My Authors
Read all threads
வணக்கம்.
தமிழ்நாட்டில் பாலை நிலம் இல்லாதபோதும் ஐந்திணையில் ஏன் பாலை சேர்க்கப்பட்டுள்ளது?பழந்தமிழ் நாட்டில்,முல்லை, குறிஞ்சி,மருதம்,நெய்தல் என்னும் நான்குவகை நிலங்களேபேசப்பட்டன.நீண்ட பதிவு! 'பாலை'யை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.Linkஐ பயன்படுத்தவும்.
wix.to/NsBaDAU
பாலை-2
தொல்காப்பியம் நான்கு வகை நிலங்களையும், அவற்றிற்கான தெய்வங்களையும் மட்டுமே பேசுகிறது.
'மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
வருணன் மேய பெரு மணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே'. -
பாலை-3
தொல்காப்பியம்: பொருளதிகாரம்:அகத்திணையியல்:5
'மாயோன் மேய காடுறை உலகம்’ என்று முல்லை நிலத்தை, காடும், காடுசார்ந்த இடமும் என்று கூறி, அக்காட்டிற்கு உரிய தெய்வமாகத மாயோன் என்னும் திருமாலைக் குறிப்பிடுகின்றார்.
படம்:நெல்லை மாவட்டத்தில் உள்ள பாலை நிலம்
பாலை-4
சேயோன் மேய மைவரை உலகமும்', என்று குறிஞ்சி நிலத்தை, மலையும், மலையைச் சார்ந்த இடமும் என்று கூறி, அம்மலைக்கு உரிய தெய்வமாக முருகனைக் கூறுகிறார்.
'வேந்தன் மேய தீம்புனல் உலகம்' எனக் கூறுவது வயலும் வயலைச் சார்ந்த இடமுமாகிய மருத நிலம் ஆகும்.

wix.to/NsBaDAU
பாலை-5
வேந்தனே வயலும் வயலைச் சார்ந்த இடத்திற்குக் கடவுளாவான். ஆரியர்கள், பிற்காலத்தில், வேந்தனை இந்திரனாக்கி, தமிழ் நிலத்தைக் கொள்ளையிடத் திட்டம் வகுத்தனர்.
'வருணன் மேய பெருமணல் உலகமும்’ என்று கூறுவது மணல் மிகுந்திருக்கக் கூடிய கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும்.
பாலை-6
இந்தநிலத்திற்குக்கடவுளாக வருணன் உரைக்கப்படுகிறான்.
தமிழகத்தில்பாலைநிலம் இல்லாததாலோ,என்னவோ, பாலைத் திணைஎன்னும் பாலைவனப்பகுதிக்கான தெய்வத்தைத்தொல்காப்பியர் முன்மொழியவில்லை.
பாலை ஒருநிலவகையாகச்சேர்க்கப்பட்டதைப்பதிவுசெய்யும்முதல்இலக்கியம் காலத்தால்பிற்பட்ட சிலப்பதிகாரம்ஆகும்
பாலை-7
பாலை நிலம் உருவாகும் விதத்தைச் சிலப்பதிகாரம்தான் விரித்துச் சொல்கிறது. முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் நீண்ட காலம் மழை பொழியாமல் காய்ந்து போய் இருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதை..

wix.to/NsBaDAU
பாலை-8
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும் - சிலப்பதிகாரம்:காடுகாண் காதை, 64-66
என்கிறது.
குறிஞ்சியும்முல்லையும்
மழை பொழிவுபெறாதபோது
அதன்இயல்பில்திரிந்து
அடுத்து மழைவரும் காலம்வரை
பாலையாக அறியப்படும்..
பாலை-9
என்று
தொல்காலியம் கூறுகிறது
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர், இப்பாலை நிலத்தின் கடவுள் கொற்றவை என எழுதியுள்ளார்.

wix.to/NsBaDAU

நன்றி
பாலை-10
இவற்றிற்கு முற்பட்ட காலத்தில்,அதாவது ஆரியர் வருகைக்கு முன், தமிழர் நிலம் என்பது இந்தியாவினையும் உள்ளடக்கியது.இன்றைய அறிவியல் ஆய்வுகள்சிந்துவெளி நாகரிகமேஒரு தமிழரின் நாகரிகம் எனவும்,ஆரியர் வருகைக்கு முற்பட்ட ஒரு நாகரிகம் எனவும் ஐயத்திற்குஇடமின்றி சான்றுப்படுத்தியுள்ளன.
பாலை-11
குறிப்பாக அண்மையில் வெளிவந்த இரு ஆய்வுகளான செல்(Cell) என்ற அறிவியல் ஆய்விதழில்`An Ancient Harappan Genome Lacks Ancestry From Steppe Pastoralists or Iranian Farmers`என்ற தலைப்பில் வந்த ஆய்வும்,Science இதழில் `The formation of human populations in South and Central Asia'
பாலை-12
என்ற தலைப்பில் வந்த ஆய்வும் மரபணு ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு; `சிந்துவெளி நாகரிகம் ஒரு தமிழர் நாகரிகம்` எனச் சான்றுப்படுத்தியுள்ளன. இந்த வகையில் பார்த்தால் பாலை நிலத்தையும் உள்ளடக்கியதே பழைய தமிழர் நிலப்பரப்பு.
இதனையே ஊர்ப் பெயர்களை அடிப்படையாகக்கொண்டு
பாலை-13
ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் இன்னொரு முறையில் உறுதிப்படுத்தியிருப்பார்.பாலை நிலமும் தமிழர் நிலப்பரப்பிற்குள் வருகின்றது.
இப்போது பின்வரும் சங்ககாலப் பாடலைப் பாருங்கள்.
`குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்` {அகம் 245}
பாலை-14
இப்பாடல் ஒட்கத்திற்கு பசித்தால், அது எலும்பினையே தின்னும் என்கின்றது .இத்தகைய பட்டறிவு பாலை நிலத்தில் வாழ்ந்தவர்களின் நினைவுத்தொகுப்பே. பாணர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக பாடல்களாக பாடப்பட்டு வந்த பாடல்களே பின்னர் சங்க இலக்கியங்களாகப் புலவர்களால் தொகுக்கப்பட்டது.
பாலை-15

மேற்கூறிய வகையிலேயே தமிழர்களின் ஐந்து வகை நிலப் பாகுபாட்டினை நோக்க வேண்டும்.

wix.to/NsBaDAU
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Mathavan Venukopal

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!