள் எண்ணத்தை அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர், நீ பாடுபட்டு சேர்த்த பொருள் உன்னுடனே இருக்கட்டும் என்று சொல்லி அவனை வழியனுப்பி வைத்தார். சத்ராஜித்துக்கு பிரசேனன் எனும் தம்பி இருந்தான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தான். ஒரு நாள் பிரசேனன் தன் அண்ணனிடம் தான் நண்பர்களுடன்
வேட்டையாடச் செல்லவிருப்பதாகவும், அச்சமயம் தன்னிடம் சியமந்தக மணி இருந்தால் நல்லது என்று மணியைக் கேட்டான். தன்னிடம் இருப்பதைவிட தன் தம்பியிடம் சியமந்தக மணி இருப்பது கிருஷ்ணரிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி பிரசேனனிடம் மணியைக் கொடுத்தான். சியமந்தக மணியை அணிந்த பிரசேனன்
அதற்குரிய பூஜைகளை மறந்து நண்பர்களுடன் உற்சாகமாக வேட்டையாடினான். ஒரு சமயம் பிரசேனன் தன் நண்பர்களிடமிருந்து பிரிந்து கானகத்தின் நடுவே சென்றுகொண்டிருக்க அங்கே எதிர்பாராமல் வந்த சிங்கம் ஒன்று பிரசேனனையும் அவனின் குதிரையையும் கொன்று அவன் அணிந்திருந்த மணியை கவ்விக்கொண்டு சென்றுவிட்டது.
அந்த கானகத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த ஜாம்பவான் (இராமாயணத்தில் வரும் கரடி ராஜா, யுகங்கள் தாண்டிய வயதைக் கொண்டவர்) சியமந்தக மணியைக் கவ்விக்கொண்டிருந்த சிங்கத்தைக் கொன்று அந்த மணியைத் தன் குழந்தைக்கு விளையாட கொடுத்துவிட்டார். பிரசேனன் திரும்பாததைக் கண்டு கலங்கியிருந்த சத்ராஜிடம்
அவன் நண்பர்கள் பிரசேனன் நடுக்காட்டில் இறந்து விட்டதையும் அந்தக் கல் காணாமல் போனதையும் வந்து சொன்னார்கள். கிருஷ்ணர்தான் அந்த சியமந்தக மணி மேல் ஆசைப்பட்டு தன் தம்பியைக் கொன்றிருக்க வேண்டும் என்று எண்ணி, கிருஷ்ணர் மீது அவதூறைப் பரப்பினான். கிருஷ்ணர் இந்த அவச்சொல்லைக் கேட்க நேர்ந்தது
தன் மீது ஏற்பட்ட கெட்ட பெயரை நீக்கிக் கொள்ள ஆவலானார். கிருஷ்ணர் வளர்பிறை சதுர்த்தியில் இரவில் நிலவைப் பார்த்ததால் ஏற்பட்ட இடர்தான் இவ்வளவுக்கும் காரணம் என நாரதர் கூற, அவப் பெயர் நீங்க விநாயகரை தேய்பிறை சதுர்த்தியில் வழிபடச் செய்தார். விநாயகரும், கிருஷ்ணர் மேல் படிந்த கெட்ட பெயரை
நீக்க திருவுள்ளம் கொண்டு அருள்பாலித்தார். தன் சங்கடங்கள் யாவும் நீங்க விநாயகரை வழிபட்ட தினம் தேய்பிறை சதுர்த்தி நான்காம் தினம். பிரசேனன், குதிரை, சிங்கம் ஆகியன இறந்த நிலையை அறிந்த கிருஷ்ணர், அடர்கானகத்தில் ஒரு இடம் மட்டும் அதிக பிரகாசமாக இருப்பதைக் கண்டு அந்த குகைக்குள் நுழைந்து
மணியை எடுக்க நுழைய யாரோ ஒரு அந்நியன் தனது குகைக்குள் வந்து பிரகாசமான மணியைக் கவர நினைக்கின்றாரோ என்று எண்ணிய ஜாம்பவான் கிருஷ்ணரை தாக்கினார். ஜாம்பவானின் தாக்குதல்களை மிக எளிதாகக் கையாண்டார். ஒவ்வொரு முறையும் ஜாம்பவான் கிருஷ்ணரைத் தாக்கும் போதும் ஏதோ ஒரு அருமையான பழைய பந்த உணர்வு
ஜாம்பவானுக்குத் தோன்றியது. ஆயினும்
இருவரும் கட்டிப்பிடித்து சண்டை போடுகின்றனர். ஆலிங்கனம் செய்து சண்டையிடும் போது ஜாம்பவானையும் அறியாமல் மெய்சிலிர்த்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. இதே போன்றதொரு சமயம், இராமாயண காலத்தில் ஸ்ரீ ராமர், சீதையை மீட்டதற்கு நன்றியாக
ஜாம்பவானை ஆலிங்கனம் செய்திருந்தார். அந்தக் கணம் இப்பொழுது கிருஷ்ணரைத் தாக்க தழுவியபோது தெரிந்தது. அவரையும் அறியாமல் 'ராம, ராம' என்றார். நிலமையை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் தனது தோற்றத்தை நீக்கி, இராமச்சந்திர பிரபுவாக ஜாம்பவானுக்குக் காட்சியளித்தார். எல்லையற்ற மகிழ்ச்சி கொண்ட ஜாம்பவான்
கிருஷ்ணரைப் பணிந்து வணங்கி, சியமந்தக மணியை அவரிடம் கொடுத்து, தனது மகளாகிய ஜாம்பவதியை அவருக்கு மணம் முடித்து வைத்தார். சியமந்தக மணியுடன் வந்த கிருஷ்ணர் நேராக சத்ராஜித்திடம் சென்று மணியை அவனிடம் கொடுத்து, உன் பொருள் உன்னோடு இருக்கட்டும் என்று கூறி நடந்ததையெல்லாம் விவரித்தார்.
சத்ராஜித்துக்கு கிருஷ்ணர் மீது பெரும் பக்தி உண்டு. ஆயினும் தன் பொருள் மீது அவர் ஆசை வைத்தாரோ என்று எண்ணியது தன் தவறு என்று மிகவும் வருந்தி தான் செய்த குற்றத்திற்குப் பரிகாரமாக தன் மகள் பாமாவை கிருஷ்ணருக்கு மணம் முடித்து வைத்தான். சியமந்தக மணி பிரச்சனை பாமாவின் திருமணத்தோடு
முடியவில்லை. பாமாவைத் திருமணம் செய்யக் காத்திருந்த சததன்வா என்பவன் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பாமாவை மணம் முடித்த சத்ராஜித் மேல் கோபம் கொண்டு கிருஷ்ணர் இல்லாத நேரமாகப் பார்த்து சத்ராஜித் மீது படையெடுத்து, சத்ராஜித்தைக் கொன்று, சியமந்தக மணியைப் பறித்து வந்துவிடுகின்றான். கிருஷ்ணர்
துவாரகையை அடைந்தவுடன் நடந்ததை அறிந்து சததன்வாவைத் தாக்க செல்கின்றார். கிருஷ்ணர் தன்னைத் தாக்க வருகின்றார் என்று அறிந்த சததன்வா, அந்த மணியை தனது தம்பியாகிய அக்ரூரதிடம் (அக்ரூரர் மஹா தபஸ்வி. மேன்மையானவர். கிருஷ்ண பலராமரிடத்தில் பேரன்பு கொண்டவர்) கொடுத்து விடுகிறான். அவர் தவம்
செய்வதற்காகக் காசி நோக்கிச் சென்று விடுகிறார். கிருஷ்ணர் சததன்வாவைத் தேடிச் சென்று அவனைக் கொன்று விடுகின்றார். ஆனால் அவனிடம் சியமந்தக மணி இல்லை. அந்த மணி அக்ரூரரிடம் இருப்பதை அறிந்து அவரைத் தேடி செல்ல அக்ரூரர் சியமந்தக மணியை கிருஷ்ணரிடம் சமர்ப்பித்தார். ஆனால், கிருஷ்ணர் தபஸ்வியாக
விளங்கும் அக்ரூரரிடம் இருப்பதே நல்லது என்று அவரிடமே திருப்பித் தந்துவிடுகின்றார்.கிருஷ்ணர் மீதிருந்த அவப்பெயர் முற்றிலுமாக நீங்கியது.
பாகவதத்திலும், விஷ்ணு புராணத்திலும் சியமந்தக மணியைப் பற்றி விரிவாக விவரிக்கப்படுகிறது. பல இடர்கள் தந்த அந்த மணியை கிருஷ்ணர் திரும்ப சூர்யபகவானிடமே
சேர்ப்பித்து விட்டார் என்றும், அந்த மணியை பூமியில் ஓங்கி அடித்துப் புதைத்துவிட்டார் என்றும், பாண்டவர்களின் வம்சத்தினன் பரீக்ஷித்து மஹாராஜாவிடம் அந்த மணி சேர்க்கப்பட்டது என்றும் பல உப புராணங்கள் கூறும்.

நன்றி
நி.த. நடராஜ தீக்ஷிதர் எழுதிய பதிவில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் இவை.
cc @threadreaderapp unroll
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with அன்பெழில்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!