My Authors
Read all threads
ஒரு மன்னன் உருவாவான் அல்லது உருவாக்கப்படுவான், தொழிலதிபர் உருவாவான் அல்லது உருவாகப்படுவான்

ஆனால் கவிஞன் எழுத்தாளன் போன்ற கலைமனம் கொண்டோர் பிறந்துதான் வருவார்கள், அப்படி ஒரு உணர்வு பிறப்பிலே வரமுடியுமே தவிர, பயிற்சியினால் அப்படி ஒருவனை உருவாக்க முடியாது -/1-/
-/2/- கலைஞர்களுக்கு கிடைத்த தனி வரம் அது. ஆனால் அந்த கலைஞனை அப்படியே விட்டால் அவன் காட்டு சந்தனமாக, இல்லை கானகத்து யானையாக, யாரும் கேட்கமுடியா குயிலோசையாகவே மடிந்துவிடும் ஆபத்து உண்டு

கலைஞன் அமைவது அபூர்வம் அவனை கண்டெடுத்து மீட்டு மின்ன வைக்க ஒருவன் வருவதும் அபூர்வம்.
-/3/- இந்த இரண்டும் சரியாக இணையும் இடத்தில்தான் மாபெரும் அதிசயங்கள் தோன்றின‌

என்னதான் காளிதாசன் என்றாலும் போஜமன்னன் இல்லை என்றால் அவனுமில்லை, சடையப்ப வள்ளல் இல்லையென்றால் கம்பனில்லை. பரமஹம்சர் இல்லையென்றால் விவேகானந்தருமில்லை

அப்படி ஒரு மேகம் உருவாகி வந்தது, கங்கைக்கரையில்
-/4/- பிறந்திருந்தாலும் திருவணாமலைக்கு அருள்மழை பொழிய வந்தது, உணர்ந்தோருக்கு பெருமழை பெயத அந்த அவதாரம் , நடப்பதை பார்த்து கொண்டே இருந்தது

வலுவும் ஆற்றலும் வீரமுள்ள கிரேக்க இனம் வீணாக விளையாடி களிப்பதா என சிந்தித்தான் சாக்ரடீஸ், அவனின் சிந்தனையே அலெக்ஸாண்டர் எனும் மாவீரனாக
-/5/- கிரேக்க சாம்ராஜ்யத்தை எழுப்பியது

ஆம் ஒரே ஒரு ஞானி, ஒரே ஒரு பொதுநலவாதி ஒரே ஒருவன் மூலம் மொத்த மக்களையும் தொடுவான், மொத்த சமூகத்தையும் புரட்டுவான். ஆனால் யாரை தொட்டால் மக்களை தொடமுடியுமோ, யாரை பயன்படுத்தினால் மக்களை சுருட்ட முடியுமோ அந்த ஒருவனை மிக சரியாக தொடுவான் ஞானி
-/6/- சாணக்கியன் இப்படித்தான் இருந்தான், அரிஸ்டாட்டில் இப்படி இருந்தான், கருவூர் சித்தரும் இப்படித்தான் இருந்தார், பரமஹம்சரும் இப்படித்தான் இருந்தார்

அப்படி ஒரு ஞானியான யோகிராம்சுரத்குமார் என்பவரின் கண்ணில் பட்டார் அந்த எழுத்தாளன்

அவன் வாழ்வு அதன்முன் வேறுமாதிரியாய் இருந்தது,
-/7/- தன் எழுத்து என்பது நாவல் படைக்கவும் சினிமாவில் சம்பாதிக்கவும், உலக இன்பங்களை எல்லாம் அனுபவிக்கமட்டுமே என நினைத்து கொண்டு சம்பாத்தியம் உல்லாசம் என இருந்தான்

அப்படியே விட்டிருந்தால் அவன் சராசரி எழுத்தாளனாக, சம்பாத்தியம் செய்த வசனகர்த்தாவாக தன் வாழ்வினை முடித்திருக்க கூடும்.
-/8/- ஆனால் அர்ஜூனனை மிக சரியாக பயன்படுத்திய கண்ணன் போல, அவரை மிக சரியாக கையில் எடுத்தார் திருவண்ணாமலை ஞானி

அதன் பின் அந்த காவேரிக்கு அணையிடபட்டு அது சென்ற இடமெல்லாம் செழித்தது

பாலகுமாரன் எனும் மாபெரும் நதி உருவானது இப்படித்தான்

சினிமா, வெற்று இலக்கியம் என சுற்றிகொண்டிருந்த
-/9/- பாலகுமாரன் ஞானமிக்க சித்தனாக உருவானது இப்படித்தான் தெய்வத்தின் அழைப்பு அது

அதன் பின் அவர் எழுதியதெல்லாம் யோகியே சொன்னது போல "பாலகுமாரன் என் பேனா", ஆம் அந்த எழுத்தெல்லாம் சாதாரண கூலி எழுத்தாளனுக்கு சாத்தியம் அல்ல.

பாலகுமாரன் எழுத்தின் விசேஷம் என்னவென்றால் அவர் யாரையும்
-/10/- காயப்படுத்த்தவில்லை, எல்லா தரப்பிலும் அவருக்கு நட்பும் ஆதரவும் இருந்தது, எதிரி என யாருமில்லை அல்லது உருவாக வழியில்லை.

காரணம் அந்த மனம் சித்த மனநிலைக்கு உயர்ந்திருந்தது, கடவுளில் கலந்திருந்தது, கடவுளில் கலந்த அந்த மனம் அன்பில் ஊறிக் கொண்டே இருந்தது.
-/11/- அதுதான் எழுத எழுத அவருக்கு சரக்கு வந்து கொண்டே இருந்த விஷயம், மணிமேகலையின் அட்சயபாத்திரம் அன்பால் அன்னமிடுவது போல பாலகுமாரனின் மனம் அன்பும் பக்தியும் தத்துவமும் கொண்ட எழுத்துக்களை கடைசி வரை கொடுத்தது

ஆம் அவர் சினிமா, பணம் சம்பாத்தியம் என தொடர்ந்திருந்தால் 100 சினிமா
-/12/- வந்திருக்கும், அவரும் சம்பாதித்துவிட்டு விடைபெற்றிருப்பார், ஆனால் காலத்தால் என்னாகும்?

பணத்துக்கு எழுதியது பணம் போல் மதிப்பிழக்கும், கடவுளுக்கும் மானிடத்துக்கும் செய்தது கால காலத்துக்கும் நிலைத்திருக்கும்.

ராஜராஜசோழன் தனக்கென செய்யாமல் சிவனுக்காய் செய்தான் நின்றான்.
-/13/- பாலகுமாரனும் அதையே செய்தார், தனக்காக செய்யாமல் சிவனுக்காய், சிவனின் தன்மையான அன்புக்காய் எழுதினார்

உண்மையில் அம்மனிதனின் நூல்கள் காலத்தை வென்று தஞ்சை கோவிலை போல் நிற்பவை. அவர் வசனம் எழுதிய நாயகன் சில வருடங்களில் பாகவதர் படம் போல் மறக்கப்படலாம், பாட்சா அடுத்த தலைமுறைக்கு
-/14/- எரிச்சலாகலாம்
ஆனால் அந்த உடையார், கங்கை கொண்ட சோழன் இன்னும் ஏகப்பட்ட நூல்களும் கால காலத்துக்கும் நின்றிருக்கும், எவ்வளவோ பேருக்கு அது வரலாற்றை சொல்லும், ஞானத்தை சொல்லும்.
பாலகுமாரன் எழுத்து ஞானத்தாலும் தெளிவாலும் புத்தி கூர்மையாலும் ஏற்றபட்ட ஞான விளக்கு.
-/15/- அந்த விளக்கு எல்லா தலைமுறைக்கும் வழிகாட்டும்.
எப்படி அவரால் முடிந்தது என்றால் அந்த யோகி கொடுத்த ஞானமும் சிந்தையும் அப்படி, அன்பில் அம்மனம் மாறியது, அன்பினால் அவர் அகந்தை அழிந்தது

அகந்தை அழிந்த நல்ல படைப்பாளியால் மாபெரும் விஷயங்களை கொடுக்கமுடியும், பாலகுமாரன் எனும்
-/16/- வைரத்தின் அகந்தை எனும் பட்டையினை செதுக்கி அகற்றி அவரை மின்ன வைத்தார் யோகி

அது இதோ உயரத்தில் மின்னுகின்றது

பாலகுமாரனால் பலன் பெற்றோர், இன்னும் பெற்று கொண்டிருப்போர் ஏராளம், இன்னும் பெறபோகின்றவர்களும் ஏராளம்

ஆம் யோகிகள் எல்லோரும் ஒரே வரிசையே. அது புத்தனோ இயேசுவோ ரமணரோ
-/17/- விவேகானந்தரோ யோகிராம் சூரத்குமாரோ எல்லோரும் ஒரே வரிசையே.

அந்த யோகி தன் சமாதானத்தையும் அன்பையும் பாலகுமாரன் எனும் தன் சீடனிடம் விட்டு சென்றார், பாலகுமாரன் தன் எழுத்துமூலம் நமக்கெல்லாம் விட்டு சென்றார்

அதனால்தான் அந்த எழுத்து ஒரு நிறைவினை கொடுக்கின்றது, வாழ்வினை பற்றிய
-/18/- புரிதலை கொடுக்கின்றது, எந்நிலையில் படித்தாலும் பொருத்தமான பதிலை தந்து நம் மனதின் சுமையினை அகற்றுகின்றது

ஏதோ ஒரு தெய்வீக சக்தி அலை வடிவில் இறங்கி அவரை எழுத வைத்தது, அவரும் மானிடருக்காக எழுதி குவித்தார், நாமெல்லாம் பயன்பெற்றோம்.

எவ்வளவு சுகமான எழுத்து அது?
-/19/- மாபெரும் உயரத்துக்கு படி அமைத்து இழுத்து செல்லும் எழுத்து அது, அதில் ஏறி ஏறி நடந்து ஒரு கட்டத்தில் திரும்பி பார்த்தால்தான் நாம் வந்திருக்கும் உயரம் தெரியும், ஆம் நம்மை அறியாமலே நம்மை எங்கோ இழுத்து செல்லும் எழுத்து அது

ஒரு வழிகாட்டி அது, ஒரு பாதை அது, ஆழ்கடலின்
-/20/- இருட்டுக்குள் அழைத்து சென்று அதிசயங்களை காட்டும் மாயம் அது

பாலகுமாரனை தவிர யாருக்கும் அது சாத்தியமில்லை

ஆனிமாதம் என்பது தமிழருக்கு சிறப்பானது, ஆனியில் வாங்கும் பொன்னுக்கும் முத்துக்கும் மதிப்பு அதிகம் என்பார்கள். இன்றும் அந்த வரிகள் வழக்கில் உண்டு

ஏன்? ஆனி என்பது
-/21/- தெளிவினை கொடுக்கும் மாதமாம், அந்த தெளிவில் கிடைப்பதெல்லாம் சிறப்பாய் இருக்கும் என்பது நம்பிக்கை.
இயற்கையிலேயே ஆராய்ச்சி செய்யும் குணத்தினைப் பெற்றிருப்பர்.

இதில் ஆனி உத்திரம் என்பது சிறப்பான ஒரு நாள்.

அந்த மகத்தான நாளில்தான் பாலகுமாரன் அவதரித்தார்.
-/22/- அவரின் நட்சத்திர பிறந்த நாள் ஆனி உத்திரமே.

இன்று கொண்டாடபடும் பிறந்த நாள் ஆங்கில நாட்காட்டி சொல்வது எனினும் அதைத்தான் பலர் பின்பற்றுகின்றனர்
ஆனி உத்திரம் எனும் அபூர்வ நாளில் பிறந்த மகான் அவர், அதனால்தான் எல்லா விஷயங்களிலும் அவருக்கு ஆழ்ந்த ஞானமும் ஆராய்ச்சியும் இருந்தது,
-/23/- சொல்லும் விஷயத்தில் உண்மை இருந்தது.

சிலர் வியப்பது என்னவென்றால் எப்படி அவரால் இன்னொருவர் இடத்தில் குறிப்பாக மன்னர்களை பற்றி எழுதினால் மன்னரை பற்றி, யோகிகளை பற்றி எழுதினால் யோகிகளை பற்றி, புரிய மகா சிரமமான புரிந்து கொள்ளவே முடியாத பிற விஷயங்களைப் பற்றி எழுதினால் மிக
-/24/- துல்லியமாக எழுதமுடிகின்றது என்றால் மானிட மனதுக்கு அது கடினம் யோக மனதுக்கு அது சுலபம்

இதற்கெல்லாம் அடிநாதம் என்ன தெரியுமா? அன்பு.

அன்பு என்பதே அதிசயத்தை செய்யும், எவன் ஒருவன் தன்னலம் துறந்து தன் மக்களுக்கு நல்வழிகாட்ட, அவர்கள் துன்பப்படாமல் வாழ வழி சொல்ல,
-/25/- அவர்கள் இன்புற்றும் நிம்மதியுடனும் வாழ தன்னை துறந்து தன் அகந்தையினை துறப்பானோ அவனை தெய்வம் கையில் எடுத்து நடத்தும்

அந்த அன்பான மனம் பாலகுமாரனுக்கு இருந்தது அதை இன்னும் கூர்மையாக்கி ஞானமாக்கி அவரை சித்தனாக்கினார் அவரின் ஞானகுரு.

எல்லா மண்ணும் பானையாகாது, எல்லா கல்லும்
-/26/- சிலையாகாது, எல்லா சிப்பியும் முத்து கொடுக்காது. எது பானைக்கான மண் என்பது குயவனுக்கு தெரியும் என்பது போல, எது அன்பான மனம் என்பது ஞானிக்கே தெரியும்

அப்படி அந்த ஞானிதான் எத்தனையோ எழுத்தாளர் இருக்கும் மண்ணில் அவரை சரியாக இழுத்து வசபடுத்தினார்

பாலகுமாரன் எனும் எழுத்தாளனின்
-/27/- ஒரு பக்கம் நமக்கு தெரியும் ஆனால் இன்னொரு பக்கம் பாருங்கள் அது வலிமிக்கது.

அவர் நினைத்திருந்தால் கோடிகணக்கில் சம்பாதித்திருக்கலாம், எவ்வளவோ சினிமாவுக்கும் நாவலுகும் எழுதி அண்ணாமலை செட்டியார் போல் சேர்த்திருக்கலாம்

ஆனால் அந்த செல்வத்தின் வழியினை துறந்தார், எல்லாம் வீண் என
-/28/- உண்மை உணர்ந்து விலை போகாத, சம்பாத்தியம் கொடுக்காத ஞான வழி எழுத்துக்கு திரும்பினார்

அது பணம் கொட்டாது என தெரிந்தும் தன் கடமையினை இம்மக்களுக்காய் செய்தார், அதில் அவருக்கு பணரீதியாக நஷ்டமே, எழுத்து ஒன்றையே தொழிலாக கொண்டவனுக்கு அது நஷ்டமே..!

ஆனால் எது அவரை நடத்திற்று?
-/29/- சர்வ சக்தி கொண்ட தன் குருநாதனே பிச்சைக்கார கோலத்தின் மானிட அன்போடு திரியும்பொழுது தனக்கு ஏன் அந்தஸ்து, கவுரவம், பணம் என அவர் உண்மை உணர்ந்து தன் வழி மாற்றினார்.

அந்த வழி அவர் சென்ற பொழுது நமக்கு அவர் ஏற்றிவைத்த ஜோதிதான். வெட்டி வைத்த தங்கம்தான்.
-/30/- "எழுத்துச் சித்தர்" என்பது அவருக்கான பொருத்தமான அடைமொழி எனினும் ஞானசித்தன் என்பதே அவருக்கான சரியான பெயர். அவர் பொன்னை பெண்ணை பொருளை புகழை எதையும் தேடவில்லை, மாறாக அன்பையும் சிவ‌பக்தியும் தேடினார் அதை தேடி தேடி எல்லோருக்கும் கொடுத்துவிட்டு சென்றார்

அவரால் எவ்வளவு
-/31/- பலன்பெற்றது சமூகம், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஞானமும் உண்மையும் தத்துவமும் வரலாறும் அவர் விட்டு சென்றார்

அவரின் ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொருவரும் பலன் பெற்றிருக்கின்றனர், அவரின் வார்த்தைகளும் வரிகளும் எவ்வளவோ மக்களுக்கு ஆறுதலாயின, இன்னும் அந்த விளக்கு வழிகாட்டும்.
-/32/-தஞ்சை கோவில் முதல் எத்தனையோ கோவில்களின் வரலாறு அவரால் துலங்கிற்று, இன்னும் அந்த விளக்கு பல கோவில் வரலாற்றில் விளக்கேற்றும்.

ஒரு ஞானி யாரையும் பகைக்காமல் யார் மனதையும் புண்படுத்தாமல் போராளி புரட்சி புண்ணாக்கு பேசாமல் களத்துக்கே வராமல் மிகபெரிய சாதனையை தன் விலகி இருத்தலால்,
-/33/-தனித்து இருத்தலால் பார்வையாளனாய் இருந்து கவனித்ததால் செய்யமுடியும் என்பதற்கு பெரும் சான்றுகள் வரலாற்றில் உண்டு

தனித்து இருந்து உலகை கவனித்தல் என்பது யோகிகளின் பார்வை, அப்படி கவனிக்கும் பொழுது தீர்வை சொல்வதும் அவர்கள் வேலை

பாலகுமாரன் அப்படி தனித்திருந்தார், தவமிருந்தார்,
-/34/- பார்வையாளனாய் இருந்தார், அவரின் அன்புமனம் கடவுளின் பிரபஞ்சத்தில் கலந்திருந்தது. அது எல்லா சிக்கல்களையும் அவரால் உணர வைத்தது அதற்கு தீர்வும் சொன்னது

அவரின் சில நூல்களை வாசித்திருக்கின்றேன், உடையார் முதல் எல்லாமே தனி ரகம், ஒவ்வொன்றும் இமயத்தின் உயரம், கயிலாயத்தின் தூய்மை,
-/35/- பசிபிக் கடலைவிட ஆழம், பிரபஞ்சத்தை போன்ற விரிவு.
ஒரு சில நூல்கள் நீண்டகால தேடலுக்கு வழிகொடுத்தன‌

உதாரணம் முப்பந்தல் ஆலயம்

அந்த நெல்லைமாவட்ட முடிவில் இருக்கும் முப்பந்தல் ஆலயம் பற்றி பல கதை உண்டு, இன்று கொண்டாடப்படும் ஜெயமோகன் கூட அது நெல்லைமாவட்டம் பழவூரில் செட்டி ஒருவன்
-/36/- மனைவியினை கொன்றதில் உருவான கோவில் என சுருக்கமாக சொல்லியிருந்தார்

அவரின் ஆராய்ச்சி அந்த அளவில் முடிந்தது

ஆனால் அந்த நீலி யார்? திருவாலங்காட்டில் அவள் எப்படி சேர்ந்தாள், அவளுக்கு எப்படி இவ்வளவு சக்தி வந்தது? அவள் சேர நாட்டுக்கு எப்படி சென்றாள்? சேரநாட்டின் எல்லையான
-/37/- முப்பந்தலுக்கு அந்த சக்திமிக்க நீலியினை சேரன் எப்படி கொண்டுவந்தான் எனப்தெல்லாம் "புருஷ வதம்" எனும் பாலகுமாரனின் நூலைப்படித்த பின்பே விளங்கிற்று.

ஆம் இன்றும் முப்பந்தல் இயக்கி சக்தி மிகுந்த நீலி, அவளுக்கு இருக்கும் பக்தர்களும் அவள் காட்டும் உக்கிரமும் காவலும் கோடிகணக்கான
-/38/- சாட்சிகளை கொண்டது

அதை கடந்து செல்லும்பொழுதெல்லாம் சில கேள்வி எழும், பழவூர் எனும் நெல்லைமாவட்ட ஊரில் அப்படி ஒரு சம்பமே நடந்ததாக யாரும் சொல்லா நிலையில் அப்படி நடந்தாலும் பழவூரில் அவளின் பெயரில் ஒரு கல் கூட இல்லா நிலையில் பழவூர் நீலி எப்படி முப்பந்தல் அம்மனாக மாறினாள் எனும்
-/39/- சிந்தனை ஓங்கும்.

அந்த சிந்தனை அம்மனை எட்டிற்றோ என்னமோ பாலகுமாரனின் "புருஷ வதம்" மூலமாக தான் பழையனூர் நீலி என்பதையும், திருவாலாங்காட்டில் குடிகொண்டிருந்தவள் எனும் செய்தியினையும் பாலகுமாரனின் மூலமாக சொன்னாள்

ஆம், இன்னும் எவ்வளவு கேள்விகளுக்கு அந்த எழுத்து சித்தர் பதில்
-/40/- எழுதிவைத்துவிட்டு சென்றிருக்கின்றாரோ தெரியாது, ஆனால் நிச்சயம் இருக்கும். இன்னும் ஆயிரம் ஆண்டுக்கு எழுதவேண்டியதை அவர் இப்பொழுதே எழுதி வைத்திருக்கலாம்

நீங்களும் அவரை தொடர்ந்து படியுங்கள், உங்களின் எல்லா கேள்விக்கும் தேடலுக்கும் அவரிடம் பதில் உண்டு, காரணம் அவர் அகத்தியனின்
-/41/- அவதாரம்

பாலகுமாரன் மிக சரியாக தன் குருவினை அடையாளம் கண்டார், அவரை தயக்கின்றி ஏற்றார், மாபெரும் அவதார எழுத்தாளனாய் மின்னி அழியா இடம்பெற்றார்

ஆம் நாமும் நல்ல குருவுக்காய் பிரார்த்திப்போம், நல்ல குருவாய் நிச்சயம் நமக்கும் ஒருவர் வருவார்,

ஏன் பாலகுமாரனே மிக சரியான ஒரு
-/42/- குரு அவரை பின்பற்றினாலே நல்வழி நிச்சயம் திறக்கும், ஞானம் தெறிக்கும், உலகம் நம்மாலும் பயன்பெறும். அந்நதி காவேரியாக பாய்ந்ததென்றால் நம்மால் சிறு ஓடையாகவாவ‌து உருவெடுக்க முடியும்.

சாணக்கியன் எனும் ஒரு சாதாரண ஆசிரியன் உருவாக்கியதே மவுரிய சாம்ராஜ்யம், ஒரு பரதேசியான
-/43/- கருவூர் சித்தரின் ஆசியே சோழ சாம்ராஜயம்

ஆம் சித்தர்களும் ஞான புருஷர்களும் முதலில் செய்திருப்பது சாதாரண காரியமாக இருக்கும், ஒரு தீப்பொறி போலதான் தெரியும், ஆனால் மெல்ல மெல்ல அது பற்றி எரியும்பொழுதுதான் அவர்களின் திட்டமும் நோக்கமும் பல விஷயங்களும் தெரியவந்து அதன் பலன் மிக
-/44/- மிக பிரமாண்டமாய் தெரியும்

அப்படி பாலகுமாரன் செய்திருப்பது மிக பெரிய விஷயம், அவர் விதைத்திருப்பதும் ஏற்றி வைத்த தீபமும் சாதாரணம் அல்ல, ஒரு காலத்தின் அதன் மிகபெரும் பலனை இந்த மண்காணும், அப்பொழுது அவரை மிக நன்றியோடு இந்த மண் நினைந்து நினைந்து அழுது வணங்கும்
-/45/- அந்த ஆனிமாதத்தில் கிடைத்த ஆனிப்பொன்னுக்கு, தமிழகம் கண்ட தெய்வீக எழுத்தாளனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

இன்று தன் குருவுடனும் சிவனுடனும் கலந்து ராஜராஜசோழனுடமும் முப்பந்தல் நீலியுடனும் கரம்பிடித்து வலம்வரும் அந்த ஞானபெருமகன் நம்மை எல்லாம் ஆசீர்வதிக்கட்டும்
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with ருத்ர வைதாரிணி [RudhraVaidharini]

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!