, 34 tweets, 23 min read
My Authors
Read all threads
மாமன்னன் இராஜேந்திர சோழன். Thread

ஐப்பசி சதயம் இராஜராஜ சோழனுக்கு என்றால்,

ஆடி திருவாதிரை இராஜேந்திரனுக்கானது,

நேற்று ஆடி திருவாதிரை விழா எடுத்து
கொண்டாட யாருமில்லை,

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும்
ஆடி திருவாதிரையன்று பிறந்தவன்
ராஜேந்திர சோழன் இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் (கி.பி. 1012 முதல் 1044 வரை)

இராஜேந்திர சோழன் மகுடம் சூடியபோது (கி.பி.1012) ஏறத்தால 50 வயது உடையவராக இருந்தார்.

காவேரிக்கு இப்பக்கம் தஞ்சாவூர் பெரிய கோயிலைக் தந்தை கட்டியது போல
காவேரிக்கு அப்பக்கம் கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி சிவ பக்தியின் உச்சத்தில் நின்றார்.

தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும் அம்மனுக்கு
பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினார்
தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கம் இங்கு தான் உள்ளது இங்குள்ள நந்தி சிலை சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில்
அமர்ந்துள்ளது

பெரிய நாயகி 9.5அடி உயரத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறாள்

நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
மூலஸ்தானத்திலிருந்து 200 மீட்டர் இடைவெளியில் உள்ள நந்தியின் மீது தினமும் சூரிய ஒளிபட்டு அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு

மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை
அணைத்து விட்டு இருட்டில் சிவலிங்கத்தை பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும்.
கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும் குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும்.
இக்கோயில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. இங்குள்ள சிவலிங்கம் தமிழகத்தின் மிகப்பெரிய லிங்கம் ஆகும். இவருக்கு உடுத்துவதற்கு தனியாக வேட்டி, துண்டு நெய்யப்படுகிறது,

புலி எட்டடி பாய்ந்தால் அதன் குட்டி பதினாறடி பாயும் என்ற சொல் வழக்கு உண்டு,

அதை நிரூபித்தார் ராஜேந்திர சோழன்.
சிவ பக்தியில் மட்டுமல்ல வீரத்திலும் தந்தையை மிஞ்சினர் இராஜேந்திர சோழன்.

தோல்வியே காணாத ஒரே தமிழ் மன்னன், பல நாடுகளை வென்றெடுத்த ஒரே இந்திய மன்னன்,

தந்தை நடத்திய வழியில் உலகம் போற்றும் மகனாக திகழ்ந்தவர்,

சோழ ராஜ்ஜியத்தை சொர்க்க பூமியாக மாற்றிய மாமன்னன் ராஜேந்திர சோழன்.
முதலாம் ராஜேந்திர சோழன். சிவசரணசேகரன், பூம்புகார்த் தலைவன்,
செங்கோல் வளவன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்னும் பல பட்டப்பெயர்களால் அழைக்கப்பட்டவர் ராஜேந்திர சோழன்.

இந்திய அரசர்களில் கடல் கடந்து சென்று தமிழர்களின் பெருமையை நிலைநாட்டிய மாமன்னர்.
தந்தை ராஜராஜனின் வலக்கரமாக விளங்கிய ராஜேந்திர சோழன் 1012-ம் ஆண்டு சோழ சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.

இளவரசனாக ஆட்சி நிர்வாகத்தை இரண்டு ஆண்டுகள் தந்தையிடம் கற்றுக்கொண்ட ராஜேந்திர சோழன் எப்போதும் படை வீரர்களுடன் தனது காலத்தை கழித்தார்.
தஞ்சையைத் தலைநகராக் கொண்டு சோழ ராஜ்ஜியம் தழைத்தோங்கியிருந்த நிலையில் வடக்கிலிருந்து அதாவது தற்போதைய
கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அடிக்கடி படையெடுப்புகள் நடந்தன.

இவரது படையில் யானைகள் குதிரைகள் வீரர்கள் அதிகம் இருந்தனர்.
தங்களது பெரும்படை அடிக்கடி வந்து போகும் போது செழிப்பு மிகு தஞ்சை சேதப்படுத்துவதை தவிர்க்க தமிழகத்தின் மத்தியப் பகுதியில் தலைநகரை மாற்ற
முடிவு செய்து வறண்ட நிலப் பகுதியான கங்கை கொண்ட சோழபுரத்தில் புதிய தலைநகரை ஏற்படுத்தினார் ராஜேந்திர சோழன்.

இவரது ஆட்சிகாலத்தில்
வட இந்தியாவில் கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக, தான் உருவாக்கிய தலைநகருக்கு கங்கை கொண்ட சோழபுரம் என்றும் பெயர் சூட்டினார். இந்த கங்கை கொண்ட சோழபுரம் தான் கி.பி. 11 ஆம் நூற்றாண்டுகளில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கே தலைநகரமாகவும் விளங்கியது.
கடல் கடந்தும் இந்த மாமன்னனுடைய ஆட்சியின் அதிகாரம் பரவியிருந்தது.

இப்படிச் சொன்னால் மட்டும் போதுமா? எதுவரையில் இவனுடைய ஆட்சியின் எல்லை விரிந்து கிடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஆம்! தமிழ் சமூகம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
சோழ சாம்ராஜ்யம் பர்மா அதாவது இப்போதைய மியன்மார் கடற்கரை வரையிலும் பரவியிருந்தது. அந்தமான் நிக்கோபார் தீவுகளும் அவன் ஆட்சியின் கீழ் இருந்தன. லட்சத் தீவுகள், மாலத்தீவுகள் இவைகளும் இவனது ஆட்சியின் கீழ்
இருந்தன. அது மட்டுமா?
ஸ்ரீவிஜயம் (சுமத்ரா), பண்ணை (பானிசுமத்ராவின் கிழக்கு பகுதி), மலையூர் (மலேயா), மாயிருடிங்கம்
(மலேயாவின் நடுப்பகுதி), லங்கசோகம், மாப்பாளம் (பர்மா), மேவிளம்பகம், வளைப்பந்துரு (பாலம்பெங்பகுதி), தலைத் தக்கோலம் (தக்கோபா), மாடமாலிங்கம், இலாமுரி தேசம் (சுமத்ராவின் வடக்கு பகுதி),
மாநக்காவரம் (நிக்கோபார்) ஆகிய பகுதிகளை சோழர் கடற்படை கைப்பற்றியது.

இ லங்கையில் சோழர் ஆட்சியை நிலைநாட்டியதுடன் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சீன எல்லை வரை சோழப்பேரரசின் ஆதிக்கத்தை ஏற்படுத்த உலகின் முதல் கடற்படையை தோற்றுவித்த பெருமை ராஜேந்திர சோழனைச் சாரும்.
இப்பொழுது கோரமண்டல் என குறிக்கப்படும் வங்களா விரிகுடா சோழர்களின் ஏரி என அக்காலத்தில் வழங்கப்பட்டது.

சோழமண்டல கடற்கரையே பின்னர் கோரமண்டல கடற்கரை ஆனது சோழ கடற்படை வென்றெடுத்த நாடுகளும் பல. இப்போதைய பிகார் மன்னன் மகிபாலனை வென்று அங்கும் தனது ஆட்சியை நிலைநாட்டினான் ராஜேந்திரன்.
இராஜேந்திர சோழனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தாலும் இராஜேந்திர சோழன் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இந்த நாடுகளைச் சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் படை பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் கட்டுவதற்காக தான்
இந்த கங்கை நோக்கிய படையெடுப்பு,

கிரேக்க மன்னன் அலெக்சாண்டர், பிரான்சின் நெப்போலியன், கலிங்க மன்னர் அசோகர், முகலாய மன்னர் அக்பர் இவர்களை விட போர்திறன், அரசியல், சாணக்கியம், கலை, இலக்கியம் என அனைத்திலும் சிறந்து விளங்கி வரலாற்றில் மறைந்த, வட இந்திய அரசால் வரலாற்றில் மறைக்கப்படும்
ஒரு ஒப்பற்ற தேசங்களை ஆண்ட மன்னன், இங்கு இருக்கும் ஒவ்வொருவனும் மார் தட்டிக் சொல்லிகொள்ள வேண்டிய ஒரு தமிழன், இந்த 'இராஜேந்திர சோழன்'

உலகின் கால் பகுதிகளை தன் காலடியில் வைத்திருந்த, மாமன்னன் இராஜேந்திர சோழன் இவனது போர் படையில் 14 லட்சம் வீரர்கள்,
1 லட்சத்திற்கும் மேற்பட்ட குதிரைகள், 50,000 க்கும் மேற்பட்ட யானைகள் இருந்துள்ளன

இப்படை வீரர்களின் எண்ணிக்கை
தற்போதுள்ள இந்திய ராணுவத்தின் எண்ணிக்கைக்கும், அமெரிக்க ராணுவதின் எண்ணிக்கைக்கு இணையானது.

கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் படையில் இருந்ததும் 1 லட்சத்துக்கும் குறைவானவர்களே.
தமிழனை ஒழிக்க ஆலயங்களை குறிவைத்தான் வெள்ளை காரன் திருசெந்தூர் ஆலயம் முதல் தஞ்சை ஆலயம் வரை வெள்ளையனின் ஆயுத குடோன்களாக இருந்த காலமும் உண்டு,

அப்படி பாழ்பட்ட நிலையில்தான் சோழபுரம் ஆலயமும் சிதைவுற்றது,

ஆனாலும் தீகுச்சியில் ஒரு குச்சி விளக்கேற்றும் என்பது போல
எஞ்சியிருக்கும் கல்வெட்டுக்களே ராஜேந்திரனின் வரலாற்றை நமக்கு சொல்கின்றன‌.

பெருமைக்குரிய மாமன்னன் மிக பெரிய அளவில் சிறப்பிக்க படவேண்டும்

அவன் தமிழன் என்பதால் மட்டும் அல்ல, அவன் கொண்டாடியது இந்து மதம் என்பதால் அவன் புறகணிக்கபட்டான். அவன் மட்டும்
அல்ல எல்லா தமிழ் மன்னர்களும்,
மறைக்கபட்டனர். செய்தவர்கள் வட நாட்டார்கள் மட்டும் அல்ல #திருட்டு_திராவிட கூட்டமும், சொறியார்கள் கூட்டமும் தான்,

மாமன்னன் ராஜேந்திர சோழன் போற்றி வணங்கபடவேண்டியவன், தமிழனின் பெருமையும் இந்துமத அருமையும் அவனோடு தூங்கி கொண்டிருக்கின்றன‌

அவனை மீட்டெடுத்து முன்னிலைபடுத்தல் வேண்டும்,
ஒருவகையில் இராஜேந்திர சோழனின் இந்து ஆலயபணி சால சிறந்தது, அவன் கட்டிய கோவில்கள் ஏராளம் குறிப்பாக திருகாளத்தி எனும் தலத்தின் பெரும் கோவில் அவனால் கட்டபட்டது,

அது தந்தை ராஜராஜன் புகட்டிய கண்ணப்ப நாயனாரின் பக்தியால் வந்தது
ரஜேந்திரனுக்கு சண்டீஸ்வரர் மேல் பக்தி அதிகம்,
சண்டீஸ்வரரின் பக்தியின் உச்சத்தால் அவன் என்ன சொன்னாலும் சிவபெருமான்
சந்தேகபடாமல் நம்புவார்,

இராஜேந்திர சோழனின் சண்டீஸ்வரரின் பக்திமிக்க வாழ்வு ஏக பிரசித்தம் அதனால் தான் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் சண்டிகேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் கங்கை கொண்ட சோழபுரம்ஆனது.

கும்பாபிஷேக நீரை கோயிலுக்குள் கிணறு தோண்டி அதில் வடியச்செய்து அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை
வடித்தான்
கோயிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்து கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வான்.

எப்போதும் சிவ பக்தி பண்ணிக் கொண்டிரு என்பது தந்தை கூறிய உபதேசம். அந்த உபதேசத்தை கடைபிடிப்பதனால் தகப்பனை மிஞ்சிய சிவபக்தி,

சிவபெருமான் துணையும் இருந்தது ராஜேந்திரனுக்கு.
கல்வெட்டில் இப்படி சொல்லி வைத்திருக்கிறான் இராஜேந்திர சோழன்.

காலவோட்டத்தில் இந்துமதமும் இவ்வாலயமும் பழுதுபடுமாயின் அதை மீட்டெடுக்க உதவுபவர்களின் காலில் விழுந்து நான் வணங்குகின்றேன் என்று,

எவ்வளவு பக்தியும் உருக்கமும் இருந்தால் ஒரு மாபெரும் சக்கரவர்த்தி இப்படி எழுதியிருப்பான்,
அவன் நம் காலில் விழவேண்டியது அல்ல,
அரூபியாய் வாழும் அவன் நம்மை வாழ்த்தும்படி வரலாற்றை தோண்டியெடுத்து விளக்கேற்றுவோம்,ஆடி திருவாதிரைக்கு அவனுக்கு அஞ்சலி செலுத்த மறந்த நாம்,

இன்று ஆடி அமாவாசையன்று தமிழகத்தின் தனிபெரும் சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் கொடுத்து நினைவு கூருவோம்
இங்கு தேடி மீட்டெடுக்கவேண்டிய விளக்குகள் ஏராளம், அதை மீட்டெடுத்து ஜோதி ஏற்றினாலே போதும், காரிருள் விலகும் நாம் இனி அதைத்தான் செய்ய வேண்டும்,

அதை மாமன்னன் ராஜேந்திர சோழனை தொழுதுவிட்டு தொடங்கலாம்,

வாழ்க மாவீரன் இராஜேந்திர சோழனின் புகழ்!

நன்றி வணக்கம்
#SSR
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with SSR

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!