My Authors
Read all threads
வணக்கம்.
பண்டைய போர் மரபுகள்!

பண்டைக் காலத்தில் சில வரையறைகளோடு போர்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக போருக்குச் செல்வோர், குறிப்பிட்ட பூக்களைச் சூடுதல் மரபாக இருந்துள்ளது. ஒவ்வொரு மன்னனும் ஒரு குறிப்பிட்ட பூவை சூடி போர்புரிவது மரபு.

wix.to/Z0C6BsI
பண்டைய-2
பூக்களைச் சூடி போரிடும் மரபைக் கொண்டிருந்தனர். அதனால் போருக்குச் செல்லும் முன்பு பூச்சூட வருமாறு வீரர்களுக்கு அழைப்பு விடுத்தனர். கழாத்தலையாரின் புறப்பாடல் ஒன்றில்,
wix.to/Z0C6BsI
பண்டைய-3
மூதிலாள ருள்ளும் காதலின்
தனக்கு முகந் தேந்திய பசுயென் மண்டை
இவற்கீ கென்னு மதுவுமன் றிசினே
கேட்டியோ வாழி பாண பாசறைப்
பூக்கோ ளின்றென் றையும்
மழவாய் தண்ணுமை யழிசினன் குரலே” (புறம். பா. 289 : 5-10)
என்று வெட்சிப் போர் புரிய வேண்டி (ஆநிரை கவர்தல்;) போர் பறையை அறிவிக்க, மறவர்
பண்டைய-4
பலரும் திரண்டனர். அப்போது மன்னன் அவர்களோடு விருந்துண்ணுகின்றான். அங்கு மறவர்கள் அனைவருக்கும் ‘கள்’ வழங்கப்படுகிறது. பாசறைக் கண்ணே! இனி நிகழ்தற்குரிய போர்க்குரிய பூவை பெறுமாறு சான்றோர் ஒருவர் கூறுகின்றார். புலையன் போர் தொடங்குதற்குரிய தண்ணுமை எனும் போர் இசையை
பண்டைய-5
இசைப்பான் அதை கேட்பாய் என பாணனிடத்து கூறும் பாடல் காணப்படுகிறது.
"உண்டாட்டு நிகழ்த்துதல் வேந்தன் மரபு” (பக். 180 - 181 புறம் - ஐஐஇ கழகம்)
படைக்களன்கள் தருவதும், வேற்றுப்படை வரவை முரசறைந்து தெரிவிக்க, தன் படைகளுக்கும் அறிவித்த செய்திகளை காணலாம்.
பண்டைய-6
“முரசுக்குத் தோலை மயிர் சீவாது போர்த்தல் மரபு” (பக். 177, புறம் - ஐஐஇ கழகம்) பண்டைய காலத்தில் அரசனே ‘நாட்டைப் பாதுகாக்கும்’ தகுதியுடையவனாக கருதப்பட்டுள்ளான். மேலும், அரசனே படைப் பொருட்களை சிலரிடம் கொடுத்த செய்திகளை தொல்காப்பியம் குறிப்பிடும்.
பண்டைய-7
போர்க் காலத்தில் மறவர்க்கு ஊன்சோறு தருவதும் வழக்கமாக இருந்துள்ளது. அரசன், மறவனென இருவருக்கும் ஒரே வகையான சோறு இடுதல் மரபாக இருந்துள்ளது.
“ஊன் துடி அடிசில் - ஊனும் அரிசியும் குலைய சமைத்த புலவு” (பக். 155, பதிற்றுப்பத்து, புலியூர்கேசிகன் உரை) என்று குறிப்பிடுவதைக் காணலாம்.
பண்டைய-8
அதே ‘கள்’ வழங்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை தொல்காப்பியர் ‘உண்டாட்டு’ என்கிறார். அதாவது வெட்சித்திணையில் போர் முடிவுற்ற காலத்தில் ஆநிரைகளை கவர்ந்து வந்தோர் பங்கிட்டுக் கொண்டு உண்டாட்டு (அதாவது மது குடித்தல்) நிகழ்த்துதல் மரபாக இருந்துள்ளது.
பண்டைய-9
ஆனால் பதிற்றுப்பத்து போருக்குச் செல்லும் முன் சேர அரசர் மறவர்களின் தகுதி அறிந்து ‘கள்’ வழங்குவதை பாடல்கள் உணர்த்துகின்றன. “கள் இடத்திற்கு இஞ்சியும் பூவுமாகக் கலந்து கட்டிய மாலையை சூட்டியிருப்பர்” (பக். 142, பதிற்றுப்பத்து, பு.சே.)
பண்டைய-10

மேலும், தூங்கு கொளை முழவு - தூங்கலோசைத்தாகிய முழவு;இது கள்ளுண்டு மகிழ்பவரது ஆடலுக்கு ஏற்ப முழங்கும்” (பக். 149, பதிற்றுப்பத்து)இவ்வாறு பண்டைய போர் மரபுகளை நம் முன்னோர்கள் கடைபிடித்த முறைகள் இன்றும் ஈழப் போர்களில் கடைபிடிக்கப்பட்டது,மரபுகள் இன்றும் காப்பாற்றப்படுகிறது.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Mathavan Venugopal

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!