, 38 tweets, 22 min read
My Authors
Read all threads
கொல்லிமலை அனுபவம்:- நீண்ட திரேட்

சங்ககாலத் தமிழன், வாழும் இடத்தின் சூழலைப்பொறுத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் நிலப்பரப்புகளை பிரித்தான்.

சுற்றுலா செல்ல வேண்டுமானால் நம் நினைவில் முதலில் வந்து நிழலாடுவது குறிஞ்சிப் பகுதிகளான மலை வாசஸ்தலங்கள் தான்.
மலைகள் என்றவுடன் கொடைக்கானல், உதகை போன்ற இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்று இல்லை.

மதுரை,கோவை செல்லும் பாதையை மாற்றி நாமக்கல்,சேலம் பாதையில் கொல்லிமலை நோக்கியும் செல்லலாம்.
மேற்குத் தொடர்ச்சி மலையை மட்டும் வெண்மேகங்கள் உரசி செல்லவில்லை
கிழக்குத் தொடர்ச்சி மலையையும் கிட்ட வந்து தொட்டுப் பார்க்கிறது இயற்கை,

பூமிப்பந்தின் இயற்கைச் சங்கிலியை தன் விருப்பம் போல் இழுத்து வளைத்து மனிதனின் மாசுகள் அதிகம் தீண்டாத மலையாகவே இன்று வரை திகழ்கிறது கொல்லிமலை.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இயற்கை வளம் மிக்க கொல்லிமலை,

கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக கடல்மட்டத்திலிருந்து சுமார் 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது ,மூலிகை மலையான கொல்லிமலை.
கொல்லிமலையின் மலைப் பாதையை அடைவதற்கு 15 கி.மீ. முன்பாகவே மலையின் முழு வடிவம் நமக்குத் தெரிய ஆரம்பிக்கும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை எனக்கு ஒரு மனிதனின் முகம் முழுமையாகத் தெரிந்தது, அந்த மலையின் முழு வடிவத்தைக் காணும்போது ஒரு மனிதன் நேராகப் படுத்திருந்தது போன்று இருக்கும்.
கொல்லிமலையின் அடிவாரம் காரவல்லி என்ற ஊரில் தொடங்குகிறது அருமையான மலைப் பயணம்.

தமிழகத்தின் பிற மலை வாசஸ்தலங்களைச் சென்றடைவதை விட சற்று கடினமானது கொல்லிமலை.

சுமார் 26 கி.மீ. மலைப் பாதையை 72 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து கொல்லிமலையை அடையலாம்.
கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பச்சைமலை, கல்வராயன் மலை என இவற்றின் வரிசையில் அமைந்துள்ளது கொல்லிமலை.

இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இங்கு வரும்
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.
பல வளைவுகளைத் தாண்டிய பயணத்திற்குப் பிறகு கொல்லிமலையை அடைந்த நமக்கு, அங்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.வளம் நிறைந்த 15 மலை நாடுகளை உள்ளடக்கி 275 மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.

சமதள பூமியில் பயிரிடப்படுவதைப் போலவே இந்த மலை பூமியிலுள்ள கிராமங்களில் நெல் பயிரிடப்படுகிறது.
நெல் விளைவதற்கான சீதோஷண நிலை இந்த மலையில் வருடம் முழுவதும் நிலவுகிறது.

அன்னாசி, கொய்யா, மலை வாழை, பலா போன்ற பழ வகைகளும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு காபி,தேயிலை,ஏலக்காய், மிளகு போன்ற பணப்பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கொல்லிமலைத் தேன் சுவை மிகுந்தது.
அரியூர், புலியஞ்சோலை, வாழவந்தி நாடு போன்ற இடங்களை அரசே ரிசர்வ் ஃபாரஸ்ட் ஆக அறிவித்திருக்கிறது.

இங்கெல்லாம் யானை, புலிகளின் நடமாட்டம் அதிகமாகவே இருக்குமாம். கருப்புக் கரடி, முயல், காட்டு நாய்கள், காட்டு எருமைகள் போன்றவற்றை சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.
வளப்பூர் நாடு என்ற இடத்தில் தான் அறப்பளீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது.

இந்த ஈஸ்வரனை இறந்த மீன்களுக்கே உயிர் கொடுத்த ஈஸ்வரன் என்று சொல்வார்கள். அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு மீன் கோயில் என்ற பெயரும் உண்டு.

அறம் பள்ளிகொண்ட இடம் என்பதால் சிவனாருக்கு அறப்பளீஸ்வரர் எனும் திருநாமம்.
சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது

ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர்,தாயம்மை,விநாயகர்,முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒருசேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோவிலின் தனிச்சிறப்பு.
சங்ககாலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும் அறமலை என்றும் அழைக்கப்பட்டது.

அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்பளீஸ்வரர் சதகம்
என்ற நூலை இயற்றியுள்ளார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தங்களது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

கடையேழு வள்ளல்கள் பாரி, எழினி, காரி, நள்ளி, பேகன், மலையன், ஓரி ஆகியவர்களில், இந்த கொல்லிமலையை ஆண்ட வள்ளல் வல்வில் ஓரி.
சுமார் கி.பி. 200-ல், இந்தப் பகுதியை வல்வில் ஓரி ஆண்டு வந்தான். ஓரியின் மனைவி வேண்மாள்.மகள் பாவை
ஓரி இறந்த பிறகு மனைவி,மகள் இருவருமே உடன்கட்டை ஏறினார்களாம் ஓரியின் மகளான பாவையைத் தான் கொங்கலாயி அம்மன் என்ற பெயரில் கொல்லிமலைவாழ் மக்கள் தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.
அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு நேர் எதிரே கீழ் நோக்கி இறங்குகிறது படிகள். சுமார் 300 அடி உயரம் கொண்ட 1000 படிகளை உடைய, ஒன்றரை, கி.மீ. தூரம் கீழே இறங்கிச் சென்று காண வேண்டிய ஆகாய கங்கை அருவி. இதன் கடைசிப் படி வரை சென்ற பின்னர்தான் இந்த அருவியை முழுமையாகக் காண முடியும்
உயரத்தில் இருந்து விழக்கூடிய ஆகாய கங்கை அருவி நம்மை பிரமிக்க வைக்க. அந்த தண்ணீர் விழும் சத்தம் நம் உடலையே அதிரச் செய்யும். அருவியில் குளிக்கும் போது நம்மை யாரோ முதுகில் சடார் என்று அடிப்பது போன்று உணர்வு இருக்கும்.

வல்வில் ஓரி கொல்லிமலையை ஆண்ட காலத்தில் ஆகாய கங்கையில்
குளிப்பதற்காக தினமும் தனது படைபலத்தோடு வருவாராம். ஆகாய கங்கையில் குளித்தால் கங்கையில் புனித நீராடியதற்குச் சமம் என்று சொல்கிறார்கள்.

ஐந்து ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் ஒன்று சேர்ந்து கொட்டுகிறது.

ஆடிப் பெருக்கு சமயங்களில் ஆகாய கங்கையில் நீராட கூட்டம் அலைமோதும்.
இன்றும் சித்தர்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மிளிரும் இடம்.

தான் வரும் வழியெல்லாம் உள்ள மூலிகைகளை ஒன்றிணைத்து அவற்றில் உள்ள சக்திகளை எல்லாம் தனக்குள் கொண்டு பாறைகளில் இருந்து கொட்டும் ஸ்படிகம் போன்ற மூலிகைத் தண்ணீர் பாயும் அருவி மாசிலா அருவி.
அறப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் மாசில்லா அருவி உள்ளது.

மாசு இல்லாத அருவி என்பதுதான் மாசில்லா அருவி என மாறி இருக்கிறது.

276 பாடல் பெற்ற சிவ தலங்களுள் ஒன்றாகத் திகழும் அறபளீஸ்வரர் ஆலயம், அருள் புரியும் எட்டுகை அம்மன் ஆலயம், மாசி பெரியசாமி கோயில்,
மேகங்கள் சூழ்ந்த மலைத் தொடர்கள் மலை அடிவாரத்தில் உள்ள ஊர்கள் இவற்றைப் பார்வையிடும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள செல்லூர் வியூபாயிண்ட்,படகு வீடு,அன்னாசி பழத்தோட்டம், மூலிகைப் பண்ணை தாவரவியல்பூங்கா,சீக்குப்பார்வை வியூ பாயிண்ட்,சந்தனப் பாறை,தொலைநோக்கி நிலையம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
கொல்லிமலையில்தான் எல்லா சித்தர்களும் யோகம், ஞானம், மருத்துவம் போன்ற அரிய கலைகளை சிவபெருமான் தலைமையில் நந்தி தேவரிடம் பயிற்சி எடுத்தனர் என்பர்.
இந்த மலையில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் உள்ளன. இதனால் கொல்லி மலையை மூலிகை மலை எனவும் அழைப்பார்கள்.
அடுக்கடுக்காக அமைந்திருக்கும் இந்த மலையின் நடுவில் ஒரு அருவி பாய்ந்தோடுகிறது.

இந்த அருவி எங்கிருந்து வருகிறது என்பது யாருக்கும் தெரியாது இந்தக் கொல்லி மலையில் தான் 18 சித்தர்களும் சிவபெருமானை குருவாக ஏற்றுச் செய்த குருமுப்பு என்ற மருந்தைத் தயாரித்தார்கள்.
இந்த முப்பு மருந்து நரை, திரை, மூப்பை மாற்றும் வல்லமை பெற்றது. இந்தக் குருமுப்பு மருந்தின் ஒரு பகுதியை 18 சித்தர்களும் தங்கள் மருத்துவப் பணிக்கு எடுத்துக்கொண்டு மீதியைக் கொல்லிமலையிலேயே அரங்கப்பம்மன் கோயில் அருகில் சித்தர்களின் தவசக்தியால் ஒரு பெரும் பள்ளத்தில் வைத்து
அதன்மேல் பெரும் பாறையை மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது அதற்கான அடையாளமாக அந்தக் கோயிலின் முன் குறியிடப்பட்டிருக்கிறது. அத்தோடு மருந்துக்குக் காவலாக நான்கு திசைகளிலும் நான்கு தெய்வங்களைக் காவல் இருக்கப் பணித்தனர் அதன் அடையாளமாகக் கிழக்ககில் கருப்பண்ண சாமியும்
மேற்க்கில் மாசி சின்னண்ணசாமியும், தெற்க்கில் கொல்லிபாவையும், நடுவில் எட்டுக்கை காளியும் காவல் இருக்கின்றனர். இந்தத் தெய்வங்களை இன்றும் மக்கள் பக்தியுடன் வழிபடுகின்றனர்.

பெரும்பாலான மக்களின் வீடுகளில் தலை வணங்கி, மலை முழுங்கி என்ற வேரை வீட்டுக்குள் வைத்து பூஜை செய்கிறார்கள்.
கொல்லிமலையில் கோரக்கர் குகை, ஔவையார் குகை, பாம்பாட்டிச் சித்தர் குகை, கோரக்கர் யாக குண்டம் போன்ற பல சித்தர்கள் வாழ்ந்த அடையாள இடங்கள் உள்ளன. இன்றும் அறப்பலீஸ்வரர் ஆலயத்தில் தினசரி 18 சித்தர்களும் காலை நேரத்தில் ஜோதி வடிவாக வந்து சிவனை வணங்கிச் செல்கின்றனர்.
கொல்லிமலையில் பல இறையதிசயங்கள் அடங்கியுள்ளன. இதை முழுமையாக அறிந்தவர்,தெரிந்தவர் இல்லை.

கொல்லிமலையைச் சுற்றி 8 கோயில்கள் உள்ளன. முனிவர்கள் தங்கள் தவத்தினை அமைதியான இடத்தில் செய்ய விரும்பி கொல்லி மலையைத் தேர்ந்தெடுத்ததாகவும், அவர்களின் தவத்தைக் கலைக்க நினைத்த
தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்குமாறு கொல்லிப் பாவையிடம் வேண்டியதாகவும் அதற்கிணங்க கொல்லிப் பாவை தனது வசியப் புன்னகையால் தீய சக்திகளை விரட்டியதாகவும் கூறுகின்றனர்.

கொல்லிப் பாவைக்கு இன்றும் தென் திசையில் ஒரு கோவில் உள்ளது இதுவரை யாரும் சென்று பார்த்ததில்லை என்கிறார்கள்.
மாசி பெரியண்ணன் இவருக்கு சங்கிலி கருப்பு, நாட்டுமுனி,பெரியசாமி, பெரியண்ணன் என்று பல பெயர்கள் உண்டு. கொல்லிமலையின் உச்சியில் உள்ள மாசிக்குன்றில் வாழம்புல் என்ற ஒருவகை புல்லினால் அமைந்த சிறிய கூரைக்கட்டிடத்தில்,வேங்கை வாகனத்தில் அமர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறார் மாசி பெரியண்ணன்
நாமக்கல்,துறையூர்,திருச்சி வட்டங்களில் பல கோயில்கள் உள்ளன. மாசிக்குன்றிலிருக்கும் இந்த கோயில்தான் மூலக்கோயில்.

இறையதிசயமும் வீரியமான மூலிகைகளும் நிறைந்த கொல்லிமலை நீர் வளமும் நில வளமும் நிறைந்தது ஆன்மீகச் சிறப்பு வாய்ந்த கொல்லிமலையில் இன்னும் பல அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன.
கோரக்கர் இயற்றிய நூல் தற்காலத்தில் கிடைப்பவை சந்திரரேகை, நமநாசத்திறவுகோல்,ரக்ஷமேகலை, முத்தாரம்,மலைவாக்கம்,கற்பம்,முத்திநெறி அட்டகர்மம்,சூத்திரம்,வசாரசூத்திரம் மூலிகை,தண்டகம்,கற்பசூத்திரம் பிரம்மஞானம் ஆகியவை
சித்தர்கள் மனிதனுக்கும் கடவுளுக்கும் பாலமாக இருப்பதாகக் கருதப்படுபவர்கள்.
பல்வேறு மூலிகைகளைக் கொண்டு தங்கள் சக்தியின் மூலம் பல்வேறு நோய்களை இவர்களால் குணப்படுத்த முடிந்திருக்கிறது. மலைகளிலும், காடுகளிலும் கிடைத்த மூலிகை மருந்துகளைக்கொண்டே தங்களது ஆயுளையும் நீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை
அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் இந்த மலை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும் சிறப்பும் உடையது.

மாசுபடாத காற்று, தண்ணீர், இருப்பிடம் என நோயற்ற வாழ்வுக்குத் தேவையான அத்தனையும் இங்கே இருக்கிறது உலக வெப்பமயமாதல் போன்ற
நம்மை அச்சுறுத்தும் விஷயங்களில் இருந்து சற்று தள்ளியே உள்ளது கொல்லிமலை.

லட்சம் லட்சமாக செலவழித்து வெளிநாடுகளுக்குச் சென்று அனுபவிக்கும் மகிழ்ச்சியை சில ஆயிரங்கள் மட்டுமே செலவழித்து கொல்லிமலையில் பெற்றோம்
கோடி கொடுத்தாலும் கிடைக்காத சுத்தமான காற்றையும்,கற்கண்டு போன்ற தண்ணீரையும்
கண்கொள்ளாப் பசுமையையும் மூலிகை சுவாசத்தையும், சுத்தமான மனம் கொண்ட மக்களையும் மனதார கண்டு மகிழ அனைவரும் கட்டாயம் சென்று வர வேண்டிய மலை, மலைகளின் இளவரசன் கொல்லிமலை.

நன்றி வணக்கம்🙏
#SSR
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with SSR

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!