🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

கச்ச அனுஜாமி – நீ போகலாம், உனக்கு நான் அனுமதி அளிக்கிறேன்
ரணார்திதஸ்த்வம் – இன்றைக்கு நன்றாக யுத்தம் செய்து அடிபட்டுக் களைத்திருக்கிறாய் ராத்ரிம்சரராஜ லங்காம் – இரவில் சுற்றும் ராக்ஷஸர்களின் ராஜனே
லங்காம் ப்ரவிஷ்ய – மீண்டும் இலங்கைக்குள் போய்க்கொள்…

ஆஷ்வாஸ்ய – களைப்பு நீங்க ஆஸுவாஸப் படுத்திக்கொண்டு
நிர்யாஹி ரதீச தன்வீ – ரதத்தில், அம்புவில் எடுத்து மீண்டும் யுத்தத்திற்கு வா
ததா பலம் த்ரக்ஷ்யஸி மே ரதஸ்தஹ – அப்போது எனது பலத்தை நீ பார்க்கக் காட்டுகிறேன்…

என்கிறார்.
இதைத்தான் கம்பன், தனது கவிநடையில் அழகாக, மனதில் தைத்து நிற்கும்படி,

”ஆளையா! உனக்கு அமைந்தன மாருதமறந்த
பூளையாயின கண்டனை; இன்றுபோய் போர்க்கு
நாளவா எனநல்கினன் – நாகிளங் கமுகின்
வாளைதாவுறு கோசல நாடுடை வள்ளல்”

அரக்கர்களை ஆள்கின்ற ஐயா! உனது படைகளனைத்தும்,
பெருங்காற்றில் உதிர்ந்து பறக்கும் பூக்கள் போலாயின. எனவே இன்று போய் நாளை வா என்றான், இளங்கமுகு (கமுகு – பாக்கு) மரத்தில் மீன்கள் துள்ளி விளையாடும் நீர்-நில வளம் கொண்ட கோஸல தேசத்து வள்ளலாகிய ராமன் என்று வர்ணிக்கிறார்.

அப்படியும் அவனதை அவமானமாக நினைத்து ராமரைக் கொல்ல யத்தனித்தானே
ஒழிய, மனம் திருந்தவில்லை. இறுதியில் ராமரின் பானத்தால் ஸம்ஹாரம் செய்யப்பட்டான். மண்டோதரியும், பிற மனைவிகளும் துயருற்றுக் கதறினர். அண்ணனுக்கான ஈமக்கடன்களைத் தான் செய்ய வேண்டுமென விபீஷணன் ராமரிடம் கேட்க,

Temple Preah Khat at AngkorWatt : A pediment depicting the battle of Lanka. Image
“என்னிடம் கேட்பதேன் விபீஷணா… இது உன் கடமை அல்லவா? சென்று நிறைவேற்று….”

எனக்கூறிய ராமர், எதிரியே ஆனாலும், அவன் ஒரு மன்னன் ஆனதால், அவனுக்குரிய இறுதி மரியாதைகளைச் செய்தார் ராமர்.

ராவண வதமும் ஆனது. அசோகவனத்தில் அமர்ந்திருந்த ஸீதையை நோக்கி, ராம-லக்ஷ்மணரும் ஹனுமனும் வந்தனர்.
ஸீதா தேவி மகிழ்ச்சியோடு ராமரை நோக்கி வந்தாள். ஸீதையைக் கண்ட ராமர் புன்சிரிப்போ, மகிழ்ச்சியோ, ஆனந்தமோ இன்றி, அமைதியாக நின்றார்.

Divurumpola Temple – The sacred site where Sita Devi took her oath and performed the Agni Pariksha Image
லக்ஷ்மணனும் விபீஷணனும் பதறிப்போய் ராமரிடம் அவரது செயலுக்குக் காரணம் கேட்க,

“என் மனைவி மேல் எனக்கு ஸந்தேகமில்லை…. ஆனால், இத்தனை காலம் இவள் இங்கே ஒரு அஸுரனின் கோட்டையில் வாழ்ந்து வந்திருக்கிறாள்.

இவளை இப்படியே அழைத்துக் கொண்டால், இவள் நடத்தை பற்றிப் பேசி,
உலகம் இவளைத் தூற்றுமே என்றுதான் யோசிக்கிறேன்…. இவள் களங்கமற்றவள் என்பதை இந்த உலகில் நிரூபிக்க வேண்டாமா??”

என்றார். இதைக்கேட்ட ஸீதை,

“எனது கற்பின் வலிமை உண்மை என்றால், நான் இப்போதே அக்னிப் பரீட்சை செய்து எனது கற்பை நிரூபிப்பேன் இவ்வுலகுக்கு”

எனக்கூறி,
லக்ஷ்மணனை தீமூட்டச் சொன்னாள். அங்கேயே அக்னி வளர்த்து, அதில் இறங்கினாள். அவளது கற்பின் நெருப்பு அக்னியையும் சுட்டதோ என்னவோ? அக்னிதேவன் அவளை அப்படியே வெளியில் ஏந்தி வந்தார்.

“ராமா… துன்பத்திலும், ஒரு கணமும் உனை மனதினின்று பிரியாத இக்கர்புடை மகளை நீ என்னில் இறக்கியது தவறு.
இவள் துளியும் குற்றமற்றவள். அப்பழுக்கற்ற ஸீதையை இவ்வாறு பேசியது தவறு என உணர்ந்து, அவளை ஏற்பாயாக. இது எனது ஆணை…”

என்றார். ராமரின் இந்த சோதனைக்கான காரணத்தை தேவர்கள் அறிவர். ஸீதை அக்னியிலிருந்து மீண்டும் வந்த பின்னர், அவரகளை வாழ்த்தி மறைந்தனர்.
இவள் துளியும் குற்றமற்றவள். அப்பழுக்கற்ற ஸீதையை இவ்வாறு பேசியது தவறு என உணர்ந்து, அவளை ஏற்பாயாக. இது எனது ஆணை…”

என்றார். ராமரின் இந்த சோதனைக்கான காரணத்தை தேவர்கள் அறிவர். ஸீதை அக்னியிலிருந்து மீண்டும் வந்த பின்னர், அவரகளை வாழ்த்தி மறைந்தனர்.
🌱விபீஷணன் பட்டாபிஷேகம் 🌱

பின்னர், விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து, உடனடியாக அயோத்தி கிளம்பினார். விபீஷணன் அவரை சற்று தங்கி, ஒரு நாளாவது ஓய்வெடுத்துப் போகுமாறு வேண்டினார். ஆனால் ராமரோ,

“எனது கானக வாசம் நிறைவுற்றது. அங்கே எனது தாய் தந்தையையும் இழந்து,
எங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார். இப்போது கிளம்பினால் தான் மூன்று மாதத்திற்குள் சென்று சேர முடியும்”

என்றார். அதற்கு விபீஷணன் அவரைச் சமாதானம் செய்து,

“ஹே ராமா…. கலங்காதே! எனது ஒன்றுவிட்ட தமையன் குபேரன் தான் இந்த லங்காபுரியை ஆண்டு வந்தான்.
என் அண்ணன் ராவணன் அவனை வென்று, விரட்டியடித்து, இந்நாட்டைக் கைப்பற்றினான். இங்கே குபேரன் வைத்திருந்த விமானங்கள் அண்ணனிடம் உள்ளன. அதில் நீங்கள் விரைவாக அயோத்தியை அடையலாம்.”

”மேலும் அவன் வைத்துள்ள புஷ்பக விமானம் என்னும் விமானத்திற்கு, ஓட்டுநர் தேவையில்லை.
உனது மன அலைகளைக் கட்டுப்படுத்தி அதில் செலுத்தி, எந்த வேகத்தில், எவ்வளவு உயரத்தில், எத்திசையில் போக வேண்டும் விமானம் என நினைக்கிறாயோ, அந்த எண்ண அலைகளை க்ரஹித்து, அது அவ்விதமே உம்மைக் கொண்டு சேர்க்கும்.

நீங்கள் அயோத்தியை மூன்று மணி நேரத்தில் சென்று அடையலாம்.
எனவே, குளித்து உணவு மட்டுமாவது உண்டு கிளம்புவாய் ராமா…”

என வேண்டினார். அவ்விதமே, அவர் உணவு கொண்டு, விபீஷணனிடம் விடைபெற்று, மனைவியுடனும் தம்பியுடனும் மீண்டும் அயோத்தி திரும்பினார் ராமர். ராமர் அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் வருகையில், வானிலிருந்து தெரியும் இலங்கையின் அழகை,
”இலங்கை ராவணனின் எண்ணற்ற விமானங்களால், அழகாக ஜொலிக்கிறது…”

என வர்ணிக்கிறார்.

Source : Valmiki Ramayanam – Yudha Kaandam – Sargam 20. Image
5000years old Pushpaka Vimana of Ravana Found An Ancient Vimana found in the cave of Afghanistan said to be used in Maha Bharat.

Reference :

இதனிடையே தந்தை மரணத்தால் கைகேயி மனமுடைந்து,
”என்னால் தான் கணவன் மாண்டார், ராமன் வனம் சென்றான், பரதன் எனது முகத்தை இறுதிவரைப் பார்க்க மாட்டேன் என்றான்…. இத்தனைக்கும் காரணமான நான், இனி ராமன் வந்து அழைக்கும் வரை வெளியில் வர மாட்டேன்…”

எனக்கூறி தன் அறையிலேயே 14 ஆண்டுகள் சிறையிருந்தாள். ராமபிரான் திரும்பி வந்து,
கைகேயியை அழைத்து, அவளை வணங்கினார். நந்திக்ராமத்தில் துறவியாக வாழ்ந்து வரும் தம்பி பரதனிடம் தாம் திரும்பிவந்த செய்தியைச் சொல்ல ஹனுமானை அனுப்பினார்.

பரதனைச் சந்தித்த ஹனுமான், நடந்த எல்லாவறறையும் விரிவாகக் கூறினான். அண்ணன் திரும்பிய செய்தி கேட்டுப் பரவசம் கொண்ட பரதன்,
நந்திக்ராமத்தில் தனைத் தேடி ராம – லக்ஷ்மணரும் ஸீதையும் வருவது கண்டான். கண்ணீர் பொங்கியவனாக ஓடிவந்த பரதன் ராமரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். அவர் அவனைச் சமாதானம் செய்தார்.

”இனி இத்துடன் ராஜ்ய பொறுப்பை தங்களிடம் ஒப்படைத்துவிட்டேன் அண்ணா…”

எனக்கதறிய பரதனை அணைத்துக் கொண்டார்.
@threader_app compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan (Modi is My Familyman)

Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

May 4
🌺உலகின் 8'வது, 9'வது மற்றும் 10'வது அதிசயம் இந்தியாவில் தான் உள்ளது. 🌺

8️⃣வது அதிசயம்: கரீனா கபூரின் குழந்தைகள் முஸ்லீம் ஒருவரை மணந்த பிறகு முஸ்லிம்களாகப் பிறந்தனர். ஆனால் "ஃபெரோஸ் கானை" திருமணம் செய்த பிறகு "இந்திரா எனும் மைமுனா பேகம்" குழந்தைகள் "பிராமணர்களாக" பிறந்தார்கள்?😅
9️⃣வது அதிசயம்:

தீவிர காங்கிரஸ்காரரான "அஜித் ஜோகி" அவர் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ மதத்தின்படி அடக்கம் செய்யப்பட்டார்.
அவரது மகன் அமித் ஜோகி, காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து தனது மறைந்த தந்தையின் அஸ்தியை நர்மதா நதியில் கரைத்தார். எரிக்கப்படாத ஒருவரின் "சாம்பல்" எங்கிருந்து வந்தது?
😂
"காங்கிரஸால் எதையும் செய்ய முடியும், "கான் மற்றும் வத்ரா"வை "காந்தி" ஆக்க முடியுமானால்,
இது முடியாதா?😅

🔟வது அதிசயம்: "நேரு"க்கு முன் "நேரு" இல்லை. "நேரு"விற்குப் பிறகு "நேரு" இல்லை!

முழு வரலாற்றிலும், மோதிலால் & ஜவஹர் லால் ஆகிய 2 நேருக்கள் மட்டுமே பூமியில் பிறந்துள்ளனர்.
Read 6 tweets
Apr 24
🐵 ராம ராம ராம ராம 🐵

நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை...

🍒 தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி Image
ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.

சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன், ஸ்ரீ ராமன்
வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை, குட்டையானவை என்று. அதில் "சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை. இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர் புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
Read 22 tweets
Mar 3
🌺What's in a name🤔? Nothing??🌺

*If there is nothing in a name, why did the invaders in the first place, change the names of Prayagraj to Allahabad, Karnavati to Ahmedabad, Ishwarpur to Islampur, Hanumanpur to Humayunpur, etc..?*

What's in a name ??
When USA won its Independence from Britain on 4th July 1776, the first thing they did was destroy the entire culture, rules, infrastructure & even the language of English. Wiping out every proof of invasion.

The modern American doesn't even know from whom they won independence.
You don't celebrate the birthdays of your partners who you got a divorce from due to an abusive relationship, you don't keep the last name of your partner, you go back to your maiden name. You keep alimony & destroy everything that reminds them because it hurts your sentiments.
Read 16 tweets
Jan 22
😡தமிழகத்தின் அயோத்தியாக மாறப்போகும் திருப்பரங்குன்றம்
மலை.😡
(வந்துள்ள தகவல்... பொறுமையாகப் படிக்க)

"பிப்ரவரி 18... ரத்த ஆறாக ஓடப் போகும் திருப்பரங்குன்றம் மலை.

அனைத்து ஆவணங்களிலும் திருப்பரங்குன்றம் மலை என்ற பெயர் நீக்கப்பட்டு சிக்கந்தர் மலை என்று சேர்க்கப்பட்டுள்ளது. Image
அதை இந்த கேடுகெட்ட திமுக அரசு அனுமதித்துள்ளது. மேலும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான PFI யுடைய முகமூடி தான் இந்த SDPI. அனைத்து மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டவை இந்த இரு அமைப்புகள்.

தமிழகத்தில் PFIஐ மட்டும் தடை செய்துவிட்டு, அதனுடைய நிர்வாகிகள் அனைவரும்
தற்போது SDPI அமைப்பில் சுதந்திரமாக செயல்பட்டு கொண்டுள்ளார்கள்.

திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள அந்தப் பள்ளிவாசல் பிரச்சனையை முழுவதுமாக கையாள்வது SDPI என்ற தீவிரவாத பின்னணி கொண்ட அமைப்புதான்.

👉ஆனால் தற்போது இவ்வமைப்பு அதிமுகவின் கூட்டணியில் உள்ளது.👈
Read 23 tweets
Jan 10
🌺பகைவனுக்கும் பகவான் ரக்ஷிப்பானா... இதோ...🌺

அடியேனது நண்பர் வீட்டில் காலை திருவாராதனம் கண்டு வந்த போது நண்பனின் 9 வயது மகன்

மாமா நவகிரஹம் ஒன்பது உள்ளது ஆனால் வாரம் என்பது ஏழு நாட்களே உள்ளது மற்ற இரண்டு கிரஹங்களுக்கும் கிழமை கிடையாதா இது பாரபட்சம் இல்லையா என கேட்டான்.
அவனை, ஒன்பது கிரஹம் பெயர்களை கூறு என்றேன்.

சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்றான்.

வாரத்தின் 7 நாட்கள் கூறு என்றேன்.

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, என்றான்.

"இப்போ உன் கேள்வி, ராகு கேதுவுக்கு ஏன் வாரத்தில்
பங்கு இல்லை என்பதும், அது பாரபட்சம் என்பதும்தானே?"

"பகவான் எந்த காரணத்தைக் கொண்டும் யாருக்கும் பாரபக்ஷம் காட்டமாட்டான்.

ஹிரண்யனுக்கு பல சந்தர்ப்பங்களைக் கொடுத்தான் பின் தன் பக்தன் பிரஹலாதன் உயிரை காக்க தூணிலிருந்து தோன்றி அரக்கன் ஹிரண்யன் உயிரை எடுத்தான்.
Read 14 tweets
Jan 6
🌺யாருக்கேனும் இப்பதிவு உதவலாம்...🌺

4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த பெண் ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,
8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர்.
மிரண்டுப் போன நண்பனின் மாமா செய்வதறியாமல் திகைத்த நிலையில்...

அங்கேயே இருந்த ஒரு நல்லிதயம் கொண்ட மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார்.

"மிகச்சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை இங்கே மாதம் ஒன்றோ இரண்டோ நடக்கும் நிலையில்,

தினமும் ஐந்து -பத்து சாதாரணமாக நடக்கும்
திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு ( Thirvendram Medical college Hospital) உடனே எடுத்துச்செல்லுங்கள்", எனக்கூறினார்.

உடன், ஒரு கடிதமும் வாங்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் விரைந்து காலையில் அட்மிட் செய்துள்ளனர்.

உடனே, அட்மிஷன் செய்து நோயாளியின் தன்மைக்கேற்ப பரிசோதனைகள் செய்து, Image
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(