அமுதா
வி.கே.சுப்புராஜ்
அசோக் வரதன்
ராதாகிருஷ்ணன்
லக்கானி
ககன் தீப் சிங் பேடி
சண்முகம்
வெ இறையன்பு
உதயச்சந்திரன்
என அந்தப்பட்டாள வரிசையின் பட்டியல் நீளமானது - ஆகிருதிமிக்கது.
சக்தி காந்த தாஸ் இன்று ஆர்.பி.ஐ. கவர்னர். வி.கே.சுப்புராஜ் இந்திய ஆதிதிராவிடத்துறைக்குச் சென்று மிக முக்கியமான சில பணிகளைச் செய்தார்.
சண்முகமும், லக்கானியும், ராதாகிருஷ்ணனும் அதிமுக மயமானார்கள். எடப்பாடிக்கே சாமரம் வீசும் நிலைக்குச் சென்றார்கள்.
ஒரு திறமையான அதிகாரி என்றதும் அவரை மட்டம் தட்டி காலி செய்யாமல், ஜால்ராக்களை வைத்துக் கொள்ளாமல், தகுதி மிக்கவர்களை உடன் வைத்துக் கொள்ளும் பண்பு சமகால இந்திய அரசியலில் ஸ்டாலினிடம் மட்டுமே இருந்தது.
ஆனால், அத்தனை சோடைகளையும் ஈடுகட்டும் ஆற்றல், தமிழகத்தில் விளைந்த, ஸ்டாலினால் வழிநடத்தப்பட்டவர்களால் தான் நடந்திருக்கிறது.
மோடியின் முட்டாள்தனங்களால் நாடு முழுக்க சீரழியாமல் காப்பதில் இந்த அதிகாரிகளின் பங்கு அதிகம் என்றே மதிப்பிடுகிறேன்.
இங்கு சென்னை என்பதை ஸ்டாலின் என்றும் படிக்கலாம்.
வாழ்த்துகள் அமுதா மேடம் !