மடிந்தனர்! மறைந்தனர்! ஆனால் அவர் வாழ்ந்த பொழுது வழங்கிய மொழி மட்டும் அழியாது பாதுகாக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
பேசியோர் இல்லை-பேசப்பட்ட மொழி இருக்கிறது!
மாங்க்ஸ் என்ற மொழி பேசுவோரில் இன்று எவருமே உயிருடனில்லை. இருந்தும் அவர்கள் மொழியை இப்பொழுது கேட்க முடியும்!
செத்த இனமானாலும் அவர் வழங்கிய மொழி சாகாதிருக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இறந்த மொழிகளுக்கு இதுதான் இடம்!
எங்கோ, சில இடங்களில் அந்த மொழி சொந்தக்காரர்கள் பேசுவர் இந்த மந்திரிகளோ ஓடியோடிக் கலந்துகொள்கின்றனர்!
வடமொழிக் கல்லூரி வைக்கிறோம் பாருங்கள் என்று அவர்கள் புலம்புவதும்,
‘ரிகார்டு’ களோடு நிற்கவேண்டிய வடமொழி, இன்று கல்லூரிகளிலும், கலைக்கோயில்களிலும்
இந் நாட்டில்தான் மொழிப் பிரச்சினை, மிகப் பயங்கர உருவெடுத்திட வேண்டிய நிலை இருந்தது. வடமொழிக்கு, வக்கீலாகிறார்கள், அமைச்சர்கள்! அது மட்டுமா?
தமிழைத் தவிர பிற எம்மொழிக்கும் இந்த மிதமிக்க மந்திரிமார்கள் தாளங் கொட்டி, ‘தத்தித்தோம்’ ஆடி வரவேற்பர்.
இதைக் கண்டு மக்கள் சீறினால், சிரிப்பர், சிந்தனையின்றி! ஆம், அவர்கள்தான் நமக்கு மந்திரிகள்! என் செய்வது?
தமிழகம் இந்தத் துணிகர அக்கிரமத்தை எதிர்த்தது!
இந்தியைக் கட்டாய பாடமாக்கக் கூடாது என்று அறப்போர் நடத்தினர். ஆட்சியாளர் அடிபணிந்தனர்.
-
பேரறிஞர் அண்ணா
(நாம் பலர் அவர்கள் சிலர், திராவிட நாடு, 20-7-1951)